எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை: மருத்துவ துறையில் 242 உதவி மருத்துவர்கள், 337 செவிலியர்கள், 308 மருந்தாளுனர்கள் உட்பட 1008 பேருக்கு பணி நியமன ஆணைகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று வழங்கினார். அர்ப்பணிப்பு உணர்வுடன் செயல்பட வேண்டும் என்று டாக்டர்களை முதல்வர் கேட்டுக்கொண்டார்.
மருத்துவதுறையில் பணி நியமன ஆணைகள் வழங்கும் நிகழ்ச்சி சென்னை கலைவாணர் அரங்கில் நேற்று நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் முன்னிலை வகித்தார். பணி நியமன ஆணைகளை வழங்கி முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-
முன்னோடித் திட்டங்கள்...
‘நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்’ என்றார்கள் நம் முன்னோர்கள். ‘சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும்’ என்றும் பெரியவர்கள் கூறுவார்கள். எனவே, நோயில்லாத வாழ்வைப் பெறுபவனே மிகப்பெரிய செல்வந்தன் என்பதில் சந்தேகமில்லை. மனித குலத்தில் இறைவனுக்கு அடுத்த நிலையில் வைத்து மதிக்கக்கூடியவர்கள் மருத்துவர்கள். இன்றைக்கு தமிழ்நாடு மருத்துவத்தில் மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியாகவும், முன்மாதிரியாகவும் விளங்குகிறது என்றால் அதற்கு காரணம் ஜெயலலிதா தீட்டிய முன்னோடித் திட்டங்கள் தான் என்பதை உலகு அறியும். அவரது ‘‘தொலைநோக்கு திட்டம் 2023"ல் வளர்ந்த நாடுகளுக்கு இணையாக சுகாதார குறியீடுகளை தமிழ்நாடு அடையும் வண்ணம் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, அவைகளை நிறைவேற்றிட அரசு பல்வேறு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறது.
உயர்தர சிகிச்சை
உயர்தர சுகாதார சேவைகளை வழங்குவது மட்டுமல்லாமல், மிகச் சிறந்த மனிதவளம் மற்றும் கட்டமைப்பை ஏற்படுத்துவதிலும், இந்தியாவிலேயே தமிழ்நாடு ஒரு முன்மாதிரி மாநிலமாக சிறந்து விளங்கி வருகிறது. தமிழ்நாடு, தாய் சேய் நலம் மற்றும் குடும்ப நல சேவைத் திட்டங்களை செயல்படுத்துவதில் முன்மாதிரி மாநிலமாக திகழ்வதோடு, நோய்களைத் தடுப்பதற்காக பல முன்னோடித் திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறது. அரசு மருத்துவ நிலையங்களுக்கு வரும் ஏழை எளிய மக்களுக்கு தங்கு தடையின்றி உயர்தர மருத்துவ சேவை கிடைக்க வேண்டும் என்பதற்காக, இந்த அரசு, புதிய ஆரம்ப சுகாதார நிலையங்கள் தோற்றுவித்தல், அரசு மருத்துவமனைகளின் கட்டமைப்புகளை வலுப்படுத்துதல், லீனியர் ஆக்ஸிலேட்டர், எம்.ஆர்.ஐ. ஸ்கேன், கேத் ஆய்வகங்கள், சி.டி. ஸ்கேன் போன்ற நவீன மருத்துவக் கருவிகளை வழங்குதல், போன்ற அம்மாவுடைய அரசு இன்றைக்கு செயல்படுத்தியிருக்கின்றது.
சிறப்புத் திட்டங்கள்...
டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி திட்டம், முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம், அம்மா குழந்தை நல பரிசு பெட்டகம், அம்மா மகப்பேறு சஞ்சீவினி திட்டம், அம்மா முழு உடல் பரிசோதனை திட்டம் மற்றும் மகளிருக்காக அம்மா மகளிர் சிறப்பு முழு உடல் பரிசோதனை திட்டம்,விலையில்லா சானிடரி நாப்கின் வழங்கும் திட்டம், நடமாடும் மருத்துவமனை திட்டம், தொற்றாநோய் தடுப்பு, கட்டுப்படுத்தல் மற்றும் சிகிச்சை அளிக்கும் திட்டம், தாய்ப்பால் வங்கி திட்டம், உயர்நிலை மருத்துவமனைகளில் கட்டமைப்பு வசதி விரிவுபடுத்தல், தமிழ்நாடு அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை, விபத்து சேவை மையங்களுடன் கூடிய உயர் சிறப்பு மருத்துவமனைகள் நிறுவுதல், ‘‘108" அவசரகால ஊர்தி சேவை போன்ற பல்வேறு சிறப்புத் திட்டங்கள் அம்மாவினால் தொடங்கப்பட்டு, தொடர்ந்து சிறப்பான முறையிலே அம்மாவுடைய அரசு செயல்படுத்தி வருகின்றது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
23,880 பணியாளர்கள்
அரசு மருத்துவமனைகளில் உள்ள பணியிடங்களை உடனுக்குடன் நிரப்பி, அரசு மருத்துவ நிலையங்களுக்கு வரும் ஏழை எளிய மக்களுக்கு தங்குதடையின்றி மருத்துவ சேவை வழங்கப்பட வேண்டுமென்ற உயரிய நோக்கத்தில், வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் தமிழ்நாட்டில் மட்டும் தான் இந்தியாவிலேயே முதன்முறையாக மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத் துறைக்கென தனியாக மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் 2012-ம் ஆண்டு அம்மாவினால் தொடங்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்த வாரியம், இதுவரை மருத்துவர்கள் மற்றும் சிறப்பு மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்கள் உட்பட 23,880 பணியாளர்களை தேர்வு செய்துள்ளது என்பதை இந்த நேரத்தில் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
பணி நியமன ஆணை...
242 உதவி மருத்துவர்கள், 337 செவிலியர்கள், 308 மருந்தாளுநர்கள் மற்றும் 90 நுண்கதிர் வீச்சாளர்கள் மற்றும் 21 வட்டார சுகாதார புள்ளியியல் அலுவலர்கள், மற்றும் கருணை அடிப்படையில் 10 இளநிலை உதவியாளர்கள் என மொத்தம் 1008 நபர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட உள்ளது.இவர்களுக்கான பணி நியமன ஆணைகளை வழங்கிடும் மகிழ்ச்சியான நிகழ்ச்சிதான் இந்த அரங்கில் தற்போது நடைபெற்று வருகிறது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
அர்ப்பணிப்பு உணர்வுடன்...
மக்கள் சேவையே மகேசன் சேவை என்ற அடிப்படையில், இன்றைக்கு பணி ஆணை பெற்றுள்ள உதவி மருத்துவர்கள், மருந்தாளுநர்கள், செவிலியர்கள் மற்றும் நுண்கதிர் வீச்சாளர்கள் தங்களுடைய கடமைகளை உணர்ந்து, அர்ப்பணிப்பு உணர்வுடன் தமிழ்நாட்டு மக்களுக்கு, குறிப்பாக கிராமப்புற மற்றும் ஏழை, எளிய மக்களுக்கு போதிய மருத்துவ சேவைகளை வழங்குமாறும், தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வரும் பல்வேறு சுகாதார திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்கவும், மக்கள் நலம் மேம்படவும், மக்கள் மகிழ்ச்சியுறும் வகையில் தங்கள் பணிகளை செவ்வனே செய்ய வேண்டும் என உங்களை எல்லாம் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.திருக்குறளில் ‘மருந்து’ என்ற அதிகாரம் இருக்கிறது. மருத்துவத் துறைக்கு வருகிறவர்கள் அவசியம் அந்த அதிகாரத்திலுள்ள பத்து குறள்களையும் படித்து, அதன்படி நடப்பதுடன் அந்த கருத்துக்களை பின்பற்ற வேண்டும். இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசினார்.
இந்நிகழ்ச்சியில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், செங்கோட்டையன் உள்ளிட்ட அமைச்சர்கள், டெல்லி சிறப்பு பிரதிநிதி என். தளவாய்சுந்தரம், தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்பநலத்துறையின் அரசு முதன்மைச் செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியத் தலைவர் ராஜாராமன், மருத்துவ கல்வி இயக்குநர் டாக்டர் எட்வின்ஜோ, மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்குநர் டாக்டர் இன்பசேகரன், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத் துறை இயக்குநர் டாக்டர் குழந்தைசாமி மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 month 4 weeks ago | வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 month 4 weeks ago | ஆவாரம்பூவின் மருத்துவ பலன்கள் 1 month 4 weeks ago |
தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 3 weeks ago | குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 8 months 1 week ago | பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 1 week ago |
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு ப்ரை2 days 6 hours ago |
க்ரிஸ்பி கார்ன் ஸ்நாக்ஸ்5 days 5 hours ago |
ஆப்பிள் ரோஸ்ட்1 week 2 days ago |
-
முல்லை பெரியாற்றில் புதிய அணை: தேனியில் கேரளாவை கண்டித்து தமிழக விவசாயிகள் கண்டன பேரணி
27 May 2024கூடலூர், முல்லை பெரியாறு அணையை இடித்துவிட்டு புதிய அணை கட்ட திட்டமிடும் கேரளாவை கண்டித்து தேனி மாவட்டத்தின் தமிழக எல்லையான லோயர் கேம்பில் விவசாயிகள் சார்பில் நேற்று கண்
-
மருத்துவக் காரணங்களுக்காக இடைக்கால ஜாமினை மேலும் ஒரு வாரம் நீட்டிக்க வேண்டும்: சுப்ரீம் கோர்ட்டில் கெஜ்ரிவால் மனு
27 May 2024புதுடெல்லி, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு சுப்ரீம் கோர்ட் வழங்கிய இடைக்கால ஜாமின் ஜூன் 1-ம் தேதியுடன் முடிவடையவுள்ள நிலையில் அவர் ஜாமின் நீட்டிப்பு கோரி மனுத்
-
ரபா நகரில் இஸ்ரேல் வான் தாக்குதல்: முக்கிய ஹமாஸ் தலைவர் உயிரிழப்பு
27 May 2024ஜெருசலேம் : இஸ்ரேல் நடத்திய வான் தாக்குதலில் ஹமாசின் மேற்கு கரை தலைமையக மூத்த அதிகாரி ஒருவரும் கொல்லப்பட்டார்.
-
விதிமுறைகளை மீறி நாளிதழ்களில் தேர்தல் விளம்பரம்: பா.ஜ.க.வுக்கான தடையை நீக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு: ஐகோர்ட் உத்தரவில் தலையிட விரும்பவில்லை என கருத்து
27 May 2024புதுடெல்லி, பா.ஜ.க.வின் தேர்தல் விளம்பரத்துக்கான தடையை நீக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு தெரிவித்த நிலையில், கொல்கத்தா ஐகோர்ட்டின் உத்தரவில் தலையிட விரும்பவில்லை என கூறி பா
-
பிரபல ஹாலிவுட் நடிகர் ஜானி வேக்டர் கொலை
27 May 2024வாஷிங்டன் : பிரபல ஹாலிவுட் நடிகர் ஜானி வேக்டர் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட திருடர்களால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
சென்னையில் நாளை முதல் வாக்கு எண்ணுபவர்களுக்கு பயிற்சி : மாவட்ட தேர்தல் அலுவலர் தகவல்
27 May 2024சென்னை : சென்னையில் வாக்கு எண்ணும் மையங்களில் மேற்பார்வையாளர்கள், நுண் பணியாளர்கள் என மொத்தம் 1,433 பேர் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபட உள்ளதாகவும், அவர்களுக்கான பயிற்சி
-
கொலை செய்யப்பட்ட ரவுடி தீபக் ராஜாவின் உடல் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அடக்கம்
27 May 2024நெல்லை : பாளையங்கோட்டையில் கொலை செய்யப்பட்ட ரவுடி தீபக் ராஜாவின் சடலம், ஒரு வாரத்துக்குப் பிறகு நேற்று காலை அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில் பலத்த போலீஸ்
-
4 நாட்களில் தென்மேற்கு பருவமழை உருவாகிறது : இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்
27 May 2024புதுடெல்லி : தென்மேற்கு பருவமழை கேரளாவில் 4 நாட்களில் உருவாகக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
வரத்து குறைவு எதிரொலி: தக்காளி விலை கிலோ 60 ரூபாய்க்கு விற்பனை
27 May 2024சென்னை : சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் வரத்து குறைவால், தக்காளி கிலோவுக்கு ரூ.60-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
-
தமிழகத்தில் வாக்குகள் எண்ணும் பணியில் 38,500 பேர்: தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்
27 May 2024சென்னை, தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணியில் நுண் பார்வையாளர்கள் 4,500 பேர் உட்பட 38,500க்கும் மேற்பட்டவர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளதாகவும், வா
-
பா.ஜனதாவின் வெற்றியை கொண்டாட தயாராகுங்கள் : நிர்வாகிகள் கூட்டத்தில் அண்ணாமலை பேச்சு
27 May 2024சென்னை : 3-வது முறையாக பா.ஜ.க. ஆட்சிக்கு வரவேண்டும் என்பது காலத்தின் கட்டாயம். பா.ஜ.க. மீது எந்தவித குறையும் இல்லை.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 27-05-2024.
27 May 2024 -
சிலி நாட்டில் 137 பேரை பலி கொண்ட காட்டுத்தீயை ஏற்படுத்திய வனத்துறை அதிகாரி கைது
27 May 2024சாண்டியாகோ : சிலி நாட்டில் 137 பேரை பலி கொண்ட காட்டுத்தீயை ஏற்படுத்திய வனத்துறை அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார்.
-
அமித்ஷா குறித்து சர்ச்சை பேச்சு: ராகுல் மீதான வழக்கில் ஜூன் 7-ல் விசாரணை
27 May 2024பெங்களூரு : மத்திய அமைச்சர் அமித்ஷா குறித்து அவதூறாக பேசியதாக ராகுல் காந்தி மீதான வழக்கில் விசாரணை ஜூன் 7-ம் தேதி நடைபெறவுள்ளது.
-
நாயாக மாறிய ஜப்பானை சேர்ந்தவர் நரியாக மாறவிருப்பம்
27 May 2024டோக்கியோ : ஜப்பானில் கடந்த வருடம் நாயாக மாறிய நபர் தற்போது நரியாக மாற வேண்டும் என தெரிவித்துள்ளார்.
-
புனே கார் விபத்து வழக்கு: சிறுவனின் ரத்த மாதிரியை மாற்றிய மருத்துவர்கள் கைது
27 May 2024புனே : புனேவில் மதுபோதையில் சிறுவன் ஓட்டிய கார் மோதி இருவர் உயிரிழந்த விவகாரத்தில், சிறுவனின் ரத்த மாதிரியை மாற்றிய வழக்கில் மருத்துவர்கள் இருவர் கைது செய்யப்பட்ட
-
82,479 பேர் விண்ணப்பம்: அரசுப்பள்ளி ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு தேதி விரைவில் அறிவிப்பு : பள்ளிக் கல்வித்துறை தகவல்
27 May 2024சென்னை : அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வில் பங்கேற்க 82,479 பேர் விண்ணப்பித்துள்ளதாக தெரிவித்துள்ள தமிழக பள்ளிக் கல்வித்துறை, கலந்தாய்வுக்கான
-
ராஜ்கோட் தீ விபத்தில் 33 பேர் பலி: பராமரிப்பு இல்லாத மையத்திற்கு எப்படி அனுமதி வழங்கினார்கள்? - நகராட்சிக்கு குஜராத் உயர் நீதிமன்றம் கண்டனம்
27 May 2024காந்திநகர் : ராஜ்கோட் விளையாட்டு மைய தீ விபத்து குறித்து தாமாக முன் வந்து விசாரணை செய்த குஜராத் உயர்நீதிமன்றம் ராஜ்கோட் நகராட்சிக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. 
-
ஜெயக்குமார் மரண வழக்கு விசாரணை: 30-க்கும் மேற்பட்டோருக்கு சி.பி.சி.ஐ.டி. போலீஸ் சம்மன்
27 May 2024நெல்லை : ஜெயக்குமார் மரண வழக்கு தொடர்பாக நண்பர்கள் உட்பட 30க்கும் மேற்பட்டோர் விசாரணைக்கு நேரில் ஆஜராக சி.பி.சி.ஐ.டி. போலிசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.
-
'நான் முதல்வன்' உள்ளிட்ட பல்வேறு திட்டங்களால் நாட்டிலேயே உயர்கல்வியில் சிறந்து விளங்கும் தமிழ்நாடு : தமிழக அரசு பெருமிதம்
27 May 2024சென்னை : நான் முதல்வன் திட்டம் உள்ளிட்ட எண்ணற்ற திட்டங்கள் திறம்பட செயல்படுத்தப்பட்டு வருவதால் நாட்டிலேயே உயர்கல்வியில் தமிழகம் சிறந்து விளங்குவதாக தமிழக அரசு பெருமிதம்
-
6 மாவட்டங்களில் புதிய மருத்துவ கல்லூரிகளை திறக்க வேண்டும்: அரசுக்கு ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்
27 May 2024சென்னை, 6 மாவட்டங்களில் புதிதாக மருத்துவ கல்லூரிகளை திறக்க போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தி உள்ளார்.
-
புதிய கல்விக் கொள்கைதான் புதிய இந்தியாவை உருவாக்கும் : துணைவேந்தர்கள் மாநாட்டில் கவர்னர் பேச்சு
27 May 2024உதகை : தமிழக பல்கலைக்கழகங்கள் மோசமான நிலையில், ஒருங்கிணைப்பு இல்லாமல் இருந்ததாக துணை வேந்தர்கள் மாநாட்டில் தெரிவித்த கவர்னர் ஆர்.என்.ரவி, புதிய கல்விக் கொள்கைதான் புதிய
-
புரட்டி போட்ட ரீமால் புயல்: வங்காள தேசத்தில் 2 பேர் உயிரிழப்பு : மின்கம்பங்கள், மரங்கள் சாய்ந்ததில் மின்சாரம் துண்டிப்பு
27 May 2024டாக்கா : புயல் காரணமாக மின்கம்பங்கள், மரங்கள் விழுந்ததில் சுமார் ஒரு கோடியே 50 லட்சம் பேர் மின்சாரம் இல்லாமல் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
-
கஞ்சா வழக்கு: சவுக்கு சங்கர் ஜாமின் மனு மீது விசாரணை ஒத்திவைப்பு
27 May 2024மதுரை : கஞ்சா வழக்கில் சவுக்கு சங்கரின் ஜாமின் மனுவை போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் மீண்டும் ஒத்திவைத்துள்ளது.
-
சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு புதிதாக காப்பீடு திட்டம் அறிமுகம் : தேவசம் போர்டு தகவல்
27 May 2024திருவனந்தபுரம் : சபரிமலைக்கு செல்லும் ஐயப்ப பக்தர்களுக்கு காப்பீடு திட்டம் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக தேவசம்போர்டு தெரிவித்துள்ளது.