எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னை, சிறப்புமிக்க தமிழ்மொழியை இந்தி மொழியாலோ, இந்தியை முன்னிறுத்தி மறைமுகமாகத் திணிக்க நினைக்கும் சமஸ்கிருதத்தாலோ ஒருபோதும் அழிக்க முடியாது. ஆனால், சில மொழிகள் இந்திக்கு இடம் கொடுத்தன. இருந்த இடம் தெரியாமல் தொலைந்தன. அதனாலேயே நாம் இந்தித் திணிப்பை எதிர்கிறோம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
இந்தி என்ற முகமூடிக்கு பின்னால் சமஸ்கிருதத்தின் முகம் இருப்பதாக விமர்சித்து மொழிப் போராட்ட வரலாற்றுப் பின்னணியில் உடன்பிறப்புகளுக்கு உங்களில் ஒருவன் எழுதும் 3-வது மடல் என்று குறிப்பிட்டு தி.மு.க.வின் அதிகாரபூர்வ இதழில் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தின் விவரம் வருமாறு:
இந்தியால் தமிழ் அழியாது. ஆனால், தமிழ்ப் பண்பாடு அழிந்து போகும். இன்று வேலைக்காரியாக வரும் இந்தி, நாளை தமிழ் நாட்டரசி ஆவது நிச்சயம் என்று எச்சரித்தார். ஓர் இனத்தை அழிக்க வேண்டுமென்றால் அதன் மொழி மீது தாக்குதல் நடத்தி, பண்பாட்டை சிதைக்க வேண்டும் என்பதை பாசிச எண்ணம் கொண்டோர் கடைப்பிடித்தார்கள். அண்மையில் குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் இந்தியா மீதான முந்தைய படையெடுப்புகள் குறித்துப் பேசியபோது, “ஒரு மாநிலத்தைக் கைப்பற்ற வேண்டுமென்றால், அதன் கலாச்சாரத்தை கையிலெடுப்பதும், மொழியை அழிப்பதுமே சிறந்த வழி என்று குறிப்பிட்டதை மறக்க முடியாது. மத்திய பா.ஜ.க. அரசின் கொள்கையே அதுவாகத்தான் இருக்கிறது.
இந்தி மொழியை ஏற்றுக்கொண்ட பீகார் மாநில மக்களின் சொந்த மொழியான மைத்திலி, அந்த மாநிலத்தின் அடுத்தடுத்த தலைமுறையினர் அறிய முடியாதபடி வழக்கொழிந்தது. இவை மட்டுமா? ஹரியாண்வி, ராஜஸ்தானி, மார்வாரி, மேவாரி, மால்வி, நிமதி, பகேலி, ஜார்கன்ஷி, சந்த்தலி, சட்டீஸ்கரி, கோர்பா உள்ளிட்ட மொழிகள் பேசுவோரைத் தேட வேண்டியுள்ளது. உத்தரபிரதேசம், பீகார், மத்திய பிரதேசம், ஜார்கண்ட், சட்டீஸ்கர், ஹரியானா, ராஜஸ்தான் என இந்தியை ஆட்சிமொழியாகக் கொண்ட மாநிலங்களின் பூர்வீக மொழிகள் சிதைக்கப்பட்டு, அழிக்கப்பட்ட நிலையில், அந்த மொழி பேசும் மக்களின் பண்பாட்டு விழுமியங்களும், இலக்கியச் செழுமைகளும், மரபார்ந்த அறிவுத்திறனும் இருந்த இடம் தெரியாமல் மறைந்து போயிருக்கின்றன.
வடஇந்திய மாநிலங்களில் 25க்கும் மேற்பட்ட அந்தந்த மண்ணின் தாய்மொழிகளை கடந்த ஒரு நூற்றாண்டு காலத்தில் இந்தி-சமஸ்கிருதம் எனும் ஆதிக்க மொழிகளின் படையெடுப்பு சிதைத்திருக்கிறது. நூற்றாண்டைக் கடந்த திராவிட இயக்கம் ஏற்படுத்திய விழிப்புணர்வினாலும், அதன் தொடர்ச்சியானப் போராட்டத்தினாலும் நம் தாய்த் தமிழ் மொழி காப்பாற்றப்பட்டு, தமிழர்களின் பண்பாட்டுப் பெருமைகள் நிலைநிறுத்தப்பட்டிருக்கின்றன. இதனை சீர்குலைக்க வேண்டும் என்ற நோக்கத்துடன்தான் மத்திய பா.ஜ.க. அரசின் தேசிய கல்விக் கொள்கை மூலம் இந்தி-சமஸ்கிருத மொழிகளைத் திணிக்கும் முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. இதனை உணர்ந்திருப்பதால்தான் தமிழ்நாடு எதிர்க்கிறது.
