எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புது டெல்லி : 12 வயதுக்குட்பட்ட சிறுமிகளை பலாத்காரம் செய்பவர்களுக்கு அதிகபட்சமாக தூக்கு தண்டனை விதிக்கும் கிரிமினல் திருத்தச் சட்டம் பாராளுமன்ற மக்களவையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மசோதா ஜனாதிபதி ஒப்புதலுக்குப்பின் சட்டம் அமலாகும்.
கத்துவா, உன்னாவ் பாலியல் வன்கொடுமை சம்பவங்களுக்கு பிறகு பாலியல் குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனையாக மரண தண்டனை விதிக்க சட்டம் இயற்ற வேண்டும் என கோரிக்கைகள் வலுத்தது. இதனை அடுத்து, பாலியல் வன்கொடுமையிலிருந்து சிறார்களை பாதுகாக்கும் சட்டத்தில் (போக்ஸோ) திருத்தம் செய்யும் அவசர சட்டத்துக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்ததை அடுத்து இந்த அவசர சட்டம் கடந்த ஏப்ரல் 22-ம் தேதி அமலுக்கு வந்தது. இந்த அவசர சட்டத்திற்கு பதிலாக நிரந்தர சட்டம் கொண்டு வரும் பணியில் மத்திய அரசு ஈடுபட்டு வந்தது. இந்த நிரந்தர சட்ட மசோதாவுக்கு பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை கடந்த வாரம் ஒப்புதல் அளித்தது.
இந்நிலையில், பாராளுமன்ற மக்களவையில் நேற்று இந்த சட்ட மசோதாவை உள்துறை இணை அமைச்சர் கிரண் ரெஜிஜூ தாக்கல் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-
கடுமையான தண்டனை...
16 வயதுக்குட்பட்ட சிறுமியை கூட்டு பலாத்காரம் செய்த சம்பவமும், 12 வயதுக்குட்பட்ட சிறுமியை பலாத்காரம் செய்த சம்பவமும் ஒட்டுமொத்த நாட்டுமக்களின் மனசாட்சியை உலுக்கி விட்டது. இதையடுத்து, 16 வயதுக்குட்பட்ட மற்றும் 12 வயதுக்கு கீழ் உள்ள சிறுமிகளை பலாத்காரம் மற்றும் கூட்டு பலாத்காரம் செய்பவர்களுக்குக் கடுமையான தண்டனை விதிக்கும் சட்டம் தேவைப்பட்டது. நாட்டில் சிறுமிகளுக்கு எதிராகக் கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்து வரும் வன்முறைகளும், காட்டுமிராண்டித்தனமான சம்பவங்களும் இந்தச் சட்டத்தின் தேவையை அதிகரித்துள்ளன. இதுபோன்ற கொடிய குற்றங்களில் ஈட்டுபவர்களைத் தண்டிக்க கடுமையான சட்டமும், உடனடியாக கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கை சமூகத்தில் மக்களிடத்தில் வலுத்தது.
மசோதா தாக்கல்...
இதன்படி 12, 16 வயதுக்குட்பட்ட சிறுமிகளை பலாத்காரம், கூட்டு பலாத்காரம் செய்பவர்களை கடுமையாக தண்டிக்கும் சட்ட மசோதா தாக்கல் செய்யப்படுகிறது. 12 வயதுக்குட்பட்ட சிறுமிகளை பலாத்காரம் செய்பவர்களுக்கு அதிகபட்சமாக மரண தண்டனை விதிக்கலாம். பெண்களைப் பலாத்காரம் செய்தால் விதிக்கப்படும் குறைந்தபட்ச தண்டனை 7 ஆண்டுகளில் இருந்து 10 ஆண்டுகளாக அதிகரிக்கப்படுகிறது, குற்றத்தின் அடிப்படையில் வாழ்நாள் சிறை தண்டனையாகவும் விதிக்கப்படும். 16 வயதுக்குட்பட்ட சிறுமிகளை பலாத்காரம் செய்தால் குறைந்தபட்ச தண்டனை 10 ஆண்டுகளில் இருந்து 20 ஆண்டுகளாக உயர்த்தப்படுகிறது, குற்றத்தின் அடிப்படையில் வாழ்நாள் சிறையாகவும் மாற்றப்படும். இதன்படி குற்றவாளி சாகும் வரை சிறையில் இருக்க நேரிடும். 16 வயதுக்குட்பட்ட சிறுமிகளை கூட்டு பலாத்காரம் செய்யும் குற்றவாளிகளுக்கு வாழ்நாள் முழுவதும் சிறை தண்டனை விதிக்கலாம்.
முன்ஜாமின் இல்லை...
12 வயதுக்குட்பட்ட சிறுமிகளை பலாத்காரம் செய்யும் குற்றவாளிக்குக் குறைந்தபட்ச தண்டனை 20 ஆண்டுகள் சிறையும், அதிகபட்சமாக வாழ்நாள் சிறை அல்லது தூக்கு தண்டனை விதிக்கலாம். 12 வயதுக்குட்பட்ட சிறுமியை கூட்டுப்பலாத்காரம் செய்தால், குற்றவாளிகளை வாழ்நாள் முழுவதும் சிறையில் அடைக்கலாம். இந்த மசோதாவில் சிறுமிகள் பலாத்காரம் தொடர்பாக வழக்குகள் அனைத்தும் 2 மாதங்களுக்குள் விசாரணை நடத்தி முடித்து, நீதிமன்றத்தால், தண்டனை அறிவிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறது. அதே போல மேல்முறையீட்டுக்கு வழக்கு சென்றால், அதிகபட்சமாக 6 மாதங்களில் வழக்குகள் நடத்தி முடிக்கப்பட்டுத் தீர்ப்பு வழங்கப்பட வேண்டும். 16 வயதுக்குட்பட்ட சிறுமிகளை பலாத்காரம் அல்லது கூட்டுப்பலாத்காரம் செய்ததாக எழும் குற்றச்சாட்டின் கீழ் எவருக்கும் முன்ஜாமின் வழங்கப்படாது. இவ்வாறு கிரண் ரிஜ்ஜூ தெரிவித்தார்.
மாநிலங்களவையிலும் இந்த சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்ட பின்னர், ஜனாதிபதி ஒப்புதலுக்கு பின்னர் இந்த நிரந்தர சட்டம் அமலாகும்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஆனியன் ரிங்ஸ்1 day 10 hours ago |
உருளைக்கிழங்கு ப்ரை5 days 10 hours ago |
க்ரிஸ்பி கார்ன் ஸ்நாக்ஸ்1 week 1 day ago |
-
காவல் நிலையத்திற்குள் புகுந்து காவலர்களை தாக்கிய ராணுவ வீரர்கள் 16 பேர் மீது வழக்கு
30 May 2024ஜம்மு, ஜம்முவில் காவல் நிலையத்திற்குள் புகுந்து காவலர்களை தாக்கியதாக ராணுவ வீரர்கள் 16 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
-
மாணவர்களின் கற்றலை எளிமையாக்க 20,332 அரசுப் பள்ளிகளில் அதிவேக இணையதள வசதி: தமிழக அரசு
30 May 2024சென்னை, மாணவர்களின் கற்றலை எளிமையாக்கும் பொருட்டு மாநிலம் முழுவதும் 20,332 அரசுப் பள்ளிகளில் அதிவேக இணையவசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும், எஞ்சியுள்ள 17,221 அரசு பள்ளிகளி
-
வெப்ப அலை: வரும் 8-ம் தேதி வரை பீகாரில் பள்ளிகளுக்கு விடுமுறை
30 May 2024பாட்னா, வெப்ப அலையின் தாக்கம் காரணமாக பீகாரில் ஜூன் 8-ம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து அம்மாநில முதல்வர் நிதிஷ் குமார் உத்தரவிட்டுள்ளார்.
-
காசா - எகிப்து எல்லையை கைப்பற்றியது இஸ்ரேல் ராணுவம்
30 May 2024டெல்அவிவ், காசா – எகிப்து எல்லைப் பகுதி முழுவதையும் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவந்திருப்பதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது.
-
திருமயம் கோட்டை பைரவர்: கோவிலில் அமித்ஷா வழிபாடு
30 May 2024புதுக்கோட்டை, திருமயம் கோட்டை பைரவர் கோயிலில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வழிபாடு நடத்தினார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 30-05-2024.
30 May 2024 -
தங்கம் விலை சரிவு
30 May 2024சென்னை, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 360 குறைந்து ரூ. 53,840 -க்கு விற்பனையானது.
-
சமூக விரோதிகளை இரும்புக்கரம் கொண்டு அரசு ஒடுக்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
30 May 2024சென்னை, தமிழகத்தில் சமூக விரோதிகளை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அ.தி.மு.க.
-
வரும் 13, 14-ம் தேதிகளில் 5 பேர் கொண்ட நிபுணர் குழு முல்லை பெரியாறு அணையை பார்வையிடுகிறது
30 May 2024சென்னை, முல்லை பெரியாறு அணையை வரும் 13 மற்றும் 14-ம் தேதிகளில் 5 பேர் கொண்ட நிபுணர் குழு நேரில் பார்வையிட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
-
கஞ்சா வழக்கு: ஜாமீன் மனுவை வாபஸ் பெற்றார் சவுக்கு சங்கர்
30 May 2024மதுரை, கஞ்சா வைத்திருந்ததாக கைது செய்யப்பட்ட வழக்கில் தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்று தாக்கல் செய்த மனுவை சவுக்கு சங்கர் நேற்று வாபஸ் பெற்றுக் கொண்டார்.
-
2024 பார்லி. தேர்தலில் 751 கட்சிகள் போட்டி: ஆய்வில் தகவல்
30 May 2024புதுடெல்லி, நடப்பு 2024 பாராளுமன்ற தேர்தலில் 751 கட்சிகள் போட்டியிடுவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
-
அக்னிபான் ராக்கெட் விண்ணில் ஏவும் முயற்சி வெற்றி: இஸ்ரோ
30 May 2024சென்னை, சென்னையை சேர்ந்த ஸ்டார்ட் அப் நிறுவனத்தின் அக்னிபான் என்ற ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.
-
தேர்தலில் தோற்றால் குடும்பத்துடன் அமெரிக்காவில் குடிபுக திட்டமா? பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனாக் மறுப்பு
30 May 2024லண்டன், நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் தனது கட்சி தோல்வியுற்றால், அமெரிக்காவிற்கு குடும்பத்துடன் குடிபுக திட்டமிட்டுள்ளதாக வெளியான தகவலை பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனாக்
-
நாட்டு மக்கள் முன்னேற்றத்திற்காக பிரதமர் மோடி தவம் செய்கிறார்: தமிழிசை சவுந்தரராஜன் அறிக்கை
30 May 2024சென்னை, நாட்டு மக்களின் முன்னேற்றத்திற்காக பிரதமர் மோடி தவம் மேற்கொள்ளவிருப்பதாக முன்னாள் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
-
சாலையில் தர்ணா போராட்டம்: மெகபூபா முப்தி மீது வழக்கு
30 May 2024ஸ்ரீநகர், ரஜோரி தொகுதியில் கடந்த 25-ம் தேதி சாலையில் தர்ணா போராட்டம் நடத்தியது தொடர்பாக மெகபூபா முப்தி மீது, தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக அனந்த்நாக் போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.
