எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை: போலி முத்திரைத் தாள்களை ஒழிக்க, மின்னணு ஸ்டாம்ப் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். மேலும், நீதிமன்றங்களில் புதிய தொழில் நுட்பத்தை புகுத்தி அவற்றின் செயல்பாட்டை விரைவுபடுத்தவும், அதன் மூலம் பொதுமக்களுக்கு உரிய பயன்கள் விரைவாக சென்றடையவும் அரசு வழிவகுத்துள்ளதாக அவர் பெருமிதம் தெரிவித்தார்.
ஆன்லைனில் செலுத்தும்...
தமிழகத்தில் வழக்கு தொடர்வதற்கான கட்டணங்களை ஆன்லைனில் செலுத்தும் இ-ஸ்டாம்பிங் முறை தமிழகத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தை சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தொடங்கி வைத்தனர். அதைத் தொடர்ந்து இ-ஸ்டாபிங் முறையில் கட்டணத்தை செலுத்தும் கவுன்டர்களை திறந்துவைத்து முதல் 5 பேருக்கான ரசீதை முதல்வர் பழனிசாமி வழங்கினார்.
மின்னணு ஆளுமை
அப்போது முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், நீதித்துறையில் மின்னணு ஆளுமை முறைகளை புகுத்துவதன் அவசியத்தையும், அதனால் மக்களுக்கு ஏற்படும் நன்மைகளை கருத்தில் கொண்டும், இத்துறையில் முழுமையாக மின்னணு ஆளுமை முறைகளைக் கொண்டு வர ஏதுவாக, நீதிமன்றங்களில் நீதிசார்ந்த மின்னணு முத்திரைத்தாள் முறையினை புகுத்திட உயர்நீதிமன்றத்தின் கோரிக்கையை ஏற்று, தமிழக அரசால் நேற்று முதல் இம்முறை அறிமுகப்படுத்தப்பட்டது.
பெருமகிழ்ச்சி...
போலி முத்திரைத்தாள்களை ஒழிக்கவும், முத்திரைத்தாள்கள் பயன்பாட்டில் பாதுகாப்பினை அதிகரிக்கவும் தமிழக அரசு தீவிர முயற்சி எடுத்து வருகிறது. பதிவுத்துறையில் சென்னை மண்டலத்தில் பயன்பாட்டில் உள்ள மின்னணு நீதிசாரா முத்திரைத்தாள் முறையை, அம்மாவின் அரசு, தமிழகம் முழுவதும் விரிவாக்கம் செய்ய நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. மேலும் நீதித்துறையில் பயன்படுத்தப்படும் நீதிசார்ந்த முத்திரைத்தாள்கள் பயன்பாட்டிலும் பாதுகாப்பான இம்முறையை கொண்டுவருவதில் நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.
இணையம் மூலம்...
இத்திட்டத்தை செயல்படுத்த, திருவாளர்கள் ஸ்டாக் ஹோல்டிங் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா லிமிடெட் என்ற மத்திய அரசு நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இந்நிறுவனம் ஏற்கனவே உச்சநீதிமன்றத்திலும், டெல்லி, சத்தீஸ்கர், பஞ்சாப், ராஜஸ்தான், உத்தர பிரதேசம் மற்றும் இமாச்சல பிரதேசம் மாநில உயர்நீதிமன்றங்களிலும் இம்முறையை அறிமுகப்படுத்தி, செயல்படுத்தி வருகிறது. இந்த நீதிசார்ந்த மின்னணு முத்திரையை பொதுமக்கள் தாங்களாகவே இணையம் மூலம் உருவாக்கி பயன்படுத்தலாம். கணினி மற்றும் இணைய இணைப்பு இல்லாதவர்கள் மேற்கண்ட நிறுவனத்தால் அமைக்கப்பட்ட மையங்களில் அல்லது நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்ட வங்கிகளில் உரிய விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து தொகையினை செலுத்தி, நீதிசார்ந்த மின்னணு முத்திரைகளை பெற்றுக் கொள்ளலாம்.
விரைவில் அனைத்து....
இம்முறை, முதற்கட்டமாக சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையிலும், அடுத்த கட்டமாக அனைத்து முதன்மை மாவட்ட நீதிமன்றங்களிலும் செயல்படுத்தப்பட உள்ளது. தமிழ்நாடு அரசால் இயக்கப்படும் இ-சேவை மையங்கள் மூலமாகவும் இம்முறையை விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.