தமிழர்களின் பண்பாட்டிற்கு நேரெதிரான கொள்கைகளைக் கொண்ட பா.ஜ.க. மட்டும், தேசிய கல்விக் கொள்கையின் மும்மொழித் திட்டத்தை ஆதரித்தபடியே, இந்தி-சமஸ்கிருதம் என்று எங்கே இருக்கிறது? மூன்றாவது மொழியாக, இந்தியாவில் உள்ள எந்த மொழியை வேண்டுமானாலும் படிக்கலாம். அயல்நாட்டு மொழிகளைக் கூடக் கற்கலாம் என்று ஒரு ‘தினுசாக’ப் பேசுகிறார்கள். அடடா..! இவர்களுக்குத்தான் இந்திய மொழிகள் மீது எவ்வளவு அக்கறை?
மும்மொழித் திட்டம் என்ற பெயரில் என்னென்ன மொழிகள் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளன என அட்டவணையைப் பார்த்தால் பெரும்பாலான மாநிலங்களில் இந்தி அல்லது சமஸ்கிருதமே முன்னிலைப்படுத்தப்படுகிறது. தேசிய கல்விக் கொள்கை 2020ன் 4.17வது பிரிவு, “இந்தியஅரசியல் சட்டத்தின் எட்டாவது அட்டவணையில் இடம்பெற்றுள்ள செம்மொழியான சமஸ்கிருதம் இலக்கியம், கணிதம், அறிவியல், மருத்துவம், தத்துவம், இசை, அரசியல் இன்ன பிற உள்ளிட்ட பல்வேறு கலைச்செல்வங்களைக் கொண்டுள்ளது, இதனால் சமஸ்கிருத மொழி பள்ளிகளிலும், உயர்கல்வியிலும் அனைத்து நிலைகளிலும் மும்மொழித் திட்டத்தில் ஒன்றாக மாணவர்களுக்கு கற்றுத் தரப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் பிறகே, மூத்த மொழியான தமிழ் மற்றும் இந்தியாவின் பிற மொழிகள் பற்றி 4.18வது பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் மூலம், சமஸ்கிருதத்தைத் திணிக்கவும், தமிழ் உள்ளிட்ட மற்ற மொழிகளைப் புறங்கையால் ஓரங்கட்டவும் திட்டமிட்டே மத்திய பா.ஜ.க. அரசு தேசியக் கல்விக் கொள்கையையும் அதன் வழியாக மும்மொழித் திட்டத்தையும் நம் மீது திணிக்கிறது என்பது தெளிவாகிறது.
தமிழ்ப் பண்பாட்டை அழிக்க நினைத்து, சமஸ்கிருத-இந்தி மொழிகள் மூலம் ஆரியப் பண்பாட்டைத் திணிக்க எவர் முயற்சித்தாலும் அதற்கு இந்த மண்ணில் இடம் கிடையாது என்கிற வகையில் அரை நூற்றாண்டுக்கு முன்பே தமிழ்நாட்டில் இருமொழி கொள்கையை சட்டமாக்கினார் அண்ணா. அந்த வரலாற்றுப் பக்கத்தைப் புரட்டினால்தான் இன்றைய மத்திய ஆட்சியாளர்களின் வஞ்சகத்தை இளையதலைமுறை புரிந்துகொள்ள முடியும். இவ்வாறு முதல்வர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 5 months 5 days ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 5 months 1 week ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 6 months 9 hours ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 27-02-2025.
27 Feb 2025 -
வீட்டில் ஒட்டப்பட்ட சம்மன் கிழிப்பு: துப்பாக்கியுடன் மிரட்டியதாக சீமான் வீட்டு காவலாளி கைது
27 Feb 2025சென்னை, நடிகை விஜயலட்சுமி விவகாரத்தில் நா.த.க. ஒருங்கிணைப்பாளர் சீமான் வீட்டில் ஒட்டப்பட்ட சம்மன் கிழிக்கப்பட்டுள்ளது.
