முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குக்கிராமங்களில் வங்கி சேவை பிரணாப் முகர்ஜி வேண்டுகோள்

ஞாயிற்றுக்கிழமை, 8 ஜனவரி 2012      இந்தியா
Image Unavailable

சென்னை, ஜன. - 8 - ஆயிரம் மக்கள் கொண்ட குக்கிராமங்களிலும் வங்கி சேவையை தொடங்க தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் முன்வர வேண்டும் என்று மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி வேண்டுகோள் விடுத்துள்ளார்.  இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் 75 வது ஆண்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் கலந்து கொண்ட மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி பேசியதாவது, 1969 ல் 14 வங்கிகள் தேசியமயமாக்கப்பட்டன. அப்போது 14 வது இடத்தில் சிறிய வங்கியாக இருந்த இந்தியன் ஓவர்சீஸ் வங்கி பெரும் வளர்ச்சியடைந்து 7 வது இடத்திற்கு முன்னேறி உள்ளது. அனைத்து தரப்பு மக்களும் வங்கி சேவையை அடைய வேண்டும் என்ற நோக்கத்தில் 2012 ம் ஆண்டுக்குள் 2 ஆயிரம் மக்கள் தொகை கொண்ட 73 ஆயிரம் கிராமங்களுக்கு வங்கி சேவை தொடங்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி 12 ஆயிரம் கிராமங்களில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கிளைகள் தொடங்கப்பட்டுள்ளது பாராட்டுக்குரியது. மொத்தத்தில் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது என்றார்.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago