எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை : குரூப் 2 மற்றும் குரூப் 2 ஏ பாடத்திட்டங்களின் மாற்றத்தினால் கிராமப்புற மாணவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது நன்மை தான் ஏற்படும் என்று டி.என்.பி.எஸ்.சி செயலாளர் நந்தகுமார் தெரிவித்தார்.
டி.என்.பி.எஸ்.சி. செயலாளர் நந்தகுமார் மற்றும் டி.என்.பி.எஸ்.சி. தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் சுதன் ஆகியோர் சென்னை பாரிமுனையில் உள்ள டி.என்.பி.எஸ்.சி அலுவலகத்தில் கூட்டாக நிருபர்களுக்கு பேட்டியளித்தனர் அப்போது அவர்கள் கூறுகையில்,
குரூப்- 2 தேர்வின் நடைமுறை ஏற்கெனவே இருந்ததுதான். புதிதாக எந்த மாற்றமும் செய்யவில்லை. எப்போது எல்லாம் எழுத்து தேர்வு இருந்துள்ளதோ, அப்போது முதல் நிலை தேர்வில் இருந்ததில்லை. அந்த முறைதான் தற்போது திரும்பவும் வந்துள்ளது. தேர்வில் செய்யப்பட்டுள்ள சில மாற்றங்கள் கிராமப்புற மாணவர்களுக்கு, தமிழ் வழியில் படித்த மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தாது. தமிழ் வழியில் படித்தவர்களுக்கு நன்மை தான் ஏற்படும். இதனால் தமிழ் வழியில் படித்தோர், கிராமப்புற மாணவர்கள் பாதிப்படைவார்கள் என்று அச்சப்படதேவையில்லை. புதிய பாட திட்டத்தினால், தமிழில் படிக்காதவர்கள், எழுத தெரியாதவர்கள் தேர்ச்சி பெற முடியாது என்ற நிலை கொண்டு வரப்பட்டுள்ளது. முன்னர், பொது அறிவு மற்றும் பொது ஆங்கிலம் தேர்வுகள் இருந்தன. தமிழ் தெரியாத ஒருவர் பொது அறிவு மற்றும் பொது ஆங்கிலத்தை தேர்வு செய்து, தேர்வின் இறுதி வரை தேர்தெடுக்கும் நிலை இருந்தது. தற்போது கட்டாயம் தமிழ் படிக்க, எழுத தெரிந்தவர்களாக மாணவர்கள் இருக்க வேண்டும் என்ற அடிப்படையில் இந்த முறை உள்ளது. தமிழ் தெரியாதவர்கள் இறுதி தேர்வு வரை வர இயலாத நிலை ஏற்படுள்ளது.
முதன்மைத் தேர்வில் மொழிப்பாடம் எழுத்துத் தேர்வாக மாற்றப்பட்டுள்ளது. இதனால் தான் முதல் நிலைத்தேர்வில் மொழிப்பாடம் நீக்கப்பட்டுள்ளது. குரூப்-2பழைய பாடத்திட்டத்தின்படி தமிழே தெரியாத ஒருவர் தேர்வில் வெற்றி பெற்று அரசு பணிக்கு செல்ல முடியும். ஆனால் புதிய பாடத்திட்டத்தின் மூலம் தமிழ் தெரியாதவர்கள் தேர்ச்சி பெறுவது முற்றிலும் தடுக்கப்பட்டுள்ளது.
