எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஒரு லட்சம் துரித ஆய்வு உபகரணங்கள் வாங்குவதற்கு ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். இந்த கருவி கிடைத்ததும் 30 நிமிடங்களில் கொரோனா பரிசோதனை முடிவு வெளியாகிவிடும் என்றும் முதல்வர் தெரிவித்தார். தமிழகத்தில் கொரோனா ஆய்வகங்கள் எண்ணிக்கை 17 ஆக, இருக்கிறது. மேலும் 21 ஆய்வகங்கள் துவங்க தயார் நிலையில் உள்ளன. மத்திய அரசு அனுமதி கொடுத்ததும் 38 ஆய்வகங்கள் தமிழகத்தில் செயல்படப் போகிறது. முடிதிருத்துவோர், சலவை தொழிலாளர் என அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு ரூ.1000 வழங்கப்படும் என்றும் அவர் கூறினார்.
கலெக்டர்களுடன் ஆலோசனை
கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக மாவட்ட கலெக்டர்களுடன் காணொலி காட்சி மூலம் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தலைமைச்செயலாளர் சண்முகம், உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ், போலீஸ் டி.ஜி.பி. திரிபாதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
முதல்வர் பேட்டி
கூட்ட முடிவுக்குப் பின்னர் பத்திரிகையாளர்களுக்கு முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கொரோனா தொற்று இந்தியாவில் படிப்படியாக அதிகரித்து வருகிறது. தமிழ்நாட்டில் இதனை தடுக்க அரசு முழு வீச்சுடன் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன் ஏற்கனவே ஆலோசனை நடத்தி உள்ளேன். இன்றும் ஆலோசனை நடத்தினேன். அரசு சார்பில் கொரோனாவை தடுக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து கலெக்டர்களுக்கு ஆலோசனைகளை வழங்கினோம். அனைத்து கலெக்டர்களும் முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள்.
571 பேருக்கு பாதிப்பு
இன்று வரை தமிழகத்தில் 2 லட்சத்து 10 ஆயிரத்து 538 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. 90 ஆயிரத்து 541 பேர் வீட்டு கண்காணிப்பில் உள்ளனர். 10 ஆயிரத்து 814 பேருக்கு 28 நாள் வீட்டு கண்காணிப்பு முடிந்து விட்டது. தமிழகத்தில் 621பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை தமிழகத்தில் 6 பேர் பலியாகிவிட்டனர். தமிழ்நாட்டில் அரசு மருத்துவமனைகளில் 11 ம், தனியாரிடம் 6 பரிசோதனை மையங்களும் உள்ளன. இதுதவிர மேலும் 21 ஆய்வகங்கள் அமைக்க மத்திய அரசிடம் அனுமதி கேட்டிருக்கிறோம். இதனையும் சேர்த்து மொத்தம் 38 ஆய்வகங்கள் செயல்படும் நிலை இருக்கும். இதன் மூலம் வேகமாக துரிதமாக பரிசோதனை நடக்கும். 3,371 வெண்டிலேட்டர்கள் இப்போது உள்ளன. தேவையான முக கவசங்களும் மருத்துவ உபகரணங்களும் உள்ளன.மேலும் 2 ஆயிரத்து 500 வெண்டிலேட்டர்கள் கொள்முதல் செய்ய இன்று ஆர்டர் கொடுத்துள்ளோம்.
