எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, முதல்வர் ஜெயலலிதா விரைவில் பூரண குணமடைந்து வீடு திரும்ப வேண்டி தமிழகம் முழுவதும் மாநில அம்மா பேரவை சார்பில் 1 லட்சம் தீபவிளக்கேற்றி சிறப்பு பிரார்த்தனை நேற்று நடைபெற்றது. இதில் அமைச்சர்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஏராளமான அ.தி.மு.க.வினர் கலந்து கொண்டு மனமுருக பிரார்த்தனை செய்தனர்.
கூட்டுப்பிரார்த்தனை
முதல்வர் ஜெயலலிதா விரைவில் பூரண குணமடைந்து வீடுதிரும்ப வேண்டி மாநில அம்மா பேரவையின் சார்பில் தமிழகம் முழுவதும் கோவில்களில் லட்சார்ச்சனை, சர்வ மதத்தினர் பங்கேற்ற மாபெரும் கூட்டுப்பிரார்த்தனை, தமிழகம் முழுவதும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் பால்குடம் எடுத்து விஷேச பிரார்த்தனை, முருக பெருமானின் ஆறுபடை வீடுகளில் சிறப்பு யாகத்துடன் சண்முகா அர்ச்சனை, கோபூஜை, கோதானம் மற்றும் முதல்வர் ஜெயலலிதா பிறந்த மகம் நட்சத்திரத்தை முன்னிட்டு. நரசிம்மர், வராஹி அம்மன், பிரத்தியங்கிரா தேவி ஆகிய ஆலயங்களில் வேதவிற்பனர்கள், வேதபாராயணங்கள் முழங்க 108 ஹோம பொருட்களால் பல்வேறு சிறப்பு ஹோமங்கள் செய்து சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதனை தொடர்ந்து திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு கீழ்திருப்பதியிலிருந்து மேல் திருப்பதி வரை பாதயாத்திரையாக சென்று சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.
1 லட்சம் தீபவிளக்குகள்
இதன் தொடர்ச்சியாக தமிழகம் முழுவதும் உள்ள முருகப்பெருமான் மற்றும் பல்வேறு ஆலயங்களில் நேற்று மாநில அம்மா பேரவை சார்பில் 1 லட்சம் கார்த்திகை தீப விளக்குகள் ஏற்றி விஷேச வழிபாடு மற்றும் விஷேச பிரார்த்தனைகள் நடத்தப்பட்டது. அ.தி.மு.க. அமைப்பு ரீதியில் செயல்பட்டு வரும் 50 மாவட்டங்களில் இந்த சிறப்பு பிரார்த்தனைகள் மாவட்ட அம்மா பேரவை சார்பில் அந்தந்த மாவட்டங்களில் நடைபெற்றது. வடசென்னை வடக்கு மாவட்டத்தில் ஆர்.கே.நகர் தொகுதியிலுள்ள அருள்மிகு முருகன் திருக்கோவில், வடசென்னை தெற்கு மாவட்டத்தில் எழும்பூரில் செல்வ விநாயகர் கோவில், தென்சென்னை வடக்கு மாவட்டத்தில் புதுப்பேட்டை பாலமுருகன் கோவில், தென்சென்னை தெற்கு மாவட்டத்தில் வேளச்சேரி மருந்தீஸ்வரர் கோவில், காஞ்சிபுரம் கிழக்கு மாவட்டத்தில் அனகாபுத்தூர் சுப்ரமணியசுவாமி கோவில், காஞ்சிபுரம் மத்திய மாவட்டத்தில் மறைமலை நகர் முருகன் கோவில், காஞ்சிபுரம் மேற்கு மாவட்டத்தில் காஞ்சிபுரம் குமரக்கோட்டம் முருகன் கோவில், திருவள்ளுவர் மேற்கு மாவட்டத்தில் முருகன் கோவில், திருவள்ளுவர் கிழக்கு மாவட்டத்தில் தட்சிணாமூர்த்தி கோவில், வேலூர்; புறநகர் கிழக்கு மாவட்டத்தில் செல்வவிநாயகர் கோவில், வேலூர் புறநகர் மேற்கு மாவட்டத்தில் ஆம்பூர் ஞானமலை முருகன் கோவில், திருவண்ணாமலை வடக்கு மாவட்டத்தில் ஆரணி முருகன் கோவில், திருவண்ணாமலை தெற்கு மாவட்டத்தில் குறிஞ்சியாபுரம் ஆறுமுக பெருமாள் கோவில், கடலூர்; கிழக்கு மாவட்டத்தில் நெய்வேலி முருகன்; கோவில், கடலூர்; மேற்கு மாவட்டத்தில் மேலகடம்பூர் அமிர்தகணேஷர் கோவில், விழுப்புரம் வடக்கு மாவட்டத்தில் ராஜகுலம் சுப்பிரமணியக்கோவில்,