-
கல்வி உதவித்தொகைக்கான ஊரகத் திறனாய்வு தேர்வுக்கு விடைக்குறிப்புகள் வெளியீடு
27 Feb 2025சென்னை, பள்ளி மாணவர்களின் கல்வி உதவித்தொகைக்கான ஊரகத் திறனாய்வுத் தேர்வுக்குரிய தற்காலிக விடைக்குறிப்பை தேர்வுத்துறை வெளியிட்டுள்ளது.
-
கழிப்பறைகளை பராமரிக்க தனியாரிடம் ஒப்பந்தம்: சென்னை மாநகராட்சி கூட்டத்தில் உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு
27 Feb 2025சென்னை, சென்னையில் உள்ள அனைத்து கழிப்பறைகளையும் பராமரிக்க தனியாருடன் ஒப்பந்தம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக சென்னை மாமன்றக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
மாசி அமாவாசையை முன்னிட்டு அக்னி தீர்த்தக்கடலில் நீராடி தர்ப்பணம் கொடுத்த பக்தர்கள்
27 Feb 2025ராமேஸ்வரம், மாசி அமாவாசையை முன்னிட்டு அக்னி தீர்த்தக் கடலில் நீராடி தர்ப்பணம் கொடுத்த பக்தர்கள்
-
தொடர்ந்து வலுக்கும் எதிர்ப்பு: மத்திய கல்வி அமைச்சரின் தமிழக பயணம் திடீர் ரத்து
27 Feb 2025டெல்லி, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானின் தமிழ்நாடு பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
காசாவின் எதிர்காலம் குறித்து டிரம்ப் வெளியிட்ட விடியோவால் சர்ச்சை
27 Feb 2025காசா, காசாவின் எதிர்காலம் குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் வெளியிட்ட விடியோ சர்ச்சையாகியுள்ளது.
-
டெல்லி தேர்தலில் செய்ததை மேற்குவங்கத்தில் செய்ய முடியாது: பா.ஜ.க.வுக்கு மம்தா பானர்ஜி சவால்
27 Feb 2025கொல்கத்தா, வெளியாட்கள் மேற்கு வங்கத்தைக் கைப்பற்ற அனுமதிக்க மாட்டோம். பா.ஜ.க.
-
5 ஆண்டுகளுக்கு பிறகு வடகொரியாவில் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி
27 Feb 2025பியாங்யாங், வடகொரியா நாட்டில் 5 ஆண்டுகளுக்கு பிறகு சர்வதேச சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி வழங்க திட்டமிட்டுள்ளது.
-
டெல்லி சட்டப்பேரவைக்குள் நுழைய ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்களுக்கு தடை
27 Feb 2025புதுடில்லி, டில்லி சட்டப்பேரவை வளாகத்திற்குள் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் நுழைவதைத் தடுத்து நிறுத்துவதாக எதிர்க்கட்சித் தலைவர் அதிஷி வியாழக்கிழமை தெரிவித்தார்.
-
ஸ்ரீவில்லிபுத்தூர்: மகா சிவராத்திரியை முன்னிட்டு கொதிக்கும் நெய்யில் கையால் அப்பம் சுட்டு கொடுத்த மூதாட்டி
27 Feb 2025ஸ்ரீவில்லிபுத்தூர், மகா சிவராத்திரியை முன்னிட்டு கொதிக்கும் நெய்யில் மூதாட்டி ஒருவர் கையால் அப்பம் சுட்டு பக்தர்களுக்கு கொடுத்தார்.
-
வருகிற 13-ம் தேதிக்குள் அரசு பணியாளர்களை குறைக்க வேண்டும்: அதிபர் ட்ரம்ப் கெடு
27 Feb 2025அமெரிக்கா, அரசுத் துறைகளில் அதிகளவிலான பணியாளர்களை குறைக்க அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கெடு விதித்துள்ளார்.
-
உ.பி. மகா கும்பமேளாவுக்கு இயக்கப்பட்ட 16,000 ரயில்கள்: மத்திய அமைச்சர் தகவல்
27 Feb 2025பிரயாக்ராஜ், மகா கும்பமேளாவுக்கு 16,000-க்கும் மேற்பட்ட ரயில்கள் இயக்கப்பட்டதாக மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
-
நடிகை பாலியல் புகார்: வளசரவாக்கம் காவல் நிலையத்தில் ஆஜரான சீமானின் வழக்கறிஞர்கள்
27 Feb 2025சென்னை, நடிகை விஜயலட்சுமி அளித்த பாலியல் குற்றச்சாட்டு தொடர்பான வழக்கில் சீமானின் வழக்கறிஞர்கள் வளசரவாக்கம் காவல் நிலையத்தில் ஆஜராகினர்.
