எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
வெஸ்ட் இண்டீசை சேர்ந்த அதிரடி பேட்ஸ்மேன் 25 வயதான ஹெட்மயர், ஐ.பி.எல். கிரிக்கெட்டில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். 11 ஆட்டங்களில் 291 ரன்கள் (சராசரி 72.75) சேர்த்துள்ள அவர் அந்த அணியின் வெற்றியில் முக்கிய பங்காற்றியுள்ளார். இதில் 7 ஆட்டங்களில் நாட்-அவுட்டாக இருந்துள்ளார்.
இந்த நிலையில் நிறைமாத கர்ப்பிணியாக உள்ள அவரது மனைவி நிவானிக்கு குழந்தை பிறக்க இருப்பதால் ஹெட்மயர் நேற்று காலை தாயகம் புறப்பட்டு சென்றார். இது அவருக்கு முதல் குழந்தையாகும். கொரோனா தடுப்பு பாதுகாப்பு வளையத்தை விட்டு வெளியேறியுள்ள அவர் விரைவில் அணியுடன் இணைவதை எதிர்நோக்கி உள்ளதாக ராஜஸ்தான் நிர்வாகம் தெரிவித்துள்ளது. என்றாலும் சில ஆட்டங்களை அவர் தவற விடுவது அந்த அணிக்கு பெரும் பின்னடைவு என்பதில் சந்தேகமில்லை.
_____________
டோனி பேட்டை கடிக்க காரணம்: விளக்கம் கொடுத்த அமித் மிஸ்ரா
டோனி ஏன் பேட்டை அடிக்கடி கடிக்கிறார் என பலரும் கேள்வி எழுப்பி வந்த நிலையில் இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் அமித் மிஸ்ரா இதற்கு விளக்கம் அளித்துள்ளார்.
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் நடைபெற்ற டெல்லி கேபிட்டல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 91 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. முன்னதாக டோனி களமிறங்குவதற்கு முன்பு பெவிலியனில் காத்திருந்தபோது தனது பேட்டை பல்லால் கடித்துக் கொண்டிருந்தார். இது தொடர்பான காட்சிகள் கேமராவில் பதிவாகின. டோனி ஏன் பேட்டை கடிக்கிறார் என பலரும் கேள்வி எழுப்பி வந்த நிலையில் இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் அமித் மிஸ்ரா இதற்கு விளக்கம் அளித்துள்ளார்.
இதுதொடர்பாக அமித் மிஸ்ரா வெளியிட்ட ட்விட்டர் பதிவில், ''டோனி ஏன் அடிக்கடி தனது பேட்டை கடிக்கிறார்'என்று நீங்கள் யோசித்திருப்பீர்கள். அவர் தனது பேட்டை சுத்தமாக வைத்துக் கொள்வதற்காக, பேட்டில் உள்ள டேப்பை கடித்து அகற்றுகிறார். டோனியின் பேட்டில் டேப் அல்லது நூல் இருப்பதை நீங்கள் எப்போதுமே பார்த்திருக்க மாட்டீர்கள்'' என்று அவர் பதிவிட்டுள்ளார். நடப்பு ஐபிஎல் சீசனுக்கான ஏலத்தில் எந்தவொரு அணியும் அமித் மிஸ்ராவை வாங்கவில்லை. அதன் காரணமாக ஐபிஎல் வரலாற்றில் முதல் முறையாக விளையாடாமல் போட்டிகளை வெளியிலிருந்து கவனித்து வருகிறார் அவர்.
