முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரூ.27 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்: டெல்லி விமான நிலையத்தில் 2 தாய்லாந்து பெண்கள் கைது

வியாழக்கிழமை, 27 பெப்ரவரி 2025      இந்தியா
Delhi-Airport-Drugs-2025-02

புதுடெல்லி, டெல்லி விமான நிலையத்தில் ரூ.27 கோடி மதிப்புள்ள போதைப்பொருளுடன் இரண்டு தாய்லாந்து பெண்களை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

டெல்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் ரூ.27 கோடி மதிப்புள்ள போதைப்பொருளை கடத்தியதற்காக இரண்டு தாய்லாந்து பெண்கள் கைது செய்யப்பட்டதாக சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த 19-ம் தேதி அன்று தாய்லாந்தின் பூகெட்டில் இருந்து இங்கு வந்தபோது குற்றம் சாட்டப்பட்டவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர். விரிவான பரிசோதனையில், நான்கு டிராலி பைகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 27.08 கிலோ எடையுள்ள கஞ்சா என சந்தேகிக்கப்படும் 54 பச்சை நிற போதைப்பொருள் பாக்கெட்டுகளை அதிகாரிகள் கண்டுபிடித்ததாக சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் பறிமுதல் செய்யப்பட்ட பொருளின் சர்வதேச சந்தை மதிப்பு தோராயமாக ரூ.27.09 கோடி இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த கடத்தலில் ஈடுபட்ட 2 தாய்லாந்து பெண்களை கைது செய்த சுங்கத்துறை அதிகாரிகள் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 9 months 5 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 5 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 11 months 5 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 11 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து