எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதுடெல்லி, மார்ச் 16 - ரயில்வே அமைச்சர் தினேஷ் திரிவேதியைப் பற்றிய விவகாரத்தால் பாராளுமன்றத்தில் நேற்று கடும் அமளி ஏற்பட்டது. மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பேனர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சியும் அங்கம் வகிக்கிறது. இந்த கட்சியைச் சேர்ந்த தினேஷ் திரிவேதி ரயில்வேதுறை அமைச்சராக இருக்கிறார். இவர் நேற்று முன்தினம் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ள ரயில்வே பட்ஜெட்டில் ரயில் பயணிகள் கட்டணத்தை உயர்த்தி அறிவிப்பு வெளியிட்டார். தங்களது கட்சியை கலந்தாலோசிக்காமல் தினேஷ் திரிவேதி தன்னிச்சையாக ரயில் பயணிகள் கட்டணத்தை உயர்த்தியிருக்கிறார் என்று திரிணாமுல் காங்கிரஸ் வட்டாரங்கள் கருத்து தெரிவித்திருந்தன. தங்களைக் கேட்காமல் ரயில் பயணிகள் கட்டணத்தை உயர்த்திய தினேஷ் திரிவேதியை மத்திய அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கட்சியின் தலைவர் மம்தா பேனர்ஜி கடிதம் எழுதியதாக கூறப்படுகிறது. இதையடுத்து திரிவேதி ராஜினாமா செய்துவிட்டதாகவும் செய்திகள் வெளிவந்தன. தினேஷ் திரிவேதி பதவி விலகாவிட்டால் கூட்டணியில் இருந்து விலகிக்கொள்ளப் போவதாகவும் திரிணாமுல் காங்கிரஸ் அறிவித்துள்ளதாக கூறப்பட்டது. இதனால் டெல்லியில் நேற்று பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த பரபரப்புக்கு இடையே பாராளுமன்றம் நேற்று காலை கூடியதும், திரிவேதி விவகாரத்தை பா.ஜ.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கிளப்பின. கேள்வி நேரத்தை ஒத்திவைத்துவிட்டு திரிவேதி விவகாரம் தொடர்பாக சபையில் விவாதம் நடத்த வேண்டும் என்று பா.ஜ.க. தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான சுஷ்மா சுவராஜ் மற்றும் இடதுசாரி கட்சிகளைச் சேர்ந்த எம்.பி.க்கள் நோட்டீஸ் கொடுத்திருந்தனர். எதிர்க்கட்சி தலைவர் சுஷ்மா சுவராஜ் எழுந்து, தினேஷ் திரிவேதி இன்னமும் ரயில்வே துறை அமைச்சராக இருக்கிறாரா? அவர் தாக்கல் செய்த ரயில்வே பட்ஜெட்டிற்கு இன்னமும் உயிரோட்டம் இருக்கிறதா? அல்லது இல்லையா? என்று கேள்வி எழுப்பினார். அப்போது சபையில் பலத்த அமளி ஏற்பட்டது.
ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் கூட்டணிக் கொள்கை இந்த அளவுக்கு மிக மோசமாக உள்ளது என்று வேறு சில எதிர்க்கட்சி தலைவர்களும் குற்றம் சாட்டினர். திரிவேதி தாக்கல் செய்த பட்ஜெட்டின் கதிதான் என்ன? இந்த பட்ஜெட் லோக்சபையின் சொத்து. இதில் இந்த அரசு என்னதான் செய்யப்போகிறது? என்று கேள்வி மேல் கேள்வி எழுப்பினார்கள். எதிர்க்கட்சிகளின் கேள்விக்கணைகளுக்கு மத்திய நிதி அமைச்சரும் அவை முன்னவருமான பிரணாப் முகர்ஜி உடனுக்குடன் பதிலளித்தார். இது ஒன்றும் வழக்கத்திற்கு மாறானது அல்ல. கூட்டணி அரசாங்கத்தில் இதுபோன்ற பிரச்சனைகள் எல்லாம் ஏற்கனவே வந்துள்ளன என்றார். கூட்டணி அரசாங்கத்தில் இருந்து ஓடிப்போனவர்களுக்கு இதெல்லாம் நன்றாகத் தெரியும். எத்தனை முறை அவர்கள் கூட்டணியை விட்டு ஓடி இருக்கிறார்கள் என்பதும் அவர்களுக்கு தெரியும். குறிப்பாக மற்றவர்களைக் காட்டிலும் இந்த சபையில் இருப்பவருக்கு இதுபோன்ற நிகழ்வுகள் மிக நன்றாகத் தெரியும் என்றும் முகர்ஜி கூறினார். பிரதமருக்கு மம்தா பேனர்ஜி ஒரு கடிதம் எழுதி இருக்கிறார். அந்த கடிதத்தில் திரிவேதியை பதவி நீக்கம் செய்யும்படி அவர் கூறவில்லை. ஆனால் ஒரு தகவலை கூறியிருக்கிறார். அந்த தகவலைப் பற்றி நாங்கள் ஆலோசித்து வருகிறோம் என்று கூறிய பிரணாப் முகர்ஜி, அந்த கடிதத்தில் என்ன கூறப்பட்டிருந்தது என்பதை கூற மறுத்துவிட்டார். லோக்சபையில் இந்த விவகாரம் பரபரப்பாக கடும் அமளிக்கிடையே நடைபெற்றுக்கொண்டிருந்தபோது சம்பந்தப்பட்ட தினேஷ் திரிவேதியும் முன்வரிசையில் உட்கார்ந்திருந்தார். பொதுவாக மூத்த அமைச்சர்கள்தான் முன்வரிசையில் அமர்வது வழக்கம். அந்த வரிசையில்தான் இவரும் அமர்ந்திருந்தார். எதிர்க்கட்சிகளின் கேள்விக்கணைகள் ஒருபுறம், ஆளும் கட்சியினரின் எதிர்ப்புக்குரல்கள் இன்னொருபுறம் என்று லோக்சபையில் பெரும் அமளி ஏற்பட்டது. இறுதியில் கேள்வி நேரத்தை ஒத்திவைக்க வேண்டும் என்ற எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை சபாநாயகர் மீராகுமார் நிராகரித்தார். இந்த கூச்சல் குழப்பத்திற்கு இடையே குறுக்கிட்டுப் பேசிய திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. சுதீப் பந்தோபாத்யாயா, திரிவேதியை ராஜினாமா செய்யும்படி தங்களது கட்சி ஒருபோதும் கோரவில்லை என்றார். இந்த விஷயம் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கும் மம்தா பேனர்ஜிக்கும் இடையே தீர்த்துக்கொள்ளப்பட வேண்டும்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 month 4 weeks ago | வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 month 4 weeks ago | ஆவாரம்பூவின் மருத்துவ பலன்கள் 1 month 4 weeks ago |
தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 3 weeks ago | குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 8 months 1 week ago | பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 1 week ago |
வீடியோ
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு ப்ரை2 days 12 hours ago |
க்ரிஸ்பி கார்ன் ஸ்நாக்ஸ்5 days 11 hours ago |
ஆப்பிள் ரோஸ்ட்1 week 2 days ago |
-
முல்லை பெரியாற்றில் புதிய அணை: தேனியில் கேரளாவை கண்டித்து தமிழக விவசாயிகள் கண்டன பேரணி
27 May 2024கூடலூர், முல்லை பெரியாறு அணையை இடித்துவிட்டு புதிய அணை கட்ட திட்டமிடும் கேரளாவை கண்டித்து தேனி மாவட்டத்தின் தமிழக எல்லையான லோயர் கேம்பில் விவசாயிகள் சார்பில் நேற்று கண்
-
ரபா நகரில் இஸ்ரேல் வான் தாக்குதல்: முக்கிய ஹமாஸ் தலைவர் உயிரிழப்பு
27 May 2024ஜெருசலேம் : இஸ்ரேல் நடத்திய வான் தாக்குதலில் ஹமாசின் மேற்கு கரை தலைமையக மூத்த அதிகாரி ஒருவரும் கொல்லப்பட்டார்.
-
விதிமுறைகளை மீறி நாளிதழ்களில் தேர்தல் விளம்பரம்: பா.ஜ.க.வுக்கான தடையை நீக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு: ஐகோர்ட் உத்தரவில் தலையிட விரும்பவில்லை என கருத்து
27 May 2024புதுடெல்லி, பா.ஜ.க.வின் தேர்தல் விளம்பரத்துக்கான தடையை நீக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு தெரிவித்த நிலையில், கொல்கத்தா ஐகோர்ட்டின் உத்தரவில் தலையிட விரும்பவில்லை என கூறி பா
-
மருத்துவக் காரணங்களுக்காக இடைக்கால ஜாமினை மேலும் ஒரு வாரம் நீட்டிக்க வேண்டும்: சுப்ரீம் கோர்ட்டில் கெஜ்ரிவால் மனு
27 May 2024புதுடெல்லி, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு சுப்ரீம் கோர்ட் வழங்கிய இடைக்கால ஜாமின் ஜூன் 1-ம் தேதியுடன் முடிவடையவுள்ள நிலையில் அவர் ஜாமின் நீட்டிப்பு கோரி மனுத்
-
கொலை செய்யப்பட்ட ரவுடி தீபக் ராஜாவின் உடல் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அடக்கம்
27 May 2024நெல்லை : பாளையங்கோட்டையில் கொலை செய்யப்பட்ட ரவுடி தீபக் ராஜாவின் சடலம், ஒரு வாரத்துக்குப் பிறகு நேற்று காலை அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில் பலத்த போலீஸ்
-
பிரபல ஹாலிவுட் நடிகர் ஜானி வேக்டர் கொலை
27 May 2024வாஷிங்டன் : பிரபல ஹாலிவுட் நடிகர் ஜானி வேக்டர் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட திருடர்களால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
தமிழகத்தில் வாக்குகள் எண்ணும் பணியில் 38,500 பேர்: தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்
27 May 2024சென்னை, தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணியில் நுண் பார்வையாளர்கள் 4,500 பேர் உட்பட 38,500க்கும் மேற்பட்டவர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளதாகவும், வா
-
சென்னையில் நாளை முதல் வாக்கு எண்ணுபவர்களுக்கு பயிற்சி : மாவட்ட தேர்தல் அலுவலர் தகவல்
27 May 2024சென்னை : சென்னையில் வாக்கு எண்ணும் மையங்களில் மேற்பார்வையாளர்கள், நுண் பணியாளர்கள் என மொத்தம் 1,433 பேர் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபட உள்ளதாகவும், அவர்களுக்கான பயிற்சி
-
சிலி நாட்டில் 137 பேரை பலி கொண்ட காட்டுத்தீயை ஏற்படுத்திய வனத்துறை அதிகாரி கைது
27 May 2024சாண்டியாகோ : சிலி நாட்டில் 137 பேரை பலி கொண்ட காட்டுத்தீயை ஏற்படுத்திய வனத்துறை அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார்.
-
வரத்து குறைவு எதிரொலி: தக்காளி விலை கிலோ 60 ரூபாய்க்கு விற்பனை
27 May 2024சென்னை : சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் வரத்து குறைவால், தக்காளி கிலோவுக்கு ரூ.60-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
-
4 நாட்களில் தென்மேற்கு பருவமழை உருவாகிறது : இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்
27 May 2024புதுடெல்லி : தென்மேற்கு பருவமழை கேரளாவில் 4 நாட்களில் உருவாகக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
அமித்ஷா குறித்து சர்ச்சை பேச்சு: ராகுல் மீதான வழக்கில் ஜூன் 7-ல் விசாரணை
27 May 2024பெங்களூரு : மத்திய அமைச்சர் அமித்ஷா குறித்து அவதூறாக பேசியதாக ராகுல் காந்தி மீதான வழக்கில் விசாரணை ஜூன் 7-ம் தேதி நடைபெறவுள்ளது.
-
பா.ஜனதாவின் வெற்றியை கொண்டாட தயாராகுங்கள் : நிர்வாகிகள் கூட்டத்தில் அண்ணாமலை பேச்சு
27 May 2024சென்னை : 3-வது முறையாக பா.ஜ.க. ஆட்சிக்கு வரவேண்டும் என்பது காலத்தின் கட்டாயம். பா.ஜ.க. மீது எந்தவித குறையும் இல்லை.
-
நாயாக மாறிய ஜப்பானை சேர்ந்தவர் நரியாக மாறவிருப்பம்
27 May 2024டோக்கியோ : ஜப்பானில் கடந்த வருடம் நாயாக மாறிய நபர் தற்போது நரியாக மாற வேண்டும் என தெரிவித்துள்ளார்.
-
புனே கார் விபத்து வழக்கு: சிறுவனின் ரத்த மாதிரியை மாற்றிய மருத்துவர்கள் கைது
27 May 2024புனே : புனேவில் மதுபோதையில் சிறுவன் ஓட்டிய கார் மோதி இருவர் உயிரிழந்த விவகாரத்தில், சிறுவனின் ரத்த மாதிரியை மாற்றிய வழக்கில் மருத்துவர்கள் இருவர் கைது செய்யப்பட்ட
-
ராஜ்கோட் தீ விபத்தில் 33 பேர் பலி: பராமரிப்பு இல்லாத மையத்திற்கு எப்படி அனுமதி வழங்கினார்கள்? - நகராட்சிக்கு குஜராத் உயர் நீதிமன்றம் கண்டனம்
27 May 2024காந்திநகர் : ராஜ்கோட் விளையாட்டு மைய தீ விபத்து குறித்து தாமாக முன் வந்து விசாரணை செய்த குஜராத் உயர்நீதிமன்றம் ராஜ்கோட் நகராட்சிக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. 
-
82,479 பேர் விண்ணப்பம்: அரசுப்பள்ளி ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு தேதி விரைவில் அறிவிப்பு : பள்ளிக் கல்வித்துறை தகவல்
27 May 2024சென்னை : அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வில் பங்கேற்க 82,479 பேர் விண்ணப்பித்துள்ளதாக தெரிவித்துள்ள தமிழக பள்ளிக் கல்வித்துறை, கலந்தாய்வுக்கான
-
6 மாவட்டங்களில் புதிய மருத்துவ கல்லூரிகளை திறக்க வேண்டும்: அரசுக்கு ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்
27 May 2024சென்னை, 6 மாவட்டங்களில் புதிதாக மருத்துவ கல்லூரிகளை திறக்க போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தி உள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 27-05-2024.
27 May 2024 -
'நான் முதல்வன்' உள்ளிட்ட பல்வேறு திட்டங்களால் நாட்டிலேயே உயர்கல்வியில் சிறந்து விளங்கும் தமிழ்நாடு : தமிழக அரசு பெருமிதம்
27 May 2024சென்னை : நான் முதல்வன் திட்டம் உள்ளிட்ட எண்ணற்ற திட்டங்கள் திறம்பட செயல்படுத்தப்பட்டு வருவதால் நாட்டிலேயே உயர்கல்வியில் தமிழகம் சிறந்து விளங்குவதாக தமிழக அரசு பெருமிதம்
-
ஜெயக்குமார் மரண வழக்கு விசாரணை: 30-க்கும் மேற்பட்டோருக்கு சி.பி.சி.ஐ.டி. போலீஸ் சம்மன்
27 May 2024நெல்லை : ஜெயக்குமார் மரண வழக்கு தொடர்பாக நண்பர்கள் உட்பட 30க்கும் மேற்பட்டோர் விசாரணைக்கு நேரில் ஆஜராக சி.பி.சி.ஐ.டி. போலிசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.
-
புதிய கல்விக் கொள்கைதான் புதிய இந்தியாவை உருவாக்கும் : துணைவேந்தர்கள் மாநாட்டில் கவர்னர் பேச்சு
27 May 2024உதகை : தமிழக பல்கலைக்கழகங்கள் மோசமான நிலையில், ஒருங்கிணைப்பு இல்லாமல் இருந்ததாக துணை வேந்தர்கள் மாநாட்டில் தெரிவித்த கவர்னர் ஆர்.என்.ரவி, புதிய கல்விக் கொள்கைதான் புதிய
-
கார்த்தி நடிக்கும் 'வா வாத்தியார்'
27 May 2024தமிழ் திரையுலகில் முன்னணி நட்சத்திர நடிகரான கார்த்தி நடிப்பில் தயாராகி இருக்கும் 'வா வாத்தியார்' எனும் புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது.
-
சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு புதிதாக காப்பீடு திட்டம் அறிமுகம் : தேவசம் போர்டு தகவல்
27 May 2024திருவனந்தபுரம் : சபரிமலைக்கு செல்லும் ஐயப்ப பக்தர்களுக்கு காப்பீடு திட்டம் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக தேவசம்போர்டு தெரிவித்துள்ளது.
-
விராட் கோலி வரலாற்று சாதனை
27 May 2024நடப்பு ஐ.பி.எல். தொடரில் பெங்களூரு அணிக்காக விளையாடிய இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி 15 போட்டிகளில் 741 ரன்களை 61.75 என்ற அபாரமான சராசரியில் குவித்தார்.