_____________
பொல்லார்டை நீக்க வேண்டும்: முன்னாள் வீரர் வலியுறுத்தல்
நடப்பு ஐபிஎல் சீசனில் இதுவரை ஆதிகாரபூர்வகமாக பிளே ஆப் வாய்ப்பை இழந்த ஒரே அணியாக மும்பை உள்ளது. இதுவரை 10 போட்டிகளில் விளையாடியுள்ள அந்த அணி 2 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக முன்னணி வீரர்கள் ரோகித் சர்மா, பொல்லார்ட் ஆகியோரின் மோசமான பேட்டிங் கருதப்படுகிறது. அவ்வப்போது ரோகித் சர்மா சோபித்தாலும் அணியின் அதிரடி ஆல்ரவுண்டர் பொல்லார்ட் தொடர்ந்து மோசமாக பேட்டிங் செய்துவருகிறார்.
இதுவரை 10 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 129 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். இந்த நிலையில் பொல்லார்ட் குறித்து இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரும் வர்ணனையாளருமான ஆகாஷ் சோப்ரா கருத்து தெரிவித்துள்ளார். பொல்லார்ட் குறித்து அவர் கூறுகையில், " திடீரென்று இப்போது பார்க்கையில் மும்பை ஒரு நல்ல அணியாக தெரிகிறது. ஆனால் அந்த அணியில் ஒரு உடனடி மாற்றம் தேவை. பொல்லார்ட்-க்கு பதில் டெவால்ட் ப்ரீவிஸ் வர வேண்டும். தொடர்ச்சியாக ரன்கள் எடுக்க திணறிவரும் பொல்லார்டுக்கு எத்தனை வாய்ப்புகள் கொடுப்பீர்கள்? என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
____________
டெவன் கான்வே குறித்து முகமது கைஃப் கருத்து
இந்த சீசனில் சென்னை அணியின் தொடக்க போட்டியில் கான்வே-விற்கு ஒருமுறை வாய்ப்பு வழங்கப்பட்டது. அதில் அவர் சோபிக்காத காரணத்தால் அதன்பின் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. பின்னர் கடைசி 3 போட்டிகளில் அவரை அணி நிர்வாகம் களமிறக்கியது. அவரும் தன்னை நிரூபித்துள்ளார்.
இந்த நிலையில் தற்போது அவர் குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் முஹமது கைப் பாராட்டு தெரிவித்துள்ளார். டெவன் கான்வே குறித்து அவர் கூறுகையில், " கான்வே ஒரே ஒரு தோல்விக்குப் பிறகு பிளேயிங் 11-ல் இருந்து கைவிடப்பட்டார். ஆனால் அவர் தற்போது பேட்டிங் செய்யும் விதத்தை பார்த்து சென்னை அணி அவரை முன்பே இறக்காமல் இருந்ததற்காக வருத்தப்படுவார்கள். அணியின் சிறந்த வீரரை அவர்கள் சரியாக பயன்படுத்தவில்லை என கைப் தெரிவித்தார்.
______________
தாமஸ் கோப்பை பேட்மிண்டன்: இந்திய குழு காலிறுதிக்கு தகுதி
தாய்லாந்து நாட்டின் பாங்காக் நகரில் தாமஸ் கோப்பை 2022 பேட்மிண்டன் போட்டிகள் நடந்து வருகின்றன. இதில் இந்திய அணி 2வது குழு போட்டியில் தொடக்கத்தில் இருந்தே வெற்றியை நோக்கி பயணித்தது. முதல் போட்டியில் உலக தர வரிசையில் முன்னாள் நம்பர் ஒன் வீரரான ஸ்ரீகாந்த் கிதம்பி, கினடாவின் பிரையான் யாங்கை வீழ்த்தினார். இதன்பின் சிராக் ஷெட்டி மற்றும் சாத்விக் சாய்ராஜ் ரங்கிரெட்டி ஜோடி, ஜேசன் அந்தோணி ஹோ-ஷு மற்றும் கெவின் லீ ஜோடியை எதிர்கொண்டது. இதில் 21-12, 21-11 என்ற செட் கணக்கில் இந்திய ஜோடி எளிதில் வெற்றி பெற்றது.
