எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை : தமிழகத்தில் காலியாகும் 6 மாநிலங்களவை எம்.பி. பதவிகளுக்கு தி.மு.க. - அ.தி.மு.க.வில் கடும் போட்டி நிலவுகிறது. இது தொடர்பாக இட பங்கீடு, ஆதரவு கோருவது தொடர்பான பேச்சுவார்த்தைகள் தொடங்கியுள்ளன.
பாராளுமன்ற மேல்சபையில் தமிழகத்தைச் சேர்ந்த தி.மு.க. எம்.பி.க்கள் டி.கே.எஸ்.இளங்கோவன், ஆர்.எஸ்.பாரதி, கே.ஆர்.என்.ராஜேஸ்குமார், அ.தி.மு.க.வைச் சேர்ந்த நவநீதகிருஷ்ணன், எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியன், ஏ.விஜயகுமார் ஆகிய 6 பேரின் பதவிக்காலம் நிறைவடைகிறது. காலியாகப் போகும் இந்த 6 இடங்களுக்கும் அடுத்த மாதம் (ஜூன்) 10ந்தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த மாதம் 24-ந்தேதி வேட்புமனு தாக்கல் தொடங்குகிறது.
தற்போதைய நிலையில் ஒரு எம்.பி. வெற்றி பெற 34 எம்.எல்.ஏ.க்களின் வாக்குகள் தேவைப்படும். அதன்படி பார்த்தால் தி.மு.க.வுக்கு 159 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். எனவே 4 எம்.பி.க்கள் தி.மு.க.வுக்கு கிடைக்கும். அ.தி.மு.க. கூட்டணிக்கு 75 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். எனவே அ.தி.மு.க.வுக்கு 2 இடங்கள் கிடைக்கும். இந்த பதவிகளுக்காக தி.மு.க. மற்றும் அ.தி.மு.க.வுக்குள் கடும் போட்டி நிலவுகிறது.
தி.மு.க.வை பொறுத்தவரை கட்சியின் சட்டத்துறை செயலாளராக இருக்கும் ஆர்.எஸ்.பாரதிக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படலாம் என்று கூறப்படுகிறது. அ.தி.மு.க.வை சேர்ந்த வைத்திலிங்கம் ஒரு ஆண்டு பதவி இருந்த நிலையில் ராஜினாமா செய்து விட்டு சட்டசபை தேர்தலில் போட்டியிட்டார். அந்த இடத்துக்கு நடந்த தேர்தலில் தி.மு.க.வை சேர்ந்த ராஜேஷ்குமார் தேர்வானார். மிக குறைந்த காலமே அவர் எம்.பி.யாக இருப்பதால் அவருக்கு பதவி நீட்டிப்பு கொடுக்கும் வகையில் ஒரு இடத்தை அவருக்கு கொடுக்கலாம் என்று கூறப்படுகிறது.
கூட்டணி கட்சியான காங்கிரசுக்கும் ஒரு இடம் வழங்கப்படுவதாக கூறப்படுகிறது. மீதம் இருப்பது ஒரே ஒரு இடம்தான். அந்த ஒரு இடத்தை பெறுவதில் தி.மு.க.வினரிடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.முன்னாள் அமைச்சர் பொன் முத்துராமலிங்கம் சட்டமன்ற தேர்தலில் வெற்றி வாய்ப்பை இழந்தார். எனவே அவர் தனக்கு ஒரு வாய்ப்பு வழங்க வேண்டும் என்று கட்சி மேலிடத்தை அணுகி வருவதாக கூறப்படுகிறது.இதற்கிடையில் விடுதலை சிறுத்தைகளும் ஒரு இடத்துக்கு ஆசைப்படுவதாகவும் இது தொடர்பாக தி.மு.க. மேலிடத்துடன் பேசி வருவதாகவும் கட்சி வட்டாரங்களில் கூறப்படுகிறது.
