எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, அக்.- 11- சென்னையில் நடைபெற்ற சாம்பியன்ஸ் லீக் 20 ஓவர் கிரிக்கெட்டின் இறுதிப்போட்டியில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியை 31 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி தோற்கடித்து சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. 3வது சாம்பியன்ஸ் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கடந்த மாதம் 23ந்தேதி தொடங்கியது. போட்டியில் பங்கேற்ற 10 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு லீக் சுற்றில் மோதின. லீக் முடிவில் `ஏ' பிரிவில் நியூ சவுத்வேல்ஸ், மும்பை இந்தியன்ஸ், `பி' பிரிவில் சோமர்செட், பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் ஆகிய அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறின. லீக் சுற்றுடன் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ், கேப் கோப்ராஸ், டிரினிடாட், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், தெற்கு ஆஸ்திரேலியா, வாரியர்ஸ் ஆகிய அணிகள் வெளியேற்றப்பட்டன. இதைத் தொடர்ந்து நடந்த அரைஇறுதி ஆட்டங்களில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணி, 2009ம் ஆண்டு சாம்பியனான நியூ சவுத்வேல்சையும், மும்பை இந்தியன்ஸ் அணி சோமர்செட்டையும் தோற்கடித்து இறுதி சுற்றுக்குள் நுழைந்தன. இந்த நிலையில் சாம்பியன்ஸ் லீக் போட்டியின் இறுதி ஆட்டம், சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடந்தது. இறுதிப்போட்டியில் ஐ.பி.எல். அணிகளான வெட்டோரி தலைமையிலான பெங்களூர் ராயல் சேலஞ்சர்சும், ஹர்பஜன்சிங் தலைமையிலான மும்பை இந்தியன்சும் பலப்பரீட்சையில் இறங்கின. டாஸ் வென்ற மும்பை அணி கேப்டன் ஹர்பஜன்சிங் முதலில் பேட்டிங்கை தேர்ந்தெடுத்தார். பிளிஸ்சார்ட்டும், சருல் கன்வாரும் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் புகுந்தனர். அரைஇறுதியில் அரைசதம் அடித்து கைகொடுத்த பிளிஸ்சார்ட் (3 ரன்), துரதிர்ஷ்டவசமாக ரன் அவுட்டில் விக்கெட்டை பறிகொடுத்தார். இந்த அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள் மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் கன்வாரும் (13 ரன்) வெளியேறினார். அம்பத்தி ராயுடுவும் (22 ரன்) nullநீண்ட நேரம் நிலைக்கவில்லை. இதன் பிறகு ஜேம்ஸ் பிராங்ளினும், சூர்யகுமார் யாதவும் அணியை சரிவில் இருந்து ஓரளவு மீட்டனர். 13.4 ஓவர்களில் மும்பை அணி 100 ரன்களை கடந்தது. இவர்கள் களத்தில் நின்ற வரை மும்பை அணி 150 ரன்களை தாண்டும் போல் தெரிந்தது. ஆனால் சூர்யகுமார் யாதவும் (24 ரன், 17 பந்து, 2 பவுண்டரி, 1 சிக்சர்), பிராங்ளினும் (41 ரன், 29 பந்து, 2 பவுண்டரி, 2 சிக்சர்) அடுத்தடுத்து ரன்அவுட் ஆனது, ஆட்டத்தின் போக்கை மாற்றி விட்டது. இதன் பிறகு அணியின் ரன்வேகம் ஒரேயடியாக குறைந்து போனது. கடைசி கட்டத்தில் மலிங்கா மட்டும் ஆறுதல் அளிக்கும் வகையில் 2 சிக்சருடன் 16 ரன்கள் விளாசினார். முடிவில் மும்பை அணி 20 ஓவர்களில் 139 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதில் அதிரடி காட்ட வேண்டிய கடைசி 5 ஓவர்களில் வெறும் 30 ரன்கள் மட்டுமே எடுத்தது. பின்னர் 140 ரன்கள் இலக்கை நோக்கி கிறிஸ் கெய்லும், தில்ஷனும் பெங்களூர் அணியின் ஆட்டக்காரர்களாக ஆட வந்தனர். பவுண்டரியுடன் அணியின் ஸ்கோரை தில்ஷன் துவக்கினார். இலங்கையைச் சேர்ந்த தில்ஷன் தனது பங்குக்கு 27 ரன்கள் (20 பந்து, 5 பவுண்டரி) எடுத்த நிலையில், சக நாட்டவரான மலிங்காவின் பந்து வீச்சில் கிளீன் போல்டானார். ஸ்கோர் குறைவு என்பதாலும், கடினமான ஆடுகளம் என்பதாலும் அதிரடி மன்னன் கிறிஸ் கெய்ல் நிதானமாக ஆட முயற்சித்தார். அதுவே அவருக்கு எமனாக அமைந்தது. 