எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதுடெல்லி, ஜூன்15 - பிரதமர் மன்மோகன் சிங்குடனான சந்திப்பு மிகவும் மகிழ்ச்சிகரமாக இருந்தது என்று முதல்வர் ஜெயலலிதா நேற்று டெல்லியில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் தெரிவித்தார். தமிழக முதல்வர் ஜெயலலிதா முதல்வராக பதவி ஏற்றபின்பு முதன்முதலாக நேற்றுமுன்தினம் இரண்டு நாள் பயணமாக டெல்லி சென்றார். டெல்லியில் முதல்வர் ஜெயலலிதாவை டெல்லி முதல்வர் ஷீலா தீட்ஷித், வலது கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் டி.ராஜா உள்பட பல முக்கிய பிரமுகர்கள் சந்தித்து பேசினார்கள். இந்த நிகழ்ச்சிக்கு பின்னர் நேற்று பிரதமர் மன்மோகன் சிங்கை அவரது இல்லத்தில் ஜெயலலிதா சந்தித்து பேசினார். அப்போது தமிழக வளர்ச்சி திட்டங்களுக்கு மத்திய அரசின் உதவி கோரும் மனுவை பிரதமரிடம் ஜெயலலிதா கொடுத்தார். அதை மன்மோகன் சிங் மகிழ்ச்சியுடன் பெற்றுக்கொண்டார். இந்த சந்திப்புக்கு பின்னர் ஜெயலலிதா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், பிரதமர் மன்மோகன் சிங்குடனான சந்திப்பு மிகவும் மகிழ்ச்சியுடன் இருந்தது என்றார். பின்னர் நிருபர்களின் பல்வேறு கேள்விகளுக்கு ஜெயலலிதா பதில் அளித்தார்.
அதன் விபரம் வருமாறு:-
பிரதமர் மன்மோகன் சிங்குடன் சந்திப்பு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. பிரதமரிடம் தமிழக வளர்ச்சி திட்டங்கள் குறித்த விபரம் அடங்கிய மனு ஒன்றையும் கொடுத்தேன். முதலில் தமிழகத்தில் மின்சார பற்றாக்குறையை போக்க வேண்டும். இதற்கு மத்திய தொகுப்பில் இருந்து 1000 மெகாவாட் மின்சாரத்தை தமிழகத்திற்கு உடனடியாக கொடுக்க வேண்டும். வரும் 5 ஆண்டுகளில் தமிழகத்தில் கூடுதலாக 10 ஆயிரம் மெகாவாட் மின்சார உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் அ.தி.மு.க. மீண்டும் ஆட்சிக்கு வந்து நான் முதல்வராகிய சிறிது காலத்திற்குள் தமிழகத்தில் பழுதடைந்திருந்த இரண்டு மின் உற்பத்தி நிலையங்கள் பழுதுபார்க்கப்பட்டு மின்சார உற்பத்தி தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. தமிழகத்திற்கு உடனடியாக 1000 மெகாவாட் மின்சாரத்தை மத்திய தொகுப்பில் இருந்து உடனடியாக வழங்க வேண்டும். அது குறித்து தீவிர பரிசீலனை செய்வதாக பிரதமர் மன்மோகன் சிங் உறுதி அளித்தார். தமிழக கடல் பகுதியில் உள்ள கச்சத்தீவு பகுதியில் தமிழக மீனவர்கள் சுதந்திரமாக மீன்பிடிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இலங்கையில் நடைபெற்ற போரில் சிங்கள ராணுவத்தினரால் பெரும் துயரத்திற்கு ஆளாகி அனாதையாக்கப்பட்டுள்ள தமிழர்களின் தற்போதைய உண்மையான வாழ்வு நிலை எப்படி இருக்கிறது என்பதை கண்டறிய தமிழக சட்டமன்ற உறுப்பினர்கள் குழு தமிழர்கள் பகுதிக்கு சென்றுவர மத்திய அரசு அனுமதி பெற்றுத்தர வேண்டும்.
ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் குற்றச்சாட்டுக்கு உள்ளாகி உள்ள மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் பதவியில் இருந்து ராஜினாமா செய்ய வேண்டும். 2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு தொடர்பாக நடைபெற்று வரும் விசாரணை நீதிமன்றம் மீது மக்களிடத்தில் நம்பிக்கை ஏற்படும்படி உள்ளது. தயாநிதி மாறன் ராஜினாமா செய்யாவிட்டால் அவரை பதவியில் இருந்து பிரதமர் மன்மோகன் சிங் நீக்க வேண்டும். 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள் என்று நம்புகிறேன். முல்லைப் பெரியாறு பிரச்சினைக்கு மத்திய அரசு விரைவில் தீர்வுகண்டு அணையில் கூடுதல் தண்ணீரை பெருக்க வழிவகை செய்து கொடுக்க வேண்டும். முல்லைப் பெரியாறு அணையில் புதிய அணை கட்ட தமிழக அரசு ஒருபோதும் அனுமதிக்காது. முல்லைப்பெரியாறு அணை பிரச்சினைக்கு சட்டப்பூர்வ நடவடிக்கைகளை எனது அரசு எடுக்கும். சேதுசமுத்திர திட்டத்தில் அ.தி.மு.க. அரசின் கொள்கையில் எந்தவித மாற்றமும் இல்லை. முதலில் கடைப்பிடிக்கப்பட்ட கொள்கையே பின்பற்றப்படும். தமிழகத்தின் வளர்ச்சி திட்டங்களுக்கு மத்திய அரசு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். மத்திய அரசுடன் சுமூகமான உறவு வைத்துக்கொள்ள விரும்புகிறோம். மத்திய அரசுடன் மோதல் போக்கை நாங்கள் விரும்பவில்லை. மாநிலங்களுக்கிடையே உள்ள நதிநீர் பிரச்சினைகளுக்கு மத்திய அரசு விரைவாக தீர்வுகாண நடவடிக்கை எடுக்க வேண்டும். நிர்வாக தாமதத்தை தவிர்க்கவே ஜார்ஜ் கோட்டையில் தலைமை செயலகம் மாற்றப்பட்டுள்ளது. செயல்படுகிற அரசு புதிய தலைமை செயலகத்தில் இயங்க முடியாது. தி.மு.க. செய்த சாதனையெல்லாம் நாட்டின் பணத்தை கொள்ளையடித்ததுதான். கடந்த ஆட்சியில் தி.மு.க.வினர் பணம் சம்பாதிப்பதிலேயே குறியாக இருந்தனர். தான் செய்த தவறுகளுக்கான விலையை தி.மு.க. இப்போது கொடுத்துக்கொண்டுள்ளது.
இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா கூறினார்.
ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இன்னும் தி.மு.க. நீடிப்பதால் தாம் சோனியா காந்தியை சந்திப்பது உசிதமாக இருக்காது என்று நிருபர்களின் கேள்விக்கு பதில் அளிக்கையில் முதல்வர் ஜெயலலிதா கூறினார். ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இருந்து தி.மு.க.வை நீக்கிவிட்டு அ.தி.மு.க.வின் ஆதரவை கேட்டால் அதுகுறித்து பரிசீலனை செய்யப்படும் என்று ஜெயலலிதா சூசகமாக தெரிவித்தார். ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் தி.மு.க. இருக்கிறது. மேலும் மத்தியில் காங்கிரஸ் கூட்டணி அரசிலும் தி.மு.க. இருக்கிறது. இந்தமாதிரியான சூழ்நிலையில் நான் சோனியா காந்தியை சந்திப்பது சரியாக இருக்காது என்றும் முதல்வர் ஜெயலலிதா கூறினார். என்னுடைய ஆதரவை யாராவது விரும்பினால் அவர்கள் என்னிடம் நேராக கேட்க வேண்டும். அவர்கள் சார்பாக நீங்கள் (நிருபர்கள்) கேட்கக்கூடாது என்றார். காங்கிரஸ் பலவீனமாக இருப்பதால் அந்த கட்சியுடன் கூட்டணி வைத்துக்கொள்ள தயங்குகிறீர்களா? என்று ஒரு நிருபர் கேட்டதற்கு ஜெயலலிதா மேற்கண்டவாறு பதில் அளித்தார். சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. வெற்றிபெற்றதையொட்டி ஜெயலலிதாவுக்கு சோனியா காந்தி தொலைபேசி மூலம் வாழ்த்து தெரிவித்தார். அதனால் காங்கிரஸ் -அ.தி.மு.க. இடையே கூட்டணிக்கு வாய்ப்பு இருக்கிறதா என்பது குறித்து முதல்வர் ஜெயலலிதாவிடம் நிருபர்கள் பல்வேறு கேள்விகளை கேட்டனர்.
அன்னா ஹசாரே போராட்டம் குறித்து கேட்டதற்கு, ஜனநாயகத்தில் ஊழலை எதிர்த்து போராட ஒவ்வொரு குடிமகனுக்கும் உரிமை உண்டு என்றார்.
உங்கள் (ஜெயலலிதா) டெல்லி வருகை காரணமாக தி.மு.க. அச்சத்தில் இருப்பதாக கூறப்படுகிறதே என்ற கேள்விக்கு ஜெயலலிதா நேரடியாக பதில் அளிக்க மறுத்துவிட்டார். இது குறித்து நான் கருத்து எதுவும் கூற விரும்பவில்லை. தி.மு.க. கவலை அடைந்திருப்பதாக நீங்கள்( நிருபர்கள்) கூறுவதை அப்படியே ஏற்றுக்கொள்கிறேன். அணிமாற்றம் குறித்து முன்கூட்டியே கருத்து கூற இயலாது என்றும் ஜெயலலிதா கூறினார். 2 ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் வழக்குகள் எதுவும் என்னாலோ அல்லது எனது கட்சியாலோ தொடரப்படவில்லை. அவை அனைத்தையும் செய்தது மத்திய அரசுதான். எனவே இதில் பழிவாங்கும் செயல் என்ற பேச்சுக்கே இடமில்லை. தி.மு.க.வுக்கு எதிரான கிரிமினல் வழக்குகள் தொடர நான் எந்த நிர்பந்தமும் செய்யவில்லை. தி.மு.க. அங்கம் வகிக்கும் மத்திய அரசுதான் அவர்கள் மீது நடவடிக்கை எடுத்துள்ளது என்றார். தமிழக சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. தோல்விக்கு பல காரணங்கள் உள்ளன. அனைத்து மட்டங்களிலும் ஊழல், மோசமான நிர்வாகம், ஆட்சியின் அனைத்து பிரிவுகளிலும் ஒரே குடும்பத்தின் ஆதிக்கம், கருத்து சுதந்திரம் பறிப்பு போன்ற பல பிரச்சினைகளால் மக்கள் அதிருப்தி அடைந்தனர். ஹிட்லர் ஆட்சியில் இருந்ததுபோல், உகாண்டாவின் இடி அமீன் ஆட்சியில் இருந்தது போல் மக்கள் உணர்ந்தனர் என்றும் ஜெயலலிதா கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 month 3 weeks ago | வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 month 3 weeks ago | ஆவாரம்பூவின் மருத்துவ பலன்கள் 1 month 3 weeks ago |
தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 3 weeks ago | குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 8 months 1 week ago | பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 1 week ago |
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு ப்ரை18 hours 9 sec ago |
க்ரிஸ்பி கார்ன் ஸ்நாக்ஸ்3 days 17 hours ago |
ஆப்பிள் ரோஸ்ட்1 week 17 hours ago |
-
போர் நிறுத்தத்திற்கு உக்ரைனுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார்: ரஷ்ய செய்தி தொடர்பாளர் தகவல்
25 May 2024மாஸ்கோ, போரை நிறைவு செய்வதற்காக ,உக்ரைனுடன் பேச்சுவார்த்தை நடத்த ரஷ்யா தயாராக இருக்கிறது என அந்நாட்டு செய்தி தொடர்பாளர் டிமித்ரி பெஸ்கோ தெரிவித்துள்ளார்.
-
இயல்பை விட கோடை மழை தமிழ்நாட்டில் அதிக பொழிவு : வானிலை ஆய்வு மையம் தகவல்
25 May 2024சென்னை : தமிழகத்தில் கோடை மழை இயல்பை விட அதிகமாக 29 சதவீதம் பெய்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர 2.58 லட்சம் பேர் விண்ணப்பம்
25 May 2024சென்னை : அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர கடந்த 19 நாட்களில், 2 லட்சத்து 58 ஆயிரத்து 527 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
புயல் எச்சரிக்கை: சென்னையில் இருந்து அந்தமானுக்கு இயக்கப்படும் : விமான சேவைகள் ரத்து
25 May 2024சென்னை, வங்க கடலில் உருவாகியுள்ள ரெமல் புயல் காரணமாக, ஏர் இந்தியா விமான நிறுவனம் அந்தமானுக்கு இயக்கப்படும் விமான சேவைகளை, நேற்று ஒரு நாள், முழுவதுமாக ரத்து செய்துள்ளது.
