எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை,டிச.2 - சில்லரை வியாபாரத்தில் அன்னிய முதலீட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்தியா முழுவதும் கடைகள் அடைக்கப்பட்டன. சில்லரை வியாபாரத்தில் 51 சதவீத அன்னிய நேரடி முதலீட்டுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதனால் இந்தியா முழுவதும் பல கோடி சிறு வியாபாரிகள் பாதிக்கப்படும் ஆபத்து எற்பட்டுள்ளது. சில்லரை வியாபாரம் செய்ய வெளிநாட்டு நிறுவனங்களை தமிழ்நாட்டில் அனுமதிக்க முடியாது என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். இது போல நாடெங்கும் அன்னிய முதலீட்டுக்கு கடும் எதிர்ப்பு ஏற்பட்டுள்ளது.
ஆளும் காங்கிரஸ் கூட்டணியில் இருப்பவர்களுக்கே மத்திய அரசின் இந்த முடிவு பிடிக்கவில்லை. என்றாலும் பணவீக்கத்தை சீர்படுத்தி, பொருளாதாரத்தை மேம்படுத்த இதைவிட்டால் தனக்கு வேறுவழி தெரியவில்லை என்று கூறிய பிரதமர் மன்மோகன்சிங் அன்னிய முதலீடு அனுமதியை வாபஸ் பெற இயலாது என்று அறிவித்தார்.
இது சிறுவியாபாரிகளை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தங்கள் வாழ்வாதாரத்தை மத்திய அரசே அழித்து விடும் போல் இருக்கிறேதே என்று அவர்கள் கவலைக்குள்ளாகி இருக்கிறார்கள்.
மத்திய அரசுக்கு தங்கள் எதிர்ப்பை தெரிவிக்க நாடெங்கும் உள்ள வியாபார அமைப்புகள் நேற்று கடை அடைப்பு போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்தன. இதற்கு பா.ஜ.க. உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளன. இதனால் இந்தியா முழுவதும் நேற்று சிறுவியாபாரிகள் தங்கள் கடைகளை மூடினார்கள்.
நாடெங்கும் சுமார் 5 கோடி வியாபாரிகள் இந்த கடையடைப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். வடமாநிலங்களில் பெரிய மார்க்கெட் வியாபாரிகள் கடைகளை மூடி தர்ணா செய்தனர். மத்திய அரசை எதிர்த்து கோஷங்களை எழுப்பினார்கள்.
டெல்லி ஜந்தர் மந்தரில் பகல் 11.30 மணிக்கு பல்லாயிரக்கணக்கான வியாபாரிகள் திரண்டு தர்ணா செய்தனர். கடையடைப்புப் போராட்டம் எல்லா மாநிலங்களிலும் வெற்றிகரமாக நடந்ததாக அகில இந்திய வியாபாரிகள் சங்கங்களின் கூட்டமைப்புத் தலைவர் பிரவீண் கண்டெல்வல் கூறினார்.
டெல்லியில் 90 சதவீத மார்க்கெட்டுகள் மூடப்பட்டிருந்தன. டெல்லியில் வியாபாரிகளுடன் பா.ஜ.க. தொண்டர்களும் சேர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். சுமார் 20 இடங்களில் பிரதமர் மன்மோகன்சிங், டெல்லி முதல்வர் ஷீலாதீட்சித் ஆகியோரது உருவபொம்மைகள் எரிக்கப்பட்டன. டெல்லியில் சதார்பஜார், கம்லா பஜார், சவ்ரி பஜார், கிருஷ்ணா நகர் மார்க்கெட்டுகள் நேற்று வெறிச்சோடின.
தமிழ்நாட்டில் 25 லட்சத்துக்கும் மேற்பட்ட சிறுவியாபாரிகள் உள்ளனர். அவர்களில் சுமார் 90 சதவீதம் பேர் நேற்று தங்கள் கடைகளை அடைத்து எதிர்ப்பை தெரிவித்தனர். சென்னையில் பெரிய துணிக்கடைகள், நகைக்கடைகளும் மூடப்பட்டிருந்தன. கோயம்பேடு மார்க்கெட் செயல்படாததால் வெறிச்சோடியது. சென்னையில் உள்ள சிறு,சிறு காய்கறி மார்க்கெட்டுக்களும் மூடப்பட்டிருந்தன. இறைச்சி கடைகளும் அடைக்கப்பட்டிருந்தந. சென்னையில் மட்டும் 3 லட்சம் வியாபாரிகள் கடையடைப்பில் ஈடுபட்டனர். சென்னையில் நேற்று பெரிய ஓட்டல்கள் மட்டுமே திறந்திருந்தன. ஆனால் சென்னை புறநகர் பகுதிகளில் ஓட்டல்களும் மூடப்பட்டிருந்தன. மருந்து கடைகள் உள்ளிட்ட சில அத்தியாவசிய சேவை கடைகளுக்கு மட்டும் கடையடைப்பில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டிருந்தது.
