முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விமான நிலைய கழிவறையில் 2 கிலோ தங்கக்கட்டிகள்!

சனிக்கிழமை, 22 நவம்பர் 2014      வர்த்தகம்
Image Unavailable

திருச்சி - திருச்சி விமான நிலையத்தில் குடியேற்றப் பிரிவு அலுவலர்கள் அறைக்கு அருகில் உள்ள ஆண்கள் கழிவறையை சுத்தம் செய்ய நேற்று காலை சென்றபோது அந்த கழிவறை தொட்டியில் காகிதத்தால் சுற்றப்பட்டு ஒரு பார்சல் கிடந்தது. அதில் தலா 1 கிலோ எடையுள்ள 2 தங்கக் கட்டிகள் இருந்தன. இதன் மதிப்பு ரூ.50 லட்சம்.
இதுபற்றி அந்த பணியாளர் அளித்த தகவலின்பேரில், 2 கிலோ தங்கக் கட்டிகளை கைப்பற்றிய சுங்கத் துறையினர், அதை கடத்தி வந்தது யார் என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.
சுங்கத்துறை அலுவலர்களின் சோதனைக்கு பயந்து கடத்தல் தொழிலில் ஈடுபட்டுள்ள மர்ம நபர்கள் கடத்தல் தங்கத்தை கழி வறையில் பதுக்கிவைத்து விட்டு சென்றிருக்கலாம் எனக் கூறப்படு கிறது. கழிவறைக்கு செல்லும் பாதையில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ள பதிவுகளை வைத்து தங்கம் கடத்தி வந்த மர்ம நபர்களை அடையாளம் காணும் பணியில் அலுவலர்கள் ஈடுபட்டுள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து