எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
திண்டுக்கல் : ஆயுள் தண்டனை பெற்று தமிழக சிறையில் பத்து ஆண்டுகள் வரை சிறைவாசம் அனுபவித்து வந்த சிறைக் கைதிகளை சட்டத்திற்கு உட்பட்டு மற்றும் சிறை விதிகளுக்கு உட்பட்டு மனிதாபிமான அடிப்படையில் அவர்களை முன்விடுதலை செய்ய அம்மாவின் அரசு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்றும் குஜிலியம்பாறையை தலைமையிடமாகக் கொண்டு புதிய வருவாய் வட்டம் உருவாக்கப்படும் என்றும் திண்டுக்கல்லில் நடந்த எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார்.
தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி நேற்று திண்டுக்கல்லில் நடைபெற்ற எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்டார். இந்த விழாவில் அவர் எம்.ஜி.ஆர். திருவுருவப் படத்தை திறந்து வைத்தார். புதிய திட்டப் பணிகளுக்கு அவர் அடிக்கல் நாட்டினார். பின்னர் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இவ்விழாவில் துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம், அமைச்சர் பெருமக்கள், சபாநாயகர் தனபால், மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை மற்றும் பலர் கலந்து கொண்டனர். விழாவில் திண்டுக்கல் மாவட்டத்திற்கான சிறப்பு அறிவிப்புகளை அறிவித்தார். அதன் விபரம் வருமாறு:
1) திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் வருவாய் வட்டத்தைப் பிரித்து குஜிலியம்பாறையை தலைமையிடமாகக் கொண்டு புதிய வருவாய் வட்டம் உருவாக்கப்படும்.
2) திண்டுக்கல் காவேரி கூட்டுக் குடிநீர்த் திட்டத்தினை திண்டுக்கல் மாநகராட்சி உட்பட 7 பேரூராட்சிகள் மற்றும் 816 ஊரக குடியிருப்புகளுக்கு விரிவாக்கம் செய்யும் பொருட்டு விரிவான ஆய்வுப் பணிகள் மேற்கொள்ளப்படும்.
3) வேடசந்தூர் பேரூராட்சியில் 1.5 கோடி ரூபாய் மதிப்பில் வடிகால்கள் அமைக்கப்படும். 2018-19ம் ஆண்டு மூலதன மான்ய நிதியின் கீழ் ஒதுக்கீடு பெறப்பட்டு, இப்பணி மேற்கொள்ளப்படும். இதற்கான உட்கட்டமைப்பு வசதிகள் விரைவில் மேற்கொள்ளப்படும்.
4) குஜிலியம்பாறை ஒன்றியம், ஆர்.பில்லமநாயக்கன் பட்டியிலும், வடமதுரை ஒன்றியம், புத்தூரிலும் புதிய கால்நடை கிளை நிலையங்கள் தோற்றுவிக்கப்படும்.
5) சித்தமருத்துவ படிப்பிற்கு உள்ள கூடுதல் தேவையை கருத்திற்கொண்டு 60 மாணவர்கள் படிக்கும் வகையில் பழநியில் ஒரு புதிய சித்த மருத்துவக் கல்லூரி அமைக்கப்படும்
6) வேடசந்தூர் ஒன்றியம், ரெங்கநாதபுரத்தில் புதிய ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்கப்படும்.
7) திண்டுக்கல் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு 11.68 கோடி ரூபாய் மதிப்பில் அதிநவீன உபகரணங்கள் வழங்கப்படும்.
8) திண்டுக்கல் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் 28.5 கோடி ரூபாய் மதிப்பில் மருத்துவ பட்ட மேற்படிப்பு துவங்குவதுடன், தேவையான உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்படும்.
9) திண்டுக்கல் மாவட்டம் கஸ்தூரிபாய் மருத்துவமனையில் ஒரு கோடி ரூபாய் மதிப்பில் புதிய கிராம சுகாதார செவிலியர் பயிற்சி பள்ளி அமைக்கப்படும்.
10) 82.5 லட்சம் ரூபாய் மதிப்பில் வளரிளம் பருவத்தினர் பாதுகாப்புத் திட்டம், மருந்து கிடங்கு விரிவாக்கம் செய்யப்படும்.
11) நிலக்கோட்டை மற்றும் வடமதுரை வட்டாரங்களில் விரிவான ஆரம்ப நல்வாழ்வு சேவைகள் வழங்கப்படும்.
12) அம்மையநாயக்கனூர் சமுதாய சுகாதார நிலையத்தில் நவீன கண் பரிசோதனை மற்றும் சிகிச்சை மையம் அமைக்கப்படும்.
13) கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் சி.டி.ஸ்கேன் அமைக்கப்படும்.
14) பழனி அரசு மருத்துவமனையில் நவீன மருத்துவ உபகரணங்கள் வழங்கப்படும்.
15) ஆத்தூர் அரசு மருத்துவமனையில் 8.22 லட்சம் ரூபாய் மதிப்பில் டயாலிசிஸ் கருவி வழங்கப்படும்.
16) நத்தம் கிராமத்தில் திருமணி முத்தாற்றின் குறுக்கே அமைந்துள்ள காட்டு பெரிய குளம் அணைக்கட்டினை 3 கோடி ரூபாய் மதிப்பில் திரும்பக் கட்டப்படும்.
17) நத்தம் வட்டம், கோசுகுறிச்சி கிராமத்தில் பாலாற்றின் குறுக்கே அமைந்துள்ள பாலூத்துகுளம் அணைக்கட்டினை 2.72 கோடி ரூபாய் மதிப்பில் திரும்பக் கட்டப்படும்.
18) ஒட்டன்சத்திரம் வட்டம், விருப்பாக்சி கிராமத்தில் நங்காஞ்சியார் ஆற்றின் குறுக்கே 1.33 கோடி ரூபாய் மதிப்பில் தடுப்பணை கட்டப்படும்.
19) நிலக்கோட்டை வட்டம், சித்தர்கள் நத்தம் கிராமத்தில் வைகை ஆற்றின் குறுக்கே எல்.எஸ்.35.05 கி.மீ-ல் 12.5 கோடி ரூபாய் மதிப்பில் தடுப்பணை கட்டப்படும்.
20) நிலக்கோட்டை வட்டம், குன்னவராயன்கோட்டை கிராமத்தில் உச்சப்பட்டியின் அருகே மஞ்சளாறு ஆற்றின் குறுக்கே 2.5 கோடி ரூபாய் மதிப்பில் தடுப்பணை கட்டப்படும்.
21) நிலக்கோட்டை வட்டம், கனவாய்பட்டி கிராமத்தில் நெடுகை மஞ்சளாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டப்படும்.
22) நத்தம் வட்டம், முளையூர் கிராமத்திற்கு அருகே திருமணிமுத்தாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டப்படும்.
23) நத்தம் வட்டம், புன்னப்பட்டி கிராமத்திற்கு அருகே காட்டுப் பெரியகுளம் அணைக்கட்டிற்கு கீழ்புறத்தில் திருமணிமுத்தாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டப்படும்.
24) நிலக்கோட்டை வட்டம், கொன்னம்பட்டி கிராமத்தில், இராவூத்தர் தோட்டத்திற்கு அருகே மருதாநதி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டப்படும்.
25) ஒட்டன்சத்திரம் வட்டம், ஜவ்வாதுப்பட்டி கிராமத்தில், நங்காஞ்சியாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டப்படும்.
26) ஆத்தூர் வட்டம், வேலகவுண்டன்பட்டி அருகே சீவல்சரகு கிராமத்தில் குடகனாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டப்படும்.
27) வேடசந்தூர் வட்டம், மாரம்பாடி கிராமத்தில் வேலம்பாடி குடியிருப்பு அருகே சந்தானவர்தினி ஆற்றின் குறுக்கே 4.5 கோடி ரூபாய் மதிப்பில் தடுப்பணை கட்டப்படும்.
28) மோர்பட்டி-சித்துவார்பட்டி சாலையில் சிறுபாலம் கட்டப்படும்.
29) வடமதுரை-வேலாயுதம் பாளையம் செங்குறிச்சி சாலையில் பாலம் கட்டப்படும்.
30) பழனி-கொழுமம் சாலையில் பிரிந்து சின்னகாந்திபுரம் வழியாக செல்லும் சண்முகம்பாறை சாலையில் பாலம் கட்டப்படும்.
31) அம்பிளிக்கை-குத்திலுப்பை சாலையில் பாலம் கட்டப்படும்.
32) சக்கையநாயக்கனுhர் - ஜங்கில்பட்டி வழியிலுள்ள, அழகம்பட்டி சாலையில் பாலம் கட்டப்படும்.
33) கள்ளிமந்தையம்-ஓடைப்பட்டி சாலையில் 3 கோடி ரூபாய் மதிப்பில் பாலம் கட்டப்படும்.
34) அய்யலுhர்-ஆலம்பட்டி சாலை கிமீ 7/2-ல் 2.5 கோடி ரூபாய் மதிப்பில் பாலம் கட்டப்படும்.