-
காஷ்மீர் விவாகாரத்தில் பொய் கூறும் பாக்.: ஐ.நா. சபையில் இந்திய கண்டனம்
27 Feb 2025ஜெனிவா, ஜம்மு காஷ்மீர் விஷயத்தில் பாகிஸ்தான் தொடர்ந்து பொய்களை பரப்புகிறது என்று ஐநா கூட்டத்தில் இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது.
-
குமரி, நெல்லை உள்ளிட்ட 10 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
27 Feb 2025சென்னை, கன்னியாகுமரி, திருநெல்வேலி உள்ளிட்ட 10 மாவட்டங்களில் பிப்.,28 ஆம் தேதி (இன்று) கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
பிலிப்பைன்ஸ்: கட்டிடத்தில் திடீர் தீ விபத்து - 8 பேர் பலி
27 Feb 2025மணிலா, குடியிருப்பு கட்டிடத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டதால் 8 பேர் உயிரிழந்துள்ளனர்.
-
ஸ்ரீவில்லிபுத்தூர்: மகா சிவராத்திரியை முன்னிட்டு கொதிக்கும் நெய்யில் கையால் அப்பம் சுட்டு கொடுத்த மூதாட்டி
27 Feb 2025ஸ்ரீவில்லிபுத்தூர், மகா சிவராத்திரியை முன்னிட்டு கொதிக்கும் நெய்யில் மூதாட்டி ஒருவர் கையால் அப்பம் சுட்டு பக்தர்களுக்கு கொடுத்தார்.
-
என்னை இவ்வளவு விரட்ட வேண்டிய அவசியம் என்ன ? சீமான் கேள்வி
27 Feb 2025ஓசூர், காவல் நிலையத்திற்கு வருகிறேன் என்று கூறிய பிறகும் என்னை இவ்வளவு விரட்ட வேண்டிய அவசியம் என்ன? என சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.
-
வரும் 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் வி.சி.க. இல்லாமல் எந்த அரசியல் நகர்வும் இருக்காது: திருமாவளவன்
27 Feb 2025தருமபுரி, 2026 சட்டப்பேரவை தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சி இல்லாமல் எந்த அரசியல் நகர்வும் இருக்காது என்று திருமாவளவன் பேசினார்.
-
ரூ.27 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்: டெல்லி விமான நிலையத்தில் 2 தாய்லாந்து பெண்கள் கைது
27 Feb 2025புதுடெல்லி, டெல்லி விமான நிலையத்தில் ரூ.27 கோடி மதிப்புள்ள போதைப்பொருளுடன் இரண்டு தாய்லாந்து பெண்களை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
-
காவல்துறையின் நடவடிக்கைகளை கண்டு நான் பயப்பட மாட்டேன்: சீமான் ஆவேசம்
27 Feb 2025கிருஷ்ணகிரி, காவல்துறையின் இதுபோன்ற நடவடிக்கைகளை கண்டு நான் பயப்பட மாட்டேன் என சீமான் கூறினார்.
-
இந்தி மற்றும் சமஸ்கிருதத்தாலோ சிறப்புமிகக் தமிழ்மொழியை ஒருபோதும் அழிக்க முடியாது: முதல்வர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்
27 Feb 2025சென்னை, சிறப்புமிக்க தமிழ்மொழியை இந்தி மொழியாலோ, இந்தியை முன்னிறுத்தி மறைமுகமாகத் திணிக்க நினைக்கும் சமஸ்கிருதத்தாலோ ஒருபோதும் அழிக்க முடியாது.
-
கனமழை எச்சரிக்கை எதிரொலி: முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும் கலெக்டர்கள் தயாராக இருக்க வேண்டும்: 12 மாவட்ட கலெக்டர்களுக்கு தமிழக அரசு அறிவுறுத்தல்
27 Feb 2025சென்னை, கனமழை எச்சரிக்கை காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும் என்று ன்னியாகுமரி, நெல்லை உள்ளிட்ட 12 மாவட்ட கலெக்டர்களுக்கு தமிழக அரசு அறிவுறுத்தி
-
வக்ப் மசோதா: பார்லி. கூட்டுக்குழு பரிந்துரைத்த திருத்தங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
27 Feb 2025புதுடெல்லி, வக்ப் சட்டத் திருத்த மசோதா தொடா்பான பாராளுமன்ற கூட்டுக் குழு பரிந்துரைத்த 14 திருத்தங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள