முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

10 வயது சிறுமி பலாத்காரம் தந்தைக்கு 10 ஆண்டுசிறை

வெள்ளிக்கிழமை, 3 பெப்ரவரி 2012      சினிமா
Image Unavailable

சென்னை.பிப்.- 3 - சென்னையில் 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த தந்தைக்கு 10 ஆண்டு சிறைத் தண்டனை மற்றும் 30,500 ரூபாய் அபராதம் வழங்கி தீர்ப்பளித்தது சென்னை உயர் nullநீதி மன்றம். சென்னை ஆயிரம் விளக்கு அருகே ஆல்தோட்டம் என்ற பகுதியை சேர்ந்தவர் துஷ்யந்தன், இவரது மனைவியின் பெயர் புவனேஸ்வரி. இவர்களுக்கு 2 குழந்தைகள் மகன் பிரதாப் வயது(13) மகள் ரூபினி வயது(10).துஷ்யந்தன் அந்த பகுதியிலேயே செருப்பு தைக்கும் தொழில் செய்து வருகிறார். இவர் தனது மனைவியிடத்தில் அதிகமானஅளவு செக்ஸ் உறவு வைத்துக்கொள்ள வற்புறுத்துவார். இவருக்கு குடிப்பழக்கமும் உண்டு. இந்த சூழ்நிலையில் இவரது மனைவிக்கு உடல் நலம் சரியில்லாமல் போய்விட, தன் மகள் ரூபினியை அழைத்து  கொண்டு அம்மா வீட்டிற்க்கு சென்றுவிட்டார்.கணவர் துஷ்யந்தன் 2.01.2010 ஆம்  ஆண்டு மனைவியை பார்க்க  மேட்டுப்பாளையம் சென்றார். அப்பொழுது மகள் ரூபினி துணி எடுத்து தரவேண்டும் என்று கூறிவிட்டு மகள் ரூபினியை சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள ஆல்தோட்டத்திற்க்கு தனது வீட்டிற்கு அழைத்து வந்து 3 முறை பலாத்காரம் செய்தார். அப்பொழுது பக்கத்தில் உள்ள ரூபினியின் அண்ணன் பிரதாப்புக்கு அலறல் சத்தம் கேட்டது. உடனே பிரதாப் சென்று பார்த்தார். அப்பொழுது அவருடைய தந்தை பிரதாப் முகத்தில் துணிவைத்து மூடி மிரட்டினார். மறுநாள்  எதிர்பாராத விதமாக அவர்களது உறவினர் ரேகா அங்கு வந்தார்.அப்பொழுது எனது தந்தை அவ்வாறு என்னை செய்தார் என்று சொல்லி அழுதார் ரூபினி. உடனே மேட்டு பாளையத்தில் உள்ள ரூபினி தாய்க்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே அவர் கடந்த 2010-ம் ஆண்டு ஜனவரி மாதம் துஷ்யந்தன் தனது மகளை பாலியல் பலாத்காரம் செய்து துன்புறுத்துவதாக புவனேஸ்வரி காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். இது குறித்து அண்ணாசாலை போலீசார் வழக்கு பதிவு செய்து துஷ்யந்தனை கைது செய்தனர்.இதனை தொடர்ந்து அவரை போலீசார் nullநிதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். மகளிர் நீதிமன்றத்தில் இந்த வழக்கு நடைபெற்றது. இதனை தொடர்ந்து இந்த வழக்கு நேற்று மகளிர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இதனை விசாரித்த நீதிபதி - சேதுராமன் பிறப்பித்த உத்தரவில் துஷ்யந்தனுக்கு 10 வருடம் சிறை தண்டனையும் ரூ.35,500 அபராதம் விதித்து உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து போலீசார் துஷ்யந்தனை புழல் சிறையில் அடைத்தனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்