5 ரன்னில் (12 பந்து, ஒரு பவுண்டரி) ஹர்பஜன்சிங் பந்து வீச்சில் எல்.பி.டபிள்யூ. ஆனார். அதிரடி நாயகர்கள் பெவியன் திரும்பியதும், பெங்களூர் அணி தடுமாறத் தொடங்கியது. அகர்வாலும் (14 ரன், 19 பந்து), விராட் கோலியும் (11 ரன், 19 பந்து) அடுத்தடுத்த ஓவர்களில் பிடிகொடுத்து வெளியேறினர். அணியை தூக்கி நிறுத்த தவறினார்கள். எதிரணியின் முன்னணி வீரர்கள் சீக்கிரம் வெளியேறியதால், மும்பை அணிக்கு உற்சாகம் பிறந்தது. அதன் தொடர்ச்சியாக பெங்களூர் அணிக்கு மேலும் சில விக்கெட்டுகள் சரிந்தன. ரன்தேவை அதிகரித்து கொண்டே போனதால், பெங்களூர் அணி கடுமையான நெருக்கடிக்குள் தள்ளப்பட்டது. ஆட்டமும் மும்பை அணியின் கைக்குள் வந்தது. இலக்கை நெருங்க முடியாமல் தவித்த பெங்களூர் அணி இறுதியில் 19.2 ஓவர்களில் 108 ரன்களுக்கு சுருண்டது. இதன் மூலம் 31 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெற்று முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. பெங்களூரில் நடந்த முந்தைய இரு ஆட்டங்களில் 200 ரன்களுக்கு மேல் ரன்களை எளிதாக சேசிங் செய்த பெங்களூர் அணியால் சென்னை மைதானத்தில் 139 ரன்களை கூட சேசிங் செய்ய முடியாமல் போனது, ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியது. பெங்களூர் அணி இந்த ஆண்டு நடந்த ஐ.பி.எல். போட்டியில் இறுதிவரை வந்து தோற்றது. அதற்கு சாம்பியன்ஸ் லீக்கில் பரிகாரம் தேடிக்கொள்ள முயற்சித்தது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக வாய்ப்பு மறுபடியும் நழுவி போய் விட்டது.
சாம்பியன் பட்டம் வென்ற மும்பை அணி ரூ.11.6 கோடியை பரிசுத்தொகையாக தட்டிச்சென்றது. 2வது இடம் பிடித்த பெங்களூர் அணிக்கு ரூ.6 கோடி கிடைத்தது. அரைஇறுதியில் தோற்ற அணிகள் தலா ரூ.2.3 கோடியை பரிசாக பெற்றன. ஐ.பி.எல். போட்டிகளில் தொடர்ந்து ஏமாற்றமே மிஞ்சிய நிலையில், சாம்பியன்ஸ் லீக்கில் பட்டம் வென்றது மும்பை அணிக்கு ஆறுதலாக அமைந்தது. கேப்டன் தெண்டுல்கர், முனாப்பட்டேல், ரோகித் ஷர்மா ஆகிய நட்சத்திர வீரர்கள் காயத்தால் விலகிய நிலையிலும் மும்பை அணி சாதித்திருப்பது கவனிக்கத்தக்கது. மும்பை இந்தியன்ஸ் வீரர்களில் ஹர்பஜன்சிங் ஆட்டநாயகன் விருதினையும், மலிங்கா தொடர்நாயகன் விருதினையும் பெற்றனர். இந்த தொடரில் அதிக ரன்கள் குவித்த நியூ சவுத்வேல்ஸ் வீரர் டேவிட் வார்னருக்கு தங்கபேட் விருது கிடைத்தது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 month 4 weeks ago | வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 month 4 weeks ago | ஆவாரம்பூவின் மருத்துவ பலன்கள் 1 month 4 weeks ago |
தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 3 weeks ago | குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 8 months 1 week ago | பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 1 week ago |
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு ப்ரை1 day 12 hours ago |
க்ரிஸ்பி கார்ன் ஸ்நாக்ஸ்4 days 11 hours ago |
ஆப்பிள் ரோஸ்ட்1 week 1 day ago |
-
சமாளிக்க தயாராக இருங்கள்: இஸ்ரேல் படைக்கு எச்சரிக்கை விடுத்த ஹிஸ்புல்லா அமைப்பு
26 May 2024லெபனான் : எங்கள் தரப்பில் இருந்து உங்களுக்கு ஆச்சரியங்கள் காத்திருக்கின்றன.
-
டெல்லி மருத்துவமனையில் நிகழ்ந்த தீ விபத்தில் 6 குழந்தைகள் உயிரிழப்பு : பிரதமர் மோடி, கெஜ்ரிவால் இரங்கல்
26 May 2024புதுடெல்லி : டெல்லி மருத்துவமனையில் ஏற்பட்ட திடீர் தீவிபத்தில் 6 குழந்தைகள் உயிரிழந்தன.
-
ஏற்காட்டில் கோடை விழா நிறைவு: சுற்றுலா பயணிகள் குவிந்தனர்
26 May 2024சேலம் : ஏற்காட்டில் கோடை விழா நேற்றுடன் நிறைவு பெற்ற நிலையில், விடுமுறை நாள் என்பதால் நேற்று ஏராளமான சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் குவிந்தனர்.
-
தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் நாளை மாபெரும் சமபந்தி விருந்து : விஜய் கட்சி ஏற்பாடு
26 May 2024சென்னை : உலக பட்டினி தினத்தை முன்னிட்டு நாளை தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் மாபெரும் சமபந்தி விருந்து நிகழ்ச்சி நடைபெறுகிறது.
-
முல்லைப்பெரியாறு விவகாரம்: கேரள அரசுக்கு ஓ.பி.எஸ். கண்டனம்
26 May 2024சென்னை : இது குறித்து முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
-
இலவச லேப்டாப்: இந்த ஆண்டாவது அரசு வழங்க வேண்டும்: எடப்பாடி
26 May 2024சென்னை : இலவச மடிக்கணினியை இந்த ஆண்டாவது மாணவர்களுக்கு அரசு வழங்க வேண்டும் என்று அ.தி.மு.க. பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.
-
100 யூனிட் விலையில்லா மின்சாரம், எளியோருக்கு தொடர்ந்து கிடைக்க எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
26 May 2024சென்னை : 100 யூனிட் விலையில்லா மின்சாரம் ஏழை, எளியோருக்கு தொடர்ந்து கிடைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசுக்கு எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.
-
கே.ஆர்.பி. அணை நீர்மட்டம் 10 நாளில் 6 அடி உயர்ந்தது : விவசாயிகள் மகிழ்ச்சி
26 May 2024கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக, கே.ஆர்.பி அணையின் நீர்மட்டம் 10 நாளில் 6 அடி உயர்ந்துள்ளது.
-
தி.மலை கோவிலில் ஐகோர்ட் தலைமை நீதிபதி தரிசனம்
26 May 2024தி.மலை : சென்னை ஐகோர்ட்டின் பொறுப்பு தலைமை நீதிபதி மகாதேவன் நேற்று காலை திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார்.
-
சொத்து வரி நிலுவை: முதல் 100 பேர் பட்டியலை இணையத்தில் வெளியிட சென்னை மாநகராட்சி திட்டம்
26 May 2024சென்னை : மாநகராட்சியில் சொத்து வரி நிலுவை வைத்துள்ள முதல் 100 பேர் பட்டியலை இணையத்தில் வெளியிட சென்னை மாநகராட்சி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.
-
வட கொரியாவுக்கு செல்ல ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் முடிவு
26 May 2024மாஸ்கோ : ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், அரசு முறைப்பயணமாக வடகொரியா செல்ல முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
மக்களவை தேர்தல்: ஜூன் 4-ல் வெற்றிக் கொடியேற்றி கருணாநிதி நினைவிடத்தில் சமர்ப்பிப்போம் : தொண்டர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
26 May 2024சென்னை : ஜூன்-4 மக்களவைத் தேர்தல் வெற்றிக் கொடி ஏற்றி தன்னிகரில்லா தமிழின தலைவரின் நினைவிடத்தில் சமர்ப்பிப்போம் என்று தி.மு.க.
-
பணிபுரிய வெளிநாடு செல்லும் தமிழர்கள் போலி வேலை வாய்ப்பை நம்பி ஏமாற வேண்டாம் : அயலகத் தமிழர் நலத்துறை எச்சரிக்கை
26 May 2024சென்னை : பணிபுரிய வெளிநாடு செல்லும் தமிழர்கள் போலி வேலை வாய்ப்பை நம்பி ஏமாற வேண்டாம் என்றும், ஆள்சேர்ப்பு முகவர், பணி வழங்கும் நிறுவனம் குறித்து நன்றாக விசாரித்து பணிக்
-
அமெரிக்காவில் கருக்கலைப்பு மாத்திரைகளுக்கு கட்டுப்பாடு
26 May 2024வாஷிங்டன் : அமெரிக்காவில் கருக்கலைப்பு மாத்திரைகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
-
இமாச்சலில் பருவமழை பேரழிவுக்கு நிவாரணம் கொடுக்கவில்லை : பிரதமர் மோடி மீது ராகுல் குற்றச்சாட்டு
26 May 2024சிம்லா : 22 பேரின் கடனை பிரதமர் மோடி தள்ளுபடி செய்தார். ஆனால் இமாச்சல பிரதேசத்தில் பருவமழை பேரழிவுக்கு ரூ.9,000 கோடி கொடுக்கவில்லை என காங்கிரஸ் எம்.பி.
-
பறவைகள் மோதியதால் லடாக் சென்ற விமானம் டெல்லியில் அவசரமாக தரையிறக்கம்
26 May 2024புதுடெல்லி : பறவைகள் மோதியதால் டெல்லியில் இருந்து லடாக் புறப்பட்டு சென்ற விமானம் அவசர அவசரமாக டெல்லி விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது.
-
விளையாட்டு அரங்கு தீ விபத்து: தாமாக முன்வந்து வழக்கை விசாரிக்கிறது குஜராத் உயர் நீதிமன்றம் : பலி எண்ணிக்கை 33 ஆனதை அடுத்து நடவடிக்கை
26 May 2024அகமதாபாத் : குஜராத், ராஜ்கோட்டில் நடந்த விளையாட்டு அரங்கு தீ விபத்தில் பலி எண்ணிக்கை 33 ஆக உயர்ந்ததை அடுத்து தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்த குஜராத் உயர் நீதிமன்றம்
-
கேன்ஸ் விழாவில் உயரிய விருதை வென்ற முதல் இந்திய இயக்குனர்
26 May 2024பாரீஸ் : கேன்ஸ் திரைப்பட விழாவில் இரண்டாவது உயரிய விருதான கிரண்ட் பிரிக்ஸை இந்திய திரைப்படமான ஆல் வி இமேஜின் அஸ் லைட் படம் வென்றுள்ளது.
-
கன்னியாகுமரியில் தொடர் மழை: தாமிரபரணியில் வெள்ளப்பெருக்கு
26 May 2024கன்னியாகுமரி : கன்னியாகுமரியில் பெய்து வரும் தொடர் மழையால், தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
-
சூடானில் கலவரம்: 17 வீரர்கள் உட்பட 47 பேர் படுகொலை
26 May 2024கார்டூம் : சூடான் நாட்டில் ஏற்பட்ட திடீர் கலவரத்தில் 17 வீரர்கள் உட்பட 47 பேர் கொல்லப்பட்டனர்.
-
சென்னையில் பா.ஜ.க. நிர்வாகிகளுடன் அண்ணாமலை இன்று ஆலோசனை
26 May 2024சென்னை : சென்னை அமிஞ்சிகரை அய்யாவு மகாலில் இன்று நிர்வாகிகளுடன் தமிழக பா.ஜ.க.தலைவர் அண்ணாமலை ஆலோசனை கூட்டம் நடத்துகிறார்.
-
சட்டம், ஒழுங்கும், சமாஜ்வாடியும் ஒன்றுக்கொன்று எதிரானது : பிரதமர் மோடி தாக்கு
26 May 2024லக்னோ : உத்தர பிரதேச மாநிலம் மிர்சாபூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி நேற்று கலந்துகொண்டார். அப்போது அவர் பேசியதாவது,
-
அரசு கலை கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கை: தரவரிசை பட்டியல் இன்று வெளியீடு : முதல்கட்ட கலந்தாய்வு நாளை தொடக்கம்
26 May 2024சென்னை : அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான தரவரிசை பட்டியல் இன்று வெளியாகிறது. முதல்கட்ட கலந்தாய்வு நாளை முதல் தொடங்குகிறது.
-
நான் ஒரு ஏலியன்தான்: நிகழ்ச்சி தொகுப்பாளரின் கேள்விக்கு பதிலளித்த எலான் மஸ்க்
26 May 2024பாரீஸ் : நிகழ்ச்சி தொகுப்பாளரின் கேள்விக்கு சிரித்துக்கொண்டே பதிலளித்த எலான் மஸ்க், நான் ஒரு ஏலியன்தான், ஆனால் யாரும் என்னை நம்பவில்லை என கூறினார்.
-
அடுத்த 4 நாட்களுக்கு தமிழகத்தில் வெப்பநிலை படிப்படியாக உயரக்கூடும் : சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
26 May 2024சென்னை : தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு வெப்பநிலை படிப்படியாக உயரக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.