முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

இதய பிரச்சனை தீர

‘ம்ருத்யூ’ என்றால் மரணம். ‘சஞ்சீவி’ என்றால் மரணமற்ற நீண்ட ஆயுள். அதாவது, ‘மரணமில்லாதப் பெருவாழ்வு’ என்பது இந்த முத்திரையின் பெயர். உயிர் காக்க உதவும் இந்த முத்திரை. மாரடைப்பு, நெஞ்சுவலி போன்ற சந்தேகம் தோன்றிய உடனேயே, இம்முத்திரையைச் செய்யத் தொடங்கினால், வலி, படபடப்பு, நெஞ்சு எரிச்சல் குறையும்.

பிராணாயாமம்

நாம் மிக ஆழமாக மூச்சை இழுக்கும்போது ஆக்சிஜன், உடலில் உள்ள அனைத்து திசுக்களுக்கும் அதிக அளவில் கிடைக்கிறது. இது திசுக்களின் செயல்பாட்டை விரைவுபடுத்தி நச்சுக்களை அப்புறப்படுத்துகிறது. வயிறு உள்ளே போவதால், வயிற்றுப் பகுதி தசைகள் சுருங்கும். இந்தத் தசைப் பயிற்சியை, தினமும் தொடர்ந்து செய்யும்போது, இவை இரண்டும் சேர்ந்து உடலின் எடையைக் குறைத்துவிடும்,

பெண்களுக்கு மட்டும்

ஏரோபிக்ஸ், பளு தூக்குதல், கார்டியோ மற்றும் உடலை நீட்டி வளைத்து செய்யும் ஸ்ட்ரெச்சிங் போன்றவை பெண்களுக்கு மிகவும் ஏற்ற உடற்பயிற்சிகளாகும். இந்த உடற்பயிற்சிகள் பெண்களுக்கு வலிமையையும், வளைந்து கொடுக்கும் தன்மையையும் கொடுக்கின்றன. மேலும், உடலை ஆரோக்கியமாக வைத்திருக்கவும் இவை உதவுகின்றன.

இதுதான் காரணம்

கடைகளில் நாம் சாப்பிட வாங்கும் சிக்கனுடன் கூடவே, 2 துண்டு எலுமிச்சை பழங்கள் வைக்க ஒரு முக்கிய காரணம் உள்ளது. சிக்கனில் அதிக அளவுக்கு இரும்புச் சத்து உள்ளது. இரும்புச் சத்தை நமது உடல் முழுமையாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்றால், வைட்டமின் - சி தேவை. அதனால் தான், சிக்கன் சாப்பிடும் போது, வைட்டமின் - சி சத்து நிறைந்த எலுமிச்சை சாற்றை பிழிந்து சாப்பிட வைக்கிறார்கள்.

முதல் அணு உலை எங்கு அமைக்கப்பட்டது தெரியுமா?

உலகின் முதல் அணு உலை எங்கு அமைக்கப்பட்டது தெரியுமா... அமெரிக்காவில் உள்ள மொன்டானா மாகாணத்தின் வடகிழக்கில் உள்ள பாலைவனப் பகுதியான இடாகோ என்ற இடத்தில் 1951 டிசம்பரில் அமைக்கப்பட்டது. சோதனை ஓட்டமாக இதிலிருந்து அப்போது எடுக்கப்பட்ட மின்சாரத்திலிருந்து வெறும் 200 வாட் பல்புகள் மட்டுமே எரிய பயன்படுத்தப்பட்டன. அதன் பின்னர் வெற்றிகரமாக 1954 இல் உலகின் முதன் அணு உலை ரஷ்யாவில் உள்ள Obninsk APS-1 என்ற இடத்தில் நிறுவப்பட்டது. இதன் மூலம் 5 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டது. பின்னர் 1955 இல் அருகில் உள்ள ஆர்கோ என்ற சிற்றூருக்கு இதன் மூலம் மின் விநியோகம் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

புதிய முயற்சி

உலகின் மிகப்பெரிய பதிப்பக நிறுவனமான ஹார்ப்பர் கோலின்ஸ், தனது இந்திய கிளைகளில் பணியாற்றுபவர்களுக்கு, செல்லப்பிராணிகளை பராமரிப்பதற்காக, சம்பளத்துடன் கூடிய விடுமுறையை (ஐந்து நாட்கள்) அனுமதித்துள்ளது. மேலும், நொய்டாவில் உள்ள அலுவலகத்தில் செல்லப்பிராணிகளை அழைத்து வர அனுமதிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்