எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதுடெல்லி : டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கியது சுப்ரீம் கோர்ட். தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள அனுமதிக்கும் வகையில் அவருக்கு வரும் ஜூன் 1-ம் தேதி வரையில் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. இது குறித்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் கன்னா மற்றும் திபங்கர் தத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு, மக்களவைத் தேர்தல் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படுகின்ற காரணத்தை கருத்தில் கொண்டு, அவருக்கு ஜாமீன் வழங்கியுள்ளதாக தெரிவித்தனர்.
திகார் சிறையில்...
மதுபான கொள்கை ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்ட டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால், திகார் சிறையில் அடைக்கப்பட்டார். அவரது ஜாமீன் மனு மீது சுப்ரீம் கோர்ட்டிடம் மே 7-ம் தேதி விசாரணை நடைபெற்றது. நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா, திபாங்கர் தத்தா அமர்வு இந்த மனுவை விசாரித்தது. தேர்தலை முன்னிட்டு அர்விந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டால், அவர் அலுவலக பணியில் ஈடுபடக் கூடாது என சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் கூறினர். அவர் அரசு கோப்புகள் எதிலும் கையெழுத்திட மாட்டார் என அவரது வக்கீல் அபிஷேக் சிங்வி தெரிவித்தார்.
விடுவிக்க முடியுமா?
இதற்கு அமலாக்கத் துறை சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. “மக்கள் பிரதிநிதிகள் தொடர்புடைய 5 ஆயிரம் வழக்குகள் நிலுவையில் உள்ளன. அவர்களை எல்லாம் ஜாமீனில் விடுவிக்க முடியுமா? ஒரு விவசாயிக்குகூட அறுவடை, விதை விதைப்பு போன்ற முக்கிய பணிகள் உள்ளன. விவசாயியைவிட அரசியல்வாதி மேலானவரா?” என கூடுதல் சொலிட்டர் ஜெனரல் துஷார் மேத்தார் கேள்வி எழுப்பினார்.
சிறப்பு காரணங்கள்...
அப்போது நீதிபதிகள் கூறும்போது, “இது அரசியல்வாதியின் வழக்கா, சாதாரண நபர் வழக்கா என்று நாங்கள் பார்ப்பது இல்லை. ஒவ்வொரு தனிப்பட்ட நபருக்கும் சில சிறப்பு காரணங்கள் உள்ளன. விலக்குக்கான சந்தர்ப்பங்களும் உள்ளன. தேர்தல் நடைபெறுவதால்தான் இதுகுறித்து நாங்கள் பரிசீலிக்கிறோம்” என்று தெரிவித்தனர். அதன் தொடர்ச்சியாக, கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ராஜுவிடம் நீதிபதி சஞ்சீவ் கன்னா கூறும்போது, “அர்விந்த் கெஜ்ரிவால் ஜாமீன் மனு மீது மே 10-ம் தேதி இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்படலாம்” என்றார்.
உரிமை அல்ல...
அதன்பின்னர், அமலாக்கத் துறை சார்பில் வியாழக்கிழமை சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட புதிய பதில் மனுவில், கெஜ்ரிவாலை ஜாமீனில் விடுவிக்க எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டிருந்தது. அந்த மனுவில், “தேர்தல் பிரச்சார உரிமை, அடிப்படை உரிமையோ, அரசியல் சாசன உரிமையோ அல்லது சட்டப்படியான உரிமையோ அல்ல. தேர்தல் பிரச்சாரத்துக்காக இதுவரை எந்த அரசியல் தலைவருக்கும் இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டதில்லை.
போட்டி இல்லை...
நாட்டில் ஆண்டு முழுவதும் எங்காவது ஓர் இடத்தில் தேர்தல் நடைபெறுகிறது. கடந்த 3 ஆண்டில் 124 தேர்தல்கள் நடைபெற்றுள்ளன. தேர்தல் பிரச்சாரத்துக்காக, இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டால், எந்த அரசியல்வாதியையும் கைது செய்து, நீதிமன்ற காவலில் வைக்க முடியாது. இந்த தேர்தலில் கெஜ்ரிவால் போட்டியிடவும் இல்லை. எனவே, அவருக்கு இடைக்கால ஜாமீன் வழங்கக் கூடாது” என்று அமலாக்கத் துறை கூறியிருந்தது. இந்தப் பின்னணியில், அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு தற்போது இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.