35) திண்டுக்கல்-குஜிலியம்பாறை-கரூர் சாலையில் உள்ள ரயில்வே கடவு எண்.6க்கு மாற்றாக வரையறுக்கப்பட்ட சுரங்கப்பாதை 16.18 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்படும்.
36) திண்டுக்கல் நகருக்கு புறவழிச்சாலை 19.25கி.மீ நீளத்திற்கு அமைக்கப்படும். இப்பணிக்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. இதற்கான நில எடுப்பு பணிகள் மேற்கொள்ளப்படும். அதற்கான பணிகள் விரைவில் தொடங்கப்படும்.
37) பழனி தாராபுரம் சாலையில் உடுமலைப்பேட்டை ரயில் நிலையங்களுக்கிடையே உள்ள கடவு எண்.63க்குப் பதிலாக ரயில்வே மேம்பாலம் கட்டப்படும். இப்பணிக்கு விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு வருகிறது.
38) திண்டுக்கல் மின்பகிர்மான வட்டத்தில் புதிய நத்தம் உதவி மின் பொறியாளர் அலுவலகங்கள் மற்றும் மின் கட்டண வசூல் மையம்,
39) திண்டுக்கல் மின் பகிர்மான வட்டம் சின்னலூப்பை, சின்னாளப்பட்டி, மற்றும் லட்சுமணப்பட்டியில் புதிய துணை மின் நிலையங்கள் அமைக்கப்படும்.
40) வாகரை, கோவிலூர், எரியோடு, அய்யலூர், இராமராஜபுரம், மற்றும் அய்யம்பாளையம் ஆகிய துணை மின் நிலையங்களில் திறன் உயர்த்தப்பட்ட மின் மாற்றிகள் அமைக்கப்படும்,
41) சித்தர்கள் நத்தம் துணை மின் நிலையம் 2.49 கோடி ரூபாய் செலவில் திறன் உயர்த்தப்படும்.
42) திண்டுக்கல் மின் பகிர்மான வட்டத்தில் புதிதாக கணினி முறையில் மின் தடை பழுது நீக்கும் மையம் நிறுவப்படும்.
சிறை கைதிகள் முன்கூட்டியே விடுதலை:
அவர் மேலும் பேசுகையில், நீண்ட நாட்களாக பொதுமக்கள் முக்கியமான கோரிக்கையை அரசுக்கு வைத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த சூழ்நிலையில் ஆயுள் தண்டனை பெற்று தமிழக சிறையில் பத்து ஆண்டுகள் வரை சிறைவாசம் அனுபவித்து வந்த சிறைக் கைதிகளை சட்டத்திற்கு உட்பட்டு மற்றும் சிறை விதிகளுக்கு உட்பட்டு மனிதாபிமான அடிப்படையில் அவர்களை முன்விடுதலை செய்ய அம்மாவின் அரசு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்பதை மகிழ்ச்சியுடன் இந்த நேரத்திலே தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.
இந்த விழாவில் திண்டுக்கல் மாவட்ட செயலாளர் மருதராஜ், அபிராமி கூட்டுறவு பண்டகசாலை தலைவர் பாரதி முருகன் மற்றும் அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏக்கள் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 month 4 weeks ago | வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 month 4 weeks ago | ஆவாரம்பூவின் மருத்துவ பலன்கள் 1 month 4 weeks ago |
தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 3 weeks ago | குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 8 months 1 week ago | பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 1 week ago |
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு ப்ரை3 days 22 sec ago |
க்ரிஸ்பி கார்ன் ஸ்நாக்ஸ்5 days 23 hours ago |
ஆப்பிள் ரோஸ்ட்1 week 2 days ago |
-
ரபா நகரில் இஸ்ரேல் வான் தாக்குதல்: முக்கிய ஹமாஸ் தலைவர் உயிரிழப்பு
27 May 2024ஜெருசலேம் : இஸ்ரேல் நடத்திய வான் தாக்குதலில் ஹமாசின் மேற்கு கரை தலைமையக மூத்த அதிகாரி ஒருவரும் கொல்லப்பட்டார்.
