எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, ஆக.9 - மகாராஷ்டிர மாநில முன்னாள் முதலமைச்சரும், மத்திய அமைச்சருமான விலாஷ்ராவ் தேஷ்முக் கல்லீரல் புற்றுநோய் பாதிப்பு காரணமாக சென்னையில் உள்ள குளோபல் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அவரது உடல் உறுப்புகள் ஒவ்வொன்றாக செயலிழந்து வருவதால் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. .
இரண்டு சிறுநீரகங்களும் பாதிக்கப்பட்டு, கல்லீரலிலும் கோளாறு ஏற்பட்டு ஆபத்தான நிலையில் மும்பை பிரிஜ்கேண்டி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த விலாஸ்ராவ் தேஷ்முக் ஆம்புலன்ஸ் விமானம் மூலம் கடந்த திங்கள்கிழமையன்று சென்னைக்கு கொண்டு வரப்பட்டு குளோபல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நேற்று அவரது உடல்நிலை கவலைக்கிடமாகவே இருந்தது. .குளோபல் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். டாக்டர்கள் அவரை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்வதில் புகழ் பெற்றது இந்த மருத்துவமனை. இரண்டாவது மாடியில் தனி அறையில் வைத்து அவருக்கு டாக்டர்கள் குழுவினர் சிகிச்சை அளித்து வருகின்றனர். விலாஸ்ராவ் தேஷ்முக்கிற்கு கல்லீரல் மட்டுமின்றி இரண்டு கிட்னிகளும் முழுமையாக செயல் இழந்து விட்டன. பிற உறுப்புகளும் செயல் இழந்து வருகின்றன. அவருக்கு செயற்கை சுவாச கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. அவரது உடல் நிலையில் முன்னேற்றம் காணப்படவில்லை. தொடர்ந்து கவலைக்கிடமாகவே உள்ளது. அவரது உயிரைக் காப்பாற்ற டாக்டர்கள் போராடி வருகின்றனர். விலாஸ்ராவ் தேஷ்முக்கிற்கு முதலில் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ள திட்டமிடப்பட்டது. அவரது மகனும், இந்தி நடிகருமான ரித்தீஷ் தேஷ்முக் கல்லீரல் தானம் செய்ய விருப்பம் தெரிவித்துள்ளார். ஆனால் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்யும் அளவில் இப்போது அவரது உடல்நிலை இல்லை. உடல்நிலையில் முன்னேற்றம் காணப்பட்டால் மட்டுமே இந்த அறுவை சிகிச்சையை செய்ய முடியும். இதனால் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சையை டாக்டர்கள் தற்போதைக்கு ஒத்திப்போட்டுள்ளனர். இங்குள்ள டாக்டர்கள் குழுவினர் தவிர, மும்பையில் இருந்து வந்துள்ள டாக்டர்களும், தேஷ்முக்கின் உடல் நிலையை 24 மணி நேரமும் கண்காணித்து வருகின்றனர்.
தேஷ்முக்கின் குடும்பத்தினர் மருத்துவமனையிலேயே முகாமிட்டுள்ளனர். மனைவி வைஷாலி, மகன் ரித்தீஷ், மருமகள் ஜெனிலியா மற்றும் உறவினர்கள் இங்குதான் உள்ளனர். அவர்களிடம் தேஷ்முக்கின் உடல்நிலை குறித்து கேட்டபோது, அவர்கள் வாய் திறக்க மறுத்து விட்டனர். மிகவும் வற்புறுத்தி கேட்டபோது, நேற்றைக்கு (முன்தினம்), இன்று (நேற்று) பரவாயில்லை என்று மட்டுமே கூறினர். தேஷ்முக் உடல்நிலை குறித்து டாக்டர்களிடம் விசாரித்தபோது, அமைச்சரின் உடல்நிலை குறித்து எந்த தகவலையும் வெளியில் தெரிவிக்க வேண்டாம் என்று அவரது குடும்பத்தினர் கேட்டுக் கொண்டுள்ளனர். எனவே அமைச்சரின் உடல்நிலை குறித்த முழு விவரங்களையும் தெரிவிக்க இயலாது என்று கூறி விட்டனர். நெருங்கிய வட்டாரங்களிடம் விசாரித்தபோது, அமைச்சரின் உடல்நிலை சீராக உள்ளது. உடல் உறுப்புகள் பாதிக்கப்பட்டுள்ளதால், உயிர் காக்கும் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. இங்கு சேர்க்கப்பட்டபோது இருந்த உடல்நிலையில் இப்போது லேசாக முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்று கூறினார். மும்பையில் இருந்ததைவிட தற்போது அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு இருப்பதாக முன்னாள் மத்திய அமைச்சர் விலாஸ் மட்டம்வர் சென்னையில் தெரிவித்தார். அவருடைய உடல்நிலைமை சீரடைந்ததும் அடுத்த கட்ட சிகிச்சை மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்தார்.
