எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை - காங்கிரஸ் கட்சியில் இருந்து தன் ஆதரவாளர்களுடன் விலகிய முன்னாள் மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் புதிய கட்சி தொடங்கப் போவதாக அறிவித்துள்ளார்.புதிய கட்சியின் தொடக்க விழா மாநாடு நாளை (வெள்ளிக்கிழமை) திருச்சியில் நடைபெற உள்ளது. இதற்காக பிரமாண்ட மேடை அமைக்கப்பட்டு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.ஜி.கே.வாசன் தொடங்கும் புதிய கட்சியின் பெயர் திருச்சி மாநாட்டில் அறிவிக்கப்பட உள்ளது. அந்த கட்சிப் பெயரை டெல்லியில் உள்ள தேர்தல் கமிஷன் அலுவலகத்தில் கடந்த வாரம் வாசன் ஆதரவாளர்கள் கொடுத்தனர்.
தமிழ் மாநில காங்கிரஸ், தமிழ் மாநில மக்கள் காங்கிரஸ், தமிழ் மாநில மறுமலர்ச்சி காங்கிரஸ் என்று மூன்று பெயர்கள் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் ஒரு பெயரை தேர்தல் கமிஷன் அதிகாரிகள் தேர்வு செய்து கொடுக்க உள்ளனர். அந்த பெயரை வாசன் திருச்சி மாநாட்டில் வெளியிடுவார்.புதிய கட்சியின் கொடியையும் மாநாட்டில் அறிமுகம் செய்ய வாசன் முடிவு செய்திருந்தார். ஆனால் மாநாட்டுக்கு வரும் தொண்டர்கள் புதிய கட்சி கொடியை ஏந்தி வர வேண்டும் என்று பலரும் வாசனிடம் தெரிவித்தனர். அதை ஏற்று புதிய கொடி சென்னையில் 26–ந்தேதி அறிமுகம் செய்யப்படும் என்று வாசன் அறிவித்திருந்தார்.அதன்படி வாசன் கட்சியின் புதிய கொடி அறிமுக விழா இன்று (புதன்கிழமை) காலை 10 மணிக்கு சென்னை சாந்தோம் சர்ச் எதிரில் உள்ள கம்யூனிட்டி ஹாலில் நடந்தது. கட்சியின் மூத்த தலைவர்கள் புடை சூழ புதிய கொடியை ஜி.கே.வாசன் அறிமுகம் செய்தார்.
புதிய கொடி ஆரஞ்சு, வெள்ளை, பச்சை ஆகிய மூவர்ணங்களைக் கொண்டுள்ளது. கட்சி மத்தியில் காமராஜர், மூப்பனார் படங்கள் பொறிக்கப்பட்டுள்ளது.புதிய கொடியை உயர்த்திப் பிடித்து வாசன் காண்பித்தார். பிறகு அவர் விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் இனிப்பு வழங்கினார்.கட்சியின் கொடி அறிமுக விழாவில் ஜி.கே.வாசன் பேசியதாவது:–
எங்களது புதிய இயக்கத்தின் கொடியை மிகவும் மகிழ்ச்சியோடு தமிழ்நாட்டு மக்களுக்கு அறிமுகப்படுத்துகிறோம். இந்த கொடி மூவர்ணக் கொடியாகும்.
மேலே ஆரஞ்சு நிறம், நடுவில் வெள்ளை, கீழே பச்சை ஆகிய 3 நிறங்களும் கொண்டதாக இந்த கொடி இருக்கும். இதில் பெருந்தலைவர் காமராஜர், மக்கள் தலைவர் மூப்பனார் ஆகியோரின் திரு உருவப் படங்கள் பொறிக்கப்பட்டுள்ளன.இதுவே புதிய இயக்கத்தின் கொடி ஆகும். இது வலிமையான பாரதம், வளமான தமிழகம் என்பதை உணர்த்தும் வகையில் தேர்ந்து எடுத்துள்ளோம்.இந்த கொடியில் இடம் பெற்றுள்ள ஆரஞ்சு நிறம் தியாகத்தை குறிக்கிறது. வெள்ளை நிறம் அமைதியையும் சமாதானத்தையும் குறிக்கிறது. பச்சை நிறம் பசுமை மற்றும் வளமையை குறிக்கிறது.இந்த மூவர்ணக் கொடி தமிழ்நாடு முழுவதும் குக்கிராமங்கள் முதல் மாநகர்கள் வரை பட்டொளி வீசி பறக்கட்டும். வட்டார, நகரங்களில் வீடு, வீடாக வீதி, வீதியாக தொண்டர்கள் உற்சாகத்துடன் இந்த புதிய கொடியை ஏந்தி சென்று மக்களின் நம்பிக்கையைப் பெற வேண்டும்.தமிழ்நாட்டில் உள்ள இந்த இயக்கத்தின் முன்னணி தலைவர்களும், நிர்வாகிகளும், தொண்டர்களும், பொதுமக்களும், திருச்சியில் நடைபெறும் திருப்புமுனை மாநாட்டுக்கு 28–ந் தேதி அலைகடலென வருகிறார்கள். நமது புதிய இயக்க கொடியை ஒவ்வொருவரும் அவரவர் வாகனத்தில் பொருத்தி வர வேண்டும்.
புதிய கொடியை தொண்டர்கள் கையில் ஏந்தி எழுச்சியுடன் மாநாட்டில் பங்கேற்க வேண்டும். புதிய கட்சியின் பெயர் டெல்லியில் உள்ள தலைமை தேர்தல் ஆணையத்தின் சட்டத்துக்குட்பட்டு, கோட்பாடுகளுக்கு உட்பட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த புதிய கட்சி பெயரை 28–ந்தேதி (வெள்ளிக்கிழமை) திருச்சி மாநாட்டில் அறிவிக்கப்படும்.இப்போது இயக்கத்தின் மூத்த தலைவர்கள் புதிய கொடியை லட்சோப லட்ச மக்களுக்கு அறிமுகம் செய்துள்ளனர். நாளை மறுநாள் (நாளை) மாநாட்டுக்கான பிரமாண்ட ஏற்பாடுகளை அனைவரும் கவனித்து வருவதால், தொண்டர்களின் வேண்டுகோளுக்கு இணங்க கட்சிக் கொடியை இன்று அறிமுகம் செய்துள்ளோம். இவ்வாறு அவர் பேசினார்.பின்னர் நிகழ்ச்சிக்கு வந்திருந்த முன்னணி நிர்வாகிகள் புதிய கொடி பற்றி வாழ்த்தி பேசினார்கள்.நிகழ்ச்சியில் ஞானதேசிகன், ரெங்கசாமி மூப்பனார், எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியன், பீட்டர் அல்போன்ஸ், முன்னாள் எம்.பி. விசுவநாதன், முன்னாள் எம்.எல்.ஏ. மாறன் என்ற வேணுகோபால், முக்தா சீனிவாசன், சைதை ரவி கோவிந்தசாமி, ரவி பாரதி, ஜி.ஆர்.வெங்கடேஷ், ராணி கிருஷ்ணன்.இ.சி.சேகர், முனைவர் பாட்சா, பிஜுசாக்கோ, கத்திப்பாரா ஜனார்த்தனன், விக்டரி மோகன், விக்டரி ஜெயக்குமார், ஜி.ஆர்.கதிரவன், அடையார் எம்.ராமச்சந்திரன், சுந்தரமூர்த்தி, ஆனந்தராஜ், பிரசாத், அசோக், விஜயன், ஆர்.எஸ்.முத்து, கஜநாதன், ஐ.டி.அரசன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஆனியன் ரிங்ஸ்6 hours 1 min ago |
உருளைக்கிழங்கு ப்ரை4 days 6 hours ago |
க்ரிஸ்பி கார்ன் ஸ்நாக்ஸ்1 week 6 hours ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 29-05-2024.
29 May 2024 -
ஜூன் 3, 4-ம் தேதிகளில் வானில் 6 கோள்களின் அணிவகுப்பு : வெறும் கண்ணால் பார்க்கலாம்
29 May 2024சென்னை : ஒரு கோளுக்கு அடுத்து இன்னொரு கோள் என்று அடுக்கி வைக்கப்பட்டது போல நம் கண்களுக்கு தெரியும் நிகழ்வு கோள்களின் தொடர்வரிசை நிகழ்வு என்று அழைக்கப்படுகிறது. இந
-
இந்திய ராணுவ அதிகாரிக்கு ஐ.நா.வின் மதிப்புமிக்க விருது
29 May 2024நியூயார்க், ஐக்கிய நாடுகள் அமைதி காக்கும் வீரர்களின் சர்வதேச தினம் இன்று 30-ம் தேதி அன்று கடைப்பிடிக்கப்படுகிறது. இந்நிலையில், காங்கோவில் ஐ.நா.
