முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சவூதி அரேபிய மருத்துவமனைகளில் பணி புரிய அழைப்பு

வியாழக்கிழமை, 20 நவம்பர் 2014      தமிழகம்
Image Unavailable

சென்னை - சவூதி அரேபிய அரசு மருத்துவமனைகளில் பணிபுரிய பிஎஸ்சி பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அழைப்பு விடுத்துள்ளது.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட அறிக்கை வருமாறு:
சவூதி அரேபிய சுகாதாரஅமைச்சகத்திற்கு உட்பட்ட கிங் சவுத் மெடிகல் சிட்டி அரசுமருத்துவமனைகளில் பணிபுரிவதற்கு பிஎஸ்சி தேர்ச்சியுடன் மூன்று வருட அனுபவம்பெற்ற அவசரப்பிரிவு மற்றும் தீவிர கண்காணிப்பு பிரிவு 35 வயதிற்குட்பட்ட பெண் செவிலியர்கள், பிஎஸ்சி/டிப்ளமோ தேர்ச்சியுடன் மூன்று வருட பணி அனுபவம் பெற்ற பயோஸ்டேடிஸ்டியன்கள், எகோ டெக்னிசியன்கள் மற்றும் தரக்கட்டுப்பாடு பணியாளர்களுக்கான நேர்முகத் தேர்வு 28.ந்தேதி 30 ந்தேதி வரை புதுடில்லியில் நடைபெற உள்ளது.
தேர்ந்தெடுக்கப்படுவர்களுக்கு தகுதி மற்றும் அனுபவத்திற்கேற்ப ஊதியத்துடன் இதரசலுகைகள் வழங்கப்படும்.மேற்குறிப்பிட்ட பணியிடங்களுக்கு உரிய தகுதி மற்றும் அனுபவம் இருப்பின், தங்களின்சுய விவரங்கள் அடங்கிய விண்ணப்பத்துடன் கல்வி, அனுபவம், பாஸ்போர்ட்,புகைப்படம் ஆகியவற்றுடன், எண்.42, ஆலந்தூர் சாலை, ஒருங்கிணைந்தவேலைவாய்ப்பு அலுவலகம், திரு.வி.க. தொழிற்பேட்டை, கிண்டி, சென்னை-32 என்றமுகவரியில் அமைந்துள்ள தமிழக அரசு நிறுவனமான அயல்நாட்டு வேலைவாய்ப்புநிறுவனத்திற்கு நேரிலோ அல்லது [email protected] என்ற மின்னஞசல்\முகவரிக்கோ 24.11.2014க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
மேலும் விவரங்கள் அறிய 044-22502267/22505886 என்ற தொலைபேசி எண்களைதொடர்பு கொள்ளலாம் அல்லது www.omcmanpower.com என்ற இணையதளத்திற்கு சென்றும் அறியலாம்.
இவ்வாறு அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து