-
தசைப் பயிற்சியாளர்கள் மற்றும் சிறப்பு ஆசிரியர்களுக்கான மதிப்பூதியம் உயர்வு: தமிழக அரசு
25 May 2024சென்னை : தமிழக அரசானது சிறப்பு ஆசிரியர், தசை பயிற்சியாளர்களுக்கான மதிப்பூதியம் ரூ.14,000லிருந்து ரூ.18,000ஆக உயர்த்தி வழங்க உத்தரவு பிறப்பித்துள்ளது.
-
பா.ம.க. பிரமுகா் கொலை வழக்கு: குற்றவாளிகள் குறித்து தகவல் தெரிவித்தால் ரூ.25 லட்சம் பரிசு : என்.ஐ.ஏ. அறிவிப்பு
25 May 2024கோவை : தஞ்சாவூா் அருகே திருபுவனத்தைச் சோ்ந்த பா.ம.க. பிரமுகா் ராமலிங்கம் கொலை வழக்குத் தொடா்பாக தேடப்படும் 6 போ் குறித்து தகவல் தெரிவித்தால் ரூ.
-
ஏற்காடு மலர் கண்காட்சி நீட்டிப்பு
25 May 2024ஏற்காடு : ஏற்காட்டில் 47வது கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி நாளையுடன் நிறைவுபெற இருந்த நிலையில் மே 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
-
ஊட்டியில் நாளை முதல் 2 நாட்கள் நடக்கும் துணைவேந்தர்கள் மாநாடு: கவர்னர் ஆர்.என்.ரவி பங்கேற்கிறார்
25 May 2024ஊட்டி,ஊட்டி ராஜ்பவன் மாளிகையில் நாளை முதல் 2 நாட்கள் நடைபெறவுள்ள துணைவேந்தர்கள் மாநாட்டில் கவர்னர் ஆர்.என். ரவி கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார்.
-
நலத்திட்ட பொருள்கள் வழங்கும் பணியில் மாணவர்களை ஈடுபடுத்தக்கூடாது: ஆசிரியர்களுக்கு அரசு அறிவுறுத்தல்
25 May 2024சென்னை : பள்ளிகளில் நலத்திட்ட பொருள்கள் வழங்கும் பணிகளில் மாணவர்களை ஈடுபடுத்தக்கூடாது என்று ஆசிரியர்களுக்கு பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.
-
பூத் முகவர்களை கைது செய்ததால் மெகபூபா முப்தி சாலையில் அமர்ந்து போராட்டம்
25 May 2024ஸ்ரீநகர், தனது கட்சியின் பூத் முகவர்களை காரணமின்றி போலீசார் கைது செய்ததாக குற்றஞ்சாட்டி காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி நேற்று சாலையில் அமர்ந்து போராட்டத்தில்
-
6-ம் கட்ட தேர்தல் : வாக்களித்த பின் தாயுடன் செல்பி எடுத்த ராகுல் காந்தி
25 May 2024புதுடெல்லி : டெல்லியில் நிர்மான் பவன் வாக்குச்சாவடியில் தங்களது வாக்குகளை செலுத்திய பின் தனது தாய் சோனியா காந்தியுடன் ராகுல் காந்தி செல்பி எடுத்து கொண்டார்.
-
காவல்துறை இடையே பிரச்சினை: சென்னை தலைமை செயலகத்தில் துறை செயலாளர்கள் ஆலோசனை
25 May 2024சென்னை : தமிழக போக்குவரத்து துறை மற்றும் காவல் துறையினர் இடையே பிரச்சினை நீடித்து வரும் நிலையில், தமிழக முதல்வரின் உத்தரவின் பேரில் உள்துறை செயலாளர் அமுதா, போக்கு
-
‘கூகுள் மேப்’-ஆல் வந்த வினை: கேரளாவில் கால்வாய்க்குள் விழுந்த கார்
25 May 2024திருவனந்தபுரம், கேரளாவிற்கு கூகுள் மேப்பின் உதவியுடன் வந்த 4 பேர் காரை கால்வாய்க்குள் விட்ட நிலையில், காவல்துறை உதவியுடன் மீட்கப்பட்டனர்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 25-05-2024.