உலகப் புகழ் பெற்ற கல்லீரல் மாற்று அறுவைசிகிச்சை நிபுணர் முகமது ரீலா அவருக்கு சிகிச்சை அளித்து வருகிறார். அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதும் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படும் என்று மருத்துவமனை வட்டாரம் தெரிவித்தது. விலாஸ்ராவ் தேஷ்முக் உடல்நிலையை தெரிந்துகொள்வதற்காக மகாராஷ்டிர மாநில காங்கிரஸ் தலைவர்கள் சென்னை வந்துள்ளனர். . இதேபோல மகாராஷ்டிரா முதல்வர் ப்ருத்விராஜ் சவான் மற்றும் துணை முதல்வர் அஜித் பவார் ஆகியோர் சென்னை விரைந்துள்ளார். தேஷ்முக்கின் மனைவி, மகன் ஆகியோர் சென்னையில் முகாமிட்டுள்ளனர். இதற்கிடையே தேஷ்முக் விரைவில் குணமடையவேண்டி, அவரது சொந்த ஊரான லத்தூர் நகரில் பொதுமக்கள் சிறப்பு பிரார்த்தனை செய்தனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 month 4 weeks ago | வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 month 4 weeks ago | ஆவாரம்பூவின் மருத்துவ பலன்கள் 1 month 4 weeks ago |
தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 3 weeks ago | குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 8 months 1 week ago | பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 1 week ago |
வீடியோ
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு ப்ரை3 days 22 sec ago |
க்ரிஸ்பி கார்ன் ஸ்நாக்ஸ்5 days 23 hours ago |
ஆப்பிள் ரோஸ்ட்1 week 2 days ago |
-
ரபா நகரில் இஸ்ரேல் வான் தாக்குதல்: முக்கிய ஹமாஸ் தலைவர் உயிரிழப்பு
27 May 2024ஜெருசலேம் : இஸ்ரேல் நடத்திய வான் தாக்குதலில் ஹமாசின் மேற்கு கரை தலைமையக மூத்த அதிகாரி ஒருவரும் கொல்லப்பட்டார்.
-
முல்லை பெரியாற்றில் புதிய அணை: தேனியில் கேரளாவை கண்டித்து தமிழக விவசாயிகள் கண்டன பேரணி
27 May 2024கூடலூர், முல்லை பெரியாறு அணையை இடித்துவிட்டு புதிய அணை கட்ட திட்டமிடும் கேரளாவை கண்டித்து தேனி மாவட்டத்தின் தமிழக எல்லையான லோயர் கேம்பில் விவசாயிகள் சார்பில் நேற்று கண்
-
விதிமுறைகளை மீறி நாளிதழ்களில் தேர்தல் விளம்பரம்: பா.ஜ.க.வுக்கான தடையை நீக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு: ஐகோர்ட் உத்தரவில் தலையிட விரும்பவில்லை என கருத்து
27 May 2024புதுடெல்லி, பா.ஜ.க.வின் தேர்தல் விளம்பரத்துக்கான தடையை நீக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு தெரிவித்த நிலையில், கொல்கத்தா ஐகோர்ட்டின் உத்தரவில் தலையிட விரும்பவில்லை என கூறி பா
-
கொலை செய்யப்பட்ட ரவுடி தீபக் ராஜாவின் உடல் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அடக்கம்
27 May 2024நெல்லை : பாளையங்கோட்டையில் கொலை செய்யப்பட்ட ரவுடி தீபக் ராஜாவின் சடலம், ஒரு வாரத்துக்குப் பிறகு நேற்று காலை அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில் பலத்த போலீஸ்
-
