முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

துனிசியா கடலில் அகதிகள் சென்ற படகுகள் கவிழ்ந்து 5 பேர் உயிரிழப்பு

வெள்ளிக்கிழமை, 9 ஜூன் 2023      உலகம்
Tunisia 2023 06 09

Source: provided

துனிசியா : துனிசியாவில் அகதிகள் சென்ற படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 5 பேர் பலியாயினர். 

துனிசியா நாட்டில் இருந்து இத்தாலிக்கு ஏராளமானோர் திருட்டுத்தனமாக படகுகளில் அகதிகளாக சென்று வருகின்றனர். கடந்த ஒரு வாரத்தில் மட்டும் இப்படி அகதிகளாக தப்பி சென்ற போது 3 படகுகள் கடலில் கவிழ்ந்து மூழ்கியது. 

இதில் ஆப்பிரிக்காவை சேர்ந்த ஒரு குழந்தை உள்பட 5 பேர் கடலில் மூழ்கி இறந்தனர். 6 குழந்தைகள் உள்பட 47 பேர் மாயமாகி விட்டனர். அவர்கள் கதி என்னவென்று தெரியவில்லை. 73 பேரை கடலோர ரோந்து படையினர் மீட்டதாக துனிசியா அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து