எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதுடெல்லி, ஏப்.- 23 - சேவாக்கை அவுட்டாக்கியவுடன் ஆட்டம் எங்களுக்கு சாதகமாக திரும்பிவிட்டது என்று புனே வாரியர்ஸ் அணியின் கேப்டன் சவுரவ் கங்குலி, டெல்லி அணிக்கு எதிரான வெற்றிக்கு பிறகு தெரிவித்தார். 5-வது ஐ.பி.எல். தொடரில் நேற்று டெல்லி பெரோஷா கோட்லா மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் டெல்லி டேர்டெவில்ஸ் அணியும் கங்குலி தலைமையிலான புனே வாரியர்ஸ் அணியும் மோதின. இரு அணிகளும் சமபலம் கொண்ட அணிகளாக திகழ்ந்ததால் இந்த போட்டி ரசிகர்களுக்கு பெரும் விருந்தாக அமைந்தது. துவக்க ஜோடியில் உத்தப்பா சொற்ப ரன்களில் அவுட்டானாலும் பின்னர் களமிறங்கிய சவுரவ் கங்குலி, ஜெஸ்ஸி ரைடருடன் சேர்ந்து அதிரடியாக ரன்களை குவித்தார். இதனால் புனே அணியின் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது. அணியின் எண்ணிக்கை 116 ஆக உயர்ந்தபோதுதான் கங்குலி வீழ்ந்தார். அடுத்து ரைடருடன், ஸ்மித் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடியும் அதிரடி ரன் குவித்ததால் ஆட்ட நேர முடிவில் புனே அணி 3 விக்கெட் இழப்பிற்கு 192 ரன்களை குவித்தது. ரைடர் 86 ரன்களையும், கங்குலி 41 ரன்களையும், ஸ்மித் 13 பந்துகளில் 34 ரன்களையும் குவித்தனர். டெல்லி அணி சார்பில் மோர்கெல் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். தொடர்ந்து 193 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற பெரும் இலக்கை சேஸ் செய்த டெல்லி அணியில் ஜெயவர்த்தனா 7 ரன்களுடன் ஏமாற்றம் அளித்தாலும் அடுத்து களமிறங்கிய பீட்டர்சன் மற்றும் சேவாக் அதிரடியாக ரன்களை குவித்தனர். இந்நிலையில் 10 வது ஓவரை வீசிய புனே கேப்டன் கங்குலி முதல் பந்திலேயே பீட்டர்சன் விக்கெட்டை வீழ்த்தினார். அடுத்து ஆல்ரவுண்டர் பதான் விக்கெட்டையும் கங்குலியே வீழ்த்தினார். இருப்பினும் அதிரடியாக விளையாடிவந்த சேவாக் 57 ரன்கள் எடுத்த நிலையில் அடுத்த சில நிமிடங்களிலேயே முரளி கார்த்திக் பந்தில் காட் அண்டு போல்டு முறையில் அவுட்டானார். அடுத்தடுத்த இந்த இரண்டு விக்கெட்டுகள் ஆட்டத்தின் போக்கையே மாற்றியது. இதையடுத்து டெல்லி அணியின் ரன் வேகம் கட்டுப்படுத்தப்பட்டது. கடைசியில் டெல்லி அணி 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 172 ரன்களை மட்டுமே எடுத்தது. இதனால் 20 ரன்கள் வித்தியாசத்தில் புனே வாரியர்ஸ் அணி வெற்றிபெற்றது. ஆல்ரவுண்டராக ஜொலித்த புனே அணி கேப்டன் சவுரவ் கங்குலி ஆட்ட நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆட்டம் முடிந்த பிறகு பேட்டியளித்த கங்குலி, சேவாக்கின் விக்கெட்டை வீழ்த்தியதே ஆட்டத்தின் திருப்புமுனையாக அமைந்தது என்றார். மேலும் கெவின் பீட்டர்சனை அவுட்டாக்கிய பிறகு நீண்ட தூரம் ஓடி அதனை கொண்டாடியது குறித்து தெரிவித்த கங்குலி, பீட்டர்சன் விக்கெட் அந்த நேரத்தில் மிகவும் முக்கியமான விக்கெட். அந்த விக்கெட்டை வீழ்த்தியது எனக்கு மிகவும் நிம்மதியாக இருந்தது. மிக மகிழ்ச்சியாகவும் இருந்தது என்றார். அவர் மேலும் கூறுகையில் எங்களது அணியின் வீரர் இளம் ஸ்டீவன் ஸ்மித் 13 பந்துகளில் 34 ரன்களை குவித்ததும், ஜெஸ்ஸி ரைடர் 86 ரன்களை சேர்த்ததும் அணியின் வெற்றிக்கு வித்திட்டது என்றார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஆனியன் ரிங்ஸ்1 min 19 sec ago |
உருளைக்கிழங்கு ப்ரை4 days 17 min ago |
க்ரிஸ்பி கார்ன் ஸ்நாக்ஸ்1 week 5 min ago |
-
இன்டியா கூட்டணி கூட்டம்: மம்தா பானர்ஜி பங்கேற்கவில்லை
28 May 2024புதுடெல்லி, வரும் 1-ம் தேதி நடைபெறவுள்ள இன்டியா கூட்டணி ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க இயலாது என்று மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
-
பெரியாறில் புதிய அணை: கேரளா மனு மீதான மத்திய நிபுணர் குழுவின் ஆலோசனை கூட்டம் ரத்து : தமிழக விவசாயிகள் தொடர் போராட்டத்தால் நடவடிக்கை
28 May 2024புதுடெல்லி : முல்லைப்பெரியாறில் புதிய அணை தொடர்பாக கேரளா மனு மீதான மத்திய சுற்றுச்சூழல் அமைச்சக நிபுணர் குழுவின் ஆலோசனை கூட்டம் நேற்று திடீரென ரத்து செய்யப்பட்டது.
