எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, ஏப். 11 - வண்டலூர் அண்ணா உயிரியல் பூங்காவிற்கு மிக அதிக அளவில் பார்வையாளர்கள் சென்று வருகின்றனர். அங்குள்ள பசுமையான சூழல் கோடை வெய்யிலையே சொர்க்கமாக்கும் அளவிற்கு இதமானதாக இருப்பதால் பார்வையாளர்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்து வருகின்றனர். இதுப் பற்றிய விவரம் வருமாறு:-
கோடைக்காலம் தொடங்கிவிட்டதால், சுட்டெரிக்கும் வெய்யிலால் தகித்துக்கொண்டிருக்கிறது. வெப்பத்தைக் கக்கியபடி வீசும் அனல் காற்றாலும், சுட்டெரிக்கும் வெய்யிலாலும் மக்கள் இன்னலுக்குள்ளாகி வருகின்றனர். இந்நிலையில் இன்னும் சில நாட்களில் கத்தரியும், அக்னி நட்சத்திரமும் நம்மை மிரட்ட வரப்போகிறது. இதனால் மனிதர்கள் மட்டுமின்றி அனைத்து உயிர்களும் துன்பம் பட நேரிடும். மக்கள் இப்போதே இந்த வெய்யில் கொடுமையிலிருந்து விடுபட கடற்கரை, பூங்கா, போன்ற இடங்களை தேடிச் செல்கின்றனர். அண்மைக்காலமாக வண்டலூர் வன உயிரியல் பூங்காவிற்கு பார்வையாளர்கள் அதிக அளவில் குவியத் தொடங்கியுள்ளனர்.
கடந்த 2002 மற்றும் 2003 ஆம் ஆண்டுகளில் 7 லட்சத்து 11 ஆயிரத்து 589 என்ற நிலையிலிருந்த பார்வையாளர்களின் எண்ணிக்கை தற்போது 2011 மற்றும் 2012-ம் ஆண்டுகளில் 20 லட்சத்து 2 ஆயிரத்து 545 என்று உயர்ந்திருக்கிறது. உயிரியல் பூங்கா நிர்வாகமும் பார்வையாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க அவர்களுக்கு ஊக்கப்பரிசுகளை அளித்து வருகிறது. மேலும் அங்குள்ள வனவிலங்குகளுக்கும் புத்தாக்கப்பயிற்சிகளை அளித்து வருவதால் அவைகளும், உற்சாகத்துடன் காணப்படுகின்றன. இதனால் பார்வையாளர்கள் பெரிதும் கவரப்படுகின்றனர்.
சிங்கவால் குரங்கு ஒருங்கிணைந்த இனப்பெருக்கத் திட்டத்தின் தொடர்ச்சியாக பார்வையாளர்கள் செல்லாத இரண்டு புதிய மறைவிட இருப்பிடங்கள் அமைக்கப்பட்டு அவற்றில் இனப்பெருக்கம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கடந்த நிதியாண்டில் பூங்காவில் பிறந்த இளம் வரவுகளின் பட்டியல் கீழ்வருமாறு:
நீலகிரி கருங்குரங்கு - 1, சிங்கவால் குரங்கு -3, காட்டுமாடு -3, சிங்கம் -4, வெள்ளைப்புலி -2, நைல் நீர் யானை -1, முள்ளம் பன்றி -4, மர நாய் -4, புருவ கொம்பு மான் -1, காட்டாடு -1, வராக மான் -3, கட மான் -2, தீக்கோழி -2, செந்நிறக் காட்டுக்கோழி -2, மயில் -2, வெள்ளை மயில் -2, செந்தலைக் கிளி -2, வக்கா -18, சிறுகொக்கு -10, இந்திய மலைபாம்பு -34, மற்றும் கட்ட உடல் மலைப்பாம்பு -15.
விலங்குகளை கோடைக்காலங்களில் அதிக வெப்பத்திலிருந்து காப்பாற்றுவது இப்பூங்காவின் முக்கியமானதெரு செயலாகும்.
மானின இருப்பிடங்களில் பனை ஓலையால் வேயப்பட்ட புதிய கொட்டகைகள். பூங்காவிலுள்ள 7யானைகளுக்கு தினந்தோறும் பூங்குளியல் மற்றும் சேற்றுக் குளியல்.
தீக்கோழி ஒட்டகச்சிவிங்கி, வரிக்குதிரை, பறவைப் பகுதிகள் மற்றும் உட்சென்று காணும் நிலப்பறவைகள் இருப்பிடங்களில் தானியங்கி நீர்தெளிப்பான்.
ஊர்வன இல்லத்தில் பாம்புகள் தங்களின் உடல் வெப்பநிலையை செய்யும் வகையில் இரண்டு மற்றும் மூன்றடுக்குகளில் பானை பதித்த மண்புற்றுகள்.
குரங்கினங்கள், கரடிகள் மற்றும் யானைகளின் உடல் வெப்பநிலையை தனிக்கும் பொருட்டு சிறப்பு உணவுகள்.
உட்சென்று காணும் பறவைகள் கூடம், தீக்கோழி, வெள்ளைப்புலி இருப்பிட உச்சியில் சூரிய ஒளி வெப்பத்தை தடை செய்யும் வகையில் நிழல் வலைகள்.
நவீன உயிரியல் பூங்காவின் நோக்கமானது வனவிலங்குகளை பூங்காக்களில் இனப்பெருக்கம் செய்து பாது காப்பதாகும். இந்நோக்கத்தை நிறைவேற்றும் வகையில் முதன்முதலாக பூங்காவில் பிறந்த இந்திய மலைப்பாம்பு குட்டிகள் அதன்இயற்கை வாழிடமான களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்தில் உரிய வழிமுறைகளின் படிவிடப்பட்டுள்ளன.
விலங்குகளின் குணவியல்புகள் மாறாமலிருக்க அவற்றுக்கு இயற்கை குணங்களை வலிவூட்டும் சிறுகரடி, வெள்ளைப்புலி, சிங்கவால் குரங்கு மற்றும் பல்வேறு விலங்குகளுக்கு தரப்படுகின்றன. கரடிகள் சொட்டும் தேனை சுவைப்பதும், உடற்பயிற்சி மேற்கொள்ளும் வகையில் உபகரணங்களும் விலங்குகளுக்கு அளிக்கப்பட்டுள்ளன.
பூங்காவில் பார்வையாளர்கள் அதிகம் ரசிக்கும் இடங்களில் மான்கள் உலாவிடமும் ஒன்று. மான்கள் உலாவிடத்தில் உள்ள அரைவட்ட தண்ணீர் தடுப்பணைகளில் பழ வகை மரங்கள் நடப்பட்டுள்ளன. தற்போது அங்குள்ள குளம் அதிக மழை நீரை சேகரிக்கும் வகையில் ஆழப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் முதல்வர் பிறந்த நாளை முன்னிட்டு மரக்கன்றுகளை நடும் திட்டத்தின் கீழ் அதிக அளவில் பழ மரக்கன்றுகள் நடப்பட்டு தானியங்கி நீர் தெளிப்பான் மூலம் அவை வளர்க்கப்படுகின்றன.
வனங்களில் தாயைப்பிரிந்து வரும் யானை தாயை விட்டு பிரியும் குட்டிகளை அதன் தாயுடன் சேர்க்க முயற்சிகள் பலன் அளிக்காத நிலையில் அக்குட்டிகள் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவிற்கு கை வளர்ப்புக்காக அனுப்பி வைக்கப்படுகின்றன. அவ்வாறு அனுப்பி வைக்கப்படும் யானைக்குட்டிகளுக்கு பிற யானைகளுடன் பார்வையில் தொடர்பு கொள்ளல், விளையாட்டு சாதனங்கள், உணவூட்டும் வழிமுறைகள் மற்றும் கால்நடை விலங்கின மருத்துவம் ஆகியவற்றால் மிகவும் நன்முறையில் பராமரிக்கப்படுகின்றன. இவ்வருட வரவான முரளி மற்றும் அசோகன் ஆகிய யானைக் குட்டிகளுடன் 6 யானைக் குட்டிகள் பல்வேறு நிலைகளில் இங்கு வந்து மறுவாழ்வு பெற்று வளர்கின்றன.
இப்பூங்கா பொது மக்களிடம் விலங்குகளின் மேல் பற்று, பாசம், அன்பு இவற்றை உருவாக்கும் வகையில் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் விலங்குகள் தத்தெடுப்பு திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இது வரை இத்திட்டத்தின் கீழ் 113 விலங்குகள் 92 நபர்களால் ரூபாய் 38.7 லட்சம் பெறப்பட்டுள்ளது.
பூங்காவிலுள்ள தாவர உண்ணிகளுக்கு புதிதான பசும்புல் கொடுக்க கோ 3, கோ4, பாராகிராஸ் கரும்பு, சோளம், வாழை ஆகியவை நடப்ப்டடு தினமும் 2000 கிலோகிராம் புதிதான பசும்புல் பெறப்படுகிறது.
பூங்காவிற்கு தடையில்லா மின்சாரம் கிடைக்க புதிய 100 கே.வி. டீசல் மின்னாக்கி மற்றும் அதன் உபகரணங்களுடன் தானாகவே இயங்கும் மாற்றிகள் பொருத்தப்பட்டு செயலாக்கத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
பூங்கா நுழைவு வாயில் மேம்பாட்டு பணிக்காக அரசின் சுற்றுலாத்துறையில் வழங்கப்பட்ட 3.25 கோடி மேம்பாட்டு பணிக்காக செலவிடப்பட்டது. தமிழ்நாட்டுக்கே பெருமை சேர்க்கும் அளவில் இவ்வளவு சிற்பபான அம்சங்கள் கொண்ட அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா மக்களுக்கு தெரியாத வண்ணம் இதுவரை அமைந்திருந்தது. அதனால் மக்களுக்கு வண்டலூர் உயிரியல் பூங்கா ஜி.எஸ்.டி.சாலையிலிருந்து மக்களின் பார்வைக்கும் அடையாள சின்னமாகவும் திகழ்வதற்கு தமிழ்நாடு சுற்றுலா துறையின் மூலம் முகப்புத்தோற்ற பணிகள் தொடங்கப்பட்டு தற்போது முடிவடைந்துள்ளது. இந்த முகப்புபணிகளில் செய்யப்பட்ட முக்கிய அம்சங்களாவன.
முன்னாள் முதல்வர் எம்.ஜி.இராமச்சந்திரனால் துவக்கி வைக்கப்பட்ட குகையுடன் கூடிய மலை அமைப்பு கொண்ட நுழைவாயிலுக்கு ஏற்றவாறு குறைந்த உயரத்தில் அரைவட்ட வடித்தில் 20 அதி நவீன தனித்தனி நுழைவுச்சீட்டு வழங்கும் இயந்திரங்களுடன் 2 நுழைவுச்சீட்டு மையங்கள் கருங்கல் மற்றும் பளிங்கு கற்களினால் ஒளிரும் வண்ணம் அமைக்கப்பட்டுள்ளது.
கலையரங்கம், செயல் விளக்க அறை, பூங்கா நூலகம் மற்றும் கலந்தாய்வுக் கூடம் ஆகியவற்றில் ஓடுகள் பதிக்கப்பட்டு சாலைகள் சிமெண்ட் சாலையாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளன. இங்கு வரும் பார்வையாளர்களுக்கு கோடை வெய்யில் கூட சொர்க்கமாகிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 18 hours 46 sec ago | இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 18 hours 14 min ago | மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 2 months 16 hours ago |
வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 2 months 16 hours ago | ஆவாரம்பூவின் மருத்துவ பலன்கள் 2 months 16 hours ago | தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 3 weeks ago |
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு ப்ரை4 days 24 sec ago |
க்ரிஸ்பி கார்ன் ஸ்நாக்ஸ்6 days 23 hours ago |
ஆப்பிள் ரோஸ்ட்1 week 3 days ago |
-
தமிழகத்தில் வரும் 3-ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு : சென்னை வானிலை மையம் தகவல்
28 May 2024சென்னை : தமிழகத்தில் வரும் 3-ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
உலக பட்டினி தினம்: தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் ஏழைகளுக்கு அன்னதானம் வழங்கிய விஜய் கட்சியினர்
28 May 2024சென்னை : உலக பட்டினி தினத்தையொட்டி, நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் 234 தொகுதிகளிலும் ஏழைகளுக்கு உணவு வழங்கப்பட்டது.
-
அரசு கணினி சான்றிதழ் தேர்வு ஆக.3, 4-ம் தேதி நடத்தப்படும் : தொழில்நுட்பக் கல்வித்துறை அறிவிப்பு
28 May 2024சென்னை : அரசு கணினி சான்றிதழ் தேர்வு ஆகஸ்ட் 3 மற்றும் 4-ம் தேதிகளில் நடத்தப்படும் என தொழில்நுட்பக் கல்வித்துறை அறிவித்துள்ளது.
-
மே மாதத்துக்கான பாமாயில், துவரம் பருப்பை ஜூன் முதல் வாரம் ரேசனில் பெற்று கொள்ளலாம்: தமிழக அரசு அறிவிப்பு
28 May 2024சென்னை : மே மாதத்திற்கான பாமாயில், துவரம் பருப்பை ஜூன் முதல் வாரத்தில் நியாய விலை கடைகளில் பெற்றுக் கொள்ளலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
-
கடும் வறட்சியிலும் 31 லட்சம் லிட்டரை தாண்டியது ஆவின் பால் கொள்முதல் : அமைச்சர் மனோ தங்கராஜ் தகவல்
28 May 2024சென்னை : கடும் வறட்சியிலும் 31 லட்சம் லிட்டரை தாண்டி ஆவின் பால் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.
-
எலும்பு முறிவு: வைகோவின் உடல் நலம் குறித்து விசாரித்தார் முதல்வர் ஸ்டாலின்
28 May 2024சென்னை : எலும்பு முறிவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ம.தி.மு.க.
-
தமிழகத்தில் அரசு கலைக் கல்லூரிகளில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு கவுன்சிலிங் நாளை வரை நடக்கிறது
28 May 2024சென்னை : தமிழகத்தில் அரசு கலை கல்லூரிகளில் மாற்றுத்திறனாளிகள், விளையாட்டு வீரர்கள், முன்னாள் ராணுவத்தினர் ஆகிய மாணவர்களுக்கான சிறப்பு ஒதுக்கீடு கலந்தாய்வு நேற்று
-
இன்டியா கூட்டணி கூட்டம்: மம்தா பானர்ஜி பங்கேற்கவில்லை
28 May 2024புதுடெல்லி, வரும் 1-ம் தேதி நடைபெறவுள்ள இன்டியா கூட்டணி ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க இயலாது என்று மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
-
பெரியாறில் புதிய அணை: கேரளா மனு மீதான மத்திய நிபுணர் குழுவின் ஆலோசனை கூட்டம் ரத்து : தமிழக விவசாயிகள் தொடர் போராட்டத்தால் நடவடிக்கை
28 May 2024புதுடெல்லி : முல்லைப்பெரியாறில் புதிய அணை தொடர்பாக கேரளா மனு மீதான மத்திய சுற்றுச்சூழல் அமைச்சக நிபுணர் குழுவின் ஆலோசனை கூட்டம் நேற்று திடீரென ரத்து செய்யப்பட்டது.
-
தமிழக பல்கலை. பாடத்திட்டம்: கவர்னர் ஆர்.என்.ரவி குற்றச்சாட்டு
28 May 2024ஊட்டி : தமிழக பல்கலைக்கழக பாடத்திட்டங்களில், இந்திய சுதந்திரப் போராட்ட வரலாறு மறைக்கப்பட்டுள்ளது என்றும், திராவிட இயக்க வரலாறு அதிக அளவில் உள்ளது என்றும் கவர்னர் ஆர்.என
-
அடுத்த பெருந்தொற்று உலகில் வருவது உறுதி : பிரிட்டன் விஞ்ஞானி எச்சரிக்கை
28 May 2024லண்டன் : உலகில் அடுத்த பெருந்தொற்று வருவது உறுதி என்றும் உலகில் அடுத்து நிகழப்போகும் பேரிடர் நிச்சயம் தவிர்க்கமுடியாததாக இருக்கும் என்றும் பிரிட்டன் நாட்டின் முன்னாள் அ
-
தமிழகத்தில் 3 நாட்கள் வெப்பம் அதிகரிக்கும் : வானிலை மையம் தகவல்
28 May 2024சென்னை : தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு இயல்பை விட 3 டிகிரி செல்சியஸ் வெப்பம் உயரக்கூடும்' என சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
-
என்.டி.ராமாராவுக்கு பாரத ரத்னா விருது வழங்க நடிகர் சிரஞ்சீவி கோரிக்கை
28 May 2024ஐதராபாத், ஆந்திர முன்னாள் முதல்வர் என்.டி. ராமாராவுக்கு பாரத ரத்னா விருது வழங்க நடிகர் சிரஞ்சீவி கோரிக்கை விடுத்துள்ளார்.
-
மூன்று நாள் பயணமாக நாளை குமரி வருகிறார் பிரதமர் நரேந்திரமோடி
28 May 2024சென்னை : 3 நாள் பயணமாக நாளை குமரி வரும் பிரதமர் நரேந்திரமோடி, விவேகானந்தர் பாறையில் உள்ள மண்டபத்தில் இரவு பகலாக 3 நாட்கள் தியானத்தில் ஈடுபடவுள்ளார்.
-
3 நாட்களில் துவங்குகிறது தென்மேற்கு பருவமழை : இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்
28 May 2024புதுடெல்லி : அடுத்த மூன்று அல்லது நான்கு நாட்களில் கேரளாவில் தென்மேற்குப் பருவமழை தொடங்க வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
பப்புவா நியூகினியாவிற்கு அனைத்து உதவிகளையும் வழங்க இந்தியா தயார்: பிரதமர் மோடி உறுதி
28 May 2024புது டெல்லி, பப்புவா நியூ கினியாவிற்கு சாத்தியமான அனைத்து உதவிகளையும் வழங்க இந்தியா தயாராக உள்ளது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்
-
தீவிரவாத பட்டியலில் இருந்து தலிபானை நீக்க பரிசீலனை: ரஷ்ய வெளியுறவு அமைச்சர் தகவல்
28 May 2024மாஸ்கோ, தடை செய்யப்பட்ட தீவிரவாத அமைப்புகளின் பட்டியலில் இருந்து தலிபானை நீக்க ரஷ்யா முடிவு செய்துள்ளதாக அந்த நாட்டின் அரசு தரப்பு செய்தி நிறுவனமான ஆர்.ஐ.ஏ.
-
கேரளாவில் திருநங்கைகள் 10 பேருக்கு பாலின அறுவை சிகிச்சைக்கு நிதியுதவி: நடிகர் சுரேஷ்கோபி வழங்கினார்
28 May 2024திருவனந்தபுரம், நடிகர் சுரேஷ்கோபி கேரள மாநிலத்தை சேர்ந்த 10 திருநங்கைகளுக்கு பாலின உறுதிப்படுத்துதல் அறுவை சிகிச்சைக்கு நிதியுதவி அளித்துள்ளார்
-
இரவு நேரத்தில் கடற்கரைக்கு செல்லும் மக்களை வெளியேற்றும் காவல்துறை : தமிழக டி.ஜி.பி. பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு
28 May 2024சென்னை : கோடை வெப்பத்தை தணிக்க இரவு நேரங்களில் கடற்கரை, பூங்காக்களுக்குச் செல்லும் மக்களை துரத்தக்கூடாது என காவல் துறைக்கு உத்தரவிடக் கோரிய வழக்கில், தமிழக டிஜிபி, செ
-
குற்றாலத்தில் சீசன் துவங்கியது: சுற்றுலா பயணிகள் உற்சாகம்
28 May 2024தென்காசி : குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளிலும் மிதமான தண்ணீர் வரத்து மேக கூட்டங்களுடன் சீசன் தொடங்கியுள்ளது.
-
இன்டியா கூட்டணியின் கூட்டம்: ஜூன் 1-ம் தேதி டெல்லி செல்கிறார் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின்
28 May 2024சென்னை : இன்டியா கூட்டணியின் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்பதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஜூன் 1-ம் தேதி டெல்லி செல்கிறார்.
-
கேரளாவில் குழிமந்தி சிக்கன் சாப்பிட்ட பெண் உயிரிழப்பு
28 May 2024திருச்சூர் : கேரளாவில் மயோனைஸ் உடன் குழிமந்தி சிக்கன் சாப்பிட்ட பெண் உயிரிழந்த நிலையில், 187 உடல் நலக்குறைவுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
-
கேரளாவில் வரும் 31-ம் தேதி முதல் அதிகனமழை பெய்யும்: இந்திய வானிலை மையம் எச்சரிக்கை
28 May 2024திருவனந்தபுரம், வருகிற 31-ம் தேதி முதல் கேரள மாநிலத்தில் அதிகனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது
-
சாவர்க்கர் 141-வது பிறந்த தினம்: உதகையில் கவர்னர் ரவி மலர் தூவி மரியாதை
28 May 2024ஊட்டி : சாவர்க்கர் பிறந்த நாளை முன்னிட்டு நீலகிரியில் அவரது உருவப் படத்துக்கு தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
-
ரூ.3,100 கோடியில் 1 லட்சம் வீடுகள் கட்ட அரசு இலக்கு : வழிகாட்டுதல்களை பின்பற்ற ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தல்
28 May 2024சென்னை : கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தில் ரூ.3,100 கோடியில் ஒரு லட்சம் வீடுகள் கட்டுவதற்கான வழிகாட்டுதல்களை வெளியிட்டு, அவற்றை கண்டிப்பாக பின்பற்ற மாவட்ட ஆட்சியர்களுக்க