25 May 2024 -
அரசு பேருந்துகளில் காவலர்களுக்கு இலவச பயணத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும் : தமிழக அரசுக்கு இ.பி.எஸ். வலியுறுத்தல்
25 May 2024சென்னை : சட்டப்பேரவை மானியக் கோரிக்கையில் அறிவித்தபடி அரசு பேருந்துகளில் காவலர்களுக்கான இலவசப் பயணத்தை உடனே அமல்படுத்த வேண்டும் என்று தமிழக அரசுக்கு அதிமுக பொதுச்செயலாள
-
மழை பாதிப்புகளை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை : தலைமைச்செயலாளர் சிவ்தாஸ் மீனா பேட்டி
25 May 2024சென்னை : மழையால் ஏற்படும் பாதிப்புகளை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா தெரிவித்தார்.
-
பணவீக்கம், வேலையின்மைக்கு எதிராக வாக்களித்தேன்: கெஜ்ரிவால்
25 May 2024புது டெல்லி, பணவீக்கம் மற்றும் வேலையின்மைக்கு எதிராக நான் வாக்களித்துள்ளேன் என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்தார்.
-
ஐ.நா.,வில் இந்திய அதிகாரிக்கு முக்கிய பொறுப்பு
25 May 2024ஜெனிவா, ஐ.நா.,வின் பேரிடர் அபாய குறைப்பு அமைப்பின் (யுஎன்டிஆர்ஆர்) ஐ.நா., பொதுச்செயலாளர் ஆண்டனி குட்டரெசின் சிறப்பு தூதராக இந்திய அதிகாரி கமல் கிஷோர் நியமிக்கப்பட்டுள்ள
-
பாராளுமன்ற - சட்டமன்ற தேர்தல்: ஒடிசாவில் வாக்களித்த பட்நாயக், பாண்டியன்
25 May 2024புவனேஷ்வர் : ஒடிசா முதல்வரும், பிஜூ ஜனதா தள தலைவருமான நவீன் பட்நாயக் புவனேஸ்வரில் உள்ள தனது இல்லத்திற்கு அருகில் ஏரோட்ரோம் மேல்நிலைப் பள்ளி உள்ள வாக்குச்சாவடிக்கு நடந்த
-
ஜெயலலிதாவுக்கு மத நம்பிக்கை கிடையாது : அண்ணாமலைக்கு சசிகலா பதில்
25 May 2024சென்னை : "ஜெயலலிதாவுக்கு கடவுள் நம்பிக்கை இருந்ததே தவிர, மத நம்பிக்கைக் கிடையாது.
-
நடிகர் அர்ஜூன் மகள் திருமணம்: முதல்வர் ஸ்டாலினுக்கு அழைப்பு
25 May 2024சென்னை : நடிகர் அர்ஜூன் தனது மகள் ஐஸ்வர்யா திருமணத்திற்கு முதல்வர் ஸ்டாலினுக்கு நேரில் சென்று அழைப்பு விடுத்துள்ளார்.
-
தமிழகத்தில் எண்ணற்ற தமிழ் வளர்ச்சி திட்டங்களுக்கு சான்றோர் பாராட்டு: தமிழ்நாடு அரசு பெருமிதம்
25 May 2024சென்னை, முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆட்சியில் எண்ணற்ற தமிழ் வளர்ச்சித் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டதற்கு தமிழ்ச் சான்றோர் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
-
6-ம் கட்ட வாக்குப்பதிவின் போதும் மேற்கு வங்காளத்தில் ஒருசில இடங்களில் வன்முறை-மோதல்
25 May 2024கொல்கத்தா : பாராளுமன்றத்திற்கு 6-ம் கட்டமாக நேற்று நடந்த தேர்தலிலும் மேற்கு வங்காளத்தில் ஒருசில இடங்களில் வன்முறை மற்றும் மோதல் சம்பவங்கள் நிகழ்ந்தன.
-
டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2, குரூப்-2ஏ முதன்மை தேர்வுக்கு புதிய பாடத்திட்டம் வெளியீடு
25 May 2024சென்னை : குரூப்-2 மற்றும் குரூப்-2-ஏ முதன்மைத் தேர்வுக்கான புதிய பாடத்திட்டத்தை தமிழக அரசுப் பணியாளார் தேர்வாணையமான டி.என்.பி.எஸ்.சி.
-
கேன்ஸ் திரைப்படவிழாவில் சிறந்த நடிகை விருதை வென்ற இந்திய நடிகை
25 May 2024பாரிஸ் : கேன்ஸ் திரைப்படவிழா 2024ல் நடிகை அனசுயா சிறந்த நடிகைக்கான விருது வென்றுள்ளார். இந்த செய்தி ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது.