எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தமிழ்நாடு முதலமைச்சர் ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அணையிலிருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடுமாறு வேளாண் பெருமக்களின் வேண்டுகோளினை ஏற்று ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிப்பாளையம், சத்தியமங்கலம், அந்தியூர், ஈரோடு மற்றும் பவானி வட்டங்களில் உள்ள அரக்கன்கோட்டை, தடப்பள்ளி, காலிங்கராயன் மற்றும் கீழ்பவானி திட்ட வாய்க்கால்களின் வழியாக முதல்போக பாசனத்திற்காக பவானிசாகர் அணையிலிருந்து 5.10.2017 முதல் தண்ணீர் திறந்துவிட ஆணையிட்டுள்ளார்கள்.
அதன்படி ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அணையிலிருந்து இன்று (05.10.2017) தடப்பள்ளி மற்றும் அரக்கன்கோட்டை, காலிங்கராயன் வாய்க்கால் பாசனத்திற்கு ஈரோடு மாவட்ட கலெக்டர் டாக்டர் எஸ்.பிரபாகர் தலைமையில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் , சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் ஆகியோர் தண்ணீர் திறந்து விட்டார்கள்.
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விட்டு செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது,
ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அணையிலிருந்து விவசாயிகளின் நலன் கருதி பழைய பாசன பகுதிகளான தடப்பள்ளி மற்றும் அரக்கன்கோட்டை வாய்க்கால்கள், காலிங்கராயன் வாய்க்கால், புதிய பாசனப் பகுதியான கீழ்பவானித்திட்ட பிரதானக் கால்வாயில் இரட்டைப்படை மதகுகளுக்கும், சென்னசமுத்திரம் பகிர்மான கால்வாய் ஒற்றைப்படை மதகுகளும் என 4 வாய்க்கால்களிலும் முதல் முறையாக ஒரே நாளில் அதிகாலை 5.00 மணியளவில் தண்ணீர் திறந்து விடப்படுவது இதுவே முதல் முறையாகும். தற்போது அணையில் உள்ள நீர் இருப்பு வடகிழக்கு பருவமழை மூலம் எதிர்பாக்கப்படும் நீர்வரத்து மற்றும் குடிநீர்த்தேவை ஆகியவற்றைக் கணக்கில் கொண்டு முறை வைத்து பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடப்படுகிறது. தற்போது பழைய பாசனப்பகுதிகளான தடப்பள்ளி மற்றும் அரக்கன்கோட்டை வாய்க்கால் பாசனத்திற்காக 1100 கனஅடியும், காலிங்கராயன் கால்வாய் பாசனத்திற்காக 600 கன அடியும், மொத்தம் 1700 கனஅடி தண்ணீர் பவானி ஆற்றில் திறந்து விடப்படுகிறது. புதிய பாசனப்பகுதியான கீழ்பவானி பாசனத்திட்டத்திற்கு கீழ்பவானித்திட்ட பிரதானக் கால்வாயில் 500 கனஅடி அளவில் தண்ணீர் திறந்துவிடப்படுகிறது. கீழ்பவானித்திட்ட பிரதானக் கால்வாயில் திறக்கப்படும் நீரின் அளவு படிப்படியாக உயர்த்தப்பட்டு கால்வாயின் முழு கொள்ளளவான 2300 கன அடி வரை தண்ணீர் வழங்கப்படும்.
பழைய பாசனப்பகுதிகளான தடப்பள்ளி மற்றும் அரக்கன்கோட்டை வாய்க்கால்களில் திறக்கப்படும் தண்ணீர் மூலம் ஈரோடு மாவட்டத்திலுள்ள கோபிசெட்டிபாளையம், பவானி, அந்தியூர் ஆகிய வட்டங்களில் உள்ள 24,504 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். காலிங்கராயன் வாய்க்காலில் திறக்கப்படும் தண்ணீர் மூலம் ஈரோடு மாவட்டத்திலுள்ள ஈரோடு, மொடக்குறிச்சி, கொடுமுடி ஆகிய வட்டங்களில் உள்ள 15,746 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். கீழ்பாவனித் திட்ட பிரதானக் கால்வாயில் திறக்கப்படும் தண்ணீர் மூலம் ஈரோடு மாவட்டத்திலுள்ள சத்தியமங்கலம், கோபிசெட்டிபாளையம், பவானி, ஈரோடு, பெருந்துறை, மொடக்குறிச்சி மற்றும் கொடுமுடி, திருப்பூர் மாவட்டத்தில் உள்ள காங்கேயம் மற்றும் கரூர் மாவட்டத்திலுள்ள அரவக்குறிச்சி ஆகிய வட்டங்களில் உள்ள 1,03,500 ஏக்கர் பாசன நிலங்கள் பயன்பெறும்.
இன்று அக்டோபர் 5 தண்ணீர் திறக்கப்பட்டத்தைத் தொடர்ந்து அக்டோபர் 24 வரை 20 நாட்களுக்கு தொடர்ச்சியாகவும், பின்னர் 10 நாட்களுக்கு தண்ணீர் நிறுத்தியும், 15 நாட்களுக்கு தண்ணீர் திறந்தும் என்ற அடிப்படையில் நான்கு முறை நடைமுறைப்படுத்தப்படும். அதன்படி மொத்தம் 80 நாட்களுக்கு தண்ணீர் திறப்பு 40 நாட்கள் தண்ணீர் நிறுத்தம் செய்து பாசனத்திற்கு தண்ணீர் வழங்கப்படும். விவசாயப் பெருமக்கள் நீரை சிக்கனமாக பயன்படுத்தி, நீர் மேலாண்மை மேற்கொண்டு உயர் மகசூல் பெறவேண்டுமாய் கேட்டுக் கொள்கிறேன் என தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், திருப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர் வி.சத்தியபாமா, நீலகிரி மாநிலங்களவை உறுப்பினர் அர்ஜூன், சட்டமன்ற உறுப்பினர்கள் வே.பொ.சிவசுப்பிரமணி (மொடக்குறிச்சி), இ.எம்.ஆர்.ராஜா(எ) கே.ஆர்.ராஜாகிருஷ்ணன் (அந்தியூர்), சு.ஈஸ்வரன் (பவானிசாகர்), உ.தனியரசு (காங்கேயம்), பொதுப்பணித்துறை நீர்வள ஆதாரத்துறை (ஈரோடு) எம்.குழந்தைசாமி, செயற்பொறியாளர் (பவானிசாகர் அணை) செந்தில்வேலன், கண்காணிப்பு பொறியாளர் எஸ்.நடராஜன் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஆனியன் ரிங்ஸ்22 hours 18 min ago |
உருளைக்கிழங்கு ப்ரை4 days 22 hours ago |
க்ரிஸ்பி கார்ன் ஸ்நாக்ஸ்1 week 22 hours ago |
-
தபால் வாக்குகளின் முடிவுகள் கடைசியாக அறிவிக்கப்படும் : சென்னை தேர்தல் அதிகாரி தகவல்
29 May 2024சென்னை : தபால் வாக்குகள் முதலில் எண்ணப்படும்.
-
தமிழகத்தில் ஜூன் 1,2 தேதிகளில் 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்
29 May 2024சென்னை : தமிழகத்தில் வரும் 1 மற்றும் 2-ம் தேதிகளில் 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
ஜூன் 3, 4-ம் தேதிகளில் வானில் 6 கோள்களின் அணிவகுப்பு : வெறும் கண்ணால் பார்க்கலாம்
29 May 2024சென்னை : ஒரு கோளுக்கு அடுத்து இன்னொரு கோள் என்று அடுக்கி வைக்கப்பட்டது போல நம் கண்களுக்கு தெரியும் நிகழ்வு கோள்களின் தொடர்வரிசை நிகழ்வு என்று அழைக்கப்படுகிறது. இந
-
ஜூன் 1-ல் இருந்து ஆம்னி பஸ்கள் கிளாம்பாக்கத்தில் இருந்து புறப்படும் : போக்குவரத்து துறை தகவல்
29 May 2024சென்னை : ஜூன் 1-ம் தேதி முதல் ஆம்னி பேருந்துகள் கிளாம்பாக்கத்தில் இருந்து தான் இயக்கப்படவேண்டும் என்று சி.எம்.டி.ஏ.