அ.தி.மு.க.வில் 2 இடத்தில் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்களுக்கு தலா ஒரு இடம் என்று பங்கிட்டுள்ளனர். அதே நேரம் 2 எம்.பி.க்கள் வெற்றி பெற மேலும் 2 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவும் தேவைப்படுகிறது. அதற்கு பா.ஜனதாவிடம் ஆதரவு கேட்க முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. அ.தி.மு.க.வை பொறுத்தவரை முன்னாள் அமைச்சர்கள் டி.ஜெயக்குமார், சி.வி.சண்முகம், பா.வளர்மதி, செம்மலை, பொன்னையன், கோகுலஇந்திரா, முன்னாள் எம்.பி. வேணுகோபால், கட்சியின் மூத்த நிர்வாகியான தமிழ்மகன்உசேன் உள்பட பலரும் கேட்பதால் யாருக்கு வழங்குவது என்று முடிவெடுக்க முடியாமல் திணறுகிறார்கள்.
ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளரான தேனி மாவட்ட செயலாளர் எஸ்.பி.எம்.சையத்கானுக்கு வழங்க திட்டமிட்டிருப்பதாக பேச்சு அடிபடுகிறது. யாருக்கு கொடுக்கலாம் என்று தி.மு.க.வே திணறி கொண்டிருக்கும் நிலையில் ஒரு சீட் தரலாம் என்ற நம்பிக்கையில் கூட்டணி கட்சியான காங்கிரசுக்குள் இப்போதே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரத்தின் பதவிக்காலமும் முடிகிறது. எனவே அவர் மீண்டும் எம்.பி.யாக காய்களை நகர்த்தி வருகிறார். தி.மு.க. தலைமையுடன் நெருக்கமாக இருக்கும் அவருக்கு எம்.பி. பதவி கொடுப்பதை தி.மு.க.வும் விரும்பும். எனவே அவர் வெற்றி பெறுவது உறுதி என்கிறார்கள் அவரது ஆதரவாளர்கள்.
தலித் சமூகத்தை சேர்ந்த முன்னாள் எம்.பி. விசுவநாதன், தற்போதைய மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி, முன்னாள் மாநில தலைவர்கள் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், தங்கபாலு மற்றும் டெல்லி அரசியலில் வலுவாக இருக்கும் தமிழகத்தை சேர்ந்த ஒருவர் உள்பட பலர் முயற்சித்து வருகிறார்கள். தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய இரு கட்சிகளிலும் இடங்கள் பங்கீடு, ஆதரவு கோருவது தொடர்பான பேச்சுவார்த்தைகள் தொடங்கி உள்ளன.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 month 4 weeks ago | வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 month 4 weeks ago | ஆவாரம்பூவின் மருத்துவ பலன்கள் 1 month 4 weeks ago |
தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 3 weeks ago | குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 8 months 1 week ago | பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 1 week ago |
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு ப்ரை2 days 12 hours ago |
க்ரிஸ்பி கார்ன் ஸ்நாக்ஸ்5 days 11 hours ago |
ஆப்பிள் ரோஸ்ட்1 week 2 days ago |
-
முல்லை பெரியாற்றில் புதிய அணை: தேனியில் கேரளாவை கண்டித்து தமிழக விவசாயிகள் கண்டன பேரணி
27 May 2024கூடலூர், முல்லை பெரியாறு அணையை இடித்துவிட்டு புதிய அணை கட்ட திட்டமிடும் கேரளாவை கண்டித்து தேனி மாவட்டத்தின் தமிழக எல்லையான லோயர் கேம்பில் விவசாயிகள் சார்பில் நேற்று கண்
-
ரபா நகரில் இஸ்ரேல் வான் தாக்குதல்: முக்கிய ஹமாஸ் தலைவர் உயிரிழப்பு
27 May 2024ஜெருசலேம் : இஸ்ரேல் நடத்திய வான் தாக்குதலில் ஹமாசின் மேற்கு கரை தலைமையக மூத்த அதிகாரி ஒருவரும் கொல்லப்பட்டார்.
