எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கொரோனா தோன்றியது எப்படி என்ற புதிய சர்வதேச ஆய்வுக்கு இந்தியா ஆதரவு தெரிவித்துள்ளது. அனைத்து நாடுகளும் இந்த விசாரணையில் ஒத்துழைக்க வேண்டும் என்று இந்தியா கேட்டுக் கொண்டுள்ளது. இதில் எந்தவித அரசியல் தலையீடும் இருக்கக் கூடாது என்று சீனா கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கொரோனாவின் மூலத்தை அறிய நிபுணர் குழு அமைக்கப்பட்டிருப்பதாக உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதாநோம் கெப்ரியேசஸ் அறிவித்தார். வூகானில் இருந்து கொரோனா பிறந்ததாகக் கூறப்படும் தகவல்களை இக்குழுவினர் ஆய்வு செய்ய உள்ளனர்.
_______________
பில் கிளிண்டனுக்கு உடல் நலக்குறைவு
உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அமெரிக்க முன்னாள் அதிபர் பில் கிளிண்டன் இரண்டு நாள் சிகிச்சைக்குப் பிறகு அவரது உடல்நலம் முன்னேறி வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.75 வயதாகும் பில் கிளிண்டன் உடல் சோர்வு காரணமாக கலிஃபோர்னியாவின் இர்வின் -ல் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவரை சோதித்த மருத்துவர்கள், ரத்த நாளத்தில் ஏற்பட்ட தொற்றால் அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதாக தெரிவித்தனர். இந்நிலையில், இப்போது அவரது உடைநிலை நல்ல முன்னேற்றத்தை காட்டி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
______________
அமேசான் காடுகளை பாதுகாக்க ஓவியம்
பிரேசிலில் காட்டுத் தீயால் நாசமாகி வரும் அமேசான் காடுகளை பாதுகாக்க வலியுறுத்தி எரிந்து போன அக்காடுகளின் மரங்களிலிருந்து எடுக்கப்பட்ட சாம்பலைக்கொண்டு ஓவியம் தீட்டப்பட்டுள்ளது.சாவோ பாலோவின் மிக பெரிய கட்டடத்தின் சுவரில் ஸ்ட்ரீட் ஆர்ட் முறையில், பற்றி ஏரியும் வனத்தில், இறந்த விலங்குகள் மத்தியில் தீயணைப்பு வீரர் ஒருவர் நிற்பதை போன்ற ஓவியத்தை மண்டனோ என்னும் ஓவியக் கலைஞர் தீட்டியுள்ளார்.
பிரேசில் முழுக்க சுமார் 10 ஆயிரம் கிலோ மீட்டர் பயணம் செய்த மண்டனோ, பல வனப்பகுதிகளிலிருந்து எரிந்த மரங்களின் சாம்பலை சேகரித்து வந்து இந்த பிரம்மாண்ட ஓவியத்தை படைத்துள்ளார்.
___________
நினைவாற்றல் பாதிப்பு: காரணம் கண்டுபிடிப்பு
அதிகமாகப் பதப்படுத்தப்பட்ட உணவை உட்கொள்வது நினைவாற்றலைப் பாதிக்கும் என்பது எலிகள் மீது நடத்திய ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது. அமெரிக்காவின் ஓகியோ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் 3 மாதம் மற்றும் 24 மாதம் வயதுகளையுடைய எலிகளுக்குப் பதப்படுத்தப்பட்ட உணவைக் கொடுத்து அவற்றின் நினைவாற்றல் பற்றி ஆராய்ச்சி செய்துள்ளனர்.
அதில் வயதான எலிகளுக்கு நினைவாற்றல் குறைந்திருந்ததும், இளம் எலிகளுக்கு நினைவாற்றல் பாதிக்கப்படாததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஒமேகா 3 கொழுப்பு அமிலத்தை உணவில் சேர்த்துக்கொண்டால் நினைவாற்றல் பாதிக்கப்படாததும் தெரியவந்துள்ளது. பதப்படுத்தும் பொருள் சேர்க்கப்பட்ட உருளைக்கிழங்குச் சீவல், மற்ற நொறுக்குத் தீனிகள், பஸ்தா, பிசா ஆகியன வயதானோரின் மூளைக்குப் பாதிப்பு ஏற்படுத்துபவை என இந்த ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
____________
இலக்கை துல்லியமாக சுடும் நாய் வடிவ ரோபோ
கிட்டத்தட்ட 4 ஆயிரம் அடி தூரத்தில் உள்ள இலக்கையும் குறிதவறாமல் சுடும் நாய் வடிவிலான ரோபோ அமெரிக்க ராணுவ வர்த்தக கண்காட்சியில் வெளியிடப்பட்டுள்ளது. பிலடெல்பியாவை தளமாகக் கொண்ட கோஸ்ட் ரோபாட்டிக்ஸ் மற்றும் ஆயுத உற்பத்தியாளர் SWORD இன்டர்நேஷனல் ஆகிய நிறுவனங்கள் இந்த ரோபோவை உருவாக்கியுள்ளன.
