எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதுடெல்லி, மார்ச்16 - மத்திய ரயில்வே அமைச்சர் தினேஷ் திரிவேதி பதவி விலகவில்லை என்றும் மத்திய அரசுக்கு எந்த ஆபத்தும் இல்லை என்றும் மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறியுள்ளார். நேற்று முன்தினம் பாராளுமன்றத்தில் ரயில்வே பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இந்த பட்ஜெட்டில் பயணிகள் ரயில் கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளன. தினேஷ் திரிவேதி மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர். இவர் தாக்கல் செய்த ரயில்வே பட்ஜெட்டில் பயணிகள் கட்டணங்கள் உயர்த்தப்பட்டதற்கு திரிணமுல் காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
கட்சியை கலந்தாலோசிக்காமல் தினேஷ் திரிவேதி ரயில் பயணிகள் கட்டணத்தை உயர்த்தியதால் அவரை பதவியிலிருந்து நீக்குமாறு மம்தா பானர்ஜி பிரதமருக்கு கடிதம் எழுதியிருந்ததாகவும், இதைத் தொடர்ந்து திரிவேதி ராஜினாமா செய்ததாகவும் செய்திகள் வெளியாயின. ஆனால் இதை பொய்யாக்கும் வகையில் திரிவேதியை ராஜினாமா செய்யும்படி திரிணமுல் காங்கிரஸ் கூறவில்லை என்று இப்போது திரிணமுல் காங்கிரஸ் கூறியுள்ளது.
இந்த நிலையில் மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜியிடம் இது குறித்து கேட்டதற்கு தினேஷ் திரிவேதியை பதவி நீக்கம் செய்யும்படி பிரதமருக்கு மம்தா பானர்ஜி கடிதம் எதையும் எழுதவில்லை என்றும் ஆனால் மம்தாவிடமிருந்து ஒரு தகவல் மட்டும் மன்மோகன் சிங்கிற்கு வந்துள்ளது என்றும் அது குறித்து பரிசீலனை நடந்து வருகிறது என்றும் அவர் கூறினார்.
பிரதமருக்கு மம்தா எழுதிய கடிதம் குறித்து முடிவு எடுக்கப்பட்டதும் அது குறித்த தகவல் பாராளுமன்றத்தில் தெரிவிக்கப்படும் என்றும் பிரணாப் முகர்ஜி கூறினார்.
பாராளுமன்றத்தின் லோக் சபையில் நேற்று இந்த பிரச்சினை குறித்து இடது சாரி எம்.பி.க்கள் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பிரச்சினை கிளப்பினர். அப்போது சபையில் இருந்த திரிணமுல் காங்கிரஸ் எம்.பி. சுதீப் பந்தோபாத்யாயா, ரயில்வே அமைச்சர் தினேஷ் திரிவேதியை பதவி நீக்கம் செய்யும்படி தங்களது கட்சி ஒருபோதும் பிரதமருக்கு கோரிக்கை விடுக்கவில்லை என்றார். இந்த பிரச்சினை பிரதமர் மன்மோகன் சிங் - மம்தா பானர்ஜி ஆகியோருக்கு இடையே பேசி தீர்த்துக்கொள்ளப்படும் என்றும் அவர் கூறினார்.
இப்பிரச்சினை குறித்து கருத்து கூறிய பிரணாப் முகர்ஜி, திரிவேதி பதவி விலகவில்லை என்றும் அவர் தனது அமைச்சர் பதவியை தொடர்ந்து வகித்துவருகிறார் என்றும், மத்திய அரசுக்கு எந்த ஆபத்தும் இல்லை என்றும் அது தனது முழு 5 ஆண்டு பதவிக்காலத்தையும் பூர்த்தி செய்யும் என்றும் பிரணாப் முகர்ஜி கூறினார்.
திரிவேதி குறித்த பிரச்சினை பரபரப்பாக பேசப்பட்டதை அடுத்து இது ஒரு அரசியல்சாசன நெருக்கடி என்பதால் இதுகுறித்து விவாதிக்க கேள்வி நேரத்தை ஒத்திவைக்க வேண்டும் என்று கோரி எதிர்க்கட்சிகள் நோட்டீஸ் கொடுத்திருந்தன.
இந்த நோட்டீஸ்களை பிரதான எதிர்க்கட்சி தலைவர் சுஷ்மா சுவராஜ், இடது கம்யூனிஸ்டு எம்.பி. புத்ததேவ் ஆச்சார்யா, ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் சரத் யாதவ், வலது கம்யூனிஸ்டு கட்சியின் குருதாஸ் தாஸ் குப்தா ஆகியோர் கொடுத்திருந்தனர். ஆனால் இந்த நோட்டீஸ்களை லோக் சபை சபாநாயகர் மீரா குமார் நிராகரித்து விட்டார்.
இதை அடுத்துத்தான் இந்த பிரச்சினை குறித்து சபையில் பரபரப்பாக பேசப்பட்டது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 month 3 weeks ago | வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 month 3 weeks ago | ஆவாரம்பூவின் மருத்துவ பலன்கள் 1 month 3 weeks ago |
தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 3 weeks ago | குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 8 months 1 week ago | பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 1 week ago |
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு ப்ரை1 day 6 hours ago |
க்ரிஸ்பி கார்ன் ஸ்நாக்ஸ்4 days 5 hours ago |
ஆப்பிள் ரோஸ்ட்1 week 1 day ago |
-
ஏற்காடு மலர் கண்காட்சி நீட்டிப்பு
25 May 2024ஏற்காடு : ஏற்காட்டில் 47வது கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி நாளையுடன் நிறைவுபெற இருந்த நிலையில் மே 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
-
பூமியை போன்றதொரு புதிய கிரகத்தை கண்டுபிடித்த நாசா
25 May 2024வாஷிங்டன், விண்வெளி ஆராய்ச்சியில் கோலோச்சிவரும் அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா, பூமியைப் போன்ற சூப்பர் பூமி என பெயரிடப்பட்டிருக்கும் ஒரு புதிய கிரகத்தைக் கண்டுப
-
‘கூகுள் மேப்’-ஆல் வந்த வினை: கேரளாவில் கால்வாய்க்குள் விழுந்த கார்
25 May 2024திருவனந்தபுரம், கேரளாவிற்கு கூகுள் மேப்பின் உதவியுடன் வந்த 4 பேர் காரை கால்வாய்க்குள் விட்ட நிலையில், காவல்துறை உதவியுடன் மீட்கப்பட்டனர்.
-
ஜெயலலிதாவுக்கு மத நம்பிக்கை கிடையாது : அண்ணாமலைக்கு சசிகலா பதில்
25 May 2024சென்னை : "ஜெயலலிதாவுக்கு கடவுள் நம்பிக்கை இருந்ததே தவிர, மத நம்பிக்கைக் கிடையாது.
-
குட்கா பொருட்களுக்கு மேலும் ஒரு ஆண்டு தடை : தமிழ்நாடு அரசு உத்தரவு
25 May 2024சென்னை : தமிழகத்தில் குட்கா, பான் மசாலா உள்ளிட்ட புகையிலை பொருட்களுக்கான தடையை அடுத்தாண்டு மே 23ம் தேதி வரை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
-
கர்நாடகாவில் விநோதம்: ஹெல்மெட் அணியாத லாரி ஓட்டுநருக்கு ரூ.500 அபராதம்
25 May 2024பெங்களூரு : ஹெல்மெட் அணியாத டிப்பர் லாரி ஓட்டுநருக்கு 500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்ட சம்பவம் கர்நாடகாவில் பெரும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.
-
தமிழகத்தில் எண்ணற்ற தமிழ் வளர்ச்சி திட்டங்களுக்கு சான்றோர் பாராட்டு: தமிழ்நாடு அரசு பெருமிதம்
25 May 2024சென்னை, முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆட்சியில் எண்ணற்ற தமிழ் வளர்ச்சித் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டதற்கு தமிழ்ச் சான்றோர் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
-
குஜராத், ராஜ்கோட்டில் பயங்கரம்: விளையாட்டு அரங்கில் தீ விபத்து: குழந்தைகள் உள்பட 20 பேர் பலி
25 May 2024குஜராத் : குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் உள்ள சிறார் விளையாட்டு அரங்கில் சனிக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் குழந்தைகள் உட்பட 20 பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்
-
கோப்பையை வெல்லப்போவது யார்? - ஐ.பி.எல். இறுதி போட்டியில் இன்று கொல்கத்தா-ஐதராபாத் பலப்பரீட்சை
25 May 2024சென்னை : நடப்பு ஐ.பி.எல். கோப்பையை வெல்லப்போவது யார் என்பது இன்று தெரிய வரும்.
-
இந்திய அணியில் சாம்சன் ஏன் இடம்பெறவில்லை? - சுனில் கவாஸ்கர் விளக்கம்
25 May 2024மும்பை : சூழ்நிலைக்கு தகுந்தாற்போல் விளையாடாத சஞ்சு சாம்சன் தவறான ஷாட்டை அடித்து தன்னுடைய விக்கெட்டை இழந்ததே ராஜஸ்தானின் தோல்விக்கு காரணமாக அமைந்ததாக சுனில் கவாஸ்கர் வி
-
நடிகர் அர்ஜூன் மகள் திருமணம்: முதல்வர் ஸ்டாலினுக்கு அழைப்பு
25 May 2024சென்னை : நடிகர் அர்ஜூன் தனது மகள் ஐஸ்வர்யா திருமணத்திற்கு முதல்வர் ஸ்டாலினுக்கு நேரில் சென்று அழைப்பு விடுத்துள்ளார்.
-
6-ம் கட்ட தேர்தல் : 58 பார்லி. தொகுதிகளில் விறுவிறு வாக்குப்பதிவு
25 May 2024புதுடெல்லி : 6 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் உள்ள 58 தொகுதிகளுக்கு நேற்று 6ம் கட்ட பாராளுமன்ற மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றது.
-
ஐ.நா.,வில் இந்திய அதிகாரிக்கு முக்கிய பொறுப்பு
25 May 2024ஜெனிவா, ஐ.நா.,வின் பேரிடர் அபாய குறைப்பு அமைப்பின் (யுஎன்டிஆர்ஆர்) ஐ.நா., பொதுச்செயலாளர் ஆண்டனி குட்டரெசின் சிறப்பு தூதராக இந்திய அதிகாரி கமல் கிஷோர் நியமிக்கப்பட்டுள்ள
-
கேன்ஸ் திரைப்படவிழாவில் சிறந்த நடிகை விருதை வென்ற இந்திய நடிகை
25 May 2024பாரிஸ் : கேன்ஸ் திரைப்படவிழா 2024ல் நடிகை அனசுயா சிறந்த நடிகைக்கான விருது வென்றுள்ளார். இந்த செய்தி ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது.
-
கொரோனாவால் மக்களின் சராசரி ஆயுள் காலம் சரிவு: உலக சுகாதார அமைப்பு தகவல்
25 May 2024ஜெனீவா, வெறும் இரண்டு ஆண்டுகளில், கொரோனா தொற்று ஒரு தசாப்த கால ஆயுட்கால ஆதாயங்களை அழித்துவிட்டது என உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் ஜெனரல் டெட்ரோஸ் அதானோம் கெப்ரே
-
இறுதிக்கு பி.வி.சிந்து தகுதி
25 May 2024மலேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடரின் அரையிறுதி சுற்றில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து, தாய்லாந்தின் பூசானனை எதிர்கொண்டார்.
-
பாராளுமன்ற 5 கட்ட தேர்தலில் பதிவான வாக்கு விவரங்கள் தொகுதிவாரியாக வெளியீடு : முதன்முறையாக தேர்தல் ஆணையம் அறிவிப்பு
25 May 2024புதுடெல்லி : பாராளுமன்ற மக்களவைக்கு நடந்து முடிந்த 5 கட்ட தேர்தலில், மாநிலம், தொகுதி வாரியாக எத்தனை பேர் ஓட்டுப் போட்டனர், எத்தனை சதவீத ஓட்டுகள் பதிவாகி உள்ளன போன்ற விவ
-
தமிழகத்தில் வெப்பநிலை படிப்படியாக உயரக்கூடும் : வானிலை ஆய்வு மையம் தகவல்
25 May 2024சென்னை : தமிழகத்தில் அடுத்த 4 தினங்களுக்கு 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக வெப்பநிலை உயரக்கூடும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
சென்னை விமான நிலையத்தில் முகத்தை அடையாளம் காணும் தொழில்நுட்பம்
25 May 2024சென்னை, சென்னையில் ஜூன் மாதம் முகத்தை அடையாளம் காணும் தொழில்நுட்ப வசதி அறிமுகமாகிறது.
-
6-ம் கட்ட தேர்தல் : 58 பார்லி. தொகுதிகளில் விறுவிறு வாக்குப்பதிவு
25 May 2024புதுடெல்லி : 6 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் உள்ள 58 தொகுதிகளுக்கு நேற்று 6ம் கட்ட பாராளுமன்ற மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றது.
-
ஜம்மு-காஷ்மீரில் விரைவில் சட்டசபை தேர்தல் நடத்தப்படும் : தலைமை தேர்தல் ஆணையர் தகவல்
25 May 2024புதுடெல்லி : ஜம்மு - காஷ்மீரில் விரைவில் பேரவைத் தேர்தல் நடத்த ஏற்பாடுகள் செய்யப்படும் என்று தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தெரிவித்துள்ளார்.
-
கேப்டனாக அதிக விக்கெட்கள்: கம்மின்ஸ் புதிய மைல்கல்
25 May 2024சென்னை : ஐ.பி.எல்.லில் கேப்டனாக அதிக விக்கெட்கள் எடுத்தவர்கள் பட்டியலில் கம்மின்ஸ் கும்ப்ளே சாதனையை சமன் செய்து புதிய மைல்கல்லை எட்டியுள்ளார்.
-
சமாளிக்க தயாராக இருங்கள்: இஸ்ரேல் படைக்கு எச்சரிக்கை விடுத்த ஹிஸ்புல்லா அமைப்பு
26 May 2024லெபனான் : எங்கள் தரப்பில் இருந்து உங்களுக்கு ஆச்சரியங்கள் காத்திருக்கின்றன.
-
சொத்து வரி நிலுவை: முதல் 100 பேர் பட்டியலை இணையத்தில் வெளியிட சென்னை மாநகராட்சி திட்டம்
26 May 2024சென்னை : மாநகராட்சியில் சொத்து வரி நிலுவை வைத்துள்ள முதல் 100 பேர் பட்டியலை இணையத்தில் வெளியிட சென்னை மாநகராட்சி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.
-
அமெரிக்காவில் கருக்கலைப்பு மாத்திரைகளுக்கு கட்டுப்பாடு
26 May 2024வாஷிங்டன் : அமெரிக்காவில் கருக்கலைப்பு மாத்திரைகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.