எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதுடெல்லி, மார்ச் 17 - மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி பாராளுமன்றத்தில் நேற்று 2012-13 ஆம் நிதி ஆண்டிற்கான பொது பட்ஜெட்டை தாக்கல் செய்தார். பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள் வருமாறு :-
* பொதுத்துறை நிறுவனங்களில் உள்ள மத்திய அரசின் பங்குகளை விற்று ரூ. 30 ஆயிரம் கோடி திரட்டப்படும்.
* பல்பொருள் சில்லரை விற்பனையில் நேரடி அன்னிய முதலீட்டை அனுமதிப்பது தொடர்பாக ஒருமித்த கருத்தை பெற்றபிறகு முடிவு செய்யப்படும்.
* ராஜீவ்காந்தி பங்கு சேமிப்பு திட்டம் என்ற புதிய சேமிப்புத் திட்டம் அறிமுகப்படுத்தப்படும். சில்லரை முதலீட்டாளர்களுக்கு வருமான வரி விலக்கு அளிப்பதற்காக இந்த திட்டம் கொண்டுவரப்படுகிறது.
* 12-வது ஐந்தாண்டுத் திட்டத்தில் உள்கட்டமைப்பு வசதிகளுக்கான ஒதுக்கீடு 50 லட்சம் கோடியாக உயர்த்தப்படுகிறது.
* சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைதுறை அமைச்சகத்திற்கான நிதி ஒதுக்கீடு 14 சதவீதம் அதிகரிக்கப்பட்டு ரூ. 25 ஆயிரத்து 360 கோடியாக உயர்த்தப்படும்.
* நெசவாளர்கள், நெசவாளர் கூட்டுறவு சங்கங்கள் பெற்ற கடன்கள் ரூ. 3,884 கோடி தள்ளுபடி செய்யப்படுகிறது.
* சிறிய தொழில் முனைவோரை ஊக்குவிக்க ரூ. 5 ஆயிரம் கோடியில் புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
* விவசாயத் துறைக்கான ஒதுக்கீடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
* வருமான வரி விலக்கு உச்சரவரம்பு ரூ. 1.80 லட்சத்திலிருந்து ரூ. 2 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
* ரூபாய் 2 லட்சம் முதல் 5 லட்சம் வரை வருமானம் உள்ளவர்களுக்கு 10 சதவீதம் வருமான வரி விதிக்கப்படும்.
* ரூ. 5 லட்சம் முதல் ரூ. 10 லட்சம் வரை வருமானம் உள்ளவர்களுக்கு 20 சதவீதம் வருமான வரி விதிக்கப்படுகிறது.
10 லட்சத்திற்கு மேல் வருமானம் உள்ளவர்களுக்கு 30 சதவீதம் வருமான வரி விதிக்கப்படும்.
* மூத்த குடிமக்களுக்கான வருமான வரி விலக்கு உச்சவரம்பு (60 முதல் 80 வயது வரை உள்ளவர்களுக்கு) ரூ. 2.5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
* மத்திய புலனாய்வுத் துறை நிறுவனத்திற்கு (சி.பி.ஐ.க்கு) ரூ. 395.77 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
* வங்கி சேமிப்பு கணக்குகள் மூலம் கிடைக்கும் வட்டி வருமானத்திற்கு ரூ. 10 ஆயிரம் வரை இனி வரி கிடையாது.
* இந்த பட்ஜெட்டினால் பெரிய கார்கள், இறக்குமதி செய்யப்பட்ட சைக்கிள்கள், சிகரெட், பீடி, இறக்குமதி செய்யப்பட்ட தங்க, வைர ஆபரணங்கள் ஆகியவற்றின் விலைகள் அதிகரிக்கும். ஆனால் வெள்ளி ஆபரணங்களின் விலைகள் குறைவாகவே இருக்கும்.
* பல்வேறு மானிய செலவுகள் குறைக்கப்படும். அல்லது முழுமையாக நிறுத்தப்படும்.