அடுத்த போட்டியில் இந்தியாவின் எச்.எஸ். பிரணாய் மற்றும் பி.ஆர். சங்கீர்த் ஆகியோர் விளையாடினர். இதில் இந்திய ஜோடி 21-15, 21-11 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றது. இதன் பின்பு 5வது போட்டியில், இந்தியாவின் பிரியன்ஷு ரஜாவத் மற்றும் விக்டர் லாய் ஜோடி 21-14 என்ற கணக்கில் வெற்றி பெற்று போட்டியையும் தன்வசப்படுத்தினார். இதனால், இந்திய அணி 5-0 என்ற புள்ளி கணக்கில் கனடாவை வீழ்த்தியது. இந்திய அணி ஜெர்மனியுடனான குழு போட்டியில் 5-0 என வெற்றி பெற்று இருந்தது. இதனால், காலிறுதி போட்டிக்கு இந்திய அணி தகுதி பெற்றிருக்கிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 month 3 weeks ago | வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 month 3 weeks ago | ஆவாரம்பூவின் மருத்துவ பலன்கள் 1 month 3 weeks ago |
தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 3 weeks ago | குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 8 months 1 week ago | பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 1 week ago |
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு ப்ரை6 hours 8 sec ago |
க்ரிஸ்பி கார்ன் ஸ்நாக்ஸ்3 days 5 hours ago |
ஆப்பிள் ரோஸ்ட்1 week 5 hours ago |
-
போர் நிறுத்தத்திற்கு உக்ரைனுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார்: ரஷ்ய செய்தி தொடர்பாளர் தகவல்
25 May 2024மாஸ்கோ, போரை நிறைவு செய்வதற்காக ,உக்ரைனுடன் பேச்சுவார்த்தை நடத்த ரஷ்யா தயாராக இருக்கிறது என அந்நாட்டு செய்தி தொடர்பாளர் டிமித்ரி பெஸ்கோ தெரிவித்துள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 25-05-2024.
25 May 2024 -
அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர 2.58 லட்சம் பேர் விண்ணப்பம்
25 May 2024சென்னை : அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர கடந்த 19 நாட்களில், 2 லட்சத்து 58 ஆயிரத்து 527 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
தசைப் பயிற்சியாளர்கள் மற்றும் சிறப்பு ஆசிரியர்களுக்கான மதிப்பூதியம் உயர்வு: தமிழக அரசு
25 May 2024சென்னை : தமிழக அரசானது சிறப்பு ஆசிரியர், தசை பயிற்சியாளர்களுக்கான மதிப்பூதியம் ரூ.14,000லிருந்து ரூ.18,000ஆக உயர்த்தி வழங்க உத்தரவு பிறப்பித்துள்ளது.
-
புயல் எச்சரிக்கை: சென்னையில் இருந்து அந்தமானுக்கு இயக்கப்படும் : விமான சேவைகள் ரத்து
25 May 2024சென்னை, வங்க கடலில் உருவாகியுள்ள ரெமல் புயல் காரணமாக, ஏர் இந்தியா விமான நிறுவனம் அந்தமானுக்கு இயக்கப்படும் விமான சேவைகளை, நேற்று ஒரு நாள், முழுவதுமாக ரத்து செய்துள்ளது.
-
பூத் முகவர்களை கைது செய்ததால் மெகபூபா முப்தி சாலையில் அமர்ந்து போராட்டம்
25 May 2024ஸ்ரீநகர், தனது கட்சியின் பூத் முகவர்களை காரணமின்றி போலீசார் கைது செய்ததாக குற்றஞ்சாட்டி காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி நேற்று சாலையில் அமர்ந்து போராட்டத்தில்
-
நலத்திட்ட பொருள்கள் வழங்கும் பணியில் மாணவர்களை ஈடுபடுத்தக்கூடாது: ஆசிரியர்களுக்கு அரசு அறிவுறுத்தல்
25 May 2024சென்னை : பள்ளிகளில் நலத்திட்ட பொருள்கள் வழங்கும் பணிகளில் மாணவர்களை ஈடுபடுத்தக்கூடாது என்று ஆசிரியர்களுக்கு பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.
