முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியா- மே.இந்தியத்தீவுக்கு இடையே கடைசி ஒரு தின போட்டி சென்னையில் இன்று நடக்கிறது

ஞாயிற்றுக்கிழமை, 11 டிசம்பர் 2011      விளையாட்டு
Image Unavailable

சென்னை, டிச.- 11 - இந்தியா - மேற்கிந்தியத் தீவு கடைசி ஒருதினப்போட்டி சென்னையில் இன்று நடக்கின்றது. இரு அணி வீரர்களும் நேற்று முன்தினமே வந்துவிட்டார்கள். நேற்று அவர்களுடன் தீவிர பயிற்சி எடுத்தனர். இந்தியா - மேற்கிந்தியத்தீவு இடையே 3 டெஸ்ட் போட்டிகள் நடந்தன. இதில் 2-0 என்ற கணக்கில் இந்தியா வென்றது. தொடரையும் கைப்பற்றியது.  அடுத்து ஒருதினப் போட்டிகள் தொடங்கின. மொத்தம் 5 போட்டிகள் நிர்ணயிக்கப்பட்டன. இதில், 4 போட்டிகள் முடிந்துள்ளன.  இவற்றில் 3-ல் இந்திய வென்றது. ஒரு போட்டியில் மேற்கிந்தியத்தீவு வென்றது.  கடைசிப் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று நடக்கிறது. இந்த ஆட்டம் இன்று பிற்பகல் 2.30 மணிக்கு தொடங்குகின்றது. இதில் பங்கு பெறக்கூடிய 2 நாட்டு அணி வீரர்களும் தனி விமானத்தில்  நேற்று முன்தினம் சென்னைக்கு வந்தனர். அவர்கள் ஓட்டலுக்கு அழைத்துச் செல்லப்பட்டார்கள். அவர்களுக்கு தீவிர பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இரு அணி வீரர்களும் நேற்று தீவிர வலை பயிற்சியை மேற்கொண்டனர். இந்த ஒருதின போட்டியில் இந்தியா ஏற்கனவே மூன்று ஆட்டங்களில் வென்றுள்ளதால் ஒருதின போட்டி தொடரையும் கைப்பற்றி உள்ளது. அதனால் இன்றைய போட்டி வெறும் சம்பிரதாயமானதுதான். கடந்த ஆட்டத்தில் சேவாக் சிறப்பாக ஆடி இரட்டை சதமும் எடுத்து மொத்தம் 219 ரன்னை குவித்து டெண்டுல்கரின் 200 ரன் குவித்த சாதனையையும் முறியடித்ததுடன் புதிய உலக சாதனையையும் செய்தார். சேவாக்  சென்னையிலும் தனது அதிரடி ஆட்டத்தை தொடர்வாரா என்ற எதிர்பார்ப்புடன் ரசிகர்கள் உள்ளனர்.    

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்