நீதிசார்ந்த மின்னணு முத்திரைத்தாள்களில் தனிப்பட்ட இரசீது எண் அச்சிடப்பட்டிருக்கும். நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யும் பிரிவில் இந்த முத்திரைத்தாளை ஒப்படைத்தால், அதன் உண்மைத் தன்மையை சரிபார்ப்பது மட்டுமின்றி, அதனை மீளவும் தவறான முறையில் பயன்படுத்தா வண்ணம் பாதுகாப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளது. மேற்கண்டவாறு நீதிமன்றங்களில் புதிய தொழில் நுட்பத்தை புகுத்தி அவற்றின் செயல்பாட்டை விரைவுபடுத்தவும், அதன் மூலம் பொதுமக்களுக்கு உரிய பயன்கள் விரைவாக சென்றடையவும் தமிழ்நாடு அரசு ஆவன செய்துள்ளது. இதுமட்டுமன்றி, எண்ணில்லா நலத்திட்டங்கள் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகளை இந்த அரசு நீதித்துறைக்கு வழங்கியுள்ளது.
பணியிடங்கள்...
வழக்குரைஞர்களின் நலனைக் கருத்தில் கொண்டு பணியில் இருக்கும்போதே இறக்கும் வழக்குரைஞர்களின் வாரிசுதாரர்களுக்கு தற்போது வழங்கப்பட்டு வந்த நிதியுதவி 5 லட்சத்து 25 ஆயிரம் ரூபாயிலிருந்து, 7 லட்சம் ரூபாயாக உயர்த்தியும், தமிழ்நாடு வழக்குரைஞர்கள் நல நிதிக்கு ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வந்த நிதியுதவி 4 கோடி ரூபாயிலிருந்து 8 கோடி ரூபாயாக உயர்த்தியும் அரசால் ஆணைகள் வெளியிடப்பட்டுள்ளன. மாநிலத்தின் பல்வேறு நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைவில் முடிவுக்கு கொண்டுவர ஏதுவாக கடந்த ஓராண்டில் பல்வேறு பதவிகளுக்கு 1,188 பணியிடங்கள் தமிழக அரசால் உருவாக்கப்பட்டுள்ளன.
ரூ.1 கோடியே 45 லட்சம்...
நீதித்துறையில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்திடும் வண்ணம், மாநிலத்தின் பல்வேறு இடங்களில், கடந்த ஆண்டில் மட்டும் புதிதாக 149 நீதிமன்றங்களை உருவாக்க அரசாணைகள் வெளியிடப்பட்டுள்ளன. மேலும், நீதிபதிகளுக்கான குடியிருப்புகள் கட்டுதல், நீதிமன்றக் கட்டடங்களை பழுது பார்த்தல், இதர உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துதல் போன்ற பணிகளுக்காக 92 கோடி ரூபாய் நிதி ஒப்பளிப்பு செய்யப்பட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தில் சூரிய மின்சக்திக்கான உபகரணங்களை நிறுவுவதற்கு 1 கோடியே 42 லட்சம் ரூபாய் நிதி ஒப்பளிப்பு செய்யப்பட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்ற பாரம்பரிய கட்டிடத்தின் 125ஆம் ஆண்டு விழாவினை கொண்டாடுவதற்கு தமிழ்நாடு அரசால் ஒரு கோடியே 45 லட்சம் ரூபாய் நிதி வழங்கப்பட்டது. நிலுவை வழக்குகளை முடிவுக்கு கொண்டுவர 149 நீதிமன்றம் அமைக்க அரசாணை பிறப்பிக்கப் பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். நீதித்துறைக்கு தமிழக அரசு முழு ஒத்துழைப்பை வழங்கி வருவதாக முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்.
8-வது மாநிலம்
இ-ஸ்டாம்பிங் திட்டத்தை அறிமுகப்படுத்தும் 8-வது மாநிலம், தமிழகம் ஆகும். இதன் மூலம் வழக்குக்கான கட்டணத்தை மின்னணு முறையில் பொதுமக்கள் செலுத்த வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதுவரை வழக்கு தொடர்வதற்கான கட்டணம், ஸ்டாம்ப், பத்திரம் மூலமாகவே பெறப்பட்டு வந்தது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஆனியன் ரிங்ஸ்1 day 10 hours ago |
உருளைக்கிழங்கு ப்ரை5 days 10 hours ago |
க்ரிஸ்பி கார்ன் ஸ்நாக்ஸ்1 week 1 day ago |
-
காவல் நிலையத்திற்குள் புகுந்து காவலர்களை தாக்கிய ராணுவ வீரர்கள் 16 பேர் மீது வழக்கு
30 May 2024ஜம்மு, ஜம்முவில் காவல் நிலையத்திற்குள் புகுந்து காவலர்களை தாக்கியதாக ராணுவ வீரர்கள் 16 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 30-05-2024.
