எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மதுரை : ரெய்டு மூலம்அ.தி.மு.க.வை நெருக்குகிறார்கள்.இந்த சலசலப்புக்கு எல்லாம் அஞ்ச மாட்டோம் என்று மதுரையில் நடந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தெரிவித்தார்.
பேரறிஞர் அண்ணாவின் 114 - வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் அ.தி.மு.க.சார்பில் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிச்சாமியின் ஆணைக்கிணங்க தமிழகம் முழுவதும் நடைபெற்று வருகிறது. அதன் அடிப்படையில் மதுரை மாநகர் மாவட்ட தெற்கு 3 - ம் பகுதி அ.தி.மு.க.சார்பில் அதன் பகுதி செயலாளரும், மாநகர் மாவட்ட வர்த்தக அணி செயலாளருமான கறிக்கடை முத்துகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ. கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். இதில் தலைமை கழக பேச்சாளர்கள் முத்தையா, ரஜினி நிவேதா, நெல்லை தளவாய் மற்றும், எம்.எஸ்.பாண்டியன், வில்லாபுரம் ஜெ.ராஜா, ஆர்.அண்ணாத்துரை, பா.குமார், ஏ.பார்த்திபன், பரவைராஜா, கு.திரவியம், எஸ்.டி.ஜெயபாலன், சுகந்தி அசோக், ஜோசப் தனுஷ்லாஸ், ஏ.பார்த்திபன், பாண்டிச்செல்வி ஞானசேகரன், வட்ட செயலாளர்கள் ஜி.மணிகண்டன், ஏ.கே.சுந்தர் மற்றும் ராதாகண்ணன், சமயமுத்து உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் மதுரை மாநகர மாவட்ட அ.தி.மு.க.செயலாளரும், முன்னாள் அமைச்சருமான செல்லூர் கே.ராஜூ பேசியதாவது:-
அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் ஆணைக்கிணங்க தமிழகம் முழுவதும் அண்ணா பிறந்த நாள் கட்டம் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக இன்று மதுரை மாநகர் சார்பில் அண்ணா பிறந்த நாள் கூட்டம் நடைபெற்று வருகிறது. பெண்கள் மேடையில் உட்கார தந்தை பெரியாரும், அறிஞர் அண்ணாவும் மட்டுமே காரணம். தமிழகத்தில் பெண்களுக்கு சமஉ ரிமை, சமத்துவத்தை நடைமுறைப்படுத்தியது அறிஞர் அண்ணாவும், பெரியாரும். எம்.ஜி.ஆர். திமுகவுக்காக தன்னையே அர்ப்பணித்தவர். திமுகவை வளர்த்தவர். தி.மு.க.வில் எம்.ஜி.ஆர். சேர்ந்த பிறகு தான் அந்தக்கட்சியின் கொள்கைகளை படத்தில் நடித்து பட்டிதொட்டி எங்கும் மக்கள் மத்தியில் பரப்பினார். எம்.ஜி.ஆர். சுடப்பட்டதால் மக்கள் காங்கிரசுக்கு வாக்களிக்காமல் தி.மு.க.வுக்கு மக்கள் வாக்களித்தனர். சாதாரண நபரான கலைஞரை தலைவராக கொண்டு வந்தது எம்.ஜி.ஆர். தன்னை தி.மு.க. தலைவராக்க வேண்டும் என எம்.ஜி.ஆரின் வீட்டில் சந்தித்து பேசியவர் கலைஞர். எளிய குடும்பத்தில் பிறந்தவன் எனக்கூறி மக்களுக்காக உழைப்பேன் எனச்சொல்லி என்னை தலைவராக தேர்ந்தெடுக்க வேண்டும் என கலைஞர் எம்.ஜி.ஆரிடம் கூறினார். மலைப்பாம்பு போல எதை வேண்டுமானாலும் சாப்பிட்டு விட்டு தி.மு.க.வினர் அப்படியே இருப்பார்கள்.