-
முல்லை பெரியாற்றில் புதிய அணை: தேனியில் கேரளாவை கண்டித்து தமிழக விவசாயிகள் கண்டன பேரணி
27 May 2024கூடலூர், முல்லை பெரியாறு அணையை இடித்துவிட்டு புதிய அணை கட்ட திட்டமிடும் கேரளாவை கண்டித்து தேனி மாவட்டத்தின் தமிழக எல்லையான லோயர் கேம்பில் விவசாயிகள் சார்பில் நேற்று கண்
-
விதிமுறைகளை மீறி நாளிதழ்களில் தேர்தல் விளம்பரம்: பா.ஜ.க.வுக்கான தடையை நீக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு: ஐகோர்ட் உத்தரவில் தலையிட விரும்பவில்லை என கருத்து
27 May 2024புதுடெல்லி, பா.ஜ.க.வின் தேர்தல் விளம்பரத்துக்கான தடையை நீக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு தெரிவித்த நிலையில், கொல்கத்தா ஐகோர்ட்டின் உத்தரவில் தலையிட விரும்பவில்லை என கூறி பா
-
கொலை செய்யப்பட்ட ரவுடி தீபக் ராஜாவின் உடல் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அடக்கம்
27 May 2024நெல்லை : பாளையங்கோட்டையில் கொலை செய்யப்பட்ட ரவுடி தீபக் ராஜாவின் சடலம், ஒரு வாரத்துக்குப் பிறகு நேற்று காலை அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில் பலத்த போலீஸ்
-
மருத்துவக் காரணங்களுக்காக இடைக்கால ஜாமினை மேலும் ஒரு வாரம் நீட்டிக்க வேண்டும்: சுப்ரீம் கோர்ட்டில் கெஜ்ரிவால் மனு
27 May 2024புதுடெல்லி, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு சுப்ரீம் கோர்ட் வழங்கிய இடைக்கால ஜாமின் ஜூன் 1-ம் தேதியுடன் முடிவடையவுள்ள நிலையில் அவர் ஜாமின் நீட்டிப்பு கோரி மனுத்
-
பிரபல ஹாலிவுட் நடிகர் ஜானி வேக்டர் கொலை
27 May 2024வாஷிங்டன் : பிரபல ஹாலிவுட் நடிகர் ஜானி வேக்டர் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட திருடர்களால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
4 நாட்களில் தென்மேற்கு பருவமழை உருவாகிறது : இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்
27 May 2024புதுடெல்லி : தென்மேற்கு பருவமழை கேரளாவில் 4 நாட்களில் உருவாகக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
சிலி நாட்டில் 137 பேரை பலி கொண்ட காட்டுத்தீயை ஏற்படுத்திய வனத்துறை அதிகாரி கைது
27 May 2024சாண்டியாகோ : சிலி நாட்டில் 137 பேரை பலி கொண்ட காட்டுத்தீயை ஏற்படுத்திய வனத்துறை அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார்.
-
தமிழகத்தில் வாக்குகள் எண்ணும் பணியில் 38,500 பேர்: தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்
27 May 2024சென்னை, தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணியில் நுண் பார்வையாளர்கள் 4,500 பேர் உட்பட 38,500க்கும் மேற்பட்டவர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளதாகவும், வா
-
நாயாக மாறிய ஜப்பானை சேர்ந்தவர் நரியாக மாறவிருப்பம்
27 May 2024டோக்கியோ : ஜப்பானில் கடந்த வருடம் நாயாக மாறிய நபர் தற்போது நரியாக மாற வேண்டும் என தெரிவித்துள்ளார்.
-
வரத்து குறைவு எதிரொலி: தக்காளி விலை கிலோ 60 ரூபாய்க்கு விற்பனை
27 May 2024சென்னை : சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் வரத்து குறைவால், தக்காளி கிலோவுக்கு ரூ.60-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
-
சென்னையில் நாளை முதல் வாக்கு எண்ணுபவர்களுக்கு பயிற்சி : மாவட்ட தேர்தல் அலுவலர் தகவல்
27 May 2024சென்னை : சென்னையில் வாக்கு எண்ணும் மையங்களில் மேற்பார்வையாளர்கள், நுண் பணியாளர்கள் என மொத்தம் 1,433 பேர் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபட உள்ளதாகவும், அவர்களுக்கான பயிற்சி
-
புனே கார் விபத்து வழக்கு: சிறுவனின் ரத்த மாதிரியை மாற்றிய மருத்துவர்கள் கைது
27 May 2024புனே : புனேவில் மதுபோதையில் சிறுவன் ஓட்டிய கார் மோதி இருவர் உயிரிழந்த விவகாரத்தில், சிறுவனின் ரத்த மாதிரியை மாற்றிய வழக்கில் மருத்துவர்கள் இருவர் கைது செய்யப்பட்ட
-
பா.ஜனதாவின் வெற்றியை கொண்டாட தயாராகுங்கள் : நிர்வாகிகள் கூட்டத்தில் அண்ணாமலை பேச்சு
27 May 2024சென்னை : 3-வது முறையாக பா.ஜ.க. ஆட்சிக்கு வரவேண்டும் என்பது காலத்தின் கட்டாயம். பா.ஜ.க. மீது எந்தவித குறையும் இல்லை.
-
பிரதமர் மோடி போட்டியிடும் வாரணாசியை முற்றுகையிட்ட பாரதிய ஜனதா தலைவர்கள்
27 May 2024வாரணாசி : 3-வது முறையாக பிரதமர் மோடி போட்டியிடும் வாரணாசி தொகுதியில் பிரசாரம் அனல் பறக்க தொடங்கியுள்ள நிலையில் அங்கு, மத்திய அமைச்சர் அமித்ஷா, தேசிய தலைவர் ஜே.பி.நட்டா
-
அமித்ஷா குறித்து சர்ச்சை பேச்சு: ராகுல் மீதான வழக்கில் ஜூன் 7-ல் விசாரணை
27 May 2024பெங்களூரு : மத்திய அமைச்சர் அமித்ஷா குறித்து அவதூறாக பேசியதாக ராகுல் காந்தி மீதான வழக்கில் விசாரணை ஜூன் 7-ம் தேதி நடைபெறவுள்ளது.
-
விராட் கோலி வரலாற்று சாதனை
27 May 2024நடப்பு ஐ.பி.எல். தொடரில் பெங்களூரு அணிக்காக விளையாடிய இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி 15 போட்டிகளில் 741 ரன்களை 61.75 என்ற அபாரமான சராசரியில் குவித்தார்.
-
வரும் 1-ம் தேதி டெல்லியில் நடக்கிறது 'இன்டியா' தலைவர்கள் ஆலோசனைக் கூட்டம்: முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட கூட்டணி தலைவர்களுக்கு அழைப்பு
27 May 2024புதுடெல்லி, வரும் 1-ம் தேதி டெல்லியில் டெல்லியில் இன்டியா கூட்டணி தலைவர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெறவுள்ளது.
-
'நான் முதல்வன்' உள்ளிட்ட பல்வேறு திட்டங்களால் நாட்டிலேயே உயர்கல்வியில் சிறந்து விளங்கும் தமிழ்நாடு : தமிழக அரசு பெருமிதம்
27 May 2024சென்னை : நான் முதல்வன் திட்டம் உள்ளிட்ட எண்ணற்ற திட்டங்கள் திறம்பட செயல்படுத்தப்பட்டு வருவதால் நாட்டிலேயே உயர்கல்வியில் தமிழகம் சிறந்து விளங்குவதாக தமிழக அரசு பெருமிதம்
-
விரைவில் புஷ்பா 2
27 May 2024மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் நடிகர்கள் அல்லு அர்ஜூன் மற்றும் ராஷ்மிகா மந்தனா நடித்திருக்கும் 'புஷ்பா 2' திரைப்படம் இந்த வருடத்தில் அதிகம் எதிர்பார்க்கப்படும் படங்க
-
6 மாவட்டங்களில் புதிய மருத்துவ கல்லூரிகளை திறக்க வேண்டும்: அரசுக்கு ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்
27 May 2024சென்னை, 6 மாவட்டங்களில் புதிதாக மருத்துவ கல்லூரிகளை திறக்க போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தி உள்ளார்.
-
கார்த்தி நடிக்கும் 'வா வாத்தியார்'
27 May 2024தமிழ் திரையுலகில் முன்னணி நட்சத்திர நடிகரான கார்த்தி நடிப்பில் தயாராகி இருக்கும் 'வா வாத்தியார்' எனும் புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது.
-
ஜெயக்குமார் மரண வழக்கு விசாரணை: 30-க்கும் மேற்பட்டோருக்கு சி.பி.சி.ஐ.டி. போலீஸ் சம்மன்
27 May 2024நெல்லை : ஜெயக்குமார் மரண வழக்கு தொடர்பாக நண்பர்கள் உட்பட 30க்கும் மேற்பட்டோர் விசாரணைக்கு நேரில் ஆஜராக சி.பி.சி.ஐ.டி. போலிசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.
-
வெற்றிக்கு குறித்து ஸ்ரேயாஸ் ஐயர்
27 May 2024சென்னை : போட்டியில் முதலில் பந்துவீசியது வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்ததாக கொல்கத்தா அணி கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் தெரிவித்துள்ளார்.
-
பாலியல் விவகாரம்: விசாரணை குழு முன்பு மே 31-ல் ஆஜராகுகிறார் பிரஜ்வல் ரேவண்ணா : வீடியோ வெளியிட்டு தகவல்
27 May 2024பெங்களூரு : பாலியல் துன்புறுத்தல் விவகாரத்தில் சிக்கிய ஹாசன் எம்.பி.