ஜெலகண்டேஸ்வரர் கோவில்
விழுப்புரம் தெற்கு மாவட்டத்தில் பெரியசேவலை முருகன் கோவில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் காசிநாயணபள்ளி முருகன் கோவில், தர்மபுரி மாவட்டத்தில் முருகன் கோவில், சேலம் மாநகர் மாவட்டத்தில் அம்மாபேட்டை சுப்பிரமணிய முருகன் கோவில், சேலம் புறநகர் மாவட்டத்தில் ஆத்தூர் கோட்டை முருகன் கோவில், நாமக்கல் மாவட்டத்தில் திருச்செங்கோடு ஆறுமுகசுவாமி கோவில், ஈரோடு மாநகர் மாவட்டத்தில் காசிமலை முருகன் கோவில், ஈரோடு புறநகர் மாவட்டத்தில் தவனகிரி முருகன் கோவில், திருப்பூர் மாநகர் மாவட்டத்தில் அனுப்பூர்பாளையம் ஜெலகண்டேஸ்வரர் கோவில், திருப்பூர் புறநகர் மாவட்டத்தில் மடத்துக்குளம் முருகன் கோவில், கோவை மாநகர் மாவட்டத்தில் மருதமலை முருகன் கோவில், கோவை புறநகர் மாவட்டத்தில் பொள்ளாச்சி முருகன்; கோவில், நீலகிரி மாவட்டத்தில் காத்துகுழி பாலமுருகன் கோவில், திருச்சி மாநகர் மாவட்டத்தில் பாலக்கரை முத்துமாரியம்மன் கோவில், திருச்சி புறநகர் மாவட்டத்தில் மணச்சநல்லூர் முருகன் கோவில், பெரம்பலூர் மாவட்டத்தில் வேப்பூர் முருகன் கோவில், அரியலூர் மாவட்டத்தில் அரியலூர் அருள்மிகு குறைதீர்க்கும் குமரன் கோவில், கரூர் மாவட்டத்தில் பாலமலை பாலசுப்பிரமணிய கோவில், தஞ்சை வடக்குமாவட்டத்தில் முருகன் கோவில், தஞ்சை தெற்கு மாவட்டத்தில் ஒரத்தநாடு காசி விஸ்வநாதர் கோவில், நாகப்பட்டினம் மாவட்டத்தில் சீர்காழி வைத்தீஸ்வரன் கோவில்,
குன்றக்குடி முருகன் கோவில்
திருவாரூர் மாவட்டத்தில் பரவக்கோட்டை தண்டாயுதபாணி கோவில், புதுக்கோட்டை மாவட்டத்தில் பாலதண்டாயுதபாணி கோவில், மதுரை மாநகர் மாவட்டத்தில் செல்லூர் பாலமுருகன் கோவில், மதுரை புறநகர் மாவட்டத்தில் பழமுதிர்ச்சோலை முருகன் கோவில், தேனி மாவட்டத்தில் கம்பம் வேலப்பர் கோவில், திண்டுக்கல் மாவட்டத்தில் குண்ணம்பட்டி சுப்பிரமணியசுவாமி கோவில், விருதுநகர் மாவட்டத்தில் ராஜபாளையம் சுப்பிரமணியசுவாமி கோவில், சிவகங்கை மாவட்டத்தில் குன்றகுடி முருகன் கோவில், ராமநாதபுரம் மாவட்டத்தில் முதுகுளத்தூர் கொடுமலூர் முருகன் கோவில், திருநெல்வேலி மாநகர் மாவட்டத்தில் சாலை குமாரசுவாமி கோவில், திருநெல்வேலி புறநகர் மாவட்டத்தில் வென்னிமலை முருகன் கோவில், தூத்துக்குடி மாவட்டத்தில் கோவில்பட்டி முருகன் கோவில், கன்னியாகுமரி மாவட்டத்தில் நாகராஜர் கோவில், ஆகிய இடங்களில் உள்ள திருக்கோவில்களில் இந்த விஷேச பிரார்த்தனைகளும்,வழிபாடுகளும் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை மாநில அம்மா பேரவை செயலாளரும், வருவாய் துறை அமைச்சருமான ஆர்.பி.உதயகுமார் தலைமையில் அம்மா பேரவை நிர்வாகிகள் செய்திருந்தனர். இதில் தலைமை கழக நிர்வாகிகள் அமைச்சர்கள், மாவட்ட கழக செயலாளர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் லட்சக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு தீபவிளக்கு ஏற்றி முதல்வர் ஜெயலலிதா பூரண உடல் நலம்பெற வேண்டி மனமுருக பிரார்த்தனை செய்தனர்.
