எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பொங்கல் பரிசுப் பையின் முகப்பில் இனிய தமிழ்ப் புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்துகள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது கருத்துத் திணிப்பு என்று அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர் செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
பெட்ரோல், டீசல் விலை குறைப்பு, நீட் தேர்வு ரத்து, மாதம் ஒரு முறை மின் கட்டணம் செலுத்தும் முறை, மாதம் ஆயிரம் ரூபாய் மகளிர் உரிமைத் தொகை, கல்விக் கட்டணம் ரத்து, முதியோர் உதவித் தொகை உயர்வு, பழைய ஓய்வூதியத் திட்டம் என தி.மு.க.வால் அள்ளி வீசப்பட்ட வாக்குறுதிகள் எப்போது நிறைவேற்றப்படும்?
வெள்ளப் பெருக்கினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரணம் எப்போது வழங்கப்படும் என்று மக்கள் காத்திருந்த நிலையில், மக்கள் எண்ணத்திற்கு முற்றிலும் மாறான வகையில், 2022-ம் ஆண்டு பொங்கல் பரிசுப் பையின் முகப்பில், இனிய தமிழ்ப் புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்துகள் என்று குறிப்பிட்டுள்ளது தமிழக மக்களின் நம்பிக்கையை சிதைக்கும் விதமாக அமைந்துள்ளது.
தமிழ்நாட்டிலே பல நூற்றாண்டுக் காலமாக சித்திரை மாதப் பிறப்பு தான் தமிழ்ப் புத்தாண்டு தினமாக கொண்டாடப்படுகிறது இந்த மரபினை சீர்குலைக்கும் விதமாக எவ்வித வலுவான ஆதாரமும் இல்லாமல், தை மாதம் முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு என்பதற்கு வழிவகை செய்யும் சட்டம் முந்தைய தி.மு.க. ஆட்சிக் காலத்தில், 2008-ம் ஆண்டு இயற்றப்பட்டது.
பண்டிகை என்பது இதுநாள் வரை கடைபிடித்து வந்த முறைப்படி, மரபுப்படி, கலாச்சாரத்தின்படி, பழக்கவழக்கத்தின்படி கொண்டாடப்படுவது. இதற்கு எதற்குச் சட்டம்? இதில் ஏன் அரசு தலையிடுகிறது? என்பதுதான் மக்களின் வாதமாக இருந்தது. எனவேதான், சட்டம் இயற்றப்பட்டும், தமிழக மக்கள் சித்திரை முதல் தேதியையே தமிழ்ப் புத்தாண்டாக கொண்டாடி வந்தனர்.
கடந்த 2011-ம் ஆண்டு தமிழக முதல்வராகப் பொறுப்பேற்ற ஜெயலலிதா, தமிழ்நாடு தமிழ்ப் புத்தாண்டு நீக்கச் சட்டமுன்வடிவை 23.08.2011 அன்று தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றி சட்டமாக்கினார். இந்தச் சட்டத்தின்படி, தை முதல் நாள் தான் தமிழ்ப் புத்தாண்டு என்ற சட்டம் ரத்து செய்யப்பட்டது. இந்தச் சூழ்நிலையில், 2022-ம் ஆண்டு பொங்கல் பரிசுப் பையின் முகப்பில் இனிய தமிழ்ப் புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்துகள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதனைக் கண்டு மக்கள் அதிர்ச்சியில் உறைந்து போயிருக்கிறார்கள்.
எந்தெந்த பண்டிகையை எப்படிக் கொண்டாட வேண்டும், எப்பொழுது கொண்டாட வேண்டும் என்று முடிவு மக்களிடத்தில் தான் இருக்கிறது. அதை மக்கள் விருப்பப்படி விட்டுவிடுவது தான் நல்லது. எனவே, தமிழக முதல்வர் மக்களின் உணர்ச்சிகளுக்கு, கருத்துகளுக்கு மதிப்பளித்து, சித்திரை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு என்ற நடைமுறை, மரபு, கலாச்சாரம் தொடர்ந்திடவும், தமிழக மக்களின் நம்பிக்கைக்கு எதிராக பொங்கள் பையில் இடம்பெற்றுள்ள வாசகத்தை நிறுத்திடவும் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு ஓ. பன்னீர்செல்வம் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஆனியன் ரிங்ஸ்1 day 4 hours ago |
உருளைக்கிழங்கு ப்ரை5 days 4 hours ago |
க்ரிஸ்பி கார்ன் ஸ்நாக்ஸ்1 week 1 day ago |
-
அணியுடன் இணைந்த பாண்ட்யா
29 May 202420 அணிகள் கலந்து கொள்ள உள்ள டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் 1ம் தேதி (இந்திய நேரப்படி 2ம் தேதி) தொடங்குகிறது.