தற்போது உள்ள முறையில் பொது தமிழ் அல்லது பொது ஆங்கிலம் பொது அறிவுடன் சேர்த்து உள்ளது. ஒருவர் பொது தமிழ் தேர்வு செய்யலாம். அல்லது பொது ஆங்கிலம் தேர்வு செய்யலாம். நான் ஏற்கனவே குறிப்பிட்டவாறு, தமிழ் தெரியாமல் இறுதி வரை வந்து பணியில் சேர்வதற்கு வாய்ப்பு இருந்தது. இதனை தற்போது மாற்றி அமைத்துள்ளோம். இதன் அடிப்படையில் முதல் நிலை தேர்வில் இரண்டு பாடங்கள் புதியதாக சேர்க்கப்பட்டுள்ளது. இவற்றில் தமிழகம் சார்ந்த வரலாறு, பண்பாடு, இலக்கியம் குறிப்பாக சங்க இலக்கியம் முதல் தற்கால இலக்கியம் வரை சேர்க்கப்பட்டுள்ளது. திருக்குறளுக்கு மிக முக்கியதுவம் அளிக்கப்பட்டுள்ளது. முதல் நிலை தேர்வு பாட திட்டத்தில் திருக்குறள் சேர்க்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் வளர்ச்சி நிர்வாகம் சேர்ந்து உள்ளது. முதல் நிலை தேர்வில் பொது தமிழை தேர்வு செய்தவர்கள் இலக்கியம், திருக்குறள் கட்டாயமாக சேர்க்கப்பட்டுள்ளது. ஆங்கிலத்தில் படித்தவர்களுக்கும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பொது அறிவு பாடத்திலேயே இது சேர்க்கப்பட்டுள்ள காரணத்தினால் தமிழில் படித்தவர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை.குரூப்-2 முதன்மை பாடம் எளிமைப்படுத்தப்பட்டு உள்ளது. இதனால் குரூப்-2 தேர்வில் இனி கிராமப்புற மாணவர்களும் தமிழ் வழியில் படித்த மாணவர்களும் தேர்ச்சி பெறுவார்கள்.
2020-ம் ஆண்டுக்கான டி.என்.பி.எஸ்.சி. தேர்வு அட்டவணை ஒரு மாதத்தில் வெளியாகும். டி.என்.பி.எஸ்.சி. தேர்வு மையங்களில் மாவட்டந்தோறும் ஆய்வு செய்ய அரசு அதிகாரிகள் நியமிக்கப்படுகின்றனர். தேர்வில் கேள்விகள் தயார் செய்யப்படும் நடவடிக்கைகள் அனைத்தும் ரகசியமாகவே மேற்கொள்ளப்படும். தேர்வு மையங்கள் அனைத்தும் ரகசிய கண்காணிப்பு கேமராக்களால் கண்காணிக்கப்படுகிறது. எனவே டி.என்.பி.எஸ்.சி தேர்வுகளில் ஆள்மாறாட்டம் நடைபெற வாய்ப்பில்லை. இதுவரை அது போன்று நடந்தது இல்லை. கேள்விகள் தவறாக வருவதை குறைக்க வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. குரூப் 4 தேர்வில் கேட்கப்பட்ட கேள்விகளில் தவறு இருந்தது குறித்து பல்வேறு புகார்கள் வந்துள்ளன. இது குறித்து வல்லுநர் குழு அமைக்கப்பட்டுள்ளது. எனவே அந்த குழு வெளியிடும் அறிக்கையின் அடிப்படையில் தான் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஆனியன் ரிங்ஸ்1 day 4 hours ago |
உருளைக்கிழங்கு ப்ரை5 days 4 hours ago |
க்ரிஸ்பி கார்ன் ஸ்நாக்ஸ்1 week 1 day ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 30-05-2024.
30 May 2024 -
திருமயம் கோட்டை பைரவர்: கோவிலில் அமித்ஷா வழிபாடு
30 May 2024புதுக்கோட்டை, திருமயம் கோட்டை பைரவர் கோயிலில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வழிபாடு நடத்தினார்.
-
காவல் நிலையத்திற்குள் புகுந்து காவலர்களை தாக்கிய ராணுவ வீரர்கள் 16 பேர் மீது வழக்கு
30 May 2024ஜம்மு, ஜம்முவில் காவல் நிலையத்திற்குள் புகுந்து காவலர்களை தாக்கியதாக ராணுவ வீரர்கள் 16 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
-
2024 பார்லி. தேர்தலில் 751 கட்சிகள் போட்டி: ஆய்வில் தகவல்
30 May 2024புதுடெல்லி, நடப்பு 2024 பாராளுமன்ற தேர்தலில் 751 கட்சிகள் போட்டியிடுவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
-
தங்கம் விலை சரிவு
30 May 2024சென்னை, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 360 குறைந்து ரூ. 53,840 -க்கு விற்பனையானது.
-
சாலையில் தர்ணா போராட்டம்: மெகபூபா முப்தி மீது வழக்கு
30 May 2024ஸ்ரீநகர், ரஜோரி தொகுதியில் கடந்த 25-ம் தேதி சாலையில் தர்ணா போராட்டம் நடத்தியது தொடர்பாக மெகபூபா முப்தி மீது, தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக அனந்த்நாக் போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.