-
தமிழக பல்கலை. பாடத்திட்டம்: கவர்னர் ஆர்.என்.ரவி குற்றச்சாட்டு
28 May 2024ஊட்டி : தமிழக பல்கலைக்கழக பாடத்திட்டங்களில், இந்திய சுதந்திரப் போராட்ட வரலாறு மறைக்கப்பட்டுள்ளது என்றும், திராவிட இயக்க வரலாறு அதிக அளவில் உள்ளது என்றும் கவர்னர் ஆர்.என
-
3 நாட்களில் துவங்குகிறது தென்மேற்கு பருவமழை : இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்
28 May 2024புதுடெல்லி : அடுத்த மூன்று அல்லது நான்கு நாட்களில் கேரளாவில் தென்மேற்குப் பருவமழை தொடங்க வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
மூன்று நாள் பயணமாக நாளை குமரி வருகிறார் பிரதமர் நரேந்திரமோடி
28 May 2024சென்னை : 3 நாள் பயணமாக நாளை குமரி வரும் பிரதமர் நரேந்திரமோடி, விவேகானந்தர் பாறையில் உள்ள மண்டபத்தில் இரவு பகலாக 3 நாட்கள் தியானத்தில் ஈடுபடவுள்ளார்.
-
இன்டியா கூட்டணியின் கூட்டம்: ஜூன் 1-ம் தேதி டெல்லி செல்கிறார் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின்
28 May 2024சென்னை : இன்டியா கூட்டணியின் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்பதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஜூன் 1-ம் தேதி டெல்லி செல்கிறார்.
-
இரவு நேரத்தில் கடற்கரைக்கு செல்லும் மக்களை வெளியேற்றும் காவல்துறை : தமிழக டி.ஜி.பி. பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு
28 May 2024சென்னை : கோடை வெப்பத்தை தணிக்க இரவு நேரங்களில் கடற்கரை, பூங்காக்களுக்குச் செல்லும் மக்களை துரத்தக்கூடாது என காவல் துறைக்கு உத்தரவிடக் கோரிய வழக்கில், தமிழக டிஜிபி, செ
-
பதிவுத்துறை சட்டத்தின் கீழ் தேவாலய சொத்துக்களை கொண்டு வர வேண்டும் : ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவு
28 May 2024மதுரை : இந்து கோயில்கள், வஃக்புவாரிய சொத்துக்கள் பத்திரப்பதிவு பதிவு செய்யப்படுவதை தடுப்பது போல், கிறிஸ்தவ தேவலாய சொத்துக்களை பதிவுத்துறை சட்டம்-1908 பிரிவு 22 ஏ-க்குள்
-
ரூ.3,100 கோடியில் 1 லட்சம் வீடுகள் கட்ட அரசு இலக்கு : வழிகாட்டுதல்களை பின்பற்ற ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தல்
28 May 2024சென்னை : கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தில் ரூ.3,100 கோடியில் ஒரு லட்சம் வீடுகள் கட்டுவதற்கான வழிகாட்டுதல்களை வெளியிட்டு, அவற்றை கண்டிப்பாக பின்பற்ற மாவட்ட ஆட்சியர்களுக்க
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 29-05-2024.
29 May 2024 -
தலைமை பயிற்சியாளர் பதவி: எம்.எஸ்.டோனி, சச்சின் பெயர்களில் விண்ணப்பங்கள்: பி.சி.சி.ஐ. அதிர்ச்சி
28 May 2024மும்பை : இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு நரேந்திர மோடி, அமித்ஷா, எம்.எஸ்.
-
டி-20 உலகக் கோப்பை: ஆதிக்கம் செலுத்துவார்களா பவுளர்கள்?
28 May 2024ஆன்டிகுவா : டி20 உலகக்கோப்பையில் பந்துவீச்சாளர்கள் ஆதிக்கம் செலுத்துவார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இம்பாக்ட் பிளேயர்...
-
இன்னும் 7 நாட்களே: ராகுல்
28 May 2024பான்ஸ்கான், மக்களை ஏமாற்றும் போலிக்காரருக்கு இன்னும் 7 நாள்களே உள்ளன என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
-
உலக செஸ் போட்டியில் சிறப்பாக விளையாடுவேன் : தமிழக வீரர் குகேஷ் நம்பிக்கை
28 May 2024சென்னை : உலக செஸ் போட்டியில் சிறப்பாக விளையாடுவேன் என்று தமிழக வீரர் குகேஷ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
கேண்டிடேட் செஸ்...
-
ரொனால்டோ சாதனை
28 May 2024போர்ச்சுல் நாட்டை சேர்ந்த கிறிஸ்டியானோ ரொனால்டோ கால்பந்து உலகின் தலைசிறந்த வீரர்களில் ஒருவர். உலகிலேயே அதிக கோப்பைகளை வென்ற வீரர் என்ற பெருமையையும் ரொனால்டோ பெற்ற
-
ஜூன் 3, 4-ம் தேதிகளில் வானில் 6 கோள்களின் அணிவகுப்பு : வெறும் கண்ணால் பார்க்கலாம்
29 May 2024சென்னை : ஒரு கோளுக்கு அடுத்து இன்னொரு கோள் என்று அடுக்கி வைக்கப்பட்டது போல நம் கண்களுக்கு தெரியும் நிகழ்வு கோள்களின் தொடர்வரிசை நிகழ்வு என்று அழைக்கப்படுகிறது. இந
-
இந்திய ராணுவ அதிகாரிக்கு ஐ.நா.வின் மதிப்புமிக்க விருது
29 May 2024நியூயார்க், ஐக்கிய நாடுகள் அமைதி காக்கும் வீரர்களின் சர்வதேச தினம் இன்று 30-ம் தேதி அன்று கடைப்பிடிக்கப்படுகிறது. இந்நிலையில், காங்கோவில் ஐ.நா.
-
பழனி கோவிலில் ரோப்கார் சேவை இன்று நிறுத்தம்
29 May 2024திண்டுக்கல் : பழனி முருகன் கோவிலில் பராமரிப்பு பணிக்காக இன்று ஒரு நாள் மட்டும் ரோப்கார் சேவை நிறுத்தப்படுவதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
-
நீலகிரி அருகே 26 அடி கிணற்றில் விழுந்த யானை குட்டி 8 மணி நேர போராட்டத்திற்கு பின் மீட்பு
29 May 2024ஊட்டி, : நீலகிரி மாவட்டம் கொளப்பள்ளி குறிஞ்சி நகர் பகுதியில் 26 அடி கிணற்றில் விழுந்த யானை குட்டி 8 மணி நேர போராட்டத்திற்கு பிறகு மீட்கப்பட்டது.
-
புழல் சிறையில் கைதிகளுக்கான கேன்டீன் மூடப்படவில்லை : ஐகோர்ட்டில் சிறை நிர்வாகம் தகவல்
29 May 2024சென்னை : சென்னை புழல் மத்திய சிறையில் செயல்பட்டு வந்த கைதிகளுக்கான கேன்டீன் மூடப்படவில்லை என சிறை நிர்வாகம் சென்னை ஐகோர்ட்டில் நேற்று தெரிவித்துள்ளது.
-
காலாவதியான பொருட்கள் ஆவினில் விற்பனை: ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்
29 May 2024சென்னை : தனியார் நிறுவனங்களுக்கு வழிகாட்டியாக இருக்க வேண்டிய அரசு நிறுவனமான ஆவின், காலாவதியான பொருட்களை விற்பனை செய்வது என்பது கடும் கண்டனத்திற்குரியது என்று முன்னாள் ம
-
கார்கில் தாக்குதல் எங்கள் தவறுதான்: பாக். முன்னாள் பிரதமர் ஒப்புதல்
29 May 2024லாகூர், இந்திய முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உடன் மேற்கொண்ட லாகூர் ஒப்பந்தத்தை மீறினோம்.
-
குடியேற்ற திருத்த விதிகளுக்கு எதிர்ப்பு: கனடாவில் இந்திய மாணவர்கள் உண்ணாவிரத போராட்டம்
29 May 2024ஒட்டாவா, கனடாவின் பிரின்ஸ் எட்வர்ட் தீவு மாகாணத்தில் வசிக்கும் இந்திய மாணவர்கள் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
-
பா.ஜ.க. நாட்டுக்கு ஆபத்தானது: அண்ணாமலைக்கு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பதிலடி
29 May 2024சென்னை : மதவெறி கொண்ட யானையை விட மதவெறி பிடித்துள்ள பா.ஜ.க.
-
பிரதமர் மோடி குறித்த கேள்விக்கு பதிலளிக்க நடிகர் ரஜினி மறுப்பு
29 May 2024சென்னை : இமயமலை செல்லும் நடிகர் ரஜினிகாந்த், செய்தியாளர்கள் எழுப்பிய பிரதமர் மோடி குறித்த கேள்விக்கு பதிலளிக்க மறுத்து விட்டார்.