ரேபிட் சோதனை உபகரணங்கள்
ரேபிட் சோதனை உபகரணங்கள் ஒரு லட்சம் எண்ணிக்கையில், வாங்குவதற்கு ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. துரிய ஆய்வு கருவி கிடைத்ததும் 30 நிமிடங்களில் பரிசோதனை முடிவு வெளியாகிவிடும். அதன் பிறகு வேக வேகமாக பரிசோதனை முடிவுகள் வெளியாகும். சீனாவில் இருந்து இந்த உபகரணங்கள் கொள்முதல் செய்யப்படுகிறது. இந்த உபகரணங்கள் 9 -ந் தேதி கிடைத்து விடும். 10 - ந் தேதி முதல் பரிசோதனை செய்யப்படும். அனைத்து மாவட்டங்களுக்கும் இந்த கருவிகள் அனுப்பி வைக்கப்பட்டு பரிசோதனைகள் வேகமாக நடத்த நடவடிக்கை எடுக்கப்படும்.அத்தியாவசிய பொருட்கள் அனைவருக்கும் தட்டுப்பாடின்றி கிடைப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. வெளிமாநில தொழிலாளர்களுக்கு மருத்துவ வசதிகள், உணவு வசதிகள் செய்து கொடுக்கப்படுகிறது. நானே நேரடியாக சென்று உதவிகளை பார்வையிட்டு வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்து உள்ளேன்.வேறு மாநிலங்களில் சிக்கித்தவிக்கக் கூடிய தமிழர்களுக்கு உரிய உதவிகள் செய்து கொடுக்க வேண்டும் என்பதை அந்த மாநில முதல்வர்களை கேட்டுக்கொண்டு இருக்கிறேன். தமிழகத்தில், 268 முகாம்களில் வெளிமாநில தொழிலாளர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
எத்தனை வழக்குகள்
ஊரடங்கு மற்றும் தடை உத்தரவை மீறியதாக 94 ஆயிரத்து 873 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 94 ஆயிரத்து 158 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 72 ஆயிரத்து 242 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. 25 லட்சத்து 14 ஆயிரம் ரூபாய் அபராதமாக வசூல் செய்யப்பட்டது. மத்திய அரசு முதல் கட்டமாக 500 கோடி தந்துள்ளது. கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கைக்கு தேவையான நிதி உள்ளது. முன்னுரிமை கொடுத்து நிதியை ஒதுக்கி நடவடிக்கை எடுத்து வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது தொற்று நோய் அதிகரித்து வருகிறதே என்று ஒரு நிருபர் கேட்டதற்கு, இந்த நோயின் தாக்கம், வீரியம் பற்றி மக்களிடம் எடுத்து சொல்லி வருகிறோம். பத்திரிகையாளர்களான நீங்களும் சொல்கிறீர்கள். மக்கள் தங்களை தனிமைப்படுத்தினால் இந்த நோய் வராது. இதனை தடுப்பதற்கு ஒரே வழி நம்மை நாமே தனிமைப்படுத்தி கொள்வதுதான். எனவே மக்கள் முழு ஒத்துழைப்பு தரவேண்டும்.தொற்று நோய் எளிதாக பரவக் கூடியது. மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.
அறிகுறி தெரியாமலும் வருகிறது
கொரோனா நோய் அறிகுறி தெரியாமலேயே பாசிட்டிவ் வந்துள்ளது. எனவே அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு மக்கள் முழு ஒத்துழைப்பு தரவேண்டும். சமூக இடைவெளியை கடைப்பிடியுங்கள். இதனை கடைப்பிடித்தால் பரவுவதை தடுக்கலாம் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
சட்டம் கொண்டு வருவது மக்களை துன்புறுத்த அல்ல, மக்கள் நலன் கருதித்தான் சட்டம் அமுல்படுத்தப்படுகிறது. இதனை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். ஒவ்வொருவரும் நோயின் தன்மையை புரிந்து கொள்ள வேண்டும். இதனை உணர்ந்து கடைப்பிடித்தால் நிச்சயம் தடுக்க முடியும். சட்டம் போடுகிறோம். அதனை நடைமுறைப்படுத்துவது மக்கள் தான் என்றும் அவர் கூறினார்.
நடமாட்டத்தை குறைக்க வேண்டும்
மக்களுக்கு தங்குதடையின்றி அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அரசு சார்பில் நடமாடும் காய்கறி கடைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சி சார்பில் நடமாடும் காய்கறி கடைகளில் விற்பனை செய்ய சொல்லி இருக்கிறோம். படிப்படியாக மக்கள் நடமாட்டத்தை குறைக்க வேண்டும் என்பதற்காகத்தான் இதனை அரசு செய்கிறது.நோய் வருவது இயற்கை. வந்தால் அதனை குணப்படுத்துவது நமது கடமை. நோய் அறிகுறி தெரிந்தால் உடனே மருத்துவமனைக்கு வந்து பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். அப்படி செய்தால் குடும்பத்தை காப்பாற்றலாம். நாட்டையும் காப்பாற்றலாம். இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
பள்ளிகள் திறப்பு எப்போது ?
மற்றொரு கேள்விக்கு பதிலளித்த அவர்,
21 நாட்களுக்கு பிறகு நோயின் தீவிரத்தை பார்த்த பிறகுதான் பள்ளித்தேர்வு குறித்து முடிவு செய்யப்படும் என்று பதிலளித்தார்.மேலும் அரிசி, ரேசன்கார்டு தாரர்களுக்கு மட்டுமே அரசின் கொரோனா நிவாரண நிதி வழங்கப்படும் என்றும் தெரிவித்தார். சென்னை மாநகராட்சி உதவியுடன் நடமாடும் காய்கறி கடைகள் சென்னையில் தொடங்கப்பட உள்ளதாகவும் முதல்வர் மேலும் தெரிவித்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
முட்டைகோஸ் கட்லெட்1 day 6 hours ago |
ஆனியன் ரிங்ஸ்4 days 5 hours ago |
உருளைக்கிழங்கு ப்ரை1 week 1 day ago |
-
அடுத்த 120 நாட்களுக்கு பெரியார் அணையிலிருந்து பாசனத்திற்காக நீர் திறப்பு
01 Jun 2024கம்பம் : தமிழக அரசின் உத்தரவின்படி, கம்பம் பள்ளத்தாக்கு பகுதியின் முதல் போக பாசனத்திற்காக முல்லை பெரியார் அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டது.
-
ஜாமீன் மனு மீது வரும் 5-ம் தேதி தீர்ப்பு: இன்று மீண்டும் சிறை செல்லும் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்
01 Jun 2024புதுடெல்லி : டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஜாமீன் கேட்டு தொடர்ந்த, வழக்கு மீதான விசாரணை ஜூன் 5ம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்தது.
-
ஜூன் 5-ல் 7 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு
01 Jun 2024சென்னை : ஜூன் 5-ம் தேதி 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தென் மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
கேதர்நாத்-பத்ரிநாத் கோயில்களில் நடிகர் ரஜினிகாந்த் சாமி தரிசனம்
01 Jun 2024கேதர்நாத் : உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள கேதர்நாத் மற்றும் பத்ரிநாத் கோயில்களில் நடிகர் ரஜினிகாந்த் நேற்று முன்தின் (மே 31) சாமி தரிசனம் செய்தார்.
-
57 பாராளுமன்ற தொகுதிகளில் நடைபெற்ற இறுதிக்கட்ட தேர்தலில் விறுவிறு வாக்குப்பதிவு
01 Jun 2024புதுடில்லி : 57 பாராளுமன்ற தொகுதிகளில் நடைபெற்ற இறுதிக்கட்ட தேர்தலில் விறுவிறு வாக்குப்பதிவு நடைபெற்றது.
-
45 மணி நேர தியானத்தை நிறைவு செய்தார் பிரதமர் நரேந்திரமோடி : திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
01 Jun 2024கன்னியாகுமரி : கன்னியாகுமரி விவேகானந்தர் மண்டபத்தில் 45 மணி நேரமாக தியானத்தை நிறைவு செய்த பிரதமர் மோடி, அங்குள்ள திருவள்ளுவர் சிலையின் பாதத்தில் மாலை அணிவித்து மர
-
அருணாச்சல், சிக்கிம் மாநிலங்களில் இன்று சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியாகிறது
01 Jun 2024இடாநகர் : பாராளுமன்ற மக்களவைத் தேர்தலுடன், சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்ற அருணாச்சல் மற்றும் சிக்கிம் மாநிலங்களில் இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று, சட்டப்பேரவைத் தேர்த
-
மத்தியில் ஆட்சியை பிடிக்கப்போவது யார்? - பாராளுமன்ற தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவு வெளியீடு : பாரதிய ஜனதா மற்றும் அதன் கூட்டணிக்கே வெற்றி வாய்ப்பு
01 Jun 2024சென்னை : மத்தியில் ஆட்சியை பிடிக்கப்போவது யார்?
-
இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராகிறார் காம்பீர்?
01 Jun 2024மும்பை:இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக கவுதம் காம்பீருக்கு வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளயாகியுள்ளது. இதற்கான அறிவிப்பு விரைவில் வருகிறது.
-
தென் ஆப்பிரிக்க பாராளுமன்ற தேர்தலில் பெரும்பான்மையை இழந்தது ஆளும் கட்சி
02 Jun 2024பிரிடோரியா : தென் ஆப்பிரிக்காவில் நடந்த பாராளுமன்ற தேர்தலில் ஆளும் ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் கட்சி முதல் முறையாக பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது.
-
டி20 உலகக்கோப்பை தொடர்: இந்திய பவுளர்களுக்கு கவாஸ்கர் ஆலோசனை
01 Jun 2024மும்பை: டி20 உலகக்கோப்பை தொடரில் சிராஜ், பும்ரா ஆகியோருடன் ஹர்திக் பாண்ட்யா 3-வது வேகப்பந்து வீச்சாளராக செயல்பட வேண்டும் என்று சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.
-
சோமநாதர் கோயிலில் அமித்ஷா வழிபாடு
01 Jun 2024காந்திநகர் : குஜராத்தில் உள்ள சோமநாதர் கோயிலில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா குடும்பத்துடன் நேற்று காலை சுவாமி தரிசனம் செய்தார்.
-
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் குவிந்த பக்தர்கள் கூட்டம்
02 Jun 2024திருச்செந்தூர் : திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நேற்று விடுமுறை நாளையொட்டி ஏராளமான பக்தர்கள் திரண்டு நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்தனர்.
-
நாளை வாக்கு எண்ணிக்கை: மே. வங்கம், ஆந்திராவில் கூடுதல் பாதுகாப்பு: தேர்தல் ஆணையம்
02 Jun 2024புதுடெல்லி : நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் பதிவான வாக்குகளின் எண்ணிக்கை நாளை நடைபெறுவதையொட்டி மேற்கு வங்கம், ஆந்திராவில் கூடுதல் பாதுகாப்பு அளிக்க தேர
-
தலைமைப் பயிற்சியாளர் பதவிக்கு காம்பீரை தேர்வு செய்தால் மகிழச்சி சவுரவ் கங்குலி கருத்து
01 Jun 2024மும்பை: தலைமைப் பயிற்சியாளர் பதவிக்கு காம்பீர் தேர்வு செய்தால் மகிழச்சி என்று முன்னாள் பி.சி.சி.ஐ.
-
உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி:சென்னையில் நடத்த தமிழக அரசு விருப்பம்
01 Jun 2024சென்னை: உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியை சென்னையில் நடத்த தமிழக அரசு விருப்பம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
-
சுனிதா வில்லியம்சின் விண்வெளி பயணம் மீண்டும் ஒத்திவைப்பு
02 Jun 2024வாஷிங்டன் : மூன்றாவது முறையாக விண்வெளிக்கு மேற்கொள்ளவிருந்த சுனிதா வில்லியம்ஸின் சாதனை பயணம் தொழில்நுட்ப பிரச்சினை காரணமாக கடைசி நேரத்தில் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
-
கேரளாவில் 3 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்: வானிலை மையம்
02 Jun 2024திருவனந்தபுரம் : கனமழை காரணமாக கேரளாவில் 3 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கையை வானிலை மையம் விடுத்துள்ளது.
-
ஆசிய பணக்காரர் பட்டியலில் அம்பானியை பின்னுக்கு தள்ளி முதலிடம் பிடித்த கவுதம் அதானி
02 Jun 2024புதுடெல்லி : முகேஷ் அம்பானியைப் பின்னுக்குத் தள்ளி ஆசிய பணக்காரர் பட்டியலில் கவுதம் அதானி முதலிடத்தை பிடித்தார்.
-
திருப்பதி கோவிலில் 30 நிமிடத்தில் மூத்த குடிமக்கள் இலவச தரிசனம் செய்ய வசதி
02 Jun 2024திருப்பதி : திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 65 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் அமைதியாகவும், மிகுந்த கவனத்துடனும் தரிசனம் செய்ய வசதியாக திருமலை திருப்பதி தேவஸ்தானம் சி
-
தெலுங்கானா மாநிலம் உருவான தினம்: சோனியா காந்தி வாழ்த்து
02 Jun 2024ஐதராபாத் : தெலுங்கானா மாநிலம் உருவாகி 10 ஆண்டுகள் நிறைவுபெற்றதை அடுத்து, அம்மாநில மக்களுக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
3-வது முறையாக பிரதமர் மோடி பிரதமரானால் மொட்டை போட்டு கொள்வேன்: ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.
02 Jun 2024புதுடெல்லி : பிரதமர் மோடி 3-வது முறையாக பிரதமரானால் மொட்டை போட்டு கொள்வேன் என்று ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. சோம்நாத் பாரதி தெரிவித்தார்.
-
வெளியானது கருத்துக்கணிப்பு இல்லை - பிரதமர் நரேந்திர மோடியின் கற்பனை: ராகுல் விமர்சனம்
02 Jun 2024புதுடெல்லி : பாராளுமன்றத்துக்கு 7 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்றது.
-
தென்கொரியாவிற்குள் பலூன் மூலம் மீண்டும் குப்பைகளை வீசிய வடகொரியா
02 Jun 2024சியோல் : தென்கொரியாவிற்குள் 600-க்கும் மேற்பட்ட குப்பை பலூன்களை வடகொரியா வீசியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
நிலவின் தென்துருவத்தில் இறங்கிய சீன விண்கலம் : பாறை மாதிரிகளுடன் 25-ம் தேதி பூமிக்கு திரும்பும்
02 Jun 2024பெய்ஜிங் : சீனாவின் சாங்கே விண்கலம் நிலவின் தென்துருவத்தில் நேற்று தரையிறங்கியது.