காலை உணவு திட்டத்தை தொடங்கி வைக்கும் திட்டத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நன்றாக போஸ் கொடுத்தார். குழந்தைக்கு ஊட்டுவது போல ஒரு தகப்பனாக ஒரு தாத்தாவாக என்ன செய்யனுமே செய்தார்.ஆனால் கடைசியில் சாப்பாடு உள்ள தட்டில் பிஸ்லரி தண்ணீரில் கை கழுவி விட்டார். குழந்தையின் எச்சில் பட்டதால் கையை கழுவினார். பின்னால் சென்று வேறு எதை வைத்து கை கழுவினார் என தெரியவில்லை. மாடியில் இருந்து மக்களை பார்க்கிறார் ஸ்டாலின். எதிர்பாராத விதமாக ஜெயலலிதா மறைந்துவிட்டார். எதையோ எதையோ சொல்லி அ.தி.மு.க. வருமா, ஆட்சி அமைக்குமா என்றெல்லாம் ஸ்டாலின் பேசினார். மக்களுக்கு 5000 கொடுக்க வேண்டும் எனக்கூறி ஆட்சிக்கு வந்த ஸ்டாலின் எல்லோருக்கும் அல்வா கொடுத்துவிட்டார்.
உதயநிதி என்று செங்கலை தூக்கி காண்பித்தாரோ அன்றே செங்கல் விலை உயர்ந்துவிட்டது. உதயநிதியின் ராசியோ என்னவோ செங்கல் ஜல்லி கட்டுமான பொருட்கள் என எல்லாமே விலை கூடி விட்டது. மக்களை தேடி மருத்துவம் என கூறிவிட்டு எந்த மருத்துவரும் வீடி தேடி வரவில்லை. நீட் ரத்து எனக்கூறி இப்போதும் ஏமாற்றி கொண்டு தான் இருக்கின்றனர். மின்கட்டணத்தை உயர்த்த மாட்டேன் எனக்கூறி பணக்காரர்கள் வாக்குகளையும் வாங்கிவிட்டு மின் கட்டணத்தை உயர்த்திவிட்டார். யாருமே தி.மு.க. ஆட்சியில் சுபிட்சமாக இல்லை. அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில் சோதனை நடத்துகிறார்கள். தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் இப்போது என்ன பிச்சையா எடுக்கிறார்கள். பொன்முடி, எ.வ.வேலு யார் என எங்களுக்கு தெரியும், ஸ்டாலின், அவர் குடும்பம் அந்த குடும்பத்தின் பின்னணி என்ன, இவ்வளவு சொத்துக்கள் எப்படி வந்தது.
ரெய்டால் அ.தி.மு.க.வை நெருக்குகிறார்கள். வழக்கு போட்டால் பயந்துவிடுவார்கள் என நினைக்கின்றனர். நாங்கள் பனங்காட்டு நரி. சலசலப்புக்கு அஞ்ச மாட்டோம். அ.தி.மு.க. குண்டுக்கே அஞ்சாத தலைவர் வழியிலும், நெஞ்சுரம் கொண்ட தலைவியின் வழிவந்த இயக்கத்தினர். உங்கள் அப்பா கலைஞர் காலத்திலேயே மிரட்டல் உருட்டல் அதிகாரத்தை பார்த்தவர்கள் நாங்கள். இதற்கெல்லாம் ஒரு நாளும் பயப்பட மாட்டோம். தி.மு.க. அரசு நடந்தால் வரி நின்றால் வரி சும்மா இருந்தலும் வரி போடுவார்கள். மக்கள் பேசாமல் இருப்பதால் மஞ்ச குளிக்கிறார்கள். தி.மு.க. தேர்தல் வராது என நினைக்கின்றனர். ஆனால் நாடாளுமன்ற தேர்தல் வர உள்ளது. மின் கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு, வாக்குறுதி நிறைவேற்றாத தி.மு.க. அரசுக்கு சரியான பதிலடியை கொடுக்க மக்கள் தயாராக இருக்கிறார்கள். மக்கள் தி.மு.க.வுக்கு எதிராக திரும்பி விட்டார்கள் தக்க பதிலடி கொடுக்க தயாராகி விட்டனர். இவ்வாறு அவர் பேசினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கத்திரிக்காய் ரோஸ்ட்35 sec ago |
வெண்டைக்காய் முட்டை பொரியல்2 days 19 hours ago |
முட்டைகோஸ் கட்லெட்1 week 19 min ago |
-
மாநில கட்சிகளாக அங்கீகாரம்: திருமாவளவன், சீமானுக்கு நடிகர் விஜய் வாழ்த்து
07 Jun 2024சென்னை : நடைபெற்று முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் மக்களின் நம்பிக்கையைப் பெற்று, மாநிலக் கட்சிகளாக அங்கீகாரம் பெறும் தகுதியை வென்றெடுத்துள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சிக்
-
11-ம் தேதி முதல் செயல்பாட்டுக்கு வரும் திருச்சி விமான நிலைய புதிய முனையம்
07 Jun 2024திருச்சி : திருச்சி விமான நிலையத்தின் புதிய முனையம் வரும் 11-ம் தேதி செயல்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
