முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜெயலலிதா முதல்வராக மதுரையில் நாளை திருமஞ்சன வழிபாடு

வியாழக்கிழமை, 20 நவம்பர் 2014      அரசியல்
Image Unavailable

மதுரை - ஜெயலலிதா மீண்டும் முதல்வராக வேண்டி மதுரை மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் நாளை 22-ம் தேதி மதுரை தல்லாகுளம் பெருமாள் கோவிலில் திருமஞ்சன வழிபாடு மற்றும் அன்னதானம் நடக்கிறது.
அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா மீண்டும் முதல்வராக வேண்டி மதுரை மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் பல்வேறு சிறப்பு வழிபாடுகள்,யாகங்கள் நடத்தப்படுகின்றன. மேலும் மதுரை தல்லாகுளம் பெருமாள் கோவிலில் நாளை 22-ம்தேதி (சனிக்கிழமை) திருமஞ்சன வழிபாடு மற்றும் அன்னதானம் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தலைமையில் நடக்கிறது.
இது குறித்து மதுரை மாநகர் மாவட்ட அதிமுக செயலாளரும்,கூட்டுறவு துறை அமைச்சருமான செல்லூர் கே.ராஜூ விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
கழக பொதுச்செயலாளர் அம்மா மீண்டும் முதல்வராக வேண்டி தல்லாகுளம் பெருமாள் கோவிலில் நாளை 22-ந் தேதி காலை 10 மணிக்கு திருமஞ்சன வழிபாடு மற்றும் அன்னதானம் நடத்தப்படுகிறது. இதில் மேயர்,இந்நாள்,முன்னாள் நாடாளுமன்ற,சட்டமன்ற உறுப்பினர்கள் மாவட்ட கழக நிர்வாகிகள்,அணிச்செயலாளர்கள்,சார்பு அணி நிர்வாகிகள்,உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள்,கூட்டுறவு சங்க நிர்வாகிகள்,அமைப்பு சாரா ஒட்டுனர் அணி நிர்வாகிகள், இளைஞர்,இளம்பெண் பாசறை நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரளாக பங்கேற்க வேண்டுகிறேன். இவ்வாறு அவர் அறிக்கையில் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து