-
மருத்துவ காப்பீடு கோரிக்கைகளுக்கு 3 மணி நேரத்தில் தீர்வு: ஐ.ஆர்.டி.ஏ.ஐ
30 May 2024மும்பை, மருத்துவ காப்பீடு செய்தவர்களின் கோரிக்கைகளுக்கு ஒரு மணி நேரத்திற்குள் அனுமதிப்பதுடன், அவர்கள் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்வதற்கு 3 மணி நேரத்திற்கு மு
-
தேர்தலில் தோற்றால் குடும்பத்துடன் அமெரிக்காவில் குடிபுக திட்டமா? பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனாக் மறுப்பு
30 May 2024லண்டன், நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் தனது கட்சி தோல்வியுற்றால், அமெரிக்காவிற்கு குடும்பத்துடன் குடிபுக திட்டமிட்டுள்ளதாக வெளியான தகவலை பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனாக்
-
அக்னிபான் ராக்கெட் விண்ணில் ஏவும் முயற்சி வெற்றி: இஸ்ரோ
30 May 2024சென்னை, சென்னையை சேர்ந்த ஸ்டார்ட் அப் நிறுவனத்தின் அக்னிபான் என்ற ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.
-
காசா மீதான போர் மேலும் 7 மாதம் நீடிக்கும்: இஸ்ரேல்
30 May 2024டெல் அவிவ், காசா மீதான போர் மேலும் 7 மாதங்களுக்கு நீடிக்கும் என்று இஸ்ரேலின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் தெரிவித்துள்ளார்.
-
பாலஸ்தீன தனிநாடுக்கு ஆதரவு: அரபு மாநாட்டில் ஜின்பிங் பேச்சு
30 May 2024பெய்ஜிங், தனி பாலஸ்தீன நாடு உருவாக்கத்திற்கு தன்னுடைய ஆதரவு உண்டு என்று சீன அதிபர் ஜி ஜின்பிங் தெரிவித்துள்ளார்.
-
தியானத்துக்காக பிரதமரின் வருகை தனிப்பட்ட நிகழ்வு: குமரி மாவட்ட கலெக்டர் விளக்கம்
30 May 2024கன்னியாகுமரி, தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால், பிரதமரின் தியான நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்கக்கூடாது என கன்னியாகுமரி மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் தி.மு.க.
-
மெக்சிகோவில் பிரச்சாரத்தின் போது மேயர் வேட்பாளர் சுட்டுக் கொலை
30 May 2024அகாபுல்கோ, மெக்சிகோ நாட்டில் நேற்று முன்தினம் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு இருந்த மேயர் வேட்பாளரான ஆல்பிரடோ கப்ரேரா சுட்டுக் கொல்லப்பட்டார்.
-
காசா - எகிப்து எல்லையை கைப்பற்றியது இஸ்ரேல் ராணுவம்
30 May 2024டெல்அவிவ், காசா – எகிப்து எல்லைப் பகுதி முழுவதையும் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவந்திருப்பதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது.
-
அமெரிக்க அதிபர் தேர்தல்: டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றால், எலான்மஸ்க்குக்கு ஆலோசனை பதவி
30 May 2024வாஷிங்டன், அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றால், ஆலோசகர் பதவியை எலான் மஸ்குக்கு வழங்குவது குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளிய
-
வரும் 13, 14-ம் தேதிகளில் 5 பேர் கொண்ட நிபுணர் குழு முல்லை பெரியாறு அணையை பார்வையிடுகிறது
30 May 2024சென்னை, முல்லை பெரியாறு அணையை வரும் 13 மற்றும் 14-ம் தேதிகளில் 5 பேர் கொண்ட நிபுணர் குழு நேரில் பார்வையிட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
-
பிரதமர் மோடியை வரவேற்க குமரிக்கு யாரும் வர வேண்டாம்: பா.ஜ.க. தலைமை அறிவுறுத்தல்
30 May 2024கன்னியாகுமரி, கன்னியாகுமரிக்கு வருகை தரும் பிரதமர் மோடியை வரவேற்க கட்சி நிர்வாகிகள் யாரும் வர வேண்டாம் என்று தமிழக பா.ஜ.கவினருக்கு டெல்லி பாஜக தலைமை உத்தரவு பிறப்பித்து
-
த.மா.கா. கட்சியில் இருந்து ஈரோடு கவுதமன் விலகல்
30 May 2024ஈரோடு, த.மா.கா.வின் மாநில தேர்தல் முறையீட்டுக் குழு உறுப்பினர் மற்றும் நாமக்கல் மாவட்டப் பொறுப்பாளராக இருந்த ஈரோடு கவுதமன், த.மா.கா.வில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளா
-
நாட்டு மக்கள் முன்னேற்றத்திற்காக பிரதமர் மோடி தவம் செய்கிறார்: தமிழிசை சவுந்தரராஜன் அறிக்கை
30 May 2024சென்னை, நாட்டு மக்களின் முன்னேற்றத்திற்காக பிரதமர் மோடி தவம் மேற்கொள்ளவிருப்பதாக முன்னாள் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
-
பா.ஜ.க.வை வீழ்த்தவே காங்கிரசுடன் கூட்டணி: டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் விளக்கம்
30 May 2024புதுடெல்லி, பா.ஜ.க.வை வீழ்த்தவே காங்கிரசுடன் கூட்டணி என்றும் அந்த கூட்டணி நிரந்தரமானது அல்ல என்றும் ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதல்வருமாந கெஜ்ரிவால
-
கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கியது: 12 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்
30 May 2024திருவனந்தபுரம், கேரளாவில் நேற்று தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
ஊழலில் இரட்டை முனைவர் பட்டம் பெற்றுள்ளது காங்கிரஸ்: பிரதமர் மோடி கடும் தாக்கு
30 May 2024சண்டிகர், ஊழலில் காங்கிரஸ் இரட்டை முனைவர் பட்டம் பெற்றுள்ளது என்று நேற்று பஞ்சாப் மாநிலம் ஹோஷி யார்பூரில் இறுதிக்கட்ட பிரச்சார பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார்.&
-
டிடிஎஃப் வாசனுக்கு ஜாமீன்
30 May 2024மதுரை, கவனக்குறைவாக வாகனத்தை ஓட்டியதாக பதியபட்ட வழக்கில் டிடிஎஃப் வாசனுக்கு மதுரை கோர்ட் ஜாமீன் வழங்கியுள்ளது.
-
இண்டியா கூட்டணிக்கு வெற்றி உறுதி: வெற்றி பெற்ற 48 மணி நேரத்தில் பிரதமர் தேர்வு செய்யப்படுவார்: ஜெய்ராம் ரமேஷ்
30 May 2024புது டெல்லி, மக்களவைத் தேர்தலில் இண்டியா கூட்டணியின் வெற்றி நிச்சயமாகி உள்ளதால், தேர்தல் முடிவு வெளியான 48 மணி நேரத்தில் பிரதமர் தேர்வு செய்யப்படுவார் என காங்கிரஸ் பொத
-
தங்கம் கடத்தல் வழக்கில் டெல்லியில் சசி தரூரின் முன்னாள் உதவியாளர் கைது
30 May 2024புது டெல்லி, டெல்லி விமான நிலையத்தில் தங்கம் கடத்தல் வழக்கில் காங்கிரஸ் எம்.பி. சசி தரூரின் முன்னாள் உதவியாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.