-
மே.வங்கத்தில் ஊடுருவல்காரர்களை குடியமர்த்த திரிணாமுல் முயற்சி: பிரதமர் மோடி குற்றச்சாட்டு
29 May 2024கொல்கத்தா, மேற்கு வங்காளத்தில் ஊடுருவல்காரர்களை குடியமர்த்த திரிணாமுல் காங்கிரஸ் முயற்சித்து வருகிறது என்று பிரதமர் மோடி குற்றஞ்சாட்டினார்.
-
கார்கில் தாக்குதல் எங்கள் தவறுதான்: பாக். முன்னாள் பிரதமர் ஒப்புதல்
29 May 2024லாகூர், இந்திய முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உடன் மேற்கொண்ட லாகூர் ஒப்பந்தத்தை மீறினோம்.
-
ஒடிசா மாநிலத்தின் மைந்தனே முதல்வராக பொறுப்பேற்பார் : வி.கே.பாண்டியன் உறுதி
29 May 2024புவனேஸ்வர் : ஒடிசா மண்ணின் மைந்தன் ஜூன் 9ம் தேதி காலை 11:30 மணி முதல் மதியம் 1 மணிக்குள் முதல்வராக பொறுப்பேற்பார்,'' என 5டி திட்ட தலைவரும், பிஜூ ஜனதா தளம் கட்சியின் மூத
-
புழல் சிறையில் கைதிகளுக்கான கேன்டீன் மூடப்படவில்லை : ஐகோர்ட்டில் சிறை நிர்வாகம் தகவல்
29 May 2024சென்னை : சென்னை புழல் மத்திய சிறையில் செயல்பட்டு வந்த கைதிகளுக்கான கேன்டீன் மூடப்படவில்லை என சிறை நிர்வாகம் சென்னை ஐகோர்ட்டில் நேற்று தெரிவித்துள்ளது.
-
பா.ஜ.க. நாட்டுக்கு ஆபத்தானது: அண்ணாமலைக்கு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பதிலடி
29 May 2024சென்னை : மதவெறி கொண்ட யானையை விட மதவெறி பிடித்துள்ள பா.ஜ.க.
-
காலாவதியான பொருட்கள் ஆவினில் விற்பனை: ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்
29 May 2024சென்னை : தனியார் நிறுவனங்களுக்கு வழிகாட்டியாக இருக்க வேண்டிய அரசு நிறுவனமான ஆவின், காலாவதியான பொருட்களை விற்பனை செய்வது என்பது கடும் கண்டனத்திற்குரியது என்று முன்னாள் ம
-
இந்திய ராணுவ அதிகாரிக்கு ஐ.நா.வின் மதிப்புமிக்க விருது
29 May 2024நியூயார்க், ஐக்கிய நாடுகள் அமைதி காக்கும் வீரர்களின் சர்வதேச தினம் இன்று 30-ம் தேதி அன்று கடைப்பிடிக்கப்படுகிறது. இந்நிலையில், காங்கோவில் ஐ.நா.
-
அரசியலில் நடிகர் விஜய்: எஸ்.ஏ.சந்திரசேகர் பேட்டி
29 May 2024காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் தமிழக வெற்றிக் கழகத் தலைவரும், நடிகருமான விஜய்யின் பெற்றோர் எஸ்.ஏ.சந்திரசேகர் - ஷோபா தம்பதியர் சாமி தரிசனம் செய்தனர்.
-
டெல்லியில் கடும் பஞ்சம் எதிரொலி: குடிநீரில் காரை கழுவினால் 2 ஆயிரம் ரூபாய் அபராதம்
29 May 2024புதுடெல்லி : தலைநகர் டெல்லியில் கடுமையான பஞ்சம் காரணமாக மாநில அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
-
குடியேற்ற திருத்த விதிகளுக்கு எதிர்ப்பு: கனடாவில் இந்திய மாணவர்கள் உண்ணாவிரத போராட்டம்
29 May 2024ஒட்டாவா, கனடாவின் பிரின்ஸ் எட்வர்ட் தீவு மாகாணத்தில் வசிக்கும் இந்திய மாணவர்கள் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
-
நெல்லை ஜெயக்குமார் மரண வழக்கு: முக்கிய பிரமுகர்களிடம் விரைவில் விசாரணை நடத்த சி.பி.சி.ஐ.டி. முடிவு
29 May 2024திருநெல்வேலி : திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் தனசிங் மர்ம மரண வழக்கு தொடர்பாக சிபிசிஐடி போலீஸார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்
-
சர்வதேச, தேசிய போட்டிகளை நடத்தி விளையாட்டு தலைநகராக தமிழ்நாடு மாறி வருகிறது : தமிழக அரசு பெருமிதம்
29 May 2024சென்னை : சர்வதேச, தேசிய போட்டிகளை நடத்தியதன் மூலம் நாட்டின் விளையாட்டுத் தலைநகராக தமிழகம் மாறி வருவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
-
நீலகிரி அருகே 26 அடி கிணற்றில் விழுந்த யானை குட்டி 8 மணி நேர போராட்டத்திற்கு பின் மீட்பு
29 May 2024ஊட்டி, : நீலகிரி மாவட்டம் கொளப்பள்ளி குறிஞ்சி நகர் பகுதியில் 26 அடி கிணற்றில் விழுந்த யானை குட்டி 8 மணி நேர போராட்டத்திற்கு பிறகு மீட்கப்பட்டது.