-
கார்கில் தாக்குதல் எங்கள் தவறுதான்: பாக். முன்னாள் பிரதமர் ஒப்புதல்
29 May 2024லாகூர், இந்திய முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உடன் மேற்கொண்ட லாகூர் ஒப்பந்தத்தை மீறினோம்.
-
பழனி கோவிலில் ரோப்கார் சேவை இன்று நிறுத்தம்
29 May 2024திண்டுக்கல் : பழனி முருகன் கோவிலில் பராமரிப்பு பணிக்காக இன்று ஒரு நாள் மட்டும் ரோப்கார் சேவை நிறுத்தப்படுவதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
-
காலாவதியான பொருட்கள் ஆவினில் விற்பனை: ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்
29 May 2024சென்னை : தனியார் நிறுவனங்களுக்கு வழிகாட்டியாக இருக்க வேண்டிய அரசு நிறுவனமான ஆவின், காலாவதியான பொருட்களை விற்பனை செய்வது என்பது கடும் கண்டனத்திற்குரியது என்று முன்னாள் ம
-
புழல் சிறையில் கைதிகளுக்கான கேன்டீன் மூடப்படவில்லை : ஐகோர்ட்டில் சிறை நிர்வாகம் தகவல்
29 May 2024சென்னை : சென்னை புழல் மத்திய சிறையில் செயல்பட்டு வந்த கைதிகளுக்கான கேன்டீன் மூடப்படவில்லை என சிறை நிர்வாகம் சென்னை ஐகோர்ட்டில் நேற்று தெரிவித்துள்ளது.
-
தமிழகத்தில் ஜூன் 1,2 தேதிகளில் 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்
29 May 2024சென்னை : தமிழகத்தில் வரும் 1 மற்றும் 2-ம் தேதிகளில் 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
குடியேற்ற திருத்த விதிகளுக்கு எதிர்ப்பு: கனடாவில் இந்திய மாணவர்கள் உண்ணாவிரத போராட்டம்
29 May 2024ஒட்டாவா, கனடாவின் பிரின்ஸ் எட்வர்ட் தீவு மாகாணத்தில் வசிக்கும் இந்திய மாணவர்கள் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
-
நீலகிரி அருகே 26 அடி கிணற்றில் விழுந்த யானை குட்டி 8 மணி நேர போராட்டத்திற்கு பின் மீட்பு
29 May 2024ஊட்டி, : நீலகிரி மாவட்டம் கொளப்பள்ளி குறிஞ்சி நகர் பகுதியில் 26 அடி கிணற்றில் விழுந்த யானை குட்டி 8 மணி நேர போராட்டத்திற்கு பிறகு மீட்கப்பட்டது.
-
ஜூன் 1-ல் இருந்து ஆம்னி பஸ்கள் கிளாம்பாக்கத்தில் இருந்து புறப்படும் : போக்குவரத்து துறை தகவல்
29 May 2024சென்னை : ஜூன் 1-ம் தேதி முதல் ஆம்னி பேருந்துகள் கிளாம்பாக்கத்தில் இருந்து தான் இயக்கப்படவேண்டும் என்று சி.எம்.டி.ஏ.
-
ஒடிசா மாநிலத்தின் மைந்தனே முதல்வராக பொறுப்பேற்பார் : வி.கே.பாண்டியன் உறுதி
29 May 2024புவனேஸ்வர் : ஒடிசா மண்ணின் மைந்தன் ஜூன் 9ம் தேதி காலை 11:30 மணி முதல் மதியம் 1 மணிக்குள் முதல்வராக பொறுப்பேற்பார்,'' என 5டி திட்ட தலைவரும், பிஜூ ஜனதா தளம் கட்சியின் மூத
-
கெஜ்ரிவாலின் இடைக்கால ஜாமீன் மனு: விசாரணைக்கு ஏற்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு
29 May 2024புதுடெல்லி : டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் இடைக்கால ஜாமீன் மனுவை விசாரணைக்கு ஏற்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு தெரிவித்துள்ளது.