பாதயாத்திரை
மதுரை புறநகர் மாவட்ட அம்மா பேரவை சார்பில் அழகர்கோவில் மலை மேல் உள்ள பழமுதிர்சோலை முருகன் கோவிலில் ஓம் என்ற எழுத்து வடிவில் 1008 கார்த்திகை தீபவிளக்குகள் ஏற்றபட்டு சிறப்பு வழிபாடுகளும், பிரார்த்தனைகளும் நடைபெற்றது. முன்னதாக 18ம் படி கருப்புச்சாமி கோவில் இருந்து மாநில அம்மா பேரவை செயலாளரும், வருவாய்த்துறை அமைச்சருமான ஆர்.பி.உதயகுமார் தலைமையில் அ.தி.மு.க.வினர் பாதயாத்திரையாக புறப்பட்டு நான்கு கிலோமீட்டா் தூரம் நடந்து சென்று பழமுதிர்சோலையை அடைந்து அங்குள்ள முருகன் பெருமான் கோவிலில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்து வழிபட்டனர். முதல்வர் ஜெயலலிதா பெயரில் சிறப்பு அர்ச்சனையும், பூஜைகளும் நடத்தப்பட்டன.
1008 தீப விளக்குகள்
இதனை தொடர்ந்து ஓம் என்ற எழுத்து வடிவில் 1008 கார்த்திகை தீப விளக்குகளை மாநிலஅம்மா பேரவை செயலாளரும், வருவாய்த்துறை அமைச்சருமான ஆர்.பி.உதயகுமார், தூத்துக்குடி மாவட்ட அம்மா பேரவை செயலாளரும், செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சருமான கடம்பூர் ராஜூ, திருவண்ணாமலை வடக்கு மாவட்ட அம்மா பேரவை செயலாளரும், இந்து அறநிலைத்துறை அமைச்சருமான சேவூர் ராமச்சந்திரன் , மதுரை புறநகர் மாவட்ட செயலாளர் வி.வி.ராஜன்செல்லப்பா ஆகியோர் 1008 தீபம் ஏற்றி முதல்வர் ஜெயலலிதா விரைவில் பூரண குணமடைய வேண்டி சிறப்பு பூஜை செய்தனர். இதனை தொடர்ந்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
இதில் மாவட்ட அம்மா பேரவை செயலாளர் கே.தமிழரசன் சட்டமன்ற உறுப்பினர்கள் ஏ.கே.போஸ், பா.நீதிபதி, கே.மாணிக்கம், பெரியபுள்ளான் உள்ளிட்ட ஏராளமான அ.தி.மு.க.வினர் கலந்து கொண்டு மனமுருக பிரார்த்தனை செய்தனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஆனியன் ரிங்ஸ்1 day 10 hours ago |
உருளைக்கிழங்கு ப்ரை5 days 10 hours ago |
க்ரிஸ்பி கார்ன் ஸ்நாக்ஸ்1 week 1 day ago |
-
காவல் நிலையத்திற்குள் புகுந்து காவலர்களை தாக்கிய ராணுவ வீரர்கள் 16 பேர் மீது வழக்கு
30 May 2024ஜம்மு, ஜம்முவில் காவல் நிலையத்திற்குள் புகுந்து காவலர்களை தாக்கியதாக ராணுவ வீரர்கள் 16 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 30-05-2024.