மருத்துவக் காரணங்களுக்காக இடைக்கால ஜாமினை மேலும் ஒரு வாரம் நீட்டிக்க வேண்டும்: சுப்ரீம் கோர்ட்டில் கெஜ்ரிவால் மனு
27 May 2024புதுடெல்லி, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு சுப்ரீம் கோர்ட் வழங்கிய இடைக்கால ஜாமின் ஜூன் 1-ம் தேதியுடன் முடிவடையவுள்ள நிலையில் அவர் ஜாமின் நீட்டிப்பு கோரி மனுத்
-
பிரபல ஹாலிவுட் நடிகர் ஜானி வேக்டர் கொலை
27 May 2024வாஷிங்டன் : பிரபல ஹாலிவுட் நடிகர் ஜானி வேக்டர் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட திருடர்களால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
4 நாட்களில் தென்மேற்கு பருவமழை உருவாகிறது : இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்
27 May 2024புதுடெல்லி : தென்மேற்கு பருவமழை கேரளாவில் 4 நாட்களில் உருவாகக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
சிலி நாட்டில் 137 பேரை பலி கொண்ட காட்டுத்தீயை ஏற்படுத்திய வனத்துறை அதிகாரி கைது
27 May 2024சாண்டியாகோ : சிலி நாட்டில் 137 பேரை பலி கொண்ட காட்டுத்தீயை ஏற்படுத்திய வனத்துறை அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார்.
-
தமிழகத்தில் வாக்குகள் எண்ணும் பணியில் 38,500 பேர்: தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்
27 May 2024சென்னை, தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணியில் நுண் பார்வையாளர்கள் 4,500 பேர் உட்பட 38,500க்கும் மேற்பட்டவர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளதாகவும், வா
-
நாயாக மாறிய ஜப்பானை சேர்ந்தவர் நரியாக மாறவிருப்பம்
27 May 2024டோக்கியோ : ஜப்பானில் கடந்த வருடம் நாயாக மாறிய நபர் தற்போது நரியாக மாற வேண்டும் என தெரிவித்துள்ளார்.
-
வரத்து குறைவு எதிரொலி: தக்காளி விலை கிலோ 60 ரூபாய்க்கு விற்பனை
27 May 2024சென்னை : சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் வரத்து குறைவால், தக்காளி கிலோவுக்கு ரூ.60-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
-
சென்னையில் நாளை முதல் வாக்கு எண்ணுபவர்களுக்கு பயிற்சி : மாவட்ட தேர்தல் அலுவலர் தகவல்
27 May 2024சென்னை : சென்னையில் வாக்கு எண்ணும் மையங்களில் மேற்பார்வையாளர்கள், நுண் பணியாளர்கள் என மொத்தம் 1,433 பேர் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபட உள்ளதாகவும், அவர்களுக்கான பயிற்சி
-
புனே கார் விபத்து வழக்கு: சிறுவனின் ரத்த மாதிரியை மாற்றிய மருத்துவர்கள் கைது
27 May 2024புனே : புனேவில் மதுபோதையில் சிறுவன் ஓட்டிய கார் மோதி இருவர் உயிரிழந்த விவகாரத்தில், சிறுவனின் ரத்த மாதிரியை மாற்றிய வழக்கில் மருத்துவர்கள் இருவர் கைது செய்யப்பட்ட
-
பா.ஜனதாவின் வெற்றியை கொண்டாட தயாராகுங்கள் : நிர்வாகிகள் கூட்டத்தில் அண்ணாமலை பேச்சு
27 May 2024சென்னை : 3-வது முறையாக பா.ஜ.க. ஆட்சிக்கு வரவேண்டும் என்பது காலத்தின் கட்டாயம். பா.ஜ.க. மீது எந்தவித குறையும் இல்லை.
