எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஒற்றைத் தலைமை குறித்தும் இன்று விவாதிக்கப்பட்டது. அந்த விவாதம் ஓர் ஆரோக்கியமான முறையில் இருந்தது. இதுதொடர்பாக பெரும்பான்மையான தலைமைக் கழக நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள், அ.தி.மு.கவுக்கு ஒற்றைத் தலைமைதான் தேவை என்பதை வலியுறுத்திக் கருத்துகளைத் தெரிவித்துள்ளனர்" என்று அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
வரும் ஜூன் 23-ம் தேதியன்று நடைபெறவுள்ள அ.தி.மு.க செயற்குழு, பொதுக்குழுக் கூட்டம் தொடர்பாக தலைமைக் கழக நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்களுடன், கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமையில் நேற்று சென்னையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பின்னர் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது அவர் கூறியது: "பொதுக்குழுவுக்கு முன்பாக தற்போது நடைபெற்ற கூட்டத்தில், ஒற்றைத் தலைமை குறித்தும் விவாதிக்கப்பட்டது. அந்த விவாதம் ஒரு ஆரோக்கியமான முறையில் இருந்தது. அதுதொடர்பாக பெரும்பான்மையான தலைமைக் கழக நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள், அ.தி.மு.கவுக்கு ஒற்றைத் தலைமைதான் தேவை என்பதை வலியுறுத்திக் கருத்துகளைத் தெரிவித்துள்ளனர்.
கூட்டத்தில் கலந்துகொண்ட பெரும்பான்மையானவர்களின் கருத்து என்பது, கட்சியைப் பொருத்தவரை, அ.தி.மு.கவைப் பொருத்தவரை, அ.தி.மு.க ஒரு வலிமையான இயக்கம் என்ற முறையில், ஒற்றைத் தலைமை அவசியம் என்பதை வலியுறுத்தி பேசினார்கள். அந்த ஒற்றைத் தலைமை யார் என்பது குறித்து தற்போது விவாதிக்கப்படவில்லை. இதுதொடர்பாக கட்சி முடிவு செய்யும்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னர், இரட்டைத் தலைமை என்ற நிலையில் இருந்து பொதுக்குழுவுக்கு முன்பாக, தலைமைக் கழக நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடத்தப்பட்டு, பொதுக்குழு தீர்மானங்கள் மற்றும் தலைமை தொடர்பாகவும் கருத்துகள் முன்வைக்கப்பட்டது. இந்த கூட்டத்தில், பெரும்பான்மையானவர்கள் கட்சிக்கு ஒற்றைத் தலைமை தேவை என்பதை வலியுறுத்தியுள்ளனர்.
காலம் எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டுதான் உள்ளது. அன்றைக்கு இருந்த நிலை வேறு, இன்றைக்கு இருக்கின்ற நிலை வேறு. இன்று ஒட்டுமொத்தமாக, அ.தி.மு.க தொண்டர்களும் சரி, கட்சியின் நிர்வாகிகளும் சரி, பொதுவாகவே எதிர்பார்ப்பது கட்சிக்கு ஒற்றைத் தலைமை தேவை என்பதுதான். காலத்தின் கட்டாயத்தின் அடிப்படையில் இன்று அதுதொடர்பாக விவாதிக்கப்பட்டது. இன்றைய கூட்டத்தில் கலந்துகொண்ட பெரும்பான்மையானவர்கள் இதற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்" என்று அவர் கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 month 4 weeks ago | வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 month 4 weeks ago | ஆவாரம்பூவின் மருத்துவ பலன்கள் 1 month 4 weeks ago |
தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 3 weeks ago | குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 8 months 1 week ago | பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 1 week ago |
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு ப்ரை1 day 18 hours ago |
க்ரிஸ்பி கார்ன் ஸ்நாக்ஸ்4 days 17 hours ago |
ஆப்பிள் ரோஸ்ட்1 week 1 day ago |
-
சமாளிக்க தயாராக இருங்கள்: இஸ்ரேல் படைக்கு எச்சரிக்கை விடுத்த ஹிஸ்புல்லா அமைப்பு
26 May 2024லெபனான் : எங்கள் தரப்பில் இருந்து உங்களுக்கு ஆச்சரியங்கள் காத்திருக்கின்றன.
-
டெல்லி மருத்துவமனையில் நிகழ்ந்த தீ விபத்தில் 6 குழந்தைகள் உயிரிழப்பு : பிரதமர் மோடி, கெஜ்ரிவால் இரங்கல்
26 May 2024புதுடெல்லி : டெல்லி மருத்துவமனையில் ஏற்பட்ட திடீர் தீவிபத்தில் 6 குழந்தைகள் உயிரிழந்தன.
-
தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் நாளை மாபெரும் சமபந்தி விருந்து : விஜய் கட்சி ஏற்பாடு
26 May 2024சென்னை : உலக பட்டினி தினத்தை முன்னிட்டு நாளை தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் மாபெரும் சமபந்தி விருந்து நிகழ்ச்சி நடைபெறுகிறது.
-
இலவச லேப்டாப்: இந்த ஆண்டாவது அரசு வழங்க வேண்டும்: எடப்பாடி
26 May 2024சென்னை : இலவச மடிக்கணினியை இந்த ஆண்டாவது மாணவர்களுக்கு அரசு வழங்க வேண்டும் என்று அ.தி.மு.க. பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.
-
ஏற்காட்டில் கோடை விழா நிறைவு: சுற்றுலா பயணிகள் குவிந்தனர்
26 May 2024சேலம் : ஏற்காட்டில் கோடை விழா நேற்றுடன் நிறைவு பெற்ற நிலையில், விடுமுறை நாள் என்பதால் நேற்று ஏராளமான சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் குவிந்தனர்.
-
தி.மலை கோவிலில் ஐகோர்ட் தலைமை நீதிபதி தரிசனம்
26 May 2024தி.மலை : சென்னை ஐகோர்ட்டின் பொறுப்பு தலைமை நீதிபதி மகாதேவன் நேற்று காலை திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார்.
-
முல்லைப்பெரியாறு விவகாரம்: கேரள அரசுக்கு ஓ.பி.எஸ். கண்டனம்
26 May 2024சென்னை : இது குறித்து முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
-
100 யூனிட் விலையில்லா மின்சாரம், எளியோருக்கு தொடர்ந்து கிடைக்க எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
26 May 2024சென்னை : 100 யூனிட் விலையில்லா மின்சாரம் ஏழை, எளியோருக்கு தொடர்ந்து கிடைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசுக்கு எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.
-
வட கொரியாவுக்கு செல்ல ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் முடிவு
26 May 2024மாஸ்கோ : ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், அரசு முறைப்பயணமாக வடகொரியா செல்ல முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
கே.ஆர்.பி. அணை நீர்மட்டம் 10 நாளில் 6 அடி உயர்ந்தது : விவசாயிகள் மகிழ்ச்சி
26 May 2024கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக, கே.ஆர்.பி அணையின் நீர்மட்டம் 10 நாளில் 6 அடி உயர்ந்துள்ளது.
-
சொத்து வரி நிலுவை: முதல் 100 பேர் பட்டியலை இணையத்தில் வெளியிட சென்னை மாநகராட்சி திட்டம்
26 May 2024சென்னை : மாநகராட்சியில் சொத்து வரி நிலுவை வைத்துள்ள முதல் 100 பேர் பட்டியலை இணையத்தில் வெளியிட சென்னை மாநகராட்சி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.
-
மக்களவை தேர்தல்: ஜூன் 4-ல் வெற்றிக் கொடியேற்றி கருணாநிதி நினைவிடத்தில் சமர்ப்பிப்போம் : தொண்டர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
26 May 2024சென்னை : ஜூன்-4 மக்களவைத் தேர்தல் வெற்றிக் கொடி ஏற்றி தன்னிகரில்லா தமிழின தலைவரின் நினைவிடத்தில் சமர்ப்பிப்போம் என்று தி.மு.க.