எந்தச் சூழ்நிலையிலும் பதுங்கி நடந்து செல்லும் இந்த ரோபோவின் மேல் பகுதியில் உள்ள க்ரீட்மூட் ஸ்னைப்பர் வகைத் துப்பாக்கி மூலம் தாக்குதல் நடத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.இந்த ரோபோவின் விலை மற்றும் பராமரிப்புச் செலவு குறித்து தகவல் வெளியிடப்படவில்லை.
_____________
நார்வே: வில், அம்பு தாக்குதலில் ஐவர் பலி
வில் மற்றும் அம்பை வைத்து ஒரு நபர் தாக்குதல் நடத்தியதில் நார்வேயில் ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர்; இருவர் படுகாயமடைந்துள்ளனர். நார்வே தலைநகர் ஓஸ்லோவில் இருந்து தென்மேற்கே உள்ள கொங்ஸ்பெர்க் நகரில் இந்த தாக்குதல் நடப்பதாக உள்ளூர் நேரப்படி நேற்று மாலை 6:13 தகவல் கிடைத்ததாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
இந்தத் தாக்குதலை நடத்தியதாக 37 வயதாகும், டென்மார்க் நாட்டைச் சேர்ந்த சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் குழுவாக இயங்கினாரா அல்லது தனியாகத் தாக்குதல் நடத்தினாரா, இது தீவிரவாதத் தாக்குதலா என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 month 3 weeks ago | வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 month 3 weeks ago | ஆவாரம்பூவின் மருத்துவ பலன்கள் 1 month 3 weeks ago |
தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 3 weeks ago | குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 8 months 1 week ago | பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 1 week ago |
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு ப்ரை6 hours 8 sec ago |
க்ரிஸ்பி கார்ன் ஸ்நாக்ஸ்3 days 5 hours ago |
ஆப்பிள் ரோஸ்ட்1 week 5 hours ago |
-
போர் நிறுத்தத்திற்கு உக்ரைனுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார்: ரஷ்ய செய்தி தொடர்பாளர் தகவல்
25 May 2024மாஸ்கோ, போரை நிறைவு செய்வதற்காக ,உக்ரைனுடன் பேச்சுவார்த்தை நடத்த ரஷ்யா தயாராக இருக்கிறது என அந்நாட்டு செய்தி தொடர்பாளர் டிமித்ரி பெஸ்கோ தெரிவித்துள்ளார்.
-
புயல் எச்சரிக்கை: சென்னையில் இருந்து அந்தமானுக்கு இயக்கப்படும் : விமான சேவைகள் ரத்து
25 May 2024சென்னை, வங்க கடலில் உருவாகியுள்ள ரெமல் புயல் காரணமாக, ஏர் இந்தியா விமான நிறுவனம் அந்தமானுக்கு இயக்கப்படும் விமான சேவைகளை, நேற்று ஒரு நாள், முழுவதுமாக ரத்து செய்துள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 25-05-2024.
25 May 2024 -
அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர 2.58 லட்சம் பேர் விண்ணப்பம்
25 May 2024சென்னை : அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர கடந்த 19 நாட்களில், 2 லட்சத்து 58 ஆயிரத்து 527 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
இயல்பை விட கோடை மழை தமிழ்நாட்டில் அதிக பொழிவு : வானிலை ஆய்வு மையம் தகவல்
25 May 2024சென்னை : தமிழகத்தில் கோடை மழை இயல்பை விட அதிகமாக 29 சதவீதம் பெய்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
தசைப் பயிற்சியாளர்கள் மற்றும் சிறப்பு ஆசிரியர்களுக்கான மதிப்பூதியம் உயர்வு: தமிழக அரசு
25 May 2024சென்னை : தமிழக அரசானது சிறப்பு ஆசிரியர், தசை பயிற்சியாளர்களுக்கான மதிப்பூதியம் ரூ.14,000லிருந்து ரூ.18,000ஆக உயர்த்தி வழங்க உத்தரவு பிறப்பித்துள்ளது.