-
கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கியது: 12 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்
30 May 2024திருவனந்தபுரம், கேரளாவில் நேற்று தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
அமெரிக்க அதிபர் தேர்தல்: டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றால், எலான்மஸ்க்குக்கு ஆலோசகர் பதவி
30 May 2024வாஷிங்டன், அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றால், ஆலோசகர் பதவியை எலான் மஸ்குக்கு வழங்குவது குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளிய
-
ஊழலில் இரட்டை முனைவர் பட்டம் பெற்றுள்ளது காங்கிரஸ்: பிரதமர் மோடி கடும் தாக்கு
30 May 2024சண்டிகர், ஊழலில் காங்கிரஸ் இரட்டை முனைவர் பட்டம் பெற்றுள்ளது என்று நேற்று பஞ்சாப் மாநிலம் ஹோஷி யார்பூரில் இறுதிக்கட்ட பிரச்சார பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார்.&
-
பாலஸ்தீன தனிநாடுக்கு ஆதரவு: அரபு மாநாட்டில் ஜின்பிங் பேச்சு
30 May 2024பெய்ஜிங், தனி பாலஸ்தீன நாடு உருவாக்கத்திற்கு தன்னுடைய ஆதரவு உண்டு என்று சீன அதிபர் ஜி ஜின்பிங் தெரிவித்துள்ளார்.
-
காசா மீதான போர் மேலும் 7 மாதம் நீடிக்கும்: இஸ்ரேல்
30 May 2024டெல் அவிவ், காசா மீதான போர் மேலும் 7 மாதங்களுக்கு நீடிக்கும் என்று இஸ்ரேலின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் தெரிவித்துள்ளார்.
-
த.மா.கா. கட்சியில் இருந்து ஈரோடு கவுதமன் விலகல்
30 May 2024ஈரோடு, த.மா.கா.வின் மாநில தேர்தல் முறையீட்டுக் குழு உறுப்பினர் மற்றும் நாமக்கல் மாவட்டப் பொறுப்பாளராக இருந்த ஈரோடு கவுதமன், த.மா.கா.வில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளா
-
தியானத்துக்காக பிரதமரின் வருகை தனிப்பட்ட நிகழ்வு: குமரி மாவட்ட கலெக்டர் விளக்கம்
30 May 2024கன்னியாகுமரி, தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால், பிரதமரின் தியான நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்கக்கூடாது என கன்னியாகுமரி மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் தி.மு.க.
-
மருத்துவ காப்பீடு கோரிக்கைகளுக்கு 3 மணி நேரத்தில் தீர்வு: ஐ.ஆர்.டி.ஏ.ஐ
30 May 2024மும்பை, மருத்துவ காப்பீடு செய்தவர்களின் கோரிக்கைகளுக்கு ஒரு மணி நேரத்திற்குள் அனுமதிப்பதுடன், அவர்கள் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்வதற்கு 3 மணி நேரத்திற்கு மு
-
கண்ணியத்தை குறைத்த முதல் பிரதமர் மோடி : மன்மோகன் சிங் விமர்சனம்
30 May 2024புது டெல்லி, தேர்தல் பிரச்சாரத்தின் போது வெறுக்கத்தக்க உரைகளை வழங்கியதன் மூலம், கண்ணியத்தையும், பிரதமர் அலுவலகத்தின் மீதான ஈர்ப்பையும் மோடி குறைக்கிறார் என்று முன்னாள்
-
இண்டியா கூட்டணிக்கு வெற்றி உறுதி: வெற்றி பெற்ற 48 மணி நேரத்தில் பிரதமர் தேர்வு செய்யப்படுவார்: ஜெய்ராம் ரமேஷ்
30 May 2024புது டெல்லி, மக்களவைத் தேர்தலில் இண்டியா கூட்டணியின் வெற்றி நிச்சயமாகி உள்ளதால், தேர்தல் முடிவு வெளியான 48 மணி நேரத்தில் பிரதமர் தேர்வு செய்யப்படுவார் என காங்கிரஸ் பொத