-
விதிமுறைகளை மீறி நாளிதழ்களில் தேர்தல் விளம்பரம்: பா.ஜ.க.வுக்கான தடையை நீக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு: ஐகோர்ட் உத்தரவில் தலையிட விரும்பவில்லை என கருத்து
27 May 2024புதுடெல்லி, பா.ஜ.க.வின் தேர்தல் விளம்பரத்துக்கான தடையை நீக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு தெரிவித்த நிலையில், கொல்கத்தா ஐகோர்ட்டின் உத்தரவில் தலையிட விரும்பவில்லை என கூறி பா
-
மருத்துவக் காரணங்களுக்காக இடைக்கால ஜாமினை மேலும் ஒரு வாரம் நீட்டிக்க வேண்டும்: சுப்ரீம் கோர்ட்டில் கெஜ்ரிவால் மனு
27 May 2024புதுடெல்லி, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு சுப்ரீம் கோர்ட் வழங்கிய இடைக்கால ஜாமின் ஜூன் 1-ம் தேதியுடன் முடிவடையவுள்ள நிலையில் அவர் ஜாமின் நீட்டிப்பு கோரி மனுத்
-
கொலை செய்யப்பட்ட ரவுடி தீபக் ராஜாவின் உடல் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அடக்கம்
27 May 2024நெல்லை : பாளையங்கோட்டையில் கொலை செய்யப்பட்ட ரவுடி தீபக் ராஜாவின் சடலம், ஒரு வாரத்துக்குப் பிறகு நேற்று காலை அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில் பலத்த போலீஸ்
-
பிரபல ஹாலிவுட் நடிகர் ஜானி வேக்டர் கொலை
27 May 2024வாஷிங்டன் : பிரபல ஹாலிவுட் நடிகர் ஜானி வேக்டர் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட திருடர்களால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
சிலி நாட்டில் 137 பேரை பலி கொண்ட காட்டுத்தீயை ஏற்படுத்திய வனத்துறை அதிகாரி கைது
27 May 2024சாண்டியாகோ : சிலி நாட்டில் 137 பேரை பலி கொண்ட காட்டுத்தீயை ஏற்படுத்திய வனத்துறை அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார்.
-
தமிழகத்தில் வாக்குகள் எண்ணும் பணியில் 38,500 பேர்: தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்
27 May 2024சென்னை, தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணியில் நுண் பார்வையாளர்கள் 4,500 பேர் உட்பட 38,500க்கும் மேற்பட்டவர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளதாகவும், வா
-
சென்னையில் நாளை முதல் வாக்கு எண்ணுபவர்களுக்கு பயிற்சி : மாவட்ட தேர்தல் அலுவலர் தகவல்
27 May 2024சென்னை : சென்னையில் வாக்கு எண்ணும் மையங்களில் மேற்பார்வையாளர்கள், நுண் பணியாளர்கள் என மொத்தம் 1,433 பேர் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபட உள்ளதாகவும், அவர்களுக்கான பயிற்சி
-
4 நாட்களில் தென்மேற்கு பருவமழை உருவாகிறது : இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்
27 May 2024புதுடெல்லி : தென்மேற்கு பருவமழை கேரளாவில் 4 நாட்களில் உருவாகக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
வரத்து குறைவு எதிரொலி: தக்காளி விலை கிலோ 60 ரூபாய்க்கு விற்பனை
27 May 2024சென்னை : சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் வரத்து குறைவால், தக்காளி கிலோவுக்கு ரூ.60-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
-
அமித்ஷா குறித்து சர்ச்சை பேச்சு: ராகுல் மீதான வழக்கில் ஜூன் 7-ல் விசாரணை
27 May 2024பெங்களூரு : மத்திய அமைச்சர் அமித்ஷா குறித்து அவதூறாக பேசியதாக ராகுல் காந்தி மீதான வழக்கில் விசாரணை ஜூன் 7-ம் தேதி நடைபெறவுள்ளது.
-
நாயாக மாறிய ஜப்பானை சேர்ந்தவர் நரியாக மாறவிருப்பம்
27 May 2024டோக்கியோ : ஜப்பானில் கடந்த வருடம் நாயாக மாறிய நபர் தற்போது நரியாக மாற வேண்டும் என தெரிவித்துள்ளார்.
-
பா.ஜனதாவின் வெற்றியை கொண்டாட தயாராகுங்கள் : நிர்வாகிகள் கூட்டத்தில் அண்ணாமலை பேச்சு
27 May 2024சென்னை : 3-வது முறையாக பா.ஜ.க. ஆட்சிக்கு வரவேண்டும் என்பது காலத்தின் கட்டாயம். பா.ஜ.க. மீது எந்தவித குறையும் இல்லை.
-
புனே கார் விபத்து வழக்கு: சிறுவனின் ரத்த மாதிரியை மாற்றிய மருத்துவர்கள் கைது
27 May 2024புனே : புனேவில் மதுபோதையில் சிறுவன் ஓட்டிய கார் மோதி இருவர் உயிரிழந்த விவகாரத்தில், சிறுவனின் ரத்த மாதிரியை மாற்றிய வழக்கில் மருத்துவர்கள் இருவர் கைது செய்யப்பட்ட
-
ராஜ்கோட் தீ விபத்தில் 33 பேர் பலி: பராமரிப்பு இல்லாத மையத்திற்கு எப்படி அனுமதி வழங்கினார்கள்? - நகராட்சிக்கு குஜராத் உயர் நீதிமன்றம் கண்டனம்
27 May 2024காந்திநகர் : ராஜ்கோட் விளையாட்டு மைய தீ விபத்து குறித்து தாமாக முன் வந்து விசாரணை செய்த குஜராத் உயர்நீதிமன்றம் ராஜ்கோட் நகராட்சிக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. 
-
6 மாவட்டங்களில் புதிய மருத்துவ கல்லூரிகளை திறக்க வேண்டும்: அரசுக்கு ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்
27 May 2024சென்னை, 6 மாவட்டங்களில் புதிதாக மருத்துவ கல்லூரிகளை திறக்க போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தி உள்ளார்.
-
82,479 பேர் விண்ணப்பம்: அரசுப்பள்ளி ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு தேதி விரைவில் அறிவிப்பு : பள்ளிக் கல்வித்துறை தகவல்
27 May 2024சென்னை : அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வில் பங்கேற்க 82,479 பேர் விண்ணப்பித்துள்ளதாக தெரிவித்துள்ள தமிழக பள்ளிக் கல்வித்துறை, கலந்தாய்வுக்கான
-
'நான் முதல்வன்' உள்ளிட்ட பல்வேறு திட்டங்களால் நாட்டிலேயே உயர்கல்வியில் சிறந்து விளங்கும் தமிழ்நாடு : தமிழக அரசு பெருமிதம்
27 May 2024சென்னை : நான் முதல்வன் திட்டம் உள்ளிட்ட எண்ணற்ற திட்டங்கள் திறம்பட செயல்படுத்தப்பட்டு வருவதால் நாட்டிலேயே உயர்கல்வியில் தமிழகம் சிறந்து விளங்குவதாக தமிழக அரசு பெருமிதம்
-
ஜெயக்குமார் மரண வழக்கு விசாரணை: 30-க்கும் மேற்பட்டோருக்கு சி.பி.சி.ஐ.டி. போலீஸ் சம்மன்
27 May 2024நெல்லை : ஜெயக்குமார் மரண வழக்கு தொடர்பாக நண்பர்கள் உட்பட 30க்கும் மேற்பட்டோர் விசாரணைக்கு நேரில் ஆஜராக சி.பி.சி.ஐ.டி. போலிசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.
-
விராட் கோலி வரலாற்று சாதனை
27 May 2024நடப்பு ஐ.பி.எல். தொடரில் பெங்களூரு அணிக்காக விளையாடிய இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி 15 போட்டிகளில் 741 ரன்களை 61.75 என்ற அபாரமான சராசரியில் குவித்தார்.
-
கார்த்தி நடிக்கும் 'வா வாத்தியார்'
27 May 2024தமிழ் திரையுலகில் முன்னணி நட்சத்திர நடிகரான கார்த்தி நடிப்பில் தயாராகி இருக்கும் 'வா வாத்தியார்' எனும் புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 27-05-2024.
27 May 2024 -
தோல்வி குறித்து கம்மின்ஸ்
27 May 2024சென்னை : கொல்கத்தாவுக்கு எதிரான தோல்வி குறித்து ஐதராபாத் அணி கேப்டன் பேட் கம்மின்ஸ் விளக்கமளித்துள்ளார்.
-
பாலியல் விவகாரம்: விசாரணை குழு முன்பு மே 31-ல் ஆஜராகுகிறார் பிரஜ்வல் ரேவண்ணா : வீடியோ வெளியிட்டு தகவல்
27 May 2024பெங்களூரு : பாலியல் துன்புறுத்தல் விவகாரத்தில் சிக்கிய ஹாசன் எம்.பி.