முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமெரிக்காவில் 3 மாணவரை கொன்ற கைதி தப்பியோட்டம்

ஞாயிற்றுக்கிழமை, 16 நவம்பர் 2014      உலகம்
Image Unavailable

 

நியூயார்க், நவ 17 - அமெரிக்க பள்ளியில் 3 மாணவரை சுட்டு கொன்ற கைதி தப்பினான்.

அமெரிக்காவில் ஓகியோ மாகாணத்தில் கார்டான் உயர்நிலை பள்ளியில் புகுந்து டி.ஜே. லேன் என்பவன் துப்பாக்கியால் சுட்டான். அதில் 3 மாணவர்கள் உயிரிழந்தனர். இந்த சம்பவம் கடந்த 2012ம் ஆண்டு நடந்தது. இதனால் கைது செய்யப்பட்ட அவனுக்கு கோர்ட் 3 ஆயுள் தண்டனை வழங்கியது. எனவே அவன் சிறையில் அடைக்கப்பட்டான். அவனுடன் குழந்தையா மானபங்கம் செய்த விண்ட்சே புரூஸ், கொள்ளை மற்றும் கடத்தல் குற்றங்களில் தண்டனை பெற்ற கிளிப்போர்டு ஓப்பரூடு ஆகிய 2 பேரும் சிறையில் இருந்தனர். இவர்கள் 3 பேரும் சிறையில் இருந்து தப்பிக்க பல மாதங்களாக திட்டம் தீட்டினர். பின்னர் 13 அடி உயர ஏணி தயாரித்து அதன் மூலம் ஏறி சிறையில் இருந்து வெளியே குதித்து தப்பினர். தகவல் அறிந்ததும் போலீசார் விரைந்து சென்று 9 மணி நேரத்தில் தப்பியோடிய 3 கைதிகளையும் பிடித்து கைது செய்தனர். இவர்கள் அனைவரும் ஓகியோவில் உள்ள கைதிகள் சீர்திருத்த சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்