எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, ஏப்.13 - நெல்லை பாளையங்கோட்டை, கன்னியாகுமரியிலுள்ள சித்தா, ஆயுர்வேதக் கல்லூரிகளுக்கு ரூ.10 கோடி செலவில் உள்கட்டமைப்பு வசதிகள் செய்துத்தரப்படும் என்று சட்டப்பேரவையில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர்.விஜய் தெரிவித்துள்ளார். மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர் விஜய் சட்டப்பேரவையில் நேற்று மானியக் கோரிக்கையை தாக்கல் செய்து பேசியதாவது:-
மத்தியில் ஆளுகின்ற காங்கிரஸ் மற்றும் திமுக கூட்டணி அரசு எதை எதையோ தமிழகத்திற்கு செய்வதாக சொல்லிக்கொள்கிறது. ஆனால், தமிழ் மருத்துவமான சித்த மருத்துவத்தை உதாசீனப்படுத்துகிறது. உதவி செய்யாவிட்டாலும் பரவாயில்லை, உபத்திரவம் செய்யாமல் இருந்தாலே போதுமானது.
கடந்த மைனாரிட்டி திமுக ஆட்சியில், மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கின்ற ஆயுஷ் துறை, திருநெல்வேலி பாளையங்கோட்டையிலுள்ள சித்தா மருத்துவக் கல்லுரி மற்றும் கன்னியாகுமரி கோட்டாரிலுள்ள ஆயுர்வேத மருத்துவக்கல்லுரியை ஆய்வு செய்து சில குறைபாடுகளை கண்டறிந்து, கடந்த 2011-12 ஆம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கு தடைவிதித்தது. அதன்பிறகு முதல்வர் ஜெயலலதாவின் ஆட்சி அமைந்த பிறகு அந்த குறைபாடுகளெல்லாம் களைந்து, திரும்பவும் ஆயுஷை அணுகியபோது எந்த பதிலும் கிடைக்கவில்லை.
மத்திய அரசின் சுகாதாரத் துறை அமைச்சர் அவர்களுக்கு கடிதம் எழுதியும் பதில் இல்லை. அதன்பிறகு, தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து நீதிமன்றத்தின் உத்திரவின்பேரில் இரண்டுகல்லுரிகளிலும் மாணவர் சேர்க்கை நடைபெற்றது. முதல்வரின் ஆணைக்கிணங்க, மத்திய சுகாதாரத்துறை அமைச்சரை நேரில் சந்தித்து அங்கீகாரம் வேண்டும் என்று கோரிக்கை வைத்தேன். அதற்கும் பதில் இல்லை. அதன் பிறகு பாதிக்கப்பட்ட மாணவர்கள், சென்னை உயர்நீதிமன்றம் சென்று வகுப்புகளை தொடங்க ஆணை பிறப்பிக்கப்பட்டதால்தான் வகுப்புகள் நடந்து கொண்டிருக்கின்றன. ஆனால், மத்திய அரசின் ஆயூஷ் துறை திரும்பவும் நீதிமன்றத்திற்கு சென்று தடையாணை கேட்டு அதை நீதிமன்றம் மறுத்திருக்கிறது. இப்பொழுது அந்த ஆயூஷ் துறை உச்சநீதிமன்றத்தை நாடப்போவதாக அறிகிறோம். மாற்றான் தாய் மனப்பான்மையோடு மத்திய அரசு செயல்படுகிறது என்பதற்கு இது ஒன்றே உதாரணமாகும். இதிலே வேடிக்கை என்னவென்றால், தி.மு.கவினுடைய காந்திசெல்வன்தான் அங்கே மத்தியில் சுகாதாரத்துறை இணை அமைச்சராக உள்ளார். கல்வியை கூட அரசியலாக்குகிறார்கள் என்பதுதான் அப்பட்டமான உண்மை. இங்கே வாய்கிழிய பேசும் தி.மு.கவினரும், காங்கிரஸ்காரர்களும் இதற்கு ஒரு தீர்வினை தந்தால் மாணவர்களின் புண்ணியமாவது கிடைக்கும் என்பதை இத்தருணத்தில் தெரிவித்துக்கொள்கிறேன்.
தமிழ் மொழி தமிழினம் என்று வாயளவில் மட்டுமே சொல்லித் திரிபவர்களை போல் அல்லாமல் தமிழ் மற்றும் பாரம்பரிய மருத்துவத்திற்கு முதல்வரின் அரசு உரிய முக்கியத்துவம் கொடுத்து, திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை அரசு சித்த மருத்துவக் கல்லுரி மற்றும், கன்னியாகுமரி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் கோட்டார் ஆயுர்வேத மருத்துவக் கல்லுரி ஆகியவற்றை ரூபாய் 10 கோடி செலவில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி பலப்படுத்த நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார்.
கல்குவாரிகள், கட்டிடப்பணிகள், சாலைப்பணிகளில் பணிபுரியு பணியாளர்களுக்கென சிலிக்கோசிஸ் நோய் சிறப்பு சிகிச்சை மையங்கள் சில பணிகள் தொழில் ரீதியான சுகாதார பிரச்சினைகளை உடையதாக இருக்கும். சிமெண்ட் தொழிற்சாலை, சுரங்கத் தொழிற்சாலை, கட்டிடப்பணிகள், தார்சாலை பணிகள் போன்ற பணிகளில் ஈடுபடும்போது அவர்களுடைய உடல் ஆரோக்கியத்தை பாதிக்கும் வகையில் அந்த தொழில்களின் தன்மை அமைந்திருக்கிறது. இவர்களுக்கு சிலிக்கோசிஸ் என்ற நோய் ஏற்படும் வாய்ப்புள்ளது.
இதுபோன்ற தொழில்களில் பணிபுரியும் ஏழை எளிய மக்களுக்கும்தரமான சுகாதாரம் சென்றடைய வேண்டும்என்பது தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் கட்டளையாகும். தமிழகத்தில் கல்குவாரிகள், கட்டிடப்பணிகள், சாலைப்பணிகளில் பணிபுரியும் பணியாளர்கள் தும்பு, தூசுகளால் பாதிக்கப்பட்டு அவர்களது சுகாதார நிலை மோசமாக உள்ளது. இதற்கென சிறப்பு சிகிச்சை அளிக்கப்படவேண்டும். தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் ஆணைப்படி, இவர்களுக்கு தொடர் மருத்துவ பரிசோதனை மற்றும் தேவையான சிகிச்சை அளிக்கப்படும்.
புதிய மருத்துவக் கல்லூரி தொடங்குதல், ஓரே நேரத்தில் நான்கைந்து மருத்துவக்கல்லுரிகளை அறிவித்து விட்டால், அவை தானாக உருவாகி, ரிமோட் கன்ட்ரோலில் இயங்கும் என்று இறுமாப்புடன் கடந்த ஆட்சிக்காலத்தில் இந்த அவையில் அறிவிக்கப்பட்டு அவையாவும் காகிதப்புலிகளாக, கற்பனை குதிரைகளாக உள்ளது நாம் யாவரும் அறிந்ததே.
இன்று ஒரு மருத்துவக்கல்லுரி உருவாக்க தேவைப்படும் உள்கட்டமைப்பு வசதி, உபகரணங்கள், மற்றும் மருத்துவ பேராசிரியர்கள், உதவிப்பேராசிரியர்கள், செவிலியர்கள் மற்றும் பணியாளர்கள் நியமிக்க வேண்டுமென அறுதியிட்டு இந்திய மருத்துவக்கவுன்சில் பரிந்துரை செய்துள்ளது. இவற்றில் எங்கேனும் ஒரு சிறிய மாற்றங்கள் இருந்தாலும், அவை தக்கண்ணாடியால் பார்க்கப்பட்டு பிரச்சினைகளாக உருவெடுக்கின்றன. இதையெல்லாம் கருத்தில் கொண்டுதான் முதல்வர் ஜெயலலிதா, மக்கள் நல்வாழ்வுத்துறை ஆய்வின்போது ஆண்டிற்கு ஒரு மருத்துவக்கல்லூரி என்ற நடைமுறைக்கு சாத்தியமான கொள்கை முடிவினை எடுத்துள்ளார்கள்.
முதல்வரின் ஆணைப்படி, நடப்பாண்டில் திருவண்ணாமலை மாவட்டத்தில் புதிய மருத்துவக் கல்லுரி தொடங்கவும், அதற்கான புதிய கட்டிடங்கள் கட்டவும் நடவடிக்கை எடுக்கப்படும். இதே தருணத்தில், முதல்வர் ஜெயலலிதாவின் ஆணைப்படி, பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்ட கீழ்ப்பாக்கம் மற்றும் செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லுரிகளில் ஒவ்வொரு கல்லூரிக்கும் கூடுதலாக 50 இடங்களை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு, இந்திய மருத்துவகவுன்சிலின் ஆய்வு முடிந்துள்ளது. அதே போல , சிவகங்கை மருத்துவக்கல்லுரியில் 100 மாணவர் சேர்க்கைக்கான அனைத்து பணிகளும் முடிவடைந்து இந்திய மருத்துவக்கவுன்சிலின் ஆய்வை எதிர்நோக்கி உள்ளது.
தனியார் மருத்துவமனைகளை முறைப்படுத்துதல்
ஒரு தேனீர் கடையை தொடங்க வேண்டுமென்றால் கூட உரிமம் பெற வேண்டும். ஒரு மருந்து கடையை தொடங்க வேண்டுமென்றால் கூட முறைப்படி விதிகளுக்கு உட்பட்டு முறையான உள் கட்டமைப்பு வசதிகள் இருந்தால் மட்டுமே உரிமம் வழங்கப்படுகிறது ஆனால், ஒரு மருத்துவமனை தொடங்க வேண்டுமென்றால் எவ்வித சட்டப்ர்வ கட்டுப்பாடுகளோ குறைந்த பட்ச விதிமுறைகளோ தற்போது இல்லை. தனியார் மருத்துவமனைகளில் அளிக்கப்படும் சிகிச்சை முறைகள் என்ன?அங்கே பணிபுரிபவர்கள் முறையாக பயிற்சி பெற்றுள்ளார்களா? அங்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் தரமாகவும் முறையாகவும் உள்ளதா ?
தேவையான நோய்ப் பரிசோதனைகள் மற்றும் சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றனவா? இல்லையா? யார், யார் எந்தெந்த மருத்துவ சிகிச்சை முறைகளை அளிக்க தகுதி உள்ளவர்கள்? அங்கு பார்க்கப்படும் நோய் நிகழ்வுகள் முறைப்படி அரசுக்கு அறிக்கைகளாக தெரிவிக்கப்படுகிறதா? என்றால் இல்லை, என்பதுதான் பதிலாக இருக்கிறது. ஆகவே, தமிழக முதல்வர் ஙீஜெயலலிதாவின் ஆணைப்படி, தமிழகத்தில் உள்ள தனியார் மருத்துவமனைகள், மற்றும் கிளினிக்குகள் ஆகியவற்றின் செயல்பாட்டினை முறைப்படுத்தவும், கண்காணிக்கவும், ஏற்படுத்தப்பட்ட தமிழ்நாடு மருத்துவ அமைப்புகள் நெறிப்படுத்தும் சட்டம் மற்றும்மத்திய அரசால், ஏற்படுத்தப்பட்ட மருத்துவ அமைப்புகள் பதிவு மற்றும் நெறிப்படுத்துதல் சட்டம் ஆகியவற்றை வல்லுநர் குழு மூலம் ஆய்வு செய்து உரிய திருத்தங்கள் மேற்கொண்டு, நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
அரசு மருத்துவமனையிலிருந்து பிரசவித்த தாய் வீடு திரும்பும்போது ஆட்டோவை தேடி, பேருந்து நிலையத்தை நாடி, பச்சிளம்சிசுவோடு இல்லம் சென்றடைய சிரமப்பட நேரிடுகிறது. தான்பெற்ற செல்வத்தை பெற்றெடுத்த மகழ்ச்சியோடு தாய் வீடு செல்ல தமிழக முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
இதன்படி, அரசு மருத்துவமனைகளில் பிரசவிக்கும் தாய்மார்கள் பேறுகாலத்திற்குபின் பச்சிளங்குழந்தையுடன் பாதுகாப்பாக வீட்டிற்கு செல்ல வாகன வசதி ஏற்படுத்திதர நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு விஜய் பேசினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 month 4 weeks ago | வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 month 4 weeks ago | ஆவாரம்பூவின் மருத்துவ பலன்கள் 1 month 4 weeks ago |
தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 3 weeks ago | குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 8 months 1 week ago | பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 1 week ago |
வீடியோ
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு ப்ரை2 days 18 hours ago |
க்ரிஸ்பி கார்ன் ஸ்நாக்ஸ்5 days 17 hours ago |
ஆப்பிள் ரோஸ்ட்1 week 2 days ago |
-
ரபா நகரில் இஸ்ரேல் வான் தாக்குதல்: முக்கிய ஹமாஸ் தலைவர் உயிரிழப்பு
27 May 2024ஜெருசலேம் : இஸ்ரேல் நடத்திய வான் தாக்குதலில் ஹமாசின் மேற்கு கரை தலைமையக மூத்த அதிகாரி ஒருவரும் கொல்லப்பட்டார்.
-
முல்லை பெரியாற்றில் புதிய அணை: தேனியில் கேரளாவை கண்டித்து தமிழக விவசாயிகள் கண்டன பேரணி
27 May 2024கூடலூர், முல்லை பெரியாறு அணையை இடித்துவிட்டு புதிய அணை கட்ட திட்டமிடும் கேரளாவை கண்டித்து தேனி மாவட்டத்தின் தமிழக எல்லையான லோயர் கேம்பில் விவசாயிகள் சார்பில் நேற்று கண்
-
விதிமுறைகளை மீறி நாளிதழ்களில் தேர்தல் விளம்பரம்: பா.ஜ.க.வுக்கான தடையை நீக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு: ஐகோர்ட் உத்தரவில் தலையிட விரும்பவில்லை என கருத்து
27 May 2024புதுடெல்லி, பா.ஜ.க.வின் தேர்தல் விளம்பரத்துக்கான தடையை நீக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு தெரிவித்த நிலையில், கொல்கத்தா ஐகோர்ட்டின் உத்தரவில் தலையிட விரும்பவில்லை என கூறி பா
-
கொலை செய்யப்பட்ட ரவுடி தீபக் ராஜாவின் உடல் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அடக்கம்
27 May 2024நெல்லை : பாளையங்கோட்டையில் கொலை செய்யப்பட்ட ரவுடி தீபக் ராஜாவின் சடலம், ஒரு வாரத்துக்குப் பிறகு நேற்று காலை அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில் பலத்த போலீஸ்
-
மருத்துவக் காரணங்களுக்காக இடைக்கால ஜாமினை மேலும் ஒரு வாரம் நீட்டிக்க வேண்டும்: சுப்ரீம் கோர்ட்டில் கெஜ்ரிவால் மனு
27 May 2024புதுடெல்லி, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு சுப்ரீம் கோர்ட் வழங்கிய இடைக்கால ஜாமின் ஜூன் 1-ம் தேதியுடன் முடிவடையவுள்ள நிலையில் அவர் ஜாமின் நீட்டிப்பு கோரி மனுத்
-
பிரபல ஹாலிவுட் நடிகர் ஜானி வேக்டர் கொலை
27 May 2024வாஷிங்டன் : பிரபல ஹாலிவுட் நடிகர் ஜானி வேக்டர் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட திருடர்களால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
4 நாட்களில் தென்மேற்கு பருவமழை உருவாகிறது : இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்
27 May 2024புதுடெல்லி : தென்மேற்கு பருவமழை கேரளாவில் 4 நாட்களில் உருவாகக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
சிலி நாட்டில் 137 பேரை பலி கொண்ட காட்டுத்தீயை ஏற்படுத்திய வனத்துறை அதிகாரி கைது
27 May 2024சாண்டியாகோ : சிலி நாட்டில் 137 பேரை பலி கொண்ட காட்டுத்தீயை ஏற்படுத்திய வனத்துறை அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார்.
-
தமிழகத்தில் வாக்குகள் எண்ணும் பணியில் 38,500 பேர்: தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்
27 May 2024சென்னை, தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணியில் நுண் பார்வையாளர்கள் 4,500 பேர் உட்பட 38,500க்கும் மேற்பட்டவர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளதாகவும், வா
-
நாயாக மாறிய ஜப்பானை சேர்ந்தவர் நரியாக மாறவிருப்பம்
27 May 2024டோக்கியோ : ஜப்பானில் கடந்த வருடம் நாயாக மாறிய நபர் தற்போது நரியாக மாற வேண்டும் என தெரிவித்துள்ளார்.
-
வரத்து குறைவு எதிரொலி: தக்காளி விலை கிலோ 60 ரூபாய்க்கு விற்பனை
27 May 2024சென்னை : சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் வரத்து குறைவால், தக்காளி கிலோவுக்கு ரூ.60-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
-
சென்னையில் நாளை முதல் வாக்கு எண்ணுபவர்களுக்கு பயிற்சி : மாவட்ட தேர்தல் அலுவலர் தகவல்
27 May 2024சென்னை : சென்னையில் வாக்கு எண்ணும் மையங்களில் மேற்பார்வையாளர்கள், நுண் பணியாளர்கள் என மொத்தம் 1,433 பேர் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபட உள்ளதாகவும், அவர்களுக்கான பயிற்சி
-
புனே கார் விபத்து வழக்கு: சிறுவனின் ரத்த மாதிரியை மாற்றிய மருத்துவர்கள் கைது
27 May 2024புனே : புனேவில் மதுபோதையில் சிறுவன் ஓட்டிய கார் மோதி இருவர் உயிரிழந்த விவகாரத்தில், சிறுவனின் ரத்த மாதிரியை மாற்றிய வழக்கில் மருத்துவர்கள் இருவர் கைது செய்யப்பட்ட
-
பா.ஜனதாவின் வெற்றியை கொண்டாட தயாராகுங்கள் : நிர்வாகிகள் கூட்டத்தில் அண்ணாமலை பேச்சு
27 May 2024சென்னை : 3-வது முறையாக பா.ஜ.க. ஆட்சிக்கு வரவேண்டும் என்பது காலத்தின் கட்டாயம். பா.ஜ.க. மீது எந்தவித குறையும் இல்லை.
-
அமித்ஷா குறித்து சர்ச்சை பேச்சு: ராகுல் மீதான வழக்கில் ஜூன் 7-ல் விசாரணை
27 May 2024பெங்களூரு : மத்திய அமைச்சர் அமித்ஷா குறித்து அவதூறாக பேசியதாக ராகுல் காந்தி மீதான வழக்கில் விசாரணை ஜூன் 7-ம் தேதி நடைபெறவுள்ளது.
