எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதுடெல்லி, சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தலை அடுத்து 67 தேசிய செய்தித்தாள்களில் பெரிய அளவில் விளம்பரம் வெளியிட்டு நிபந்தனையற்ற பொதுமன்னிப்பு கோரியது பதஞ்சலி நிறுவனம்.
பிரபல யோகா குரு பாபா ராம்தேவின் 'பதஞ்சலி' நிறுவனம் ஆயுர்வேத பல்பொடி, சோப்பு, எண்ணெய் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை தயாரித்து விற்பனை செய்து வருகிறது. கடந்த மாதம் 'பதஞ்சலி' நிறுவனம் மீது தவறான விளம்பரங்கள் வெளியிடுவதாக கூறி வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் பதஞ்சலி விளம்பரங்களில் தவறான தகவல்களை வெளியிடக்கூடாது என்று எச்சரித்த சுப்ரீம் கோர்ட்டு, பதிலளிக்க கோரி அந்நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பியது. இதையடுத்து நோட்டீசுக்கு பதிலளிக்காததால், அந்நிறுவனத்தின் இணை நிறுவனர் பாபா ராம்தேவை நேரில் ஆஜராக சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது.
வழக்கு தொடர்பாக ஏற்கனவே பிரமாண பத்திரம் தாக்கல் செய்த நிலையில் யோகா குரு ராம்தேவ் கடந்த 2-ம் தேதி சுப்ரீம் கோர்ட்டில் நேரில் ஆஜரானார். அப்போது, பிரமாண பத்திரம் திருப்தி அளிக்கவில்லை என நீதிபதிகள் அதிருப்தியை தெரிவித்தனர். ராம்தேவ் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், இருவரும் தனிப்பட்ட முறையில் நீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்க தயாராக உள்ளனர். நீதிமன்றம் என்ன சொன்னாலும் அதை செய்ய தயாராக இருக்கிறோம் என்றார். மன்னிப்பு என்ற பெயரில் எதையாவது எழுதி கொடுத்துவிட்டு தப்பித்து விடலாம் என நினைக்காதீர்கள் என பாபா ராம்தேவ் தரப்புக்கு நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர்.
மேலும், நீங்கள் செய்திருப்பது மிக தீவிரமான நீதிமன்ற அவமதிப்பு செயல், மன்னிப்பு என்ற பெயரில் எதையாவது எழுதிக் கொடுத்துவிட்டு தப்பிக்க முடியாது என்று நீதிபதிகள் காட்டத்துடன் தெரிவித்தனர். அத்துடன், புதிய பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்ய இருவருக்கும் ஒரு வாரம் அவகாசம் அளித்த நீதிபதிகள், வழக்கின் விசாரணையை தள்ளிவைத்தனர்.
இதனை தொடர்ந்து இந்த வழக்கின் விசாரணை கடந்த 16ம் தேதி மீண்டும் நடைபெற்றது. அப்போது எங்களுடைய கருத்துகள், செய்த தவறுக்காக நிபந்தனையற்ற மன்னிப்பை ஏற்க வேண்டும் என்று பாபா ராம்தேவ், ஆச்சார்யா பாலகிருஷ்ணன் வேண்டுகோள் விடுத்தனர். அப்போது குறுக்கீட்ட நீதிபதிகள் மற்ற மருந்து முறைகளை இழிவுபடுத்த அதிகாரம் வழங்கியது யார்?; நிரூபணமற்ற அலோபதி மருந்து விளம்பரங்களை எங்காவது பார்த்துள்ளீர்களா? என்று கேள்வி எழுப்பினர். தொடர்ந்து விளம்பரங்களை வெளியிடுவதில் மாற்றங்கள் செய்வதாக பதஞ்சலி தரப்பில் உத்தரவாதம் அளித்த நிலையில், பதஞ்சலி நிறுவனர் பாபா ராம்தேவ் மற்றும் நிர்வாக இயக்குனர் ஆச்சார்யா பாலகிருஷ்ணன் ஆகியோர் பொது மன்னிப்பு கோர உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஏப்ரல் 23ம் தேதிக்கு (அதாவது நேற்று முன்தினம்) ஒத்திவைத்தனர்.
இதையடுத்து அன்றைய தினம் நாளிதழ்களில் விளம்பரம் வெளியிட்டு பாபா ராம்தேவ் பொது மன்னிப்புக் கோரினார். இந்நிலையில், இந்த வழக்கின் விசாரணை நேற்று முன்தினம் நடைபெற்றது. அப்போது நாளிதழ்களில் வெளியிடப்பட்ட பொதுமன்னிப்பு கோரும் விளம்பர நகலை பதஞ்சலி நிறுவன வழக்கறிஞர் தாக்கல் செய்தார். அதனை பார்த்த நீதிபதிகள் மன்னிப்பு கோரும் விளம்பரங்கள் பூதக்கண்ணாடியை வைத்து பார்க்கும் அளவுக்கு சிறிதாக உள்ளது என்றும் பதஞ்சலி நிறுவனத்தின் விளம்பரங்களை இது போன்ற சிறிய அளவில்தான் வெளியிடுவீர்களா? என்று கேள்வி எழுப்பினர். பொருளை விளம்பரப்படுத்துவது போல, மன்னிப்பும் மிகப்பெரிய அளவில் புதிய விளம்பரமாக வெளியிட்டு அதை கோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும் இந்த வழக்கு விசாரணையை ஏப்ரல் 30ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
இந்நிலையில், சுப்ரீம் கோர்ட் கண்டனத்தை தொடர்ந்து பதஞ்சலி நிறுவனம் 67 தேசிய செய்தித்தாள்களில் நேற்று மீண்டும் பொதுமன்னிப்பு கோரி விளம்பரம் செய்துள்ளது. இந்தி மற்றும் ஆங்கிலம் ஆகிய 2 மொழிகளில் இந்த விளம்பரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 month 3 weeks ago | வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 month 3 weeks ago | ஆவாரம்பூவின் மருத்துவ பலன்கள் 1 month 3 weeks ago |
தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 3 weeks ago | குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 8 months 1 week ago | பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 1 week ago |
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு ப்ரை6 hours 8 sec ago |
க்ரிஸ்பி கார்ன் ஸ்நாக்ஸ்3 days 5 hours ago |
ஆப்பிள் ரோஸ்ட்1 week 5 hours ago |
-
கார்த்திக் குமார் குறித்து கருத்து தெரிவிக்க பாடகி சுசித்ராவுக்கு சென்னை ஐகோர்ட் இடைக்கால தடை
24 May 2024சென்னை:நடிகர் கார்த்திக் குமார் குறித்து அவதூறு கருத்துகளை தெரிவிக்கக் கூடாது என பாடகி சுசித்ராவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
-
நாளை கரையை கடக்கும் 'ரீமால்' புயல்:மேற்கு வங்கத்திற்கு எச்சரிக்கை
24 May 2024கொல்கத்தா:வங்கக் கடலில் உருவாகி வரும் 'ரீமால்' புயல், வரும் நாளை (ஞாயிற்றுக்கிழமை - மே 26) தீவிர புயலாக வலுப்பெற்று, மேற்கு வங்கம் மற்றும் வங்கதேச கடற்கரையை தாக்கும் என
-
சேலத்தில் மதிப்பிழந்த 500, 1000 ரூபாய் நோட்டுகளை வைத்திருந்தவர் கைது
24 May 2024சேலம்: சேலத்தில் கஞ்சா பதுக்கி வைத்திருப்பதாக வந்த புகாரின் பேரில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், மதிப்பிழப்பு செய்யப்பட்ட ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான பழைய ரூ.500, ரூ.1000
-
சிலந்தி ஆற்றின் குறுக்கே அனுமதியின்றி தடுப்பணை கட்ட கேரள அரசுக்கு தடை தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு
24 May 2024சென்னை:கேரள அரசு சிலந்தி ஆற்றின் குறுக்கே அனுமதி இன்றி தடுப்பணை கட்டினால் தடை விதிக்கப்படும் என்று தேசிய பசுமை தீர்ப்பாயம் நேற்று (வெள்ளிகிழமை) உத்தரவிட்டுள்ளது.
-
போர் நிறுத்தத்திற்கு உக்ரைனுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார்: ரஷ்ய செய்தி தொடர்பாளர் தகவல்
25 May 2024மாஸ்கோ, போரை நிறைவு செய்வதற்காக ,உக்ரைனுடன் பேச்சுவார்த்தை நடத்த ரஷ்யா தயாராக இருக்கிறது என அந்நாட்டு செய்தி தொடர்பாளர் டிமித்ரி பெஸ்கோ தெரிவித்துள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 25-05-2024.
25 May 2024 -
அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர 2.58 லட்சம் பேர் விண்ணப்பம்
25 May 2024சென்னை : அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர கடந்த 19 நாட்களில், 2 லட்சத்து 58 ஆயிரத்து 527 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
புயல் எச்சரிக்கை: சென்னையில் இருந்து அந்தமானுக்கு இயக்கப்படும் : விமான சேவைகள் ரத்து
25 May 2024சென்னை, வங்க கடலில் உருவாகியுள்ள ரெமல் புயல் காரணமாக, ஏர் இந்தியா விமான நிறுவனம் அந்தமானுக்கு இயக்கப்படும் விமான சேவைகளை, நேற்று ஒரு நாள், முழுவதுமாக ரத்து செய்துள்ளது.
-
தசைப் பயிற்சியாளர்கள் மற்றும் சிறப்பு ஆசிரியர்களுக்கான மதிப்பூதியம் உயர்வு: தமிழக அரசு
25 May 2024சென்னை : தமிழக அரசானது சிறப்பு ஆசிரியர், தசை பயிற்சியாளர்களுக்கான மதிப்பூதியம் ரூ.14,000லிருந்து ரூ.18,000ஆக உயர்த்தி வழங்க உத்தரவு பிறப்பித்துள்ளது.
-
பூத் முகவர்களை கைது செய்ததால் மெகபூபா முப்தி சாலையில் அமர்ந்து போராட்டம்
25 May 2024ஸ்ரீநகர், தனது கட்சியின் பூத் முகவர்களை காரணமின்றி போலீசார் கைது செய்ததாக குற்றஞ்சாட்டி காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி நேற்று சாலையில் அமர்ந்து போராட்டத்தில்
-
6-ம் கட்ட தேர்தல் : வாக்களித்த பின் தாயுடன் செல்பி எடுத்த ராகுல் காந்தி
25 May 2024புதுடெல்லி : டெல்லியில் நிர்மான் பவன் வாக்குச்சாவடியில் தங்களது வாக்குகளை செலுத்திய பின் தனது தாய் சோனியா காந்தியுடன் ராகுல் காந்தி செல்பி எடுத்து கொண்டார்.
-
நலத்திட்ட பொருள்கள் வழங்கும் பணியில் மாணவர்களை ஈடுபடுத்தக்கூடாது: ஆசிரியர்களுக்கு அரசு அறிவுறுத்தல்
25 May 2024சென்னை : பள்ளிகளில் நலத்திட்ட பொருள்கள் வழங்கும் பணிகளில் மாணவர்களை ஈடுபடுத்தக்கூடாது என்று ஆசிரியர்களுக்கு பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.
-
அரசு பேருந்துகளில் காவலர்களுக்கு இலவச பயணத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும் : தமிழக அரசுக்கு இ.பி.எஸ். வலியுறுத்தல்
25 May 2024சென்னை : சட்டப்பேரவை மானியக் கோரிக்கையில் அறிவித்தபடி அரசு பேருந்துகளில் காவலர்களுக்கான இலவசப் பயணத்தை உடனே அமல்படுத்த வேண்டும் என்று தமிழக அரசுக்கு அதிமுக பொதுச்செயலாள
-
மழை பாதிப்புகளை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை : தலைமைச்செயலாளர் சிவ்தாஸ் மீனா பேட்டி
25 May 2024சென்னை : மழையால் ஏற்படும் பாதிப்புகளை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா தெரிவித்தார்.
-
இயல்பை விட கோடை மழை தமிழ்நாட்டில் அதிக பொழிவு : வானிலை ஆய்வு மையம் தகவல்
25 May 2024சென்னை : தமிழகத்தில் கோடை மழை இயல்பை விட அதிகமாக 29 சதவீதம் பெய்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
6-ம் கட்ட வாக்குப்பதிவின் போதும் மேற்கு வங்காளத்தில் ஒருசில இடங்களில் வன்முறை-மோதல்
25 May 2024கொல்கத்தா : பாராளுமன்றத்திற்கு 6-ம் கட்டமாக நேற்று நடந்த தேர்தலிலும் மேற்கு வங்காளத்தில் ஒருசில இடங்களில் வன்முறை மற்றும் மோதல் சம்பவங்கள் நிகழ்ந்தன.
-
மே மாத விடுமுறை: வரும் 28-ம் தேதி வண்டலூர் உயிரியல் பூங்கா திறந்திருக்கும் என அறிவிப்பு
25 May 2024சென்னை : மே மாத விடுமுறையை முன்னிட்டு வருகிற 28-ம் தேதி வண்டலூர் உயிரியல் பூங்கா திறந்திருக்கும் என்று பூங்கா நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.
-
பயனர்களின் தரவுகளை ஏற்றுமதி செய்யும் வாட்ஸ் அப் நிறுவனம்: எலான் மஸ்க் பரபரப்பு குற்றச்சாட்டு
25 May 2024வாஷிங்டன், வாட்ஸ் அப் தனது பயனர்களின் தரவை ஒவ்வொரு இரவும் (விளம்பர நிறுவனங்களுக்கு) ஏற்றுமதி செய்கிறது என்று எலான் மஸ்க் குற்றஞ்சாட்டியுள்ளார்.
-
ஊட்டியில் நாளை முதல் 2 நாட்கள் நடக்கும் துணைவேந்தர்கள் மாநாடு: கவர்னர் ஆர்.என்.ரவி பங்கேற்கிறார்
25 May 2024ஊட்டி,ஊட்டி ராஜ்பவன் மாளிகையில் நாளை முதல் 2 நாட்கள் நடைபெறவுள்ள துணைவேந்தர்கள் மாநாட்டில் கவர்னர் ஆர்.என். ரவி கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார்.
-
காவல்துறை இடையே பிரச்சினை: சென்னை தலைமை செயலகத்தில் துறை செயலாளர்கள் ஆலோசனை
25 May 2024சென்னை : தமிழக போக்குவரத்து துறை மற்றும் காவல் துறையினர் இடையே பிரச்சினை நீடித்து வரும் நிலையில், தமிழக முதல்வரின் உத்தரவின் பேரில் உள்துறை செயலாளர் அமுதா, போக்கு
-
5 ஆண்டுகளில் 5 பிரதமர்களை நியமிக்க இண்டியா கூட்டணி கட்சிகள் திட்டம்: பிரதமர் மோடி குற்றச்சாட்டு
25 May 2024பாட்னா, 5 ஆண்டுகளில் 5 பிரதமர்களை உருவாக்கும் திட்டத்தில் இண்டியா கூட்டணியினர் உள்ளனர் என்று பீகாரில் நடந்த பிரச்சார பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி குற்றஞ்சாட்டினார்.&n
-
ஜனநாயக கடமையாற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
25 May 2024புது டெல்லி, டெல்லியில் உள்ள டாக்டர் ராஜேந்திர பிரசாத் கேந்திரிய வித்யாலயாவில் உள்ள வாக்குச்சாவடிக்கு சென்ற ஜனாதிபதி திரவுபதி முர்மு தனது வாக்கைச் செலுத்தினார்.
-
அமெரிக்க நீதிபதியான ஆந்திராவில் பிறந்த பெண்
25 May 2024வாஷிங்டன் : ஆந்திராவின் விஜயவாடாவில் பிறந்த ஜெயா படிகா என்ற பெண் கலிபோர்னியாவில் உள்ள நீதிமன்றத்தில் நீதிபதியாக நியமிக்கப்பட்டு உள்ளார்.
-
அபுதாபி இந்து கோவிலில் நடிகர் ரஜினிகாந்த் தரிசனம்
25 May 2024அபுதாபி, அபுதாபி நகருக்கு சென்ற நடிகர் ரஜினிகாந்த் கட்டப்பட்டுள்ள பாப்ஸ் இந்து கோவிலை பார்வையிட்டு தரிசனம் செய்தார்.
-
பணவீக்கம், வேலையின்மைக்கு எதிராக வாக்களித்தேன்: கெஜ்ரிவால்
25 May 2024புது டெல்லி, பணவீக்கம் மற்றும் வேலையின்மைக்கு எதிராக நான் வாக்களித்துள்ளேன் என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்தார்.