வியாபாரிகள் கடையடைப்பு மற்றும் உண்ணாவிரதப்போராட்டத்தை முன்னிட்டு சென்னையில் சுமார் 10 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி2 days 6 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி6 days 5 hours ago |
ரவா பர்பி1 week 2 days ago |
-
ஆர்வமுடன் வாக்களித்த உலகின் குள்ளமான பெண்
19 Apr 2024நாக்பூர், நாக்பூரில் உள்ள வாக்குச்சாவடியில் உலகின் குள்ளமான பெண்மணியான ஜோதி ஆம்ஜி என்பவர் வாக்களித்தார்.
-
கடற்படையின் அடுத்த தளபதியாக தினேஷ் குமார் திரிபாதி நியமனம்
19 Apr 2024புது டெல்லி, கடற்படைத் துணைத் தளபதியாக தற்போது பணியாற்றி வரும் வைஸ் அட்மிரல் தினேஷ் குமார் திரிபாதியை வரும் 30-ம் தேதி முதல் கடற்படையின் அடுத்த தளபதியாக அரசு நியமித்துள
-
மாலத்தீவு முன்னாள் அதிபரின் 11 ஆண்டு சிறை தண்டனை ரத்து: மறுவிசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவு
19 Apr 2024மாலே, மாலத்தீவு முன்னாள் அதிபரின் 11 ஆண்டு சிறை தண்டனையை ரத்து செய்து உத்தரவிட்ட நீதிமன்றம் இந்த வழக்கில் மறுவிசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
-
பார்லி. தேர்தல்: சொந்த கிராமத்தில் வாக்களித்த எடப்பாடி பழனிசாமி
19 Apr 2024சேலம், தமிழகம் முழுவதும் நேற்று பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது.
-
பார்லி. தேர்தல்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாக்களித்தார்
19 Apr 2024சென்னை : தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் பாராளுமன்ற தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி நேற்று நடைபெற்றது. இந்த தேர்தலை
-
சைக்கிள் ஓட்டிச்சென்று நடிகர் விஷால் வாக்களிப்பு
19 Apr 2024சென்னை : நடிகர் விஷால் சைக்கிள் ஓட்டிச்சென்று வாக்களித்தது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
-
கர்நாடகாவில் காங்கிரசில் இணைந்த முன்னாள் எம்.எல்.ஏ.-க்கள் 2 பேர்
19 Apr 2024பெங்களூர், கர்நாடகா மாநிலத்தின் முன்னாள் பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் இருவர் மலிகாய்யா கட்டேதார், சாரதா மோகன் ஷெட்டி ஆகியோர் நேற்று காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்.
-
பார்லி. தேர்தல்: வாக்களிக்க சென்ற 3 பேர் மயங்கி விழுந்து உயிரிழப்பு
19 Apr 2024சென்னை, தமிழகத்தில் நேற்று நடந்த பாராளுமன்ற தேர்தலில் வாக்களிக்க சென்ற 3 பேர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
புதுச்சேரியில் மோட்டார் சைக்கிளில் சென்று வாக்களித்த முதல்வர் ரங்கசாமி
19 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரியில் மோட்டார் சைக்கிளில் சென்று தனது வாக்கினை பதிவு செய்தார் அம்மாநில முதல்வர் ரங்காசமி.
-
ம.பி.யில் காங்கிரசின் நகுல் நாத்துக்கு வாக்களிக்க கோரிய பா.ஜ.க. மேயர்
19 Apr 2024சிந்த்வாரா, மத்தியப் பிரதேசத்தின் நட்சத்திர தொகுதியான சிந்த்வாராவில் நேற்று முதல்கட்ட வாக்குப்பதிவு நடந்தது.
-
அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்: கட்காரி
19 Apr 2024நாக்பூர், நாக்பூரில் வாக்களித்த பின், தேர்தலில் நான் நிச்சயம் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்தார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 19-04-2024.
19 Apr 2024 -
இ.வி.எம். குறித்த அச்சம் தேவையில்லை: வாக்குகள் பத்திரமாகவும், பாதுகாப்பாகவும் இருக்கும் : தலைமை தேர்தல் ஆணையர் உறுதி
19 Apr 2024புதுடெல்லி : மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்த அச்சங்களை மறுத்துள்ள இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், “மக்களின் வாக்குகள் பத்திரமாகவும் பாதுகாப்பாகவும
-
ஸ்காட்லாந்தில் அருவியில் குளித்த இந்திய மாணவர்கள் 2 பேர் தவறி விழுந்து உயிரிழப்பு
19 Apr 2024லண்டன், ஸ்காட்லாந்தில் அருவியில் குளித்து மகிழ்ந்த 2 இந்திய மாணவர்கள் தவறி விழுந்து உயிரிழந்தனர்.
-
பாராளுமன்ற தேர்தல்: ஜனநாயக கடமையாற்றிய திரை பிரபலங்கள்
19 Apr 2024சென்னை : தமிழகத்தில் நேற்று நடந்த பாராளுமன்ற தேர்தலில் திரை பிரபலங்கள் பலரும் தங்களது ஜனநாயக கடமையையாற்றினர்.
-
மதுரை சித்திரை திருவிழா: வைகை அணையில் இருந்து தண்ணீர் திறப்பு
19 Apr 2024தேனி : மதுரை சித்திரை திருவிழாவையொட்டி கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்திற்காக வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
-
நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றிதான் : வாக்களித்தப்பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேட்டி
19 Apr 2024சென்னை : நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றி தான் என வாக்களித்த பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் என தெரிவித்தார்.
-
பாராளுமன்ற தேர்தல்: காலையிலேயே வாக்களித்த தமிழக அரசியல் தலைவர்கள்
19 Apr 2024சென்னை, வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பே அரசியல் கட்சி தலைவர்கள் காத்திருந்து முதல் ஆளாக தங்களது ஜனநாயக கடமையை ஆற்றினர்.
-
சென்னையில் வாக்களித்த கவர்னர் ஆர்.என்.ரவி மகிழ்ச்சி
19 Apr 2024சென்னை : ஜனநாயகத்தின் மிகப் பெரிய திருவிழா இது.
-
காந்திநகரில் அமித்ஷா வேட்புமனு தாக்கல்
19 Apr 2024காந்திநகர், குஜராத் மாநிலத்தில் உள்ள 26 தொகுதிகளுக்கும் 3-வது கட்டமாக மே 7-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 12-ம் தேதி தொடங்கியது.
-
தமிழகத்தில் அமைதியான வாக்குப்பதிவு தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு பேட்டி
19 Apr 2024சென்னை, தமிழ்நாடு முழுவதும் அனைத்து இடங்களிலும் அமைதியாக, நல்லபடியாக வாக்குப்பதிவு நடைபெற்றதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கூறினார்.
-
102 பார்லி. தொகுதிகளில் முதல் கட்ட வாக்குப்பதிவு நிறைவு: தமிழகம், புதுச்சேரியில் விறுவிறு வாக்குப்பதிவு : புதுச்சேரியில் 72.84 சதவீதம் - தமிழகத்தில் 66 சதவீதம் வாக்குப்பதிவு
19 Apr 2024சென்னை : தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது.
7 கட்டங்களாக...
-
புறக்கணிப்பை கைவிட்டு வாக்களித்த வேங்கைவயல் மக்கள்
19 Apr 2024புதுக்கோட்டை : புதுக்கோட்டை அருகே உள்ள வேங்கைவயல் கிராமத்தைச் சேர்ந்த மக்கள் புறக்கணிக்கும் முடிவைக் கைவிட்டு நேற்று வாக்களித்தனர்.
-
ராமநாதபுரம் தொகுதியில் எனது வெற்றிவாய்ப்பு பிரகாசமாக உள்ளது : வாக்களித்த பிறகு ஓ.பன்னீர்செல்வம் பேட்டி
19 Apr 2024தேனி : கருத்துக்கணிப்புகள் அனைத்தும் பொய்யாகும் என்று தெரிவித்த ஓ.பன்னீர்செல்வம், கருத்துக்கணிப்புகள் அனைத்தும் பொய்யாகும் என்றும் அவர் தெரிவித்தார்.
-
ஐ.நா.வில் பாலஸ்தீனத்தை உறுப்பினராக்கும் தீர்மானம்: வீட்டோ அதிகாரம் மூலம் முறியடித்த அமெரிக்கா
19 Apr 2024நியூயார்க், 193 உறுப்பினர்களைக் கொண்ட ஐ.நா.