-
பிரதமர் மோடி போட்டியிடும் வாரணாசியை முற்றுகையிட்ட பாரதிய ஜனதா தலைவர்கள்
27 May 2024வாரணாசி : 3-வது முறையாக பிரதமர் மோடி போட்டியிடும் வாரணாசி தொகுதியில் பிரசாரம் அனல் பறக்க தொடங்கியுள்ள நிலையில் அங்கு, மத்திய அமைச்சர் அமித்ஷா, தேசிய தலைவர் ஜே.பி.நட்டா
-
அமித்ஷா குறித்து சர்ச்சை பேச்சு: ராகுல் மீதான வழக்கில் ஜூன் 7-ல் விசாரணை
27 May 2024பெங்களூரு : மத்திய அமைச்சர் அமித்ஷா குறித்து அவதூறாக பேசியதாக ராகுல் காந்தி மீதான வழக்கில் விசாரணை ஜூன் 7-ம் தேதி நடைபெறவுள்ளது.
-
விராட் கோலி வரலாற்று சாதனை
27 May 2024நடப்பு ஐ.பி.எல். தொடரில் பெங்களூரு அணிக்காக விளையாடிய இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி 15 போட்டிகளில் 741 ரன்களை 61.75 என்ற அபாரமான சராசரியில் குவித்தார்.
-
வரும் 1-ம் தேதி டெல்லியில் நடக்கிறது 'இன்டியா' தலைவர்கள் ஆலோசனைக் கூட்டம்: முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட கூட்டணி தலைவர்களுக்கு அழைப்பு
27 May 2024புதுடெல்லி, வரும் 1-ம் தேதி டெல்லியில் டெல்லியில் இன்டியா கூட்டணி தலைவர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெறவுள்ளது.
-
'நான் முதல்வன்' உள்ளிட்ட பல்வேறு திட்டங்களால் நாட்டிலேயே உயர்கல்வியில் சிறந்து விளங்கும் தமிழ்நாடு : தமிழக அரசு பெருமிதம்
27 May 2024சென்னை : நான் முதல்வன் திட்டம் உள்ளிட்ட எண்ணற்ற திட்டங்கள் திறம்பட செயல்படுத்தப்பட்டு வருவதால் நாட்டிலேயே உயர்கல்வியில் தமிழகம் சிறந்து விளங்குவதாக தமிழக அரசு பெருமிதம்
-
விரைவில் புஷ்பா 2
27 May 2024மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் நடிகர்கள் அல்லு அர்ஜூன் மற்றும் ராஷ்மிகா மந்தனா நடித்திருக்கும் 'புஷ்பா 2' திரைப்படம் இந்த வருடத்தில் அதிகம் எதிர்பார்க்கப்படும் படங்க
-
6 மாவட்டங்களில் புதிய மருத்துவ கல்லூரிகளை திறக்க வேண்டும்: அரசுக்கு ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்
27 May 2024சென்னை, 6 மாவட்டங்களில் புதிதாக மருத்துவ கல்லூரிகளை திறக்க போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தி உள்ளார்.
-
கார்த்தி நடிக்கும் 'வா வாத்தியார்'
27 May 2024தமிழ் திரையுலகில் முன்னணி நட்சத்திர நடிகரான கார்த்தி நடிப்பில் தயாராகி இருக்கும் 'வா வாத்தியார்' எனும் புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது.
-
வெற்றிக்கு குறித்து ஸ்ரேயாஸ் ஐயர்
27 May 2024சென்னை : போட்டியில் முதலில் பந்துவீசியது வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்ததாக கொல்கத்தா அணி கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் தெரிவித்துள்ளார்.
-
ஜெயக்குமார் மரண வழக்கு விசாரணை: 30-க்கும் மேற்பட்டோருக்கு சி.பி.சி.ஐ.டி. போலீஸ் சம்மன்
27 May 2024நெல்லை : ஜெயக்குமார் மரண வழக்கு தொடர்பாக நண்பர்கள் உட்பட 30க்கும் மேற்பட்டோர் விசாரணைக்கு நேரில் ஆஜராக சி.பி.சி.ஐ.டி. போலிசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.
-
பாலியல் விவகாரம்: விசாரணை குழு முன்பு மே 31-ல் ஆஜராகுகிறார் பிரஜ்வல் ரேவண்ணா : வீடியோ வெளியிட்டு தகவல்
27 May 2024பெங்களூரு : பாலியல் துன்புறுத்தல் விவகாரத்தில் சிக்கிய ஹாசன் எம்.பி.