-
பூத் முகவர்களை கைது செய்ததால் மெகபூபா முப்தி சாலையில் அமர்ந்து போராட்டம்
25 May 2024ஸ்ரீநகர், தனது கட்சியின் பூத் முகவர்களை காரணமின்றி போலீசார் கைது செய்ததாக குற்றஞ்சாட்டி காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி நேற்று சாலையில் அமர்ந்து போராட்டத்தில்
-
ஊட்டியில் நாளை முதல் 2 நாட்கள் நடக்கும் துணைவேந்தர்கள் மாநாடு: கவர்னர் ஆர்.என்.ரவி பங்கேற்கிறார்
25 May 2024ஊட்டி,ஊட்டி ராஜ்பவன் மாளிகையில் நாளை முதல் 2 நாட்கள் நடைபெறவுள்ள துணைவேந்தர்கள் மாநாட்டில் கவர்னர் ஆர்.என். ரவி கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார்.
-
நலத்திட்ட பொருள்கள் வழங்கும் பணியில் மாணவர்களை ஈடுபடுத்தக்கூடாது: ஆசிரியர்களுக்கு அரசு அறிவுறுத்தல்
25 May 2024சென்னை : பள்ளிகளில் நலத்திட்ட பொருள்கள் வழங்கும் பணிகளில் மாணவர்களை ஈடுபடுத்தக்கூடாது என்று ஆசிரியர்களுக்கு பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.
-
6-ம் கட்ட தேர்தல் : வாக்களித்த பின் தாயுடன் செல்பி எடுத்த ராகுல் காந்தி
25 May 2024புதுடெல்லி : டெல்லியில் நிர்மான் பவன் வாக்குச்சாவடியில் தங்களது வாக்குகளை செலுத்திய பின் தனது தாய் சோனியா காந்தியுடன் ராகுல் காந்தி செல்பி எடுத்து கொண்டார்.
-
அரசு பேருந்துகளில் காவலர்களுக்கு இலவச பயணத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும் : தமிழக அரசுக்கு இ.பி.எஸ். வலியுறுத்தல்
25 May 2024சென்னை : சட்டப்பேரவை மானியக் கோரிக்கையில் அறிவித்தபடி அரசு பேருந்துகளில் காவலர்களுக்கான இலவசப் பயணத்தை உடனே அமல்படுத்த வேண்டும் என்று தமிழக அரசுக்கு அதிமுக பொதுச்செயலாள
-
மழை பாதிப்புகளை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை : தலைமைச்செயலாளர் சிவ்தாஸ் மீனா பேட்டி
25 May 2024சென்னை : மழையால் ஏற்படும் பாதிப்புகளை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா தெரிவித்தார்.
-
காவல்துறை இடையே பிரச்சினை: சென்னை தலைமை செயலகத்தில் துறை செயலாளர்கள் ஆலோசனை
25 May 2024சென்னை : தமிழக போக்குவரத்து துறை மற்றும் காவல் துறையினர் இடையே பிரச்சினை நீடித்து வரும் நிலையில், தமிழக முதல்வரின் உத்தரவின் பேரில் உள்துறை செயலாளர் அமுதா, போக்கு
-
பணவீக்கம், வேலையின்மைக்கு எதிராக வாக்களித்தேன்: கெஜ்ரிவால்
25 May 2024புது டெல்லி, பணவீக்கம் மற்றும் வேலையின்மைக்கு எதிராக நான் வாக்களித்துள்ளேன் என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்தார்.
-
மே மாத விடுமுறை: வரும் 28-ம் தேதி வண்டலூர் உயிரியல் பூங்கா திறந்திருக்கும் என அறிவிப்பு
25 May 2024சென்னை : மே மாத விடுமுறையை முன்னிட்டு வருகிற 28-ம் தேதி வண்டலூர் உயிரியல் பூங்கா திறந்திருக்கும் என்று பூங்கா நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.