-
பணிபுரிய வெளிநாடு செல்லும் தமிழர்கள் போலி வேலை வாய்ப்பை நம்பி ஏமாற வேண்டாம் : அயலகத் தமிழர் நலத்துறை எச்சரிக்கை
26 May 2024சென்னை : பணிபுரிய வெளிநாடு செல்லும் தமிழர்கள் போலி வேலை வாய்ப்பை நம்பி ஏமாற வேண்டாம் என்றும், ஆள்சேர்ப்பு முகவர், பணி வழங்கும் நிறுவனம் குறித்து நன்றாக விசாரித்து பணிக்
-
விளையாட்டு அரங்கு தீ விபத்து: தாமாக முன்வந்து வழக்கை விசாரிக்கிறது குஜராத் உயர் நீதிமன்றம் : பலி எண்ணிக்கை 33 ஆனதை அடுத்து நடவடிக்கை
26 May 2024அகமதாபாத் : குஜராத், ராஜ்கோட்டில் நடந்த விளையாட்டு அரங்கு தீ விபத்தில் பலி எண்ணிக்கை 33 ஆக உயர்ந்ததை அடுத்து தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்த குஜராத் உயர் நீதிமன்றம்
-
இமாச்சலில் பருவமழை பேரழிவுக்கு நிவாரணம் கொடுக்கவில்லை : பிரதமர் மோடி மீது ராகுல் குற்றச்சாட்டு
26 May 2024சிம்லா : 22 பேரின் கடனை பிரதமர் மோடி தள்ளுபடி செய்தார். ஆனால் இமாச்சல பிரதேசத்தில் பருவமழை பேரழிவுக்கு ரூ.9,000 கோடி கொடுக்கவில்லை என காங்கிரஸ் எம்.பி.
-
சென்னையில் பா.ஜ.க. நிர்வாகிகளுடன் அண்ணாமலை இன்று ஆலோசனை
26 May 2024சென்னை : சென்னை அமிஞ்சிகரை அய்யாவு மகாலில் இன்று நிர்வாகிகளுடன் தமிழக பா.ஜ.க.தலைவர் அண்ணாமலை ஆலோசனை கூட்டம் நடத்துகிறார்.
-
அமெரிக்காவில் கருக்கலைப்பு மாத்திரைகளுக்கு கட்டுப்பாடு
26 May 2024வாஷிங்டன் : அமெரிக்காவில் கருக்கலைப்பு மாத்திரைகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
-
அடுத்த 4 நாட்களுக்கு தமிழகத்தில் வெப்பநிலை படிப்படியாக உயரக்கூடும் : சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
26 May 2024சென்னை : தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு வெப்பநிலை படிப்படியாக உயரக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
கேன்ஸ் விழாவில் உயரிய விருதை வென்ற முதல் இந்திய இயக்குனர்
26 May 2024பாரீஸ் : கேன்ஸ் திரைப்பட விழாவில் இரண்டாவது உயரிய விருதான கிரண்ட் பிரிக்ஸை இந்திய திரைப்படமான ஆல் வி இமேஜின் அஸ் லைட் படம் வென்றுள்ளது.
-
பறவைகள் மோதியதால் லடாக் சென்ற விமானம் டெல்லியில் அவசரமாக தரையிறக்கம்
26 May 2024புதுடெல்லி : பறவைகள் மோதியதால் டெல்லியில் இருந்து லடாக் புறப்பட்டு சென்ற விமானம் அவசர அவசரமாக டெல்லி விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது.
-
கன்னியாகுமரியில் தொடர் மழை: தாமிரபரணியில் வெள்ளப்பெருக்கு
26 May 2024கன்னியாகுமரி : கன்னியாகுமரியில் பெய்து வரும் தொடர் மழையால், தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
-
சூடானில் கலவரம்: 17 வீரர்கள் உட்பட 47 பேர் படுகொலை
26 May 2024கார்டூம் : சூடான் நாட்டில் ஏற்பட்ட திடீர் கலவரத்தில் 17 வீரர்கள் உட்பட 47 பேர் கொல்லப்பட்டனர்.
-
அரசு கலை கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கை: தரவரிசை பட்டியல் இன்று வெளியீடு : முதல்கட்ட கலந்தாய்வு நாளை தொடக்கம்
26 May 2024சென்னை : அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான தரவரிசை பட்டியல் இன்று வெளியாகிறது. முதல்கட்ட கலந்தாய்வு நாளை முதல் தொடங்குகிறது.
-
நான் ஒரு ஏலியன்தான்: நிகழ்ச்சி தொகுப்பாளரின் கேள்விக்கு பதிலளித்த எலான் மஸ்க்
26 May 2024பாரீஸ் : நிகழ்ச்சி தொகுப்பாளரின் கேள்விக்கு சிரித்துக்கொண்டே பதிலளித்த எலான் மஸ்க், நான் ஒரு ஏலியன்தான், ஆனால் யாரும் என்னை நம்பவில்லை என கூறினார்.
-
வாரணாசியில் அதிக பிரச்சாரம் செய்ய வேண்டிய அவசியமில்லை : மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் கருத்து
26 May 2024லக்னோ : வாரணாசி தொகுதியை பொறுத்தவரை அதிக பிரச்சாரம் மேற்கொள்ள வேண்டிய அவசியமில்லை என்று மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்தார்.