முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வெளிநாடுகளில் வேலையில்லை: நாடு திரும்பும் இந்திய மாணவர்கள்

சனிக்கிழமை, 21 ஜனவரி 2012      இந்தியா
Image Unavailable

 

பெங்களூர், ஜன. - 21 - வெளிநாடுகளில் படித்தால் உடனடியாக வேலை கிடைக்கும் என்ற கனவுடன் இந்திய இளைஞர்கள் ஆஸ்திரேலியா, அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளுக்கு சென்றுள்ளனர். கடும் போட்டி காரணமாகவும், பொருளாதார மந்த நிலை காரணமாகவும், வெளிநாடுகளில் படித்த இந்திய இளைஞர்களுக்கு வேலை கிடைப்பதில்லை. குறிப்பாக, அங்கு படிக்கும் மாணவர்கள் ஏதாவது ஒரு நிறுவனத்தில் வேலை பார்த்துக் கொண்டே மேற்படிப்பை படிப்பார்கள்.  இப்போது இந்த வாய்ப்பும் குறைந்து விட்டது. கல்வி கட்டணமும் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக வெளிநாடுகளில் மேற்படிப்பை தொடர முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. இதனால் தாக்குப்பிடிக்க முடியாமல் அவர்கள் தாயகத்திற்கு திரும்புகிறார்கள். இப்படி திரும்புகிறவர்களின் எண்ணிக்கை சமீப காலங்களில் அதிகரித்துள்ளது. இங்கிலாந்து, அமெரிக்கா போன்ற நாடுகளில் உள்ள இந்திய பட்டதாரிகள் அதிகளவில் நாடு திரும்புகின்றனர். மேற்கண்ட நாடுகளில் உள்ளூர்வாசிகள் ஏராளமானோர் வேலைவாய்ப்பின்றி இருப்பது குறிப்பிடத்தக்கது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்