30 May 2024 -
திருமயம் கோட்டை பைரவர்: கோவிலில் அமித்ஷா வழிபாடு
30 May 2024புதுக்கோட்டை, திருமயம் கோட்டை பைரவர் கோயிலில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வழிபாடு நடத்தினார்.
-
வெப்ப அலை: வரும் 8-ம் தேதி வரை பீகாரில் பள்ளிகளுக்கு விடுமுறை
30 May 2024பாட்னா, வெப்ப அலையின் தாக்கம் காரணமாக பீகாரில் ஜூன் 8-ம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து அம்மாநில முதல்வர் நிதிஷ் குமார் உத்தரவிட்டுள்ளார்.
-
வரும் 13, 14-ம் தேதிகளில் 5 பேர் கொண்ட நிபுணர் குழு முல்லை பெரியாறு அணையை பார்வையிடுகிறது
30 May 2024சென்னை, முல்லை பெரியாறு அணையை வரும் 13 மற்றும் 14-ம் தேதிகளில் 5 பேர் கொண்ட நிபுணர் குழு நேரில் பார்வையிட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
-
2024 பார்லி. தேர்தலில் 751 கட்சிகள் போட்டி: ஆய்வில் தகவல்
30 May 2024புதுடெல்லி, நடப்பு 2024 பாராளுமன்ற தேர்தலில் 751 கட்சிகள் போட்டியிடுவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
-
காசா - எகிப்து எல்லையை கைப்பற்றியது இஸ்ரேல் ராணுவம்
30 May 2024டெல்அவிவ், காசா – எகிப்து எல்லைப் பகுதி முழுவதையும் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவந்திருப்பதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது.
-
தங்கம் விலை சரிவு
30 May 2024சென்னை, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 360 குறைந்து ரூ. 53,840 -க்கு விற்பனையானது.
-
அக்னிபான் ராக்கெட் விண்ணில் ஏவும் முயற்சி வெற்றி: இஸ்ரோ
30 May 2024சென்னை, சென்னையை சேர்ந்த ஸ்டார்ட் அப் நிறுவனத்தின் அக்னிபான் என்ற ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.
-
நாட்டு மக்கள் முன்னேற்றத்திற்காக பிரதமர் மோடி தவம் செய்கிறார்: தமிழிசை சவுந்தரராஜன் அறிக்கை
30 May 2024சென்னை, நாட்டு மக்களின் முன்னேற்றத்திற்காக பிரதமர் மோடி தவம் மேற்கொள்ளவிருப்பதாக முன்னாள் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
-
சமூக விரோதிகளை இரும்புக்கரம் கொண்டு அரசு ஒடுக்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
30 May 2024சென்னை, தமிழகத்தில் சமூக விரோதிகளை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அ.தி.மு.க.
-
கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கியது: 12 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்
30 May 2024திருவனந்தபுரம், கேரளாவில் நேற்று தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
கஞ்சா வழக்கு: ஜாமீன் மனுவை வாபஸ் பெற்றார் சவுக்கு சங்கர்
30 May 2024மதுரை, கஞ்சா வைத்திருந்ததாக கைது செய்யப்பட்ட வழக்கில் தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்று தாக்கல் செய்த மனுவை சவுக்கு சங்கர் நேற்று வாபஸ் பெற்றுக் கொண்டார்.
-
மாணவர்களின் கற்றலை எளிமையாக்க 20,332 அரசுப் பள்ளிகளில் அதிவேக இணையதள வசதி: தமிழக அரசு
30 May 2024சென்னை, மாணவர்களின் கற்றலை எளிமையாக்கும் பொருட்டு மாநிலம் முழுவதும் 20,332 அரசுப் பள்ளிகளில் அதிவேக இணையவசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும், எஞ்சியுள்ள 17,221 அரசு பள்ளிகளி
-
அமெரிக்க அதிபர் தேர்தல்: டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றால், எலான்மஸ்க்குக்கு ஆலோசகர் பதவி
30 May 2024வாஷிங்டன், அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றால், ஆலோசகர் பதவியை எலான் மஸ்குக்கு வழங்குவது குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளிய
-
ஊழலில் இரட்டை முனைவர் பட்டம் பெற்றுள்ளது காங்கிரஸ்: பிரதமர் மோடி கடும் தாக்கு
30 May 2024சண்டிகர், ஊழலில் காங்கிரஸ் இரட்டை முனைவர் பட்டம் பெற்றுள்ளது என்று நேற்று பஞ்சாப் மாநிலம் ஹோஷி யார்பூரில் இறுதிக்கட்ட பிரச்சார பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார்.&
-
தேர்தலில் தோற்றால் குடும்பத்துடன் அமெரிக்காவில் குடிபுக திட்டமா? பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனாக் மறுப்பு
30 May 2024லண்டன், நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் தனது கட்சி தோல்வியுற்றால், அமெரிக்காவிற்கு குடும்பத்துடன் குடிபுக திட்டமிட்டுள்ளதாக வெளியான தகவலை பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனாக்
-
பாலஸ்தீன தனிநாடுக்கு ஆதரவு: அரபு மாநாட்டில் ஜின்பிங் பேச்சு
30 May 2024பெய்ஜிங், தனி பாலஸ்தீன நாடு உருவாக்கத்திற்கு தன்னுடைய ஆதரவு உண்டு என்று சீன அதிபர் ஜி ஜின்பிங் தெரிவித்துள்ளார்.
-
த.மா.கா. கட்சியில் இருந்து ஈரோடு கவுதமன் விலகல்
30 May 2024ஈரோடு, த.மா.கா.வின் மாநில தேர்தல் முறையீட்டுக் குழு உறுப்பினர் மற்றும் நாமக்கல் மாவட்டப் பொறுப்பாளராக இருந்த ஈரோடு கவுதமன், த.மா.கா.வில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளா
-
சாலையில் தர்ணா போராட்டம்: மெகபூபா முப்தி மீது வழக்கு
30 May 2024ஸ்ரீநகர், ரஜோரி தொகுதியில் கடந்த 25-ம் தேதி சாலையில் தர்ணா போராட்டம் நடத்தியது தொடர்பாக மெகபூபா முப்தி மீது, தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக அனந்த்நாக் போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.
-
பிரதமர் மோடியை வரவேற்க குமரிக்கு யாரும் வர வேண்டாம்: பா.ஜ.க. தலைமை அறிவுறுத்தல்
30 May 2024கன்னியாகுமரி, கன்னியாகுமரிக்கு வருகை தரும் பிரதமர் மோடியை வரவேற்க கட்சி நிர்வாகிகள் யாரும் வர வேண்டாம் என்று தமிழக பா.ஜ.கவினருக்கு டெல்லி பாஜக தலைமை உத்தரவு பிறப்பித்து
-
தங்கம் கடத்தல் வழக்கில் டெல்லியில் சசி தரூரின் முன்னாள் உதவியாளர் கைது
30 May 2024புது டெல்லி, டெல்லி விமான நிலையத்தில் தங்கம் கடத்தல் வழக்கில் காங்கிரஸ் எம்.பி. சசி தரூரின் முன்னாள் உதவியாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
-
மருத்துவ காப்பீடு கோரிக்கைகளுக்கு 3 மணி நேரத்தில் தீர்வு: ஐ.ஆர்.டி.ஏ.ஐ
30 May 2024மும்பை, மருத்துவ காப்பீடு செய்தவர்களின் கோரிக்கைகளுக்கு ஒரு மணி நேரத்திற்குள் அனுமதிப்பதுடன், அவர்கள் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்வதற்கு 3 மணி நேரத்திற்கு மு
-
தியானத்துக்காக பிரதமரின் வருகை தனிப்பட்ட நிகழ்வு: குமரி மாவட்ட கலெக்டர் விளக்கம்
30 May 2024கன்னியாகுமரி, தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால், பிரதமரின் தியான நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்கக்கூடாது என கன்னியாகுமரி மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் தி.மு.க.
-
மதுபான முறைகேடு வழக்கு: டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் ஜாமீன் கோரி மனு தாக்கல்
30 May 2024புது டெல்லி, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஜாமீன் கோரி டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.