எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மான்செஸ்டர் : வெஸ்ட்இண்டீசுக்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி அபார வெற்றி பெற்றது.
இங்கிலாந்து-வெஸ்ட்இண்டீஸ் அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மான்செஸ்டரில் நடந்தது. இதில் முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 9 விக்கெட் இழப்புக்கு 469 ரன்கள் குவித்து ‘டிக்ளேர்‘ செய்தது.
அதிகபட்சமாக டாம் சிப்லி 120 ரன்களும், பென் ஸ்டோக்ஸ் 176 ரன்களும் எடுத்தனர். 3-வது நாள் ஆட்டம் மழையால் முழுமையாக பாதிக்கப்பட்ட நிலையில், முதல் இன்னிங்சை தொடர்ந்து ஆடிய வெஸ்ட்இண்டீஸ் அணி 4-வது நாளில் 287 ரன்களில் ‘ஆல்அவுட்‘ ஆனது.
பின்னர் 182 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை ஆடிய இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக வழக்கத்துக்கு மாறாக பென் ஸ்டோக்ஸ், ஜோஸ் பட்லர் ஆகியோர் களம் இறங்கினார்கள். அதிரடியாக ஆடி வேகமாக ரன் குவிக்கும் நோக்குடன் இருவரும் ஆட்டத்தை தொடங்கினார்கள்.
ஜோஸ் பட்லர் முதல் ஓவரிலேயே ரன் எதுவும் எடுக்காமலும், ஜாக் கிராவ்லி 11 ரன்னிலும் கெமார் ரோச் பந்து வீச்சில் ‘போல்டு‘ ஆனார்கள். 4-வது நாள் ஆட்டம் முடிவில் இங்கிலாந்து அணி 8 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 37 ரன்கள் எடுத்து இருந்தது. பென் ஸ்டோக்ஸ் 16 ரன்னுடனும், கேப்டன் ஜோரூட் 8 ரன்னுடனும் களத்தில் நின்றனர்.
இந்த நிலையில் 5-வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நேற்று முன்தினம் நடந்தது. பென் ஸ்டோக்ஸ் தொடர்ந்து அடித்து ஆடினார். அவருக்கு பக்கபலமாக நின்ற ஜோரூட் 22 ரன்கள் (33 பந்துகளில்) எடுத்த நிலையில் ‘ரன்அவுட்‘ ஆனார்.
இங்கிலாந்து அணி 2-வது இன்னிங்சில் 19 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 129 ரன்கள் எடுத்து ‘டிக்ளேர்‘ செய்தது. பென் ஸ்டோக்ஸ் 57 பந்துகளில் 4 பவுண்டரி. 3 சிக்சருடன் 78 ரன்னும், ஆலிவர் போப் 7 பந்துகளில் ஒரு பவுண்டரியுடன் 12 ரன்னும் எடுத்தும் ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.
இதனை அடுத்து 312 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய வெஸ்ட்இண்டீஸ் அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்து இருந்தது. இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அந்த அணி 37 ரன்களுக்குள் 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
ஜான் கேம்ப்பெல் (4 ரன்), கிரேக் பிராத்வெய்ட் (12 ரன்), ஷாய் ஹோப் (7 ரன்), ரோஸ்டன் சேஸ் (6 ரன்) ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர். பிராத்வெய்ட் விக்கெட்டை கிறிஸ் வோக்ஸ் கைப்பற்றினார். மற்ற 3 விக்கெட்டுகளையும் ஸ்டூவர்ட் பிராட் வீழ்த்தினார். 5-வது விக்கெட்டுக்கு ஜெர்மைன் பிளாக்வுட், ஷமார் புரூக்ஸ்சுடன் இணைந்தார்.