-
இயல்பை விட கோடை மழை தமிழ்நாட்டில் அதிக பொழிவு : வானிலை ஆய்வு மையம் தகவல்
25 May 2024சென்னை : தமிழகத்தில் கோடை மழை இயல்பை விட அதிகமாக 29 சதவீதம் பெய்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
6-ம் கட்ட தேர்தல் : வாக்களித்த பின் தாயுடன் செல்பி எடுத்த ராகுல் காந்தி
25 May 2024புதுடெல்லி : டெல்லியில் நிர்மான் பவன் வாக்குச்சாவடியில் தங்களது வாக்குகளை செலுத்திய பின் தனது தாய் சோனியா காந்தியுடன் ராகுல் காந்தி செல்பி எடுத்து கொண்டார்.
-
அரசு பேருந்துகளில் காவலர்களுக்கு இலவச பயணத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும் : தமிழக அரசுக்கு இ.பி.எஸ். வலியுறுத்தல்
25 May 2024சென்னை : சட்டப்பேரவை மானியக் கோரிக்கையில் அறிவித்தபடி அரசு பேருந்துகளில் காவலர்களுக்கான இலவசப் பயணத்தை உடனே அமல்படுத்த வேண்டும் என்று தமிழக அரசுக்கு அதிமுக பொதுச்செயலாள
-
ஊட்டியில் நாளை முதல் 2 நாட்கள் நடக்கும் துணைவேந்தர்கள் மாநாடு: கவர்னர் ஆர்.என்.ரவி பங்கேற்கிறார்
25 May 2024ஊட்டி,ஊட்டி ராஜ்பவன் மாளிகையில் நாளை முதல் 2 நாட்கள் நடைபெறவுள்ள துணைவேந்தர்கள் மாநாட்டில் கவர்னர் ஆர்.என். ரவி கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார்.
-
மழை பாதிப்புகளை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை : தலைமைச்செயலாளர் சிவ்தாஸ் மீனா பேட்டி
25 May 2024சென்னை : மழையால் ஏற்படும் பாதிப்புகளை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா தெரிவித்தார்.
-
மே மாத விடுமுறை: வரும் 28-ம் தேதி வண்டலூர் உயிரியல் பூங்கா திறந்திருக்கும் என அறிவிப்பு
25 May 2024சென்னை : மே மாத விடுமுறையை முன்னிட்டு வருகிற 28-ம் தேதி வண்டலூர் உயிரியல் பூங்கா திறந்திருக்கும் என்று பூங்கா நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.
-
6-ம் கட்ட வாக்குப்பதிவின் போதும் மேற்கு வங்காளத்தில் ஒருசில இடங்களில் வன்முறை-மோதல்
25 May 2024கொல்கத்தா : பாராளுமன்றத்திற்கு 6-ம் கட்டமாக நேற்று நடந்த தேர்தலிலும் மேற்கு வங்காளத்தில் ஒருசில இடங்களில் வன்முறை மற்றும் மோதல் சம்பவங்கள் நிகழ்ந்தன.
-
காவல்துறை இடையே பிரச்சினை: சென்னை தலைமை செயலகத்தில் துறை செயலாளர்கள் ஆலோசனை
25 May 2024சென்னை : தமிழக போக்குவரத்து துறை மற்றும் காவல் துறையினர் இடையே பிரச்சினை நீடித்து வரும் நிலையில், தமிழக முதல்வரின் உத்தரவின் பேரில் உள்துறை செயலாளர் அமுதா, போக்கு
-
பயனர்களின் தரவுகளை ஏற்றுமதி செய்யும் வாட்ஸ் அப் நிறுவனம்: எலான் மஸ்க் பரபரப்பு குற்றச்சாட்டு
25 May 2024வாஷிங்டன், வாட்ஸ் அப் தனது பயனர்களின் தரவை ஒவ்வொரு இரவும் (விளம்பர நிறுவனங்களுக்கு) ஏற்றுமதி செய்கிறது என்று எலான் மஸ்க் குற்றஞ்சாட்டியுள்ளார்.
-
5 ஆண்டுகளில் 5 பிரதமர்களை நியமிக்க இண்டியா கூட்டணி கட்சிகள் திட்டம்: பிரதமர் மோடி குற்றச்சாட்டு
25 May 2024பாட்னா, 5 ஆண்டுகளில் 5 பிரதமர்களை உருவாக்கும் திட்டத்தில் இண்டியா கூட்டணியினர் உள்ளனர் என்று பீகாரில் நடந்த பிரச்சார பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி குற்றஞ்சாட்டினார்.&n
-
பணவீக்கம், வேலையின்மைக்கு எதிராக வாக்களித்தேன்: கெஜ்ரிவால்
25 May 2024புது டெல்லி, பணவீக்கம் மற்றும் வேலையின்மைக்கு எதிராக நான் வாக்களித்துள்ளேன் என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்தார்.
-
ஜனநாயக கடமையாற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
25 May 2024புது டெல்லி, டெல்லியில் உள்ள டாக்டர் ராஜேந்திர பிரசாத் கேந்திரிய வித்யாலயாவில் உள்ள வாக்குச்சாவடிக்கு சென்ற ஜனாதிபதி திரவுபதி முர்மு தனது வாக்கைச் செலுத்தினார்.
-
வாக்களித்ததற்காக மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்கு சான்றிதழ்
25 May 2024புது டெல்லி, வாக்குச்சாவடியில் முதல் ஆண் வாக்காளராக வாக்குப்பதிவு செய்ததால் மத்திய அமைச்சர் ஜெய்சங்கருக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.
-
அபுதாபி இந்து கோவிலில் நடிகர் ரஜினிகாந்த் தரிசனம்
25 May 2024அபுதாபி, அபுதாபி நகருக்கு சென்ற நடிகர் ரஜினிகாந்த் கட்டப்பட்டுள்ள பாப்ஸ் இந்து கோவிலை பார்வையிட்டு தரிசனம் செய்தார்.
-
அமெரிக்க நீதிபதியான ஆந்திராவில் பிறந்த பெண்
25 May 2024வாஷிங்டன் : ஆந்திராவின் விஜயவாடாவில் பிறந்த ஜெயா படிகா என்ற பெண் கலிபோர்னியாவில் உள்ள நீதிமன்றத்தில் நீதிபதியாக நியமிக்கப்பட்டு உள்ளார்.
-
டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2, குரூப்-2ஏ முதன்மை தேர்வுக்கு புதிய பாடத்திட்டம் வெளியீடு
25 May 2024சென்னை : குரூப்-2 மற்றும் குரூப்-2-ஏ முதன்மைத் தேர்வுக்கான புதிய பாடத்திட்டத்தை தமிழக அரசுப் பணியாளார் தேர்வாணையமான டி.என்.பி.எஸ்.சி.
-
பயங்கரவாத அமைப்புக்கு ஆதரவு: சென்னையில் மேலும் 3 பேர் கைது
25 May 2024சென்னை : பல நாடுகளிலும் தடை செய்யப்பட்ட, ஹிஸ்ப் உத் தஹ்ரீர் என்ற பயங்கரவாத இயக்கத்தின் ஆதரவாளர்கள் மூன்று பேரை, சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் நேற்று முன்தி
-
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா குறித்த அண்ணாமலை பேச்சு: ஜெயக்குமார் கண்டனம்
25 May 2024சென்னை, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஜாதி, மதங்களுக்கு அப்பாற்பட்டவர். அவரை மதவாத தலைவர் என களங்கப்படுத்துவதா என்று தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலைக்கு அ.தி.மு.க.