* இந்தியர்கள் வெளிநாட்டு வங்கிகளில் கறுப்புப் பணத்தை பதுக்கி வைத்திருப்பதை தடுக்க வெளி நாட்டு வங்கிகளில் கணக்கு வைத்திருக்கும் இந்தியர்கள் அந்த கணக்கு விபரங்களை கட்டாயமாக தெரிவிக்க வேண்டும் என்பதற்கான சட்ட மசோதா ஒன்று விரைவில் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும்.
* இந்த நிதி ஆண்டிற்கான மொத்த செலவினம் ரூ. 14 லட்சத்து 90 ஆயிரத்து 925 கோடி.
* அரசின் மொத்த வரி வருமானம் 10 லட்சத்து 77 ஆயிரத்து 612 கோடி.
* இந்த ஆண்டிற்கான நிதிப் பற்றாக்குறை 3 லட்சத்து 13 ஆயிரத்து 313 கோடியாகும்.
* ராணுவத்திற்கு இந்த பட்ஜெட்டில் 1 லட்சத்து 93 ஆயிரத்து 407 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
* பங்கு சந்தையில் ரூ. 50 ஆயிரம் வரை முதலீடு செய்பவர்களுக்கு சலுகைகள் வழங்கப்படும்.
* உள்கட்டமைப்புக்கு தேவையான நிதி ஆதாரத்தை பெருக்கும் வகையில் அடுத்த நிதி ஆண்டில் ரூ. 60 ஆயிரம் கோடிக்கு வரி இல்லா பத்திரங்கள் வெளியிடப்படும்.
* யூரியா உரம் உற்பத்தில் இந்தியா இன்னும் 5 ஆண்டுகளில் தன்னிறைவு பெறும்.
* விவசாய கடனை குறிப்பிட்ட காலத்திற்குள் திருப்பிக் கொடுக்கும் விவசாயிகளுக்கு பரிசுகள் வழங்கப்படும். விவசாயிகளுக்கு வழங்கப்படும் கடன் அட்டைகளை இனி ஏ.டி.எம்.களில் பயன்படுத்தலாம்.
* மதிய உணவுத் திட்டத்திற்கு ரூ. 11,937 கோடி ஒதுக்கப்படும்.
* 12 வது ஐந்தாண்டுத் திட்டத்தில் 6000 பள்ளிக்கூடங்கள் தொடங்கப்படும்.
* 7 மருத்துவக் கல்லூரிகள் அகில இந்திய மருத்துவக்கழகமாக தரம் உயர்த்தப்படும்.
* ஆதார் திட்டத்தின் கீழ் அடுத்த மாத தொடக்கத்தில் 40 கோடி பேர் பதிவு செய்யப்படுவார்கள்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
வெண்டைக்காய் முட்டை பொரியல்2 days 6 hours ago |
முட்டைகோஸ் கட்லெட்6 days 11 hours ago |
ஆனியன் ரிங்ஸ்1 week 2 days ago |
-
மாநில கட்சிகளாக அங்கீகாரம்: திருமாவளவன், சீமானுக்கு நடிகர் விஜய் வாழ்த்து
07 Jun 2024சென்னை : நடைபெற்று முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் மக்களின் நம்பிக்கையைப் பெற்று, மாநிலக் கட்சிகளாக அங்கீகாரம் பெறும் தகுதியை வென்றெடுத்துள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சிக்
-
11-ம் தேதி முதல் செயல்பாட்டுக்கு வரும் திருச்சி விமான நிலைய புதிய முனையம்
07 Jun 2024திருச்சி : திருச்சி விமான நிலையத்தின் புதிய முனையம் வரும் 11-ம் தேதி செயல்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
சென்னையில் இன்று தி.மு.க. புதிய எம்.பி.க்கள் கூட்டம் : துரைமுருகன் அறிவிப்பு
07 Jun 2024சென்னை : தமிழகத்தில் தி.மு.க.
-
2.49 லட்சம் பேர் விண்ணப்பம்: பொறியியல் கலந்தாய்வை ஆகஸ்ட் முதல் வாரத்தில் நடத்த திட்டம்
07 Jun 2024சென்னை : பொறியியல் படிப்புக்கு இந்த ஆண்டு 2.49 லட்சம் மாணவர்கள் விண்ணப்பம் பதிவு செய்த நிலையில் அவர்களில் இதுவரை 1.78 லட்சம் பேர் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்துள்ளனர்.
-
நீட் தேர்வு குளறுபடி: மத்தியில் அமையும் புதிய அரசு விளக்கமளிக்க வேண்டும் : எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
07 Jun 2024சென்னை : நீட் தேர்வில் நடந்த குளறுபடிகுறித்து மத்தியில் அமையும் புதிய அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என்று அ.தி.மு.க.
-
தமிழகத்தின் 13-ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு : சென்னை வானிலை மையம் தகவல்
07 Jun 2024சென்னை : தமிழகத்தில் இன்று முதல் 13-ம் தேதி வரை லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
நீட் தேர்வை ஒழித்துக்கட்டும் நாள் வெகுதொலைவில் இல்லை : முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி
07 Jun 2024சென்னை : நீட் தேர்வை ஒழித்துக்கட்டும் நாள் வெகுதொலைவில் இல்லை என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
ஜூன் 24-ல் தமிழ்நாடு சட்டசபை கூடுகிறது: சபாநாயகர் அப்பாவு அதிகாரப்பூர்வ அறிவிப்பு
07 Jun 2024சென்னை, தமிழக அரசின் துறைகள் ரீதியான மானிய கோரிக்கை விவாதத்துக்காக தமிழக சட்டப்பேரவை வரும் ஜூன் 24-ம் தேதி கூடுவதாக சட்டப்பேரவைத்தலைவர் மு.அப்பாவு அறிவித்துள்ளார்.
-
நாட்டு மக்களுக்காக உழைக்க எப்போதும் தயாராக உள்ளோம்: என்.டி.ஏ. கூட்டத்தில் நரேந்திர மோடி பேச்சு
07 Jun 2024புதுடெல்லி, நாங்கள் தோற்கவில்லை; தோற்கவும் மாட்டோம் என்று தெரிவித்த நரேந்திர மோடி நாட்டு, மக்களுக்காக உழைக்க எப்போதும் தயாராக உள்ளோம் என்றும் அவர் தெரிவித்தார்.
-
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாண சட்டசபையில் எம்.எல்.ஏ.க்கள் பஞ்சாபி மொழியில் பேச அனுமதி
07 Jun 2024இஸ்லாமாபாத் : பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாண சட்டசபையில் எம்.எல்.ஏ.க்கள் பஞ்சாபி மொழியில் பேச அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
-
டெல்லியில் நாளை நடக்கிறது காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம்
07 Jun 2024புதுடெல்லி : காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தலைமையில் டெல்லியில் நாளை அக்கட்சியின் காரிய கமிட்டி கூட்டம் நடைபெறுகிறது.
-
தேசிய ஜனநாயக கூட்டணியை இன்று அவர்கள் ஆதரிக்கலாம்: நாளை எங்களுடன் இணைவர் - சஞ்சய் ராவத் நம்பிக்கை
07 Jun 2024மும்பை : வரும் 9-ம் தேதி அன்று தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கலாம்.
-
மோடி பிரதமராக இருக்கும் வரை நாடு யாருக்கும் தலைவணங்காது : நடிகர் பவன் கல்யாண் பேச்சு
07 Jun 2024புதுடெல்லி : மோடி பிரதமராக இருக்கும்வரை நம் நாடு யாருக்கும் தலைவணங்காது என நடிகர் பவன் கல்யாண் தெரிவித்தார்
-
பிரதமருடன் இணைந்து பணியாற்றவுள்ளோம் : பீகார் முதல்வர் நிதிஷ் குமார் பேச்சு
07 Jun 2024புதுடெல்லி, நாங்கள் அனைவரும் பிரதமருடன் இணைந்து பணியாற்றவுள்ளோம் என பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் தெரிவித்துள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 07-06-2024.
07 Jun 2024 -
கொடநாடு எஸ்டேட்டில் ஊராட்சி மன்ற தலைவர் ஆய்வு செய்ய ஐகோர்ட் அனுமதி
07 Jun 2024சென்னை : கொடநாடு எஸ்டேட்டில் ஆய்வு செய்ய கோத்தகிரி ஊராட்சி மன்ற தலைவருக்கு சென்னை ஐகோர்ட் அனுமதி வழங்கி உள்ளது.
-
சுரங்கத்தில் பதுங்கியிருந்த இஸ்ரேல் வீரர்கள் 5 பேரை கொன்று விட்டோம் : ஹமாஸ் அமைப்பினர் தகவல்
07 Jun 2024காசா : ரபா நகரின் அருகே இஸ்ரேல் படைகளால் அமைக்கப்பட்ட சுரங்கப் பாதையில் பதுங்கியிருந்த இஸ்ரேல் படைவீரர்கள் 5 பேரை கொன்று விட்டதாக ஹமாஸ் அமைப்பு தெரிவித்துள்ளது.
-
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் புதிய உறுப்பினர்களாக பாக். உள்ளிட்ட 5 நாடுகள் தேர்வு
07 Jun 2024ஜெனீவா : டென்மார்க், கிரீஸ், பாகிஸ்தான், பனாமா மற்றும் சோமாலியா ஆகிய ஐந்து நாடுகள் ஐநாவின் பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தரமற்ற உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளன.
-
ரூ.55 ஆயிரத்தை நெருங்கும் ஒரு சவரன் தங்கம் விலை
07 Jun 2024சென்னை : சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று பவுனுக்கு ரூ. 320 உயா்ந்து ரூ.54,720-க்கு விற்பனையானது.
-
உலகின் சக்தி வாய்ந்த தலைவர் பிரதமர் மோடி : சந்திரபாபு நாயுடு புகழாரம்
07 Jun 2024புதுடெல்லி : உலகின் சக்தி வாய்ந்த தலைவர் பிரதமர் மோடி என்று தெலுங்குதேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு புகழாரம் சூட்டியுள்ளார்.
-
எல்.கே.அத்வானியை சந்தித்து ஆசி பெற்றார் பிரதமர் மோடி
07 Jun 2024புதுடெல்லி : முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், முன்னாள் துணை பிரதமர் எல்.கே.அத்வானி, முன்னாள் மத்திய அமைச்சர் முரளி மனோகர் ஜோஷி ஆகியோரை பிரதமர் நரேந்திர மோடி சந்தித்
-
கேரளாவில் நாளை வரை கனமழைக்கான எச்சரிக்கை : 5 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்
07 Jun 2024திருவனந்தபுரம் : கேரளாவில் பல மாவட்டங்களில் நாளை 9-ம் தேதி வரை கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என்று வானிலை மையம் கணித்துள்ளது.
-
தென்னை சாகுபடி விவசாயிகளின் நலனை பாதுகாக்கும் கையேடு : அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் வெளியிட்டார்
07 Jun 2024சென்னை : தமிழக முதல்வரின் ஆணைக்கிணங்கவும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் வேளாண்மைத்துறை அமைச்சர் எம்.ஆர்
-
குற்ற வழக்கில் சிக்கிய மகன்: அதிபர் ஜோ பைடன் வருத்தம்
07 Jun 2024வாஷிங்டன் : சட்டவிரோதமாக துப்பாக்கி வாங்கி வைத்திருந்த வழக்கில் சிக்கியுள்ள தனது மூத்த மகன் ஹண்டர் பைடன் குறித்து அமெரிக்க அதிபர் ஜோபைடன் வருத்தம் அடைந்துள்ளார்.
-
ஆதரவு எம்.பி.க்களின் பட்டியலை வழங்கினார்: 3-வது முறையாக ஆட்சி அமைக்க மோடிக்கு ஜனாதிபதி முர்மு அழைப்பு
07 Jun 2024புதுடெல்லி, என்.டி.ஏ.