-
பா.ஜ.க. நாட்டுக்கு ஆபத்தானது: அண்ணாமலைக்கு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பதிலடி
29 May 2024சென்னை : மதவெறி கொண்ட யானையை விட மதவெறி பிடித்துள்ள பா.ஜ.க.
-
மே.வங்கத்தில் ஊடுருவல்காரர்களை குடியமர்த்த திரிணாமுல் முயற்சி: பிரதமர் மோடி குற்றச்சாட்டு
29 May 2024கொல்கத்தா, மேற்கு வங்காளத்தில் ஊடுருவல்காரர்களை குடியமர்த்த திரிணாமுல் காங்கிரஸ் முயற்சித்து வருகிறது என்று பிரதமர் மோடி குற்றஞ்சாட்டினார்.
-
பாகிஸ்தானில் பள்ளத்தாக்கில் பஸ் கவிழ்ந்த விபத்தில் 28 பேர் உயிரிழப்பு
29 May 2024கராச்சி, பாகிஸ்தானில் கராச்சி நகரில் பயணிகளுடன் சென்று கொண்டிருந்த பஸ் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் இருந்த பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில்
-
வரும் 2-ம் தேதி தெலுங்கானா மாநில 10-ம் ஆண்டு விழா : சோனியா காந்தி பங்கேற்கிறார்
29 May 2024திருப்பதி : ஆந்திராவில் இருந்து பிரிந்து தெலுங்கானா மாநிலம் உருவாகி 10 ஆண்டுகள் ஆகிறது.
-
மராட்டியத்தில் சாலையோர கால்வாய்க்குள் கார் விழுந்த விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் பலி
29 May 2024மும்பை : மராட்டியத்தில் சாலையோரத்தில் இருந்து கால்வாய்க்குள் கார் விழுந்த விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் பலியானார்கள்.
-
பிரதமர் மோடி குறித்த கேள்விக்கு பதிலளிக்க நடிகர் ரஜினி மறுப்பு
29 May 2024சென்னை : இமயமலை செல்லும் நடிகர் ரஜினிகாந்த், செய்தியாளர்கள் எழுப்பிய பிரதமர் மோடி குறித்த கேள்விக்கு பதிலளிக்க மறுத்து விட்டார்.
-
இஸ்ரேலுக்கு எதிராக டிரெண்டாகும் ஆல் ஐஸ் ஆன் ரபா ஹேஷ்டேக்
29 May 2024காசா, ரபா மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் 37-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டனர். இதையடுத்து, ஆல் ஐஸ் ஆன் ரபா (All eyes on Rafah)
-
கயிறு இழுக்கும் போட்டி: சீனாவை வீழ்த்திய இந்திய வீரர்கள்
29 May 2024கர்மூம் : சூடானில் ஐ.நா.,வின் அமைதிப்படையில் ஈடுபட்டுள்ள இந்திய சீன வீரர்கள் இடையே கயிறு இழுக்கும் போட்டி நடந்தது.
-
ரூ. 50,000 கோடியில் 26 ரபேல் விமானங்களை வாங்கும் இந்தியா : பேச்சு நடத்த பிரான்ஸ் குழு இன்று வருகை
29 May 2024புதுடெல்லி : ரூ.50,000 கோடியில் 26 ரபேல் விமானங்களை இந்தியா கொள்முதல் செய்ய திட்டமிட்டுள்ளதால், இதுகுறித்து பேச்சுவார்த்தை நடத்த பிரான்ஸ் குழு இன்று இந்தியா வருகிறது.&n
-
பான்–ஆதார் இணைக்க நாளையே கடைசி நாள் : வருமான வரித்துறை அறிவிப்பு
29 May 2024புதுடெல்லி : பான் எண்ணை, ஆதார் எண்ணுடன் இணைக்க வரும் மே 31ம் தேதி வரை வருமான வரித் துறை அவகாசம் விதித்துள்ளது.
-
டெல்லியில் கடும் பஞ்சம் எதிரொலி: குடிநீரில் காரை கழுவினால் 2 ஆயிரம் ரூபாய் அபராதம்
29 May 2024புதுடெல்லி : தலைநகர் டெல்லியில் கடுமையான பஞ்சம் காரணமாக மாநில அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
-
உ.பி.யில் பிரிஜ் பூஷண் மகனின் பாதுகாப்பு வாகனம் மோதியதில் 2 பேர் பலி
29 May 2024லக்னோ : உத்தரப்பிரதேச மாநிலம் கோண்டாவில் பா.ஜ.க. நிர்வாகி பிரிஜ் பூஷண் மகன் கரணின் பாதுகாப்பு வாகனம் மோதி 2 பேர் உயிரிழந்துள்ளனர்.