எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, செப். 20 – முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவுப்படி கட்டுமான தொழிலுக்கு இரண்டாம் நிலை சுத்திகரிக்கப்பட்ட நீர் வழங்க நடவடிக்கைகைள சென்னைக் குடிநீர் வாரியம் எடுத்துள்ளது.
இதற்காக பெருங்குடியில் 56 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் மேம்படுத்தப்பட்ட சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது.
நாள் ஒன்றுக்கு 6 லட்சம் லிட்டர் தண்ணீர் கிடைக்கும். சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் நீர் நிரப்பும் இடத்தில் 1000 லிட்டருக்கு 20 ரூபாய் என செலுத்தி பெற்றுக் கொள்ளலாம் என்று சென்னைக் குடிநீர் வாரியம் அறிவித்துள்ளது.இந்த தண்ணீர் தரமானது; கட்டுமான தொழிலுக்கு மிகவும் சிறந்தது.
இது குறித்து சென்னைக் குடிநீர் வாரியம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:–
தமிழ்நாடு அரசு உபயோகப்படுத்தப்பட்ட நீரை மறு சுழற்சி செய்து குடிநீர் அல்லாத பிற உபயோகங்களுக்கு பயன் படுத்துவதில் முன்னுரிமை அளிக்கிறது. சென்னைக் குடிநீர் வாரியத்தால் ஏற்கனவே தொழிற்சாலைகளுக்கும், சாலையோர பூங்காக்களுக்கும், மரங்கள் வளர்ப்பதற்கும் இரண்டாம் நிலை சுத்திகரிக்கப்பட்ட நீரை வழங்கி வருகிறது. மேலும் ஒரு முயற்சியாக கட்டுமான தொழிலுக்கு தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தண்ணீர் அதிகமாக பயன்படுத்துகிற ஒரு தொழிலாக கட்டுமான தொழில் விளங்குகிறது. அதிக அளவில் நீர், கான்கிரிட் கலப்பதற்கும், சுத்தம் செய்வதற்கும் பயன்படுத்தப்படுகிறது. சென்னைக் குடிநீர் வாரியம் கட்டுமான நிறுவனங்கள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்பு கட்டுபவர்கள் ஆகியோரிடம் கலந்து ஆலோசித்ததில், நாளொன்றுக்கு 20 லட்சம் லிட்டர் தண்ணீர் கட்டுமானத் தொழிலுக்கு தேவைபடுவதாக கண்டறிந்தது. இதில் 6லட்சம் லிட்டர் தண்ணீர் தகவல் தொழில் நுட்ப சாலையில் கட்டப்பட்டு வரும் கல்வி நிறுவனங்கள், தகவல் தொழில் நுட்ப பூங்காக்கள், குடியிருப்பு மற்றும் வணிக வளாகங்களுக்கு தேவைப்படுகின்றது. இந்நிறுவனங்கள், தண்ணீர் தேவைக்காக தொலை தூரத்திலிருந்து எடுக்கப்பட்டு வரும் தனியார் தண்ணீர் வழங்கும் நிறுவனங்களை சார்ந்தே உள்ளன. மேலும், இந்தத் தண்ணீருக்காக மிக அதிகமான தொகையை கட்டணமாக செலுத்துகின்றன. இந்த தண்ணீர் இந்திய தரக் கட்டுப்பாட்டு நிறுவனத்தால் நிர்ணயிக்கப்பட்ட குறைந்தபட்ச தரம் கூட இருப்பதில்லை.
அதிக அளவு நிலத்தடி நீர் உறிஞ்சப்பட்டு இந்நிறுவனங்களின் குடிநீர் அல்லாத நீர் தேவை மற்றும் கட்டுமான பணிக்கான நீர் தேவையும் பூர்த்தி செய்யப்படுவதால், பொது மக்களிடையே அதிருப்தி நிலவுகிறது. இதற்கான ஒரு மாற்று ஏற்பாடாக இந்திய தரக் கட்டுப்பாட்டு நிறுவனத்தால் நிர்ணயிக்கப்பட்ட தரத்துடன் கட்டுமான தொழில் மற்றும் குடிநீரல்லாத பிற உபயோகங்களுக்குப் பயன்படுத்த மாற்று நீராதாரம் காண்பது மிகவும் அவசியமாகிறது. எனவே, சென்னைக் குடிநீர் வாரியம் இரண்டாம் நிலை சுத்திகரிப்பு செய்யப்பட்ட நீரை, கட்டுமான தொழிலில் கான்கிரிட் தயாரிப்பு, கான்கிரிட் நிலைப்படுத்துதல், சுத்தப்படுத்துதல் மற்றும் இதர நிறுவனங்களில் குடிநீர் அல்லாத பயன்பாட்டிற்கான நீராகவும் பயன்படுத்த உத்தேசிக்கப்பட்டது.
முதல்வர் ஜெயலலிதாவின் உத்தரவின்படி, சென்னைக் குடிநீர் வாரியம், இரண்டாம் நிலை சுத்திகரிக்கப்பட்ட நீரை, கூடுதல் சுத்திகரிப்பு செய்து, நாளொன்றுக்கு 6 லட்சம் லிட்டர் சிறந்த தரம் வாய்ந்த தண்ணீராக மாற்றும் சுத்திகரிப்பு நிலையத்தை நிறுவி வருகின்றது. சென்னைக் குடிநீர் வாரியம், கட்டுமான நிறுவனங்கள், கட்டுமான தொழில் முதலீட்டாளர்களை கலந்தாலோசித்ததில், சுத்திகரிக்கப்பட்ட தண்ணீருக்கு அதிக வரவேற்புள்ளது. மேலும், சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரை பெற ஆவலாக உள்ளனர்.
தற்போது, பெருங்குடி கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் நாளொன்றுக்கு 100 மில்லியன் லிட்டர் இரண்டாம் நிலை சுத்திகரிக்கப்பட்ட நீராதராரம் உள்ளது. சென்னை மாநகராட்சி, தமிழ்நாடு சாலை மேம்பாட்டுக் கழகம் ஆகியவற்றிற்கு தேவையான இரண்டாம் நிலை சுத்திகரிக்கப்பட்ட நீரை வழங்கி வருகிறது. இரண்டாம் நிலை சுத்திகரிக்கப்பட்ட நீர் இந்திய தரக் கட்டுப்பாட்டு நிறுவன எண். 456ன்படி கட்டுமான தொழிலுக்கு ஏற்றதாக இருப்பினும், மனிதர்களால் கையாளப்படப் போவதால் கூடுதல் சுத்திகரிப்பு செய்து வழங்க உத்தேசித்துள்ளது.
பெருங்குடியில் நிறுவப்படவுள்ள கூடுதல் சுத்திகரிப்பு நிலையம், ஒரு மணி நேரத்திற்கு 50 கன மீட்டர் என்ற அளவில் இரண்டாம் நிலை சுத்திகரிக்கப்பட்ட நீரை பெற்று கட்டுமான தொழில் உபயோகத்திற்கு நாளொன்றுக்கு 6 லட்சம் லிட்டர் சுத்திகரிப்பு செய்யும் திறன் கொண்டது. இரண்டாம் நிலை சுத்திகரிக்கப்பட்ட நீரை கட்டுமான தொழில்களுக்காக மறுசுழற்சி செய்வதற்கு முன்பாக கீழ்கண்ட முறையிலான மேம்படுத்தப்பட்ட செயல்முறை அமைப்புகள் நிறுவப்பட உள்ளது.
பெருங்குடி கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில், இரண்டாம் நிலை சுத்திகரிக்கப்பட்ட நீர், சேமிப்பு தொட்டியில் இருந்து நீர் அழுத்த மணல் வடிகட்டிக்கு இரண்டு உந்து யந்திரம் மூலம் செலுத்தப்படுகிறது.இரண்டாம் நிலை சுத்திகரிக்கப்பட்ட நீரில் மீதமுள்ள கரையும் நிலையில் உள்ள மற்றும் கரையாத நிலையில் மிதக்கும் நிலையில் உள்ள நுண்துகள்கள் மற்றும் கன உலோக கழிவுகள் நீர் துரித மணல் வடிகட்டியில் நீக்கப்படுகிறது.நிலை நிறுத்தப்பட்ட கரித்தூள் வடிகட்டி ஒன்று நிறுவப்பட்டு நீரில் உள்ள வண்ணம் மற்றும் துர்நாற்றம் நீக்கப்படுகிறது. கரித்தூள் அளவு 1.30 மீட்டர் உயரம் ஆகும்.சுத்திகரிக்கப்பட்ட நீரில் உள்ள நுண்ணுயிர் கிருமிகளை அகற்ற தேவையான திரவ நிலை குளோரின் கலவையை செலுத்தி மேலும் சுத்திகரிக்கப்படுகிறது.
1 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட சுத்திகரிக்கப்பட்ட நீர் சேமிப்பு தொட்டி அமைக்கப்பட்டு, கட்டுமான தொழிலுக்கு தண்ணீர் லாரிகளில் வழங்கப்படும். தண்ணீர் தேவைப்படுபவர்கள் சென்னைக் குடிநீர் வாரிய பெருங்குடி கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் உரிய கட்டணத்தை செலுத்தி பெற்றுக் கொள்ளலாம்.…
ரூ.56.6 லட்சம் மதிப்பீட்டில் நாளொன்றுக்கு 6 லட்சம் லிட்டர் திறன் கொண்ட மேம்படுத்தப்பட்ட சுத்திகரிப்பு நிலையம் பெருங்குடியில் அமைக்கப்பட்டு வருகின்றது. இத்திட்டப்பணி வரும் நவம்பர் மாதத்தில் முடிவுறும் என்று எதிர்பார்க்ப்படுகிறது. சாதாரண ஆழ்துளை கிணற்று நீரை பயன்படுத்தி உருவாகும் கான்கிரிட் உறுதியை விட கூடுதல் சுத்திகரிக்கப்பட்ட நீரினால் உருவாகும் கான்கிரிட்டின் உறுதி அதிகளவாகும். கட்டுமான பணிக்காக தங்கு தடையின்றி கூடுதல் சுத்திகரிக்கப்பட்ட நீர் கிடைப்பது உறுதி செய்யப்படும். தற்சமயம் கட்டுமான தொழிலகங்கள் மழைநீர் சேகரிக்கும் நீர் நிலைகள் மற்றும், ஆழ்துளை கிணறுகளில் இருந்து பெற்று உபயோகிக்கும் நீர் சேமிக்கப்பட்டு அதே அளவு நீரினை நீராதாரமாக பெற இயலும்.
சுத்திகரிக்கப்பட்ட நீரின் மூலம் வருவாய் ஈட்டப்பட்டு இந்த வருவாய் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலைய பராமரிப்பு செலவினை ஈடுகட்ட பயன்படுத்தப்படும். குடியிருப்புகளுக்கான குடிநீர் ஆதாரம் பெருகும்.
சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர், நீர் நிரப்பும் இடத்தில் ஒவ்வொரு 1000 லிட்டருக்கு ரூ.20 என வழங்க சென்னைக் குடிநீர் வாரியம் உத்தேசித்துள்ளது. நீர் கொண்டு செல்லும் தண்ணீர் லாரி, மற்றும் அதற்கான போக்குவரத்து செலவு பயனாளிகளின் பொறுப்பாகும். இந்த தண்ணீரைப் பெறுவதற்கு கட்டுமான நிறுவனங்களின் ஒப்பந்ததாரர்கள் தங்களது முன்னுரிமையை தற்போது சென்னைக் குடிநீர் வாரியத்தில் பதிவு செய்துக் கொள்ளலாம்.
இவ்வாறு சென்னைக் குடிநீர் வாரிய செய்திகுறிப்பில் கூறப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 month 3 weeks ago | வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 month 3 weeks ago | ஆவாரம்பூவின் மருத்துவ பலன்கள் 1 month 3 weeks ago |
தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 2 weeks ago | குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 8 months 1 week ago | பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 1 week ago |
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு ப்ரை7 sec ago |
க்ரிஸ்பி கார்ன் ஸ்நாக்ஸ்2 days 23 hours ago |
ஆப்பிள் ரோஸ்ட்6 days 23 hours ago |
-
முல்லைப்பெரியாறில் புதிய அணை: கேரள அரசின் கருத்துருவை பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளக்கூடாது மத்திய அரசுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
24 May 2024சென்னை:சுப்ரீம் கோர்ட் உத்தரவை மீறி, முல்லைப் பெரியாறில் புதிய அணை கட்டுவதற்கான ஆய்வை மேற்கொள்ள கேரள அரசு முன்மொழிந்துள்ள கருத்துருவை மத்திய அரசு பரிசீலனைக்கு எடுத்துக்
-
6-ம் கட்ட தேர்தல்:58 பார்லி. தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு
24 May 2024புதுடெல்லி:பாராளுமன்ற 6-ம் கட்ட தேர்தலை முன்னிட்டு 7 மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசத்தைச் சேர்ந்த 58 தொகுதிகளில் நேற்று முன்தினம் பிரசாரம் ஓய்ந்த நிலையில் இன்று
-
கார்த்திக் குமார் குறித்து கருத்து தெரிவிக்க பாடகி சுசித்ராவுக்கு சென்னை ஐகோர்ட் இடைக்கால தடை
24 May 2024சென்னை:நடிகர் கார்த்திக் குமார் குறித்து அவதூறு கருத்துகளை தெரிவிக்கக் கூடாது என பாடகி சுசித்ராவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
-
தமிழகத்தில் மே 30 வரை மிதமான மழை வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்
24 May 2024சென்னை, தமிழகத்தில் இன்று (மே 25) முதல் 30-ஆம் தேதி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
டி20 உலகக்கோப்பை: இந்திய அணியின் முதல் குழு இன்று அமெரிக்கா பயணம்
24 May 2024புதுடெல்லி: டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணி அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொள்ளும் நாள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
-
வங்கக்கடலில் இன்று புயல் உருவாகிறது: தமிழகத்தில் 9 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
24 May 2024சென்னை, வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்றதன் எதிரொலியாக தமிழகத்தில் 9 துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
-
கொரோனா நோய்த் தொற்றால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு 430 கோடி ரூபாயில் நிவாரண திட்டம்: தமிழ்நாடு அரசு அறிக்கை
24 May 2024சென்னை, பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு ரூ.430 கோடியில் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது.
-
சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு 1,460 சிறப்பு பஸ்கள் இன்று இயக்க ஏற்பாடு
24 May 2024சென்னை:சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு இன்று 1,460 சிறப்பு பஸ்களை இயக்க போக்குவரத்து துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
-
ஜெயக்குமார் மர்ம மரண வழக்கு:மகனிடம் சி.பி.சி.ஐ.டி. விசாரணை
24 May 2024நெல்லை:நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் மர்மமான முறையில் மரணமடைந்த வழக்கு விசாரணை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்ட நிலையில், அவரது மகனிடமிருந்து விசாரணை தொடங்கி
-
குற்றாலம் அருவிகளில் குளிக்க மீண்டும் தடை: சுற்றுலாப்பயணிகள் ஏமாற்றம்
24 May 2024தென்காசி, தென்காசி மாவட்டத்தில் வெள்ளிக்கிழமையும் மழை நீடித்தது.
-
பதிவான வாக்குகளின் விவரங்களை வெளியிட தலைமை தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட சுப்ரீம் கோர்ட் மறுப்பு
24 May 2024புதுடெல்லி, வாக்குச்சாவடி வாரியாக பதிவான வாக்குகளின் எண்ணிக்கையை வெளியிட உத்தரவிடக் கோரிய மனுவை விசாரிக்க மறுப்பு தெரிவித்த சுப்ரீம் கோர்ட், அந்த மனுவை நிராகரித்தது.
-
நாளை கரையை கடக்கும் 'ரீமால்' புயல்:மேற்கு வங்கத்திற்கு எச்சரிக்கை
24 May 2024கொல்கத்தா:வங்கக் கடலில் உருவாகி வரும் 'ரீமால்' புயல், வரும் நாளை (ஞாயிற்றுக்கிழமை - மே 26) தீவிர புயலாக வலுப்பெற்று, மேற்கு வங்கம் மற்றும் வங்கதேச கடற்கரையை தாக்கும் என
-
இந்திய அணி பயிற்சியாளர் பதவி விவகாரம்:ஆஸி., வீரர்களை அணுகினோமா..?பி.சி.சி.ஐ. செயலர் ஜெய்ஷா மறுப்பு
24 May 2024மும்பை:இந்திய கிரிக்கெட் அணியின் அடுத்த தலைமை பயிற்சியாளர் பொறுப்புக்காக எந்த ஆஸ்திரேலிய வீரர்களையும் அணுகவில்லை என்று பி.சி.சி.ஐ.
-
சேலத்தில் மதிப்பிழந்த 500, 1000 ரூபாய் நோட்டுகளை வைத்திருந்தவர் கைது
24 May 2024சேலம்: சேலத்தில் கஞ்சா பதுக்கி வைத்திருப்பதாக வந்த புகாரின் பேரில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், மதிப்பிழப்பு செய்யப்பட்ட ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான பழைய ரூ.500, ரூ.1000
-
சிலந்தி ஆற்றின் குறுக்கே அனுமதியின்றி தடுப்பணை கட்ட கேரள அரசுக்கு தடை தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு
24 May 2024சென்னை:கேரள அரசு சிலந்தி ஆற்றின் குறுக்கே அனுமதி இன்றி தடுப்பணை கட்டினால் தடை விதிக்கப்படும் என்று தேசிய பசுமை தீர்ப்பாயம் நேற்று (வெள்ளிகிழமை) உத்தரவிட்டுள்ளது.
-
வங்கதேசத்திற்கு எதிரான டி20 தொடரை வென்ற அமெரிக்கா
24 May 2024ஹூஸ்டன்: வங்கதேச அணிக்கு எதிரான 2வது டி20 போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம், தொடரைக் கைப்பற்றி அமெரிக்க அணி அசத்தியுள்ளது.
-
அரையிறுதியில் பி.வி.சிந்து
24 May 2024மலேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடரின் 2-வது சுற்றில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து, சீனாவைச் சேர்ந்த ஹான் ஹூவை எதிர்கொண்டார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 25-05-2024.
25 May 2024 -
புயல் எச்சரிக்கை: சென்னையில் இருந்து அந்தமானுக்கு இயக்கப்படும் : விமான சேவைகள் ரத்து
25 May 2024சென்னை, வங்க கடலில் உருவாகியுள்ள ரெமல் புயல் காரணமாக, ஏர் இந்தியா விமான நிறுவனம் அந்தமானுக்கு இயக்கப்படும் விமான சேவைகளை, நேற்று ஒரு நாள், முழுவதுமாக ரத்து செய்துள்ளது.
-
பயனர்களின் தரவுகளை ஏற்றுமதி செய்யும் வாட்ஸ் அப் நிறுவனம்: எலான் மஸ்க் பரபரப்பு குற்றச்சாட்டு
25 May 2024வாஷிங்டன், வாட்ஸ் அப் தனது பயனர்களின் தரவை ஒவ்வொரு இரவும் (விளம்பர நிறுவனங்களுக்கு) ஏற்றுமதி செய்கிறது என்று எலான் மஸ்க் குற்றஞ்சாட்டியுள்ளார்.
-
போர் நிறுத்தத்திற்கு உக்ரைனுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார்: ரஷ்ய செய்தி தொடர்பாளர் தகவல்
25 May 2024மாஸ்கோ, போரை நிறைவு செய்வதற்காக ,உக்ரைனுடன் பேச்சுவார்த்தை நடத்த ரஷ்யா தயாராக இருக்கிறது என அந்நாட்டு செய்தி தொடர்பாளர் டிமித்ரி பெஸ்கோ தெரிவித்துள்ளார்.
-
மழை பாதிப்புகளை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை : தலைமைச்செயலாளர் சிவ்தாஸ் மீனா பேட்டி
25 May 2024சென்னை : மழையால் ஏற்படும் பாதிப்புகளை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா தெரிவித்தார்.
-
தசைப் பயிற்சியாளர்கள் மற்றும் சிறப்பு ஆசிரியர்களுக்கான மதிப்பூதியம் உயர்வு: தமிழக அரசு
25 May 2024சென்னை : தமிழக அரசானது சிறப்பு ஆசிரியர், தசை பயிற்சியாளர்களுக்கான மதிப்பூதியம் ரூ.14,000லிருந்து ரூ.18,000ஆக உயர்த்தி வழங்க உத்தரவு பிறப்பித்துள்ளது.
-
அபுதாபி இந்து கோவிலில் நடிகர் ரஜினிகாந்த் தரிசனம்
25 May 2024அபுதாபி, அபுதாபி நகருக்கு சென்ற நடிகர் ரஜினிகாந்த் கட்டப்பட்டுள்ள பாப்ஸ் இந்து கோவிலை பார்வையிட்டு தரிசனம் செய்தார்.
-
பயங்கரவாத அமைப்புக்கு ஆதரவு: சென்னையில் மேலும் 3 பேர் கைது
25 May 2024சென்னை : பல நாடுகளிலும் தடை செய்யப்பட்ட, ஹிஸ்ப் உத் தஹ்ரீர் என்ற பயங்கரவாத இயக்கத்தின் ஆதரவாளர்கள் மூன்று பேரை, சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் நேற்று முன்தி