இருவரும் நிலைத்து நின்று ஆடி அணியை தோல்வியில் இருந்து காப்பாற்ற முயற்சித்தனர். ஸ்கோர் 137 ரன்னாக உயர்ந்த போது ஜெர்மைன் பிளாக்வுட் (55 ரன்கள்) பென் ஸ்டோக்ஸ் பந்து வீச்சில் விக்கெட் கீப்பர் ஜோஸ் பட்லரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். தேநீர் இடைவேளைக்கு பிறகு தொடர்ந்து ஆடிய வெஸ்ட்இண்டீஸ் அணி தோல்வியை தவிர்க்க போராடியது. இங்கிலாந்து அணி தனது அபார பந்து வீச்சின்மூலம் கடும் நெருக்கடி அளித்தது.
அடுத்து வந்த ஷேன் டாவ்ரிச் ரன் எதுவும் எடுக்காமலும், நிலைத்து நின்று ஆடிய ஷமார் புரூக்ஸ் 62 ரன்னிலும், கேப்டன் ஜாசன் ஹோல்டர் 35 ரன்னிலும், அல்ஜாரி ஜோசப் 9 ரன்னிலும், கெமார் ரோச் 5 ரன்னிலும் சீரான இடைவெளியில் நடையை கட்டினார்கள். 70.1 ஓவர்களில் வெஸ்ட்இண்டீஸ் அணி 198 ரன்னில் ‘ஆல்-அவுட்’ ஆனது. இதனால் இங்கிலாந்து அணி 113 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
ஷனோன் கேப்ரியல் ரன் எதுவுமின்றி ஆட்டம் இழக்காமல் இருந்தார். இந்த வெற்றியின் மூலம் இங்கிலாந்து 1-1 என்ற கணக்கில் சமநிலையை எட்டியது. இவ்விரு அணிகள் இடையிலான கடைசி டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் 24-ம் தேதி தொடங்குகிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஆனியன் ரிங்ஸ்22 hours 18 min ago |
உருளைக்கிழங்கு ப்ரை4 days 22 hours ago |
க்ரிஸ்பி கார்ன் ஸ்நாக்ஸ்1 week 22 hours ago |
-
தபால் வாக்குகளின் முடிவுகள் கடைசியாக அறிவிக்கப்படும் : சென்னை தேர்தல் அதிகாரி தகவல்
29 May 2024சென்னை : தபால் வாக்குகள் முதலில் எண்ணப்படும்.
-
தமிழகத்தில் ஜூன் 1,2 தேதிகளில் 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்
29 May 2024சென்னை : தமிழகத்தில் வரும் 1 மற்றும் 2-ம் தேதிகளில் 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
ஜூன் 3, 4-ம் தேதிகளில் வானில் 6 கோள்களின் அணிவகுப்பு : வெறும் கண்ணால் பார்க்கலாம்
29 May 2024சென்னை : ஒரு கோளுக்கு அடுத்து இன்னொரு கோள் என்று அடுக்கி வைக்கப்பட்டது போல நம் கண்களுக்கு தெரியும் நிகழ்வு கோள்களின் தொடர்வரிசை நிகழ்வு என்று அழைக்கப்படுகிறது. இந
-
ஜூன் 1-ல் இருந்து ஆம்னி பஸ்கள் கிளாம்பாக்கத்தில் இருந்து புறப்படும் : போக்குவரத்து துறை தகவல்
29 May 2024சென்னை : ஜூன் 1-ம் தேதி முதல் ஆம்னி பேருந்துகள் கிளாம்பாக்கத்தில் இருந்து தான் இயக்கப்படவேண்டும் என்று சி.எம்.டி.ஏ.
-
மே.வங்கத்தில் ஊடுருவல்காரர்களை குடியமர்த்த திரிணாமுல் முயற்சி: பிரதமர் மோடி குற்றச்சாட்டு
29 May 2024கொல்கத்தா, மேற்கு வங்காளத்தில் ஊடுருவல்காரர்களை குடியமர்த்த திரிணாமுல் காங்கிரஸ் முயற்சித்து வருகிறது என்று பிரதமர் மோடி குற்றஞ்சாட்டினார்.
-
கார்கில் தாக்குதல் எங்கள் தவறுதான்: பாக். முன்னாள் பிரதமர் ஒப்புதல்
29 May 2024லாகூர், இந்திய முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உடன் மேற்கொண்ட லாகூர் ஒப்பந்தத்தை மீறினோம்.
-
ஒடிசா மாநிலத்தின் மைந்தனே முதல்வராக பொறுப்பேற்பார் : வி.கே.பாண்டியன் உறுதி
29 May 2024புவனேஸ்வர் : ஒடிசா மண்ணின் மைந்தன் ஜூன் 9ம் தேதி காலை 11:30 மணி முதல் மதியம் 1 மணிக்குள் முதல்வராக பொறுப்பேற்பார்,'' என 5டி திட்ட தலைவரும், பிஜூ ஜனதா தளம் கட்சியின் மூத
-
புழல் சிறையில் கைதிகளுக்கான கேன்டீன் மூடப்படவில்லை : ஐகோர்ட்டில் சிறை நிர்வாகம் தகவல்
29 May 2024சென்னை : சென்னை புழல் மத்திய சிறையில் செயல்பட்டு வந்த கைதிகளுக்கான கேன்டீன் மூடப்படவில்லை என சிறை நிர்வாகம் சென்னை ஐகோர்ட்டில் நேற்று தெரிவித்துள்ளது.
-
பா.ஜ.க. நாட்டுக்கு ஆபத்தானது: அண்ணாமலைக்கு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பதிலடி
29 May 2024சென்னை : மதவெறி கொண்ட யானையை விட மதவெறி பிடித்துள்ள பா.ஜ.க.
-
காலாவதியான பொருட்கள் ஆவினில் விற்பனை: ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்
29 May 2024சென்னை : தனியார் நிறுவனங்களுக்கு வழிகாட்டியாக இருக்க வேண்டிய அரசு நிறுவனமான ஆவின், காலாவதியான பொருட்களை விற்பனை செய்வது என்பது கடும் கண்டனத்திற்குரியது என்று முன்னாள் ம
-
இந்திய ராணுவ அதிகாரிக்கு ஐ.நா.வின் மதிப்புமிக்க விருது
29 May 2024நியூயார்க், ஐக்கிய நாடுகள் அமைதி காக்கும் வீரர்களின் சர்வதேச தினம் இன்று 30-ம் தேதி அன்று கடைப்பிடிக்கப்படுகிறது. இந்நிலையில், காங்கோவில் ஐ.நா.
-
குடியேற்ற திருத்த விதிகளுக்கு எதிர்ப்பு: கனடாவில் இந்திய மாணவர்கள் உண்ணாவிரத போராட்டம்
29 May 2024ஒட்டாவா, கனடாவின் பிரின்ஸ் எட்வர்ட் தீவு மாகாணத்தில் வசிக்கும் இந்திய மாணவர்கள் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
-
அரசியலில் நடிகர் விஜய்: எஸ்.ஏ.சந்திரசேகர் பேட்டி
29 May 2024காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் தமிழக வெற்றிக் கழகத் தலைவரும், நடிகருமான விஜய்யின் பெற்றோர் எஸ்.ஏ.சந்திரசேகர் - ஷோபா தம்பதியர் சாமி தரிசனம் செய்தனர்.
-
நெல்லை ஜெயக்குமார் மரண வழக்கு: முக்கிய பிரமுகர்களிடம் விரைவில் விசாரணை நடத்த சி.பி.சி.ஐ.டி. முடிவு
29 May 2024திருநெல்வேலி : திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் தனசிங் மர்ம மரண வழக்கு தொடர்பாக சிபிசிஐடி போலீஸார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்
-
சர்வதேச, தேசிய போட்டிகளை நடத்தி விளையாட்டு தலைநகராக தமிழ்நாடு மாறி வருகிறது : தமிழக அரசு பெருமிதம்
29 May 2024சென்னை : சர்வதேச, தேசிய போட்டிகளை நடத்தியதன் மூலம் நாட்டின் விளையாட்டுத் தலைநகராக தமிழகம் மாறி வருவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
-
நீலகிரி அருகே 26 அடி கிணற்றில் விழுந்த யானை குட்டி 8 மணி நேர போராட்டத்திற்கு பின் மீட்பு
29 May 2024ஊட்டி, : நீலகிரி மாவட்டம் கொளப்பள்ளி குறிஞ்சி நகர் பகுதியில் 26 அடி கிணற்றில் விழுந்த யானை குட்டி 8 மணி நேர போராட்டத்திற்கு பிறகு மீட்கப்பட்டது.
-
அணியுடன் இணைந்த பாண்ட்யா
29 May 202420 அணிகள் கலந்து கொள்ள உள்ள டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் 1ம் தேதி (இந்திய நேரப்படி 2ம் தேதி) தொடங்குகிறது.
-
தென் இந்தியாவில் பா.ஜ.க. மிகப்பெரிய வெற்றி பெறும் : மத்திய அமைச்சர் அமித்ஷா நம்பிக்கை
29 May 2024புதுடெல்லி : தென் இந்தியாவில் கர்நாடகா, தெலங்கானா, ஆந்திரா, கேரளா மற்றும் தமிழ்நாடு ஆகிய அனைத்து மாநிலங்களிலும் பா.ஜ.க.
-
கடைசி கட்ட தேர்தல் பிரசாரத்தை முடித்து 3 நாள் பயணமாக பிரதமர் மோடி இன்று கன்னியாகுமரி வருகை : மாவட்டம் முழுவதும் 5 அடுக்கு பாதுகாப்பு
29 May 2024கன்னியாகுமரி : 3 நாள் பயணமாக பிரதமர் மோடி இன்று மாலை கன்னியாகுமரி வருகிறார்.
-
பிரதமர் மோடி குறித்த கேள்விக்கு பதிலளிக்க நடிகர் ரஜினி மறுப்பு
29 May 2024சென்னை : இமயமலை செல்லும் நடிகர் ரஜினிகாந்த், செய்தியாளர்கள் எழுப்பிய பிரதமர் மோடி குறித்த கேள்விக்கு பதிலளிக்க மறுத்து விட்டார்.
-
சென்னை ஏரிகளில் நீா் இருப்பு: 4 மாதங்களுக்கு குடிநீா் விநியோகிப்பதில் பிரச்சினை இல்லை - அதிகாரிகள் தகவல்
29 May 2024சென்னை : சென்னைக்கு குடிநீா் வழங்கும் ஏரிகளில் 47சதவீதம் நீா் இருப்பு உள்ளதால், இன்னும் 4 மாதங்களுக்கு சென்னை மக்களுக்கு தட்டுப்பாடின்றி குடிநீா் விநியோகிக்க முடி
-
டெல்லியில் கடும் பஞ்சம் எதிரொலி: குடிநீரில் காரை கழுவினால் 2 ஆயிரம் ரூபாய் அபராதம்
29 May 2024புதுடெல்லி : தலைநகர் டெல்லியில் கடுமையான பஞ்சம் காரணமாக மாநில அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
-
கெஜ்ரிவாலின் இடைக்கால ஜாமீன் மனு: விசாரணைக்கு ஏற்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு
29 May 2024புதுடெல்லி : டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் இடைக்கால ஜாமீன் மனுவை விசாரணைக்கு ஏற்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு தெரிவித்துள்ளது.
-
பழனி கோவிலில் ரோப்கார் சேவை இன்று நிறுத்தம்
29 May 2024திண்டுக்கல் : பழனி முருகன் கோவிலில் பராமரிப்பு பணிக்காக இன்று ஒரு நாள் மட்டும் ரோப்கார் சேவை நிறுத்தப்படுவதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
-
டி-20 உலகக் கோப்பை தொடர்: வாஷிங்டன்னில் பயிற்சியை தொடங்கிய இந்திய வீரர்கள்
29 May 2024வாஷிங்டன் : டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்க இந்திய அணி வாஷிங்டன்னில் நேற்று பயிற்சியை தொடங்கினர். இந்திய வீரர்கள் பயிற்சி செய்யும் வீடியோவை பி.சி.சி.ஐ.