-
'நான் முதல்வன்' உள்ளிட்ட பல்வேறு திட்டங்களால் நாட்டிலேயே உயர்கல்வியில் சிறந்து விளங்கும் தமிழ்நாடு : தமிழக அரசு பெருமிதம்
27 May 2024சென்னை : நான் முதல்வன் திட்டம் உள்ளிட்ட எண்ணற்ற திட்டங்கள் திறம்பட செயல்படுத்தப்பட்டு வருவதால் நாட்டிலேயே உயர்கல்வியில் தமிழகம் சிறந்து விளங்குவதாக தமிழக அரசு பெருமிதம்
-
விரைவில் புஷ்பா 2
27 May 2024மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் நடிகர்கள் அல்லு அர்ஜூன் மற்றும் ராஷ்மிகா மந்தனா நடித்திருக்கும் 'புஷ்பா 2' திரைப்படம் இந்த வருடத்தில் அதிகம் எதிர்பார்க்கப்படும் படங்க
-
விராட் கோலி வரலாற்று சாதனை
27 May 2024நடப்பு ஐ.பி.எல். தொடரில் பெங்களூரு அணிக்காக விளையாடிய இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி 15 போட்டிகளில் 741 ரன்களை 61.75 என்ற அபாரமான சராசரியில் குவித்தார்.
-
6 மாவட்டங்களில் புதிய மருத்துவ கல்லூரிகளை திறக்க வேண்டும்: அரசுக்கு ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்
27 May 2024சென்னை, 6 மாவட்டங்களில் புதிதாக மருத்துவ கல்லூரிகளை திறக்க போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தி உள்ளார்.
-
கார்த்தி நடிக்கும் 'வா வாத்தியார்'
27 May 2024தமிழ் திரையுலகில் முன்னணி நட்சத்திர நடிகரான கார்த்தி நடிப்பில் தயாராகி இருக்கும் 'வா வாத்தியார்' எனும் புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது.
-
பாலியல் விவகாரம்: விசாரணை குழு முன்பு மே 31-ல் ஆஜராகுகிறார் பிரஜ்வல் ரேவண்ணா : வீடியோ வெளியிட்டு தகவல்
27 May 2024பெங்களூரு : பாலியல் துன்புறுத்தல் விவகாரத்தில் சிக்கிய ஹாசன் எம்.பி.
-
ஜெயக்குமார் மரண வழக்கு விசாரணை: 30-க்கும் மேற்பட்டோருக்கு சி.பி.சி.ஐ.டி. போலீஸ் சம்மன்
27 May 2024நெல்லை : ஜெயக்குமார் மரண வழக்கு தொடர்பாக நண்பர்கள் உட்பட 30க்கும் மேற்பட்டோர் விசாரணைக்கு நேரில் ஆஜராக சி.பி.சி.ஐ.டி. போலிசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.
-
வரும் 1-ம் தேதி டெல்லியில் நடக்கிறது 'இன்டியா' தலைவர்கள் ஆலோசனைக் கூட்டம்: முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட கூட்டணி தலைவர்களுக்கு அழைப்பு
27 May 2024புதுடெல்லி, வரும் 1-ம் தேதி டெல்லியில் டெல்லியில் இன்டியா கூட்டணி தலைவர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெறவுள்ளது.
-
கார்த்தி 27வது படம் “மெய்யழகன்“
27 May 2024கார்த்தி பிறந்த நாளை முன்னிட்டு இப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகி உள்ளது
-
ராஜ்கோட் தீ விபத்தில் 33 பேர் பலி: பராமரிப்பு இல்லாத மையத்திற்கு எப்படி அனுமதி வழங்கினார்கள்? - நகராட்சிக்கு குஜராத் உயர் நீதிமன்றம் கண்டனம்
27 May 2024காந்திநகர் : ராஜ்கோட் விளையாட்டு மைய தீ விபத்து குறித்து தாமாக முன் வந்து விசாரணை செய்த குஜராத் உயர்நீதிமன்றம் ராஜ்கோட் நகராட்சிக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.