-
அணியுடன் இணைந்த பாண்ட்யா
29 May 202420 அணிகள் கலந்து கொள்ள உள்ள டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் 1ம் தேதி (இந்திய நேரப்படி 2ம் தேதி) தொடங்குகிறது.
-
சென்னை ஏரிகளில் நீா் இருப்பு: 4 மாதங்களுக்கு குடிநீா் விநியோகிப்பதில் பிரச்சினை இல்லை - அதிகாரிகள் தகவல்
29 May 2024சென்னை : சென்னைக்கு குடிநீா் வழங்கும் ஏரிகளில் 47சதவீதம் நீா் இருப்பு உள்ளதால், இன்னும் 4 மாதங்களுக்கு சென்னை மக்களுக்கு தட்டுப்பாடின்றி குடிநீா் விநியோகிக்க முடி
-
பிரதமர் மோடி குறித்த கேள்விக்கு பதிலளிக்க நடிகர் ரஜினி மறுப்பு
29 May 2024சென்னை : இமயமலை செல்லும் நடிகர் ரஜினிகாந்த், செய்தியாளர்கள் எழுப்பிய பிரதமர் மோடி குறித்த கேள்விக்கு பதிலளிக்க மறுத்து விட்டார்.
-
தென் இந்தியாவில் பா.ஜ.க. மிகப்பெரிய வெற்றி பெறும் : மத்திய அமைச்சர் அமித்ஷா நம்பிக்கை
29 May 2024புதுடெல்லி : தென் இந்தியாவில் கர்நாடகா, தெலங்கானா, ஆந்திரா, கேரளா மற்றும் தமிழ்நாடு ஆகிய அனைத்து மாநிலங்களிலும் பா.ஜ.க.
-
கடைசி கட்ட தேர்தல் பிரசாரத்தை முடித்து 3 நாள் பயணமாக பிரதமர் மோடி இன்று கன்னியாகுமரி வருகை : மாவட்டம் முழுவதும் 5 அடுக்கு பாதுகாப்பு
29 May 2024கன்னியாகுமரி : 3 நாள் பயணமாக பிரதமர் மோடி இன்று மாலை கன்னியாகுமரி வருகிறார்.
-
டி-20 உலகக் கோப்பை தொடர்: வாஷிங்டன்னில் பயிற்சியை தொடங்கிய இந்திய வீரர்கள்
29 May 2024வாஷிங்டன் : டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்க இந்திய அணி வாஷிங்டன்னில் நேற்று பயிற்சியை தொடங்கினர். இந்திய வீரர்கள் பயிற்சி செய்யும் வீடியோவை பி.சி.சி.ஐ.
-
கெஜ்ரிவாலின் இடைக்கால ஜாமீன் மனு: விசாரணைக்கு ஏற்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு
29 May 2024புதுடெல்லி : டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் இடைக்கால ஜாமீன் மனுவை விசாரணைக்கு ஏற்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு தெரிவித்துள்ளது.
-
இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் தேர்வில் நீடிக்கும் தாமதம்
29 May 2024மும்பை : தலைமை பயிற்சியாளர் குறித்து இதுவரை கவுதம் கம்பீர் எந்த கருத்தும் தெரிவிக்காத நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் அடுத்த தலைமைப் பயிற்சியாளர் யார் என பி.சி