30 May 2024 -
திருமயம் கோட்டை பைரவர்: கோவிலில் அமித்ஷா வழிபாடு
30 May 2024புதுக்கோட்டை, திருமயம் கோட்டை பைரவர் கோயிலில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வழிபாடு நடத்தினார்.
-
வெப்ப அலை: வரும் 8-ம் தேதி வரை பீகாரில் பள்ளிகளுக்கு விடுமுறை
30 May 2024பாட்னா, வெப்ப அலையின் தாக்கம் காரணமாக பீகாரில் ஜூன் 8-ம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து அம்மாநில முதல்வர் நிதிஷ் குமார் உத்தரவிட்டுள்ளார்.
-
வரும் 13, 14-ம் தேதிகளில் 5 பேர் கொண்ட நிபுணர் குழு முல்லை பெரியாறு அணையை பார்வையிடுகிறது
30 May 2024சென்னை, முல்லை பெரியாறு அணையை வரும் 13 மற்றும் 14-ம் தேதிகளில் 5 பேர் கொண்ட நிபுணர் குழு நேரில் பார்வையிட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
-
2024 பார்லி. தேர்தலில் 751 கட்சிகள் போட்டி: ஆய்வில் தகவல்
30 May 2024புதுடெல்லி, நடப்பு 2024 பாராளுமன்ற தேர்தலில் 751 கட்சிகள் போட்டியிடுவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
-
காசா - எகிப்து எல்லையை கைப்பற்றியது இஸ்ரேல் ராணுவம்
30 May 2024டெல்அவிவ், காசா – எகிப்து எல்லைப் பகுதி முழுவதையும் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவந்திருப்பதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது.
-
தங்கம் விலை சரிவு
30 May 2024சென்னை, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 360 குறைந்து ரூ. 53,840 -க்கு விற்பனையானது.
-
அக்னிபான் ராக்கெட் விண்ணில் ஏவும் முயற்சி வெற்றி: இஸ்ரோ
30 May 2024சென்னை, சென்னையை சேர்ந்த ஸ்டார்ட் அப் நிறுவனத்தின் அக்னிபான் என்ற ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.
-
நாட்டு மக்கள் முன்னேற்றத்திற்காக பிரதமர் மோடி தவம் செய்கிறார்: தமிழிசை சவுந்தரராஜன் அறிக்கை
30 May 2024சென்னை, நாட்டு மக்களின் முன்னேற்றத்திற்காக பிரதமர் மோடி தவம் மேற்கொள்ளவிருப்பதாக முன்னாள் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
-
சமூக விரோதிகளை இரும்புக்கரம் கொண்டு அரசு ஒடுக்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
30 May 2024சென்னை, தமிழகத்தில் சமூக விரோதிகளை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அ.தி.மு.க.
-
கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கியது: 12 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்
30 May 2024திருவனந்தபுரம், கேரளாவில் நேற்று தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
கஞ்சா வழக்கு: ஜாமீன் மனுவை வாபஸ் பெற்றார் சவுக்கு சங்கர்
30 May 2024மதுரை, கஞ்சா வைத்திருந்ததாக கைது செய்யப்பட்ட வழக்கில் தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்று தாக்கல் செய்த மனுவை சவுக்கு சங்கர் நேற்று வாபஸ் பெற்றுக் கொண்டார்.
-
மாணவர்களின் கற்றலை எளிமையாக்க 20,332 அரசுப் பள்ளிகளில் அதிவேக இணையதள வசதி: தமிழக அரசு
30 May 2024சென்னை, மாணவர்களின் கற்றலை எளிமையாக்கும் பொருட்டு மாநிலம் முழுவதும் 20,332 அரசுப் பள்ளிகளில் அதிவேக இணையவசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும், எஞ்சியுள்ள 17,221 அரசு பள்ளிகளி
-
அமெரிக்க அதிபர் தேர்தல்: டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றால், எலான்மஸ்க்குக்கு ஆலோசகர் பதவி
30 May 2024வாஷிங்டன், அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றால், ஆலோசகர் பதவியை எலான் மஸ்குக்கு வழங்குவது குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளிய
-
ஊழலில் இரட்டை முனைவர் பட்டம் பெற்றுள்ளது காங்கிரஸ்: பிரதமர் மோடி கடும் தாக்கு
30 May 2024சண்டிகர், ஊழலில் காங்கிரஸ் இரட்டை முனைவர் பட்டம் பெற்றுள்ளது என்று நேற்று பஞ்சாப் மாநிலம் ஹோஷி யார்பூரில் இறுதிக்கட்ட பிரச்சார பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார்.&
-
தேர்தலில் தோற்றால் குடும்பத்துடன் அமெரிக்காவில் குடிபுக திட்டமா? பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனாக் மறுப்பு
30 May 2024லண்டன், நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் தனது கட்சி தோல்வியுற்றால், அமெரிக்காவிற்கு குடும்பத்துடன் குடிபுக திட்டமிட்டுள்ளதாக வெளியான தகவலை பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனாக்
-
த.மா.கா. கட்சியில் இருந்து ஈரோடு கவுதமன் விலகல்
30 May 2024ஈரோடு, த.மா.கா.வின் மாநில தேர்தல் முறையீட்டுக் குழு உறுப்பினர் மற்றும் நாமக்கல் மாவட்டப் பொறுப்பாளராக இருந்த ஈரோடு கவுதமன், த.மா.கா.வில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளா
-
பாலஸ்தீன தனிநாடுக்கு ஆதரவு: அரபு மாநாட்டில் ஜின்பிங் பேச்சு
30 May 2024பெய்ஜிங், தனி பாலஸ்தீன நாடு உருவாக்கத்திற்கு தன்னுடைய ஆதரவு உண்டு என்று சீன அதிபர் ஜி ஜின்பிங் தெரிவித்துள்ளார்.
-
சாலையில் தர்ணா போராட்டம்: மெகபூபா முப்தி மீது வழக்கு
30 May 2024ஸ்ரீநகர், ரஜோரி தொகுதியில் கடந்த 25-ம் தேதி சாலையில் தர்ணா போராட்டம் நடத்தியது தொடர்பாக மெகபூபா முப்தி மீது, தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக அனந்த்நாக் போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.
-
பிரதமர் மோடியை வரவேற்க குமரிக்கு யாரும் வர வேண்டாம்: பா.ஜ.க. தலைமை அறிவுறுத்தல்
30 May 2024கன்னியாகுமரி, கன்னியாகுமரிக்கு வருகை தரும் பிரதமர் மோடியை வரவேற்க கட்சி நிர்வாகிகள் யாரும் வர வேண்டாம் என்று தமிழக பா.ஜ.கவினருக்கு டெல்லி பாஜக தலைமை உத்தரவு பிறப்பித்து
-
தங்கம் கடத்தல் வழக்கில் டெல்லியில் சசி தரூரின் முன்னாள் உதவியாளர் கைது
30 May 2024புது டெல்லி, டெல்லி விமான நிலையத்தில் தங்கம் கடத்தல் வழக்கில் காங்கிரஸ் எம்.பி. சசி தரூரின் முன்னாள் உதவியாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
-
மருத்துவ காப்பீடு கோரிக்கைகளுக்கு 3 மணி நேரத்தில் தீர்வு: ஐ.ஆர்.டி.ஏ.ஐ
30 May 2024மும்பை, மருத்துவ காப்பீடு செய்தவர்களின் கோரிக்கைகளுக்கு ஒரு மணி நேரத்திற்குள் அனுமதிப்பதுடன், அவர்கள் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்வதற்கு 3 மணி நேரத்திற்கு மு
-
தியானத்துக்காக பிரதமரின் வருகை தனிப்பட்ட நிகழ்வு: குமரி மாவட்ட கலெக்டர் விளக்கம்
30 May 2024கன்னியாகுமரி, தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால், பிரதமரின் தியான நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்கக்கூடாது என கன்னியாகுமரி மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் தி.மு.க.
-
மதுபான முறைகேடு வழக்கு: டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் ஜாமீன் கோரி மனு தாக்கல்
30 May 2024புது டெல்லி, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஜாமீன் கோரி டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.