அமலாக்கத்துறை எதிர்ப்பு...
முன்னதாக இந்தியாவில் தேர்தல் வருடம் முழுவதும் நடைபெறுகின்ற காரணத்தால் கெஜ்ரிவாலுக்கு பிரச்சாரம் செய்ய ஜாமீன் வழங்குவது அரசியல்வாதிகளின் கைது நடவடிக்கையை முடிவுக்குக் கொண்டு வரும் என்று இந்த வழக்கில் அமலாக்கத் துறை வாதிட்டது. இதற்கு, கெஜ்ரிவால் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஏ.எம்.சிங்வி எதிர்ப்பு தெரிவித்தார். இதன் தொடர்ச்சியாக, கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி நீதிபதிகள் உத்தரவிட்டனர். வரும் ஜூன் 2-ம் தேதி அவர் மீண்டும் சரணடைய வேண்டும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
வரும் 25-ம் தேதி....
சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் மேலும் தெரிவிக்கையில்., இந்தத் தீர்ப்பு அரசியல் ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்தது என அரசியல் கட்சியை சார்ந்தவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு வழங்கப்பட்டுள்ள இடைக்கால ஜாமீனை ஆம் ஆத்மி கட்சி தொண்டர்கள் கொண்டாடி வருகின்றனர். எதிர்வரும் 25-ம் தேதி டெல்லியில் பாராளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. மொத்தம் உள்ள 7 தொகுதிகளில் இண்டியா கூட்டணி சார்பில் ஆம் ஆத்மி 4 மற்றும் காங்கிரஸ் கட்சி 3 தொகுதிகளிலும் போட்டியிடவுள்ளது குறிப்பிடத்தக்கது.
நிபந்தனைகள் என்னென்ன:-
1) கெஜ்ரிவால் முதல்வர் அலுவலகம், தலைமைச் செயலகம் செல்லக்கூடாது.
2) சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பான வழக்கு குறித்து கருத்து கூறக்கூடாது.
3) இடைக்கால ஜாமீன் தொகையாக ரூ.50,000 செலுத்த வேண்டும்.
4) அலுவலகம் சார்ந்த கோப்புகளில் கையெழுத்து போடக்கூடாது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
முட்டைகோஸ் கட்லெட்1 day 18 hours ago |
ஆனியன் ரிங்ஸ்4 days 17 hours ago |
உருளைக்கிழங்கு ப்ரை1 week 1 day ago |
-
குற்றாலத்தில் கொட்டும் தண்ணீர் சுற்றுலா பயணிகள் உற்சாக குளியல்
02 Jun 2024தென்காசி : குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஓரளவு கொட்டியதை தொடர்ந்து நேற்று விடுமுறை நாள் என்பதால் சுற்றுலா பயணிகள் அதிகளவில் குவிந்திருந்தனர்.
-
ஸ்பைஸ் ஜெட் விமான சேவை வரும் 10-ம் தேதி வரை ரத்து ஏமாற்றத்துடன் திரும்பி சென்ற பயணிகள்
02 Jun 2024சென்னை : வருகிற 10-ம் தேதி வரை ஸ்பைஸ் ஜெட் விமான நிறுவனம் அனைத்து நகரங்களுக்கும் செல்லும் விமானங்களை ரத்து செய்வதாக அறிவித்து உள்ளது.
-
தமிழன் ஏன் இந்தியாவுக்கு தலைமை தாங்கக்கூடாது : நடிகர் கமல்ஹாசன் பேச்சு
02 Jun 2024சென்னை : தமிழன் ஏன் இந்தியாவுக்கு தலைமை தாங்கக்கூடாது என்பதே என் எண்ணம் என்று நடிகர் கமலஹாசன் தெரிவித்துள்ளார்.
-
நீர்வரத்து அதிகரிப்பு: ஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகள் ஆனந்த குளியல்
02 Jun 2024தருமபுரி : நீர்வரத்து அதிகரித்ததை தொடர்ந்து ஒகேனக்கல்லில் நேற்று விடுமுறை நாள் என்பதால் சுற்றுலா பயணிகள் அதிகளவில் குவிந்தனர்.
-
நாளை வாக்கு எண்ணிக்கை: மே. வங்கம், ஆந்திராவில் கூடுதல் பாதுகாப்பு: தேர்தல் ஆணையம்
02 Jun 2024புதுடெல்லி : நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் பதிவான வாக்குகளின் எண்ணிக்கை நாளை நடைபெறுவதையொட்டி மேற்கு வங்கம், ஆந்திராவில் கூடுதல் பாதுகாப்பு அளிக்க தேர
-
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் குவிந்த பக்தர்கள் கூட்டம்
02 Jun 2024திருச்செந்தூர் : திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நேற்று விடுமுறை நாளையொட்டி ஏராளமான பக்தர்கள் திரண்டு நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்தனர்.
-
தென் ஆப்பிரிக்க பாராளுமன்ற தேர்தலில் பெரும்பான்மையை இழந்தது ஆளும் கட்சி
02 Jun 2024பிரிடோரியா : தென் ஆப்பிரிக்காவில் நடந்த பாராளுமன்ற தேர்தலில் ஆளும் ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் கட்சி முதல் முறையாக பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது.
-
வெளியானது கருத்துக்கணிப்பு இல்லை - பிரதமர் நரேந்திர மோடியின் கற்பனை: ராகுல் விமர்சனம்
02 Jun 2024புதுடெல்லி : பாராளுமன்றத்துக்கு 7 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்றது.
-
கேரளாவில் 3 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்: வானிலை மையம்
02 Jun 2024திருவனந்தபுரம் : கனமழை காரணமாக கேரளாவில் 3 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கையை வானிலை மையம் விடுத்துள்ளது.
-
ஆசிய பணக்காரர் பட்டியலில் அம்பானியை பின்னுக்கு தள்ளி முதலிடம் பிடித்த கவுதம் அதானி
02 Jun 2024புதுடெல்லி : முகேஷ் அம்பானியைப் பின்னுக்குத் தள்ளி ஆசிய பணக்காரர் பட்டியலில் கவுதம் அதானி முதலிடத்தை பிடித்தார்.
-
சுனிதா வில்லியம்சின் விண்வெளி பயணம் மீண்டும் ஒத்திவைப்பு
02 Jun 2024வாஷிங்டன் : மூன்றாவது முறையாக விண்வெளிக்கு மேற்கொள்ளவிருந்த சுனிதா வில்லியம்ஸின் சாதனை பயணம் தொழில்நுட்ப பிரச்சினை காரணமாக கடைசி நேரத்தில் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
-
திருப்பதி கோவிலில் 30 நிமிடத்தில் மூத்த குடிமக்கள் இலவச தரிசனம் செய்ய வசதி
02 Jun 2024திருப்பதி : திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 65 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் அமைதியாகவும், மிகுந்த கவனத்துடனும் தரிசனம் செய்ய வசதியாக திருமலை திருப்பதி தேவஸ்தானம் சி
-
3-வது முறையாக பிரதமர் மோடி பிரதமரானால் மொட்டை போட்டு கொள்வேன்: ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.
02 Jun 2024புதுடெல்லி : பிரதமர் மோடி 3-வது முறையாக பிரதமரானால் மொட்டை போட்டு கொள்வேன் என்று ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. சோம்நாத் பாரதி தெரிவித்தார்.
-
தெலுங்கானா மாநிலம் உருவான தினம்: சோனியா காந்தி வாழ்த்து
02 Jun 2024ஐதராபாத் : தெலுங்கானா மாநிலம் உருவாகி 10 ஆண்டுகள் நிறைவுபெற்றதை அடுத்து, அம்மாநில மக்களுக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
மீண்டும் திகார் சிறை சென்றார் கெஜ்ரிவால் : ஜாமீன் வழங்கிய சுப்ரீம் கோர்ட்டிற்கு நன்றி என பேட்டி
02 Jun 2024புதுடெல்லி : தேர்தல் பிரச்சாரம் செய்ய ஏதுவாக 21 நாட்கள் சுப்ரீம் கோர்ட்டு ஜாமீன் வழங்கியதற்கு நன்றி என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்தார்.
-
இசைஞானி இளையராஜாவின் 81-வது பிறந்த நாள்: திரை பிரபலங்கள் வாழ்த்து
02 Jun 2024சென்னை : இசைஞானி என சினிமா ரசிகர்களால் அழைக்கப்படும் இளையராஜா நேற்று தனது 81-வது பிறந்த நாளை எளிமையாக கொண்டாடினார்.
-
பள்ளிகளிலேயே மாணவ, மாணவிகளுக்கு வங்கி கணக்கு தொடங்க நடவடிக்கை : பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு
02 Jun 2024சென்னை : மாணவ, மாணவிகளுக்கு வங்கி கணக்குகளை பள்ளிகளிலேயே தொடங்க ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.
-
தென்கொரியாவிற்குள் பலூன் மூலம் மீண்டும் குப்பைகளை வீசிய வடகொரியா
02 Jun 2024சியோல் : தென்கொரியாவிற்குள் 600-க்கும் மேற்பட்ட குப்பை பலூன்களை வடகொரியா வீசியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
நிலவின் தென்துருவத்தில் இறங்கிய சீன விண்கலம் : பாறை மாதிரிகளுடன் 25-ம் தேதி பூமிக்கு திரும்பும்
02 Jun 2024பெய்ஜிங் : சீனாவின் சாங்கே விண்கலம் நிலவின் தென்துருவத்தில் நேற்று தரையிறங்கியது.
-
மக்கள் நம்பிக்கையை பெறுவதற்கு பதிலாக பகல் கனவு காண்கிறது : காங்கிரஸ் மீது பா.ஜ.க. குற்றச்சாட்டு
02 Jun 2024பாட்னா : மக்களின் நம்பிக்கையை பெறுவதற்கு பதிலாக காங்கிரஸ் பகல் கனவு காண்கிறது என்று பா.ஜ.க. எம்.பி. ரவி சங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.
-
மியான்மரின் மூத்த அரசியல் தலைவர் டின் ஓ காலமானார்
02 Jun 2024பாங்காக் : உடல்நல பிரச்சினையால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மியான்மரின் மூத்த அரசியல் தலைவர் டின் ஓ காலமானார்.
-
வாக்கு எண்ணும் மையங்களில் நாளை தட்டுப்பாடின்றி குடிநீர் : ஜெ.ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தல்
02 Jun 2024சென்னை : சென்னையில் உள்ள வாக்கு எண்ணும் மையங்களில், நாளை வாக்கு எண்ணிக்கை நாளன்று பாதுகாக்கப்பட்ட குடிநீர் தட்டுப்பாடின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு
-
பஞ்சாபில் சரக்கு ரயில்கள் நேருக்கு நேர் மோதி விபத்து : லோகோ பைலட்டுகள் 2 பேர் படுகாயம்
02 Jun 2024சண்டிகர் : பஞ்சாப் மாநிலம் பதேர்கர் சாகிப் மாவட்டத்தில் நேற்று அதிகாலை இரண்டு சரக்கு ரயில்கள் மோதிக்கொண்ட விபத்தில் ரயிலின் லோகோ பைலட்கள் இருவர் பலத்த காயமடைந்தனர
-
தண்ணீர் தாருங்கள்: உ.பி, அரியானா முதல்வர்களுக்கு டெல்லி அமைச்சர் அதிஷி கடிதம்
02 Jun 2024புதுடெல்லி : கடும் வெப்பத்தால் ஏற்பட்டுள்ள தண்ணீர் பிரச்னையை சமாளிக்க, டெல்லிக்கு ஒரு மாத காலத்திற்கு தண்ணீர் திறக்கக் கோரி உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் அரியான
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 02-06-2024
02 Jun 2024