-
டி-20 உலகக் கோப்பை தொடர்: வாஷிங்டன்னில் பயிற்சியை தொடங்கிய இந்திய வீரர்கள்
29 May 2024வாஷிங்டன் : டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்க இந்திய அணி வாஷிங்டன்னில் நேற்று பயிற்சியை தொடங்கினர். இந்திய வீரர்கள் பயிற்சி செய்யும் வீடியோவை பி.சி.சி.ஐ.
-
சென்னை ஏரிகளில் நீா் இருப்பு: 4 மாதங்களுக்கு குடிநீா் விநியோகிப்பதில் பிரச்சினை இல்லை - அதிகாரிகள் தகவல்
29 May 2024சென்னை : சென்னைக்கு குடிநீா் வழங்கும் ஏரிகளில் 47சதவீதம் நீா் இருப்பு உள்ளதால், இன்னும் 4 மாதங்களுக்கு சென்னை மக்களுக்கு தட்டுப்பாடின்றி குடிநீா் விநியோகிக்க முடி
-
இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் தேர்வில் நீடிக்கும் தாமதம்
29 May 2024மும்பை : தலைமை பயிற்சியாளர் குறித்து இதுவரை கவுதம் கம்பீர் எந்த கருத்தும் தெரிவிக்காத நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் அடுத்த தலைமைப் பயிற்சியாளர் யார் என பி.சி
-
டி-20 உலகக்கோப்பை தொடர்: கோலி படைக்கவிருக்கும் இரண்டு அரிய சாதனைகள்
29 May 2024புதுடெல்லி : எதிர் வரும் டி20 உலகக்கோப்பையில் இந்திய அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி சில மாபெரும் சாதனைகளை படைக்க வாய்ப்பு உள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 30-05-2024.
30 May 2024 -
மருத்துவ காப்பீடு கோரிக்கைகளுக்கு 3 மணி நேரத்தில் தீர்வு: ஐ.ஆர்.டி.ஏ.ஐ
30 May 2024மும்பை, மருத்துவ காப்பீடு செய்தவர்களின் கோரிக்கைகளுக்கு ஒரு மணி நேரத்திற்குள் அனுமதிப்பதுடன், அவர்கள் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்வதற்கு 3 மணி நேரத்திற்கு மு
-
சாலையில் தர்ணா போராட்டம்: மெகபூபா முப்தி மீது வழக்கு
30 May 2024ஸ்ரீநகர், ரஜோரி தொகுதியில் கடந்த 25-ம் தேதி சாலையில் தர்ணா போராட்டம் நடத்தியது தொடர்பாக மெகபூபா முப்தி மீது, தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக அனந்த்நாக் போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.
-
தேர்தலில் தோற்றால் குடும்பத்துடன் அமெரிக்காவில் குடிபுக திட்டமா? பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனாக் மறுப்பு
30 May 2024லண்டன், நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் தனது கட்சி தோல்வியுற்றால், அமெரிக்காவிற்கு குடும்பத்துடன் குடிபுக திட்டமிட்டுள்ளதாக வெளியான தகவலை பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனாக்
-
பாலஸ்தீன தனிநாடுக்கு ஆதரவு: அரபு மாநாட்டில் ஜின்பிங் பேச்சு
30 May 2024பெய்ஜிங், தனி பாலஸ்தீன நாடு உருவாக்கத்திற்கு தன்னுடைய ஆதரவு உண்டு என்று சீன அதிபர் ஜி ஜின்பிங் தெரிவித்துள்ளார்.
-
காசா மீதான போர் மேலும் 7 மாதம் நீடிக்கும்: இஸ்ரேல்
30 May 2024டெல் அவிவ், காசா மீதான போர் மேலும் 7 மாதங்களுக்கு நீடிக்கும் என்று இஸ்ரேலின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் தெரிவித்துள்ளார்.
-
மெக்சிகோவில் பிரச்சாரத்தின் போது மேயர் வேட்பாளர் சுட்டுக் கொலை
30 May 2024அகாபுல்கோ, மெக்சிகோ நாட்டில் நேற்று முன்தினம் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு இருந்த மேயர் வேட்பாளரான ஆல்பிரடோ கப்ரேரா சுட்டுக் கொல்லப்பட்டார்.
-
ஊழலில் இரட்டை முனைவர் பட்டம் பெற்றுள்ளது காங்கிரஸ்: பிரதமர் மோடி கடும் தாக்கு
30 May 2024சண்டிகர், ஊழலில் காங்கிரஸ் இரட்டை முனைவர் பட்டம் பெற்றுள்ளது என்று நேற்று பஞ்சாப் மாநிலம் ஹோஷி யார்பூரில் இறுதிக்கட்ட பிரச்சார பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார்.&
-
இண்டியா கூட்டணிக்கு வெற்றி உறுதி: வெற்றி பெற்ற 48 மணி நேரத்தில் பிரதமர் தேர்வு செய்யப்படுவார்: ஜெய்ராம் ரமேஷ்
30 May 2024புது டெல்லி, மக்களவைத் தேர்தலில் இண்டியா கூட்டணியின் வெற்றி நிச்சயமாகி உள்ளதால், தேர்தல் முடிவு வெளியான 48 மணி நேரத்தில் பிரதமர் தேர்வு செய்யப்படுவார் என காங்கிரஸ் பொத
-
தங்கம் கடத்தல் வழக்கில் டெல்லியில் சசி தரூரின் முன்னாள் உதவியாளர் கைது
30 May 2024புது டெல்லி, டெல்லி விமான நிலையத்தில் தங்கம் கடத்தல் வழக்கில் காங்கிரஸ் எம்.பி. சசி தரூரின் முன்னாள் உதவியாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
-
வெப்ப அலை: வரும் 8-ம் தேதி வரை பீகாரில் பள்ளிகளுக்கு விடுமுறை
30 May 2024பாட்னா, வெப்ப அலையின் தாக்கம் காரணமாக பீகாரில் ஜூன் 8-ம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து அம்மாநில முதல்வர் நிதிஷ் குமார் உத்தரவிட்டுள்ளார்.
-
கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கியது: 12 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்
30 May 2024திருவனந்தபுரம், கேரளாவில் நேற்று தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
மதுபான முறைகேடு வழக்கு: டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் ஜாமீன் கோரி மனு தாக்கல்
30 May 2024புது டெல்லி, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஜாமீன் கோரி டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
-
நாட்டு மக்கள் முன்னேற்றத்திற்காக பிரதமர் மோடி தவம் செய்கிறார்: தமிழிசை சவுந்தரராஜன் அறிக்கை
30 May 2024சென்னை, நாட்டு மக்களின் முன்னேற்றத்திற்காக பிரதமர் மோடி தவம் மேற்கொள்ளவிருப்பதாக முன்னாள் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
-
த.மா.கா. கட்சியில் இருந்து ஈரோடு கவுதமன் விலகல்
30 May 2024ஈரோடு, த.மா.கா.வின் மாநில தேர்தல் முறையீட்டுக் குழு உறுப்பினர் மற்றும் நாமக்கல் மாவட்டப் பொறுப்பாளராக இருந்த ஈரோடு கவுதமன், த.மா.கா.வில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளா
-
வரும் 13, 14-ம் தேதிகளில் 5 பேர் கொண்ட நிபுணர் குழு முல்லை பெரியாறு அணையை பார்வையிடுகிறது
30 May 2024சென்னை, முல்லை பெரியாறு அணையை வரும் 13 மற்றும் 14-ம் தேதிகளில் 5 பேர் கொண்ட நிபுணர் குழு நேரில் பார்வையிட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
-
பிரதமர் கோவிலுக்கு செல்வது எப்படி தேர்தல் விதீமீறல் ஆகும்: மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கேள்வி
30 May 2024சென்னை, பிரதமர் கோவிலுக்கு செல்வது எப்படி தேர்தல் விதிமீறல் ஆகும் என்று மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கேள்வி எழுப்பி உள்ளார்.
-
காவல் நிலையத்திற்குள் புகுந்து காவலர்களை தாக்கிய ராணுவ வீரர்கள் 16 பேர் மீது வழக்கு
30 May 2024ஜம்மு, ஜம்முவில் காவல் நிலையத்திற்குள் புகுந்து காவலர்களை தாக்கியதாக ராணுவ வீரர்கள் 16 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
-
ரேசன் ஊழல் வழக்கு: வங்காள நடிகைக்கு அமலாக்கத்துறை சம்மன்
30 May 2024கொல்கத்தா, ரேசன் விநியோகத்தில் முறைகேடு நடந்ததாக எழுந்த குற்றச்சாட்டின் பேரில் இந்த வழக்கு தொடர்பாக விசாரணைக்கு ஆஜராகுமாறு வங்காள நடிகை ரிதுபர்ணா சென்குப்தாவுக்கு அமலாக
-
கஞ்சா வழக்கு: ஜாமீன் மனுவை வாபஸ் பெற்றார் சவுக்கு சங்கர்
30 May 2024மதுரை, கஞ்சா வைத்திருந்ததாக கைது செய்யப்பட்ட வழக்கில் தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்று தாக்கல் செய்த மனுவை சவுக்கு சங்கர் நேற்று வாபஸ் பெற்றுக் கொண்டார்.