சென்னையில் இன்று தி.மு.க. புதிய எம்.பி.க்கள் கூட்டம் : துரைமுருகன் அறிவிப்பு
07 Jun 2024சென்னை : தமிழகத்தில் தி.மு.க.
-
நீட் தேர்வு குளறுபடி: மத்தியில் அமையும் புதிய அரசு விளக்கமளிக்க வேண்டும் : எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
07 Jun 2024சென்னை : நீட் தேர்வில் நடந்த குளறுபடிகுறித்து மத்தியில் அமையும் புதிய அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என்று அ.தி.மு.க.
-
நீட் தேர்வை ஒழித்துக்கட்டும் நாள் வெகுதொலைவில் இல்லை : முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி
07 Jun 2024சென்னை : நீட் தேர்வை ஒழித்துக்கட்டும் நாள் வெகுதொலைவில் இல்லை என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
2.49 லட்சம் பேர் விண்ணப்பம்: பொறியியல் கலந்தாய்வை ஆகஸ்ட் முதல் வாரத்தில் நடத்த திட்டம்
07 Jun 2024சென்னை : பொறியியல் படிப்புக்கு இந்த ஆண்டு 2.49 லட்சம் மாணவர்கள் விண்ணப்பம் பதிவு செய்த நிலையில் அவர்களில் இதுவரை 1.78 லட்சம் பேர் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்துள்ளனர்.
-
தமிழகத்தின் 13-ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு : சென்னை வானிலை மையம் தகவல்
07 Jun 2024சென்னை : தமிழகத்தில் இன்று முதல் 13-ம் தேதி வரை லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
ஜூன் 24-ல் தமிழ்நாடு சட்டசபை கூடுகிறது: சபாநாயகர் அப்பாவு அதிகாரப்பூர்வ அறிவிப்பு
07 Jun 2024சென்னை, தமிழக அரசின் துறைகள் ரீதியான மானிய கோரிக்கை விவாதத்துக்காக தமிழக சட்டப்பேரவை வரும் ஜூன் 24-ம் தேதி கூடுவதாக சட்டப்பேரவைத்தலைவர் மு.அப்பாவு அறிவித்துள்ளார்.
-
நாட்டு மக்களுக்காக உழைக்க எப்போதும் தயாராக உள்ளோம்: என்.டி.ஏ. கூட்டத்தில் நரேந்திர மோடி பேச்சு
07 Jun 2024புதுடெல்லி, நாங்கள் தோற்கவில்லை; தோற்கவும் மாட்டோம் என்று தெரிவித்த நரேந்திர மோடி நாட்டு, மக்களுக்காக உழைக்க எப்போதும் தயாராக உள்ளோம் என்றும் அவர் தெரிவித்தார்.
-
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாண சட்டசபையில் எம்.எல்.ஏ.க்கள் பஞ்சாபி மொழியில் பேச அனுமதி
07 Jun 2024இஸ்லாமாபாத் : பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாண சட்டசபையில் எம்.எல்.ஏ.க்கள் பஞ்சாபி மொழியில் பேச அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
-
பிரதமருடன் இணைந்து பணியாற்றவுள்ளோம் : பீகார் முதல்வர் நிதிஷ் குமார் பேச்சு
07 Jun 2024புதுடெல்லி, நாங்கள் அனைவரும் பிரதமருடன் இணைந்து பணியாற்றவுள்ளோம் என பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் தெரிவித்துள்ளார்.
-
ஆதரவு எம்.பி.க்களின் பட்டியலை வழங்கினார்: 3-வது முறையாக ஆட்சி அமைக்க மோடிக்கு ஜனாதிபதி முர்மு அழைப்பு
07 Jun 2024புதுடெல்லி, என்.டி.ஏ.
-
டெல்லியில் நாளை நடக்கிறது காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம்
07 Jun 2024புதுடெல்லி : காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தலைமையில் டெல்லியில் நாளை அக்கட்சியின் காரிய கமிட்டி கூட்டம் நடைபெறுகிறது.
-
மேட்டூர் அணையில் இருந்து நீர் திறக்க வாய்ப்பு குறைவே: அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தகவல்
07 Jun 2024சென்னை, டெல்டா மாவட்டங்களின் குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து ஜூன் 12-ம் தேதி தண்ணீர் திறப்பதற்கான வாய்ப்புக் குறைவு என்று வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.
-
தேசிய ஜனநாயக கூட்டணியை இன்று அவர்கள் ஆதரிக்கலாம்: நாளை எங்களுடன் இணைவர் - சஞ்சய் ராவத் நம்பிக்கை
07 Jun 2024மும்பை : வரும் 9-ம் தேதி அன்று தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கலாம்.
-
மோடி பிரதமராக இருக்கும் வரை நாடு யாருக்கும் தலைவணங்காது : நடிகர் பவன் கல்யாண் பேச்சு
07 Jun 2024புதுடெல்லி : மோடி பிரதமராக இருக்கும்வரை நம் நாடு யாருக்கும் தலைவணங்காது என நடிகர் பவன் கல்யாண் தெரிவித்தார்
-
சுரங்கத்தில் பதுங்கியிருந்த இஸ்ரேல் வீரர்கள் 5 பேரை கொன்று விட்டோம் : ஹமாஸ் அமைப்பினர் தகவல்
07 Jun 2024காசா : ரபா நகரின் அருகே இஸ்ரேல் படைகளால் அமைக்கப்பட்ட சுரங்கப் பாதையில் பதுங்கியிருந்த இஸ்ரேல் படைவீரர்கள் 5 பேரை கொன்று விட்டதாக ஹமாஸ் அமைப்பு தெரிவித்துள்ளது.
-
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் புதிய உறுப்பினர்களாக பாக். உள்ளிட்ட 5 நாடுகள் தேர்வு
07 Jun 2024ஜெனீவா : டென்மார்க், கிரீஸ், பாகிஸ்தான், பனாமா மற்றும் சோமாலியா ஆகிய ஐந்து நாடுகள் ஐநாவின் பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தரமற்ற உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளன.
-
கொடநாடு எஸ்டேட்டில் ஊராட்சி மன்ற தலைவர் ஆய்வு செய்ய ஐகோர்ட் அனுமதி
07 Jun 2024சென்னை : கொடநாடு எஸ்டேட்டில் ஆய்வு செய்ய கோத்தகிரி ஊராட்சி மன்ற தலைவருக்கு சென்னை ஐகோர்ட் அனுமதி வழங்கி உள்ளது.
-
ஆருத்ரா, ஹிஜாவு மோசடிகள்: அறிக்கை அளிக்க காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
07 Jun 2024சென்னை, ஆருத்ரா, ஹிஜாவு மோசடிகள் குறித்து தமிழ்நாடு காவல்துறை அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
ரூ.55 ஆயிரத்தை நெருங்கும் ஒரு சவரன் தங்கம் விலை
07 Jun 2024சென்னை : சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று பவுனுக்கு ரூ. 320 உயா்ந்து ரூ.54,720-க்கு விற்பனையானது.
-
அரசு மருத்துவமனையில் முதல் செயற்கை கருத்தரித்தல் மையம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்து வைத்தார்
07 Jun 2024சென்னை, அரசு மருத்துவமனையில் முதன்முறையாக செயற்கை கருத்தரித்தல் மையத்தை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்து வைத்தார்.
-
கேரளாவில் நாளை வரை கனமழைக்கான எச்சரிக்கை : 5 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்
07 Jun 2024திருவனந்தபுரம் : கேரளாவில் பல மாவட்டங்களில் நாளை 9-ம் தேதி வரை கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என்று வானிலை மையம் கணித்துள்ளது.
-
குற்ற வழக்கில் சிக்கிய மகன்: அதிபர் ஜோ பைடன் வருத்தம்
07 Jun 2024வாஷிங்டன் : சட்டவிரோதமாக துப்பாக்கி வாங்கி வைத்திருந்த வழக்கில் சிக்கியுள்ள தனது மூத்த மகன் ஹண்டர் பைடன் குறித்து அமெரிக்க அதிபர் ஜோபைடன் வருத்தம் அடைந்துள்ளார்.
-
பார்லி.க்குள் அத்துமீறி நுழைந்தவர்கள் கைது
07 Jun 2024புதுடெல்லி, போலி அடையாள அட்டையை பயன்படுத்தி பாராளுமன்றத்துக்குள் அத்திமீறி நுழைய முயன்ற 3 பேர் போலீசார் கைது செய்யப்பட்டனர்.