-
பாராளுமன்ற - சட்டமன்ற தேர்தல்: ஒடிசாவில் வாக்களித்த பட்நாயக், பாண்டியன்
25 May 2024புவனேஷ்வர் : ஒடிசா முதல்வரும், பிஜூ ஜனதா தள தலைவருமான நவீன் பட்நாயக் புவனேஸ்வரில் உள்ள தனது இல்லத்திற்கு அருகில் ஏரோட்ரோம் மேல்நிலைப் பள்ளி உள்ள வாக்குச்சாவடிக்கு நடந்த
-
6-ம் கட்ட வாக்குப்பதிவின் போதும் மேற்கு வங்காளத்தில் ஒருசில இடங்களில் வன்முறை-மோதல்
25 May 2024கொல்கத்தா : பாராளுமன்றத்திற்கு 6-ம் கட்டமாக நேற்று நடந்த தேர்தலிலும் மேற்கு வங்காளத்தில் ஒருசில இடங்களில் வன்முறை மற்றும் மோதல் சம்பவங்கள் நிகழ்ந்தன.
-
பா.ம.க. பிரமுகா் கொலை வழக்கு: குற்றவாளிகள் குறித்து தகவல் தெரிவித்தால் ரூ.25 லட்சம் பரிசு : என்.ஐ.ஏ. அறிவிப்பு
25 May 2024கோவை : தஞ்சாவூா் அருகே திருபுவனத்தைச் சோ்ந்த பா.ம.க. பிரமுகா் ராமலிங்கம் கொலை வழக்குத் தொடா்பாக தேடப்படும் 6 போ் குறித்து தகவல் தெரிவித்தால் ரூ.
-
பயனர்களின் தரவுகளை ஏற்றுமதி செய்யும் வாட்ஸ் அப் நிறுவனம்: எலான் மஸ்க் பரபரப்பு குற்றச்சாட்டு
25 May 2024வாஷிங்டன், வாட்ஸ் அப் தனது பயனர்களின் தரவை ஒவ்வொரு இரவும் (விளம்பர நிறுவனங்களுக்கு) ஏற்றுமதி செய்கிறது என்று எலான் மஸ்க் குற்றஞ்சாட்டியுள்ளார்.
-
ஜனநாயக கடமையாற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
25 May 2024புது டெல்லி, டெல்லியில் உள்ள டாக்டர் ராஜேந்திர பிரசாத் கேந்திரிய வித்யாலயாவில் உள்ள வாக்குச்சாவடிக்கு சென்ற ஜனாதிபதி திரவுபதி முர்மு தனது வாக்கைச் செலுத்தினார்.
-
வாக்களித்ததற்காக மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்கு சான்றிதழ்
25 May 2024புது டெல்லி, வாக்குச்சாவடியில் முதல் ஆண் வாக்காளராக வாக்குப்பதிவு செய்ததால் மத்திய அமைச்சர் ஜெய்சங்கருக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.
-
டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2, குரூப்-2ஏ முதன்மை தேர்வுக்கு புதிய பாடத்திட்டம் வெளியீடு
25 May 2024சென்னை : குரூப்-2 மற்றும் குரூப்-2-ஏ முதன்மைத் தேர்வுக்கான புதிய பாடத்திட்டத்தை தமிழக அரசுப் பணியாளார் தேர்வாணையமான டி.என்.பி.எஸ்.சி.
-
5 ஆண்டுகளில் 5 பிரதமர்களை நியமிக்க இண்டியா கூட்டணி கட்சிகள் திட்டம்: பிரதமர் மோடி குற்றச்சாட்டு
25 May 2024பாட்னா, 5 ஆண்டுகளில் 5 பிரதமர்களை உருவாக்கும் திட்டத்தில் இண்டியா கூட்டணியினர் உள்ளனர் என்று பீகாரில் நடந்த பிரச்சார பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி குற்றஞ்சாட்டினார்.&n
-
அபுதாபி இந்து கோவிலில் நடிகர் ரஜினிகாந்த் தரிசனம்
25 May 2024அபுதாபி, அபுதாபி நகருக்கு சென்ற நடிகர் ரஜினிகாந்த் கட்டப்பட்டுள்ள பாப்ஸ் இந்து கோவிலை பார்வையிட்டு தரிசனம் செய்தார்.
-
கேன்ஸ் திரைப்படவிழாவில் சிறந்த நடிகை விருதை வென்ற இந்திய நடிகை
25 May 2024பாரிஸ் : கேன்ஸ் திரைப்படவிழா 2024ல் நடிகை அனசுயா சிறந்த நடிகைக்கான விருது வென்றுள்ளார். இந்த செய்தி ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது.