எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை: போலி முத்திரைத் தாள்களை ஒழிக்க, மின்னணு ஸ்டாம்ப் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். மேலும், நீதிமன்றங்களில் புதிய தொழில் நுட்பத்தை புகுத்தி அவற்றின் செயல்பாட்டை விரைவுபடுத்தவும், அதன் மூலம் பொதுமக்களுக்கு உரிய பயன்கள் விரைவாக சென்றடையவும் அரசு வழிவகுத்துள்ளதாக அவர் பெருமிதம் தெரிவித்தார்.
ஆன்லைனில் செலுத்தும்...
தமிழகத்தில் வழக்கு தொடர்வதற்கான கட்டணங்களை ஆன்லைனில் செலுத்தும் இ-ஸ்டாம்பிங் முறை தமிழகத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தை சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தொடங்கி வைத்தனர். அதைத் தொடர்ந்து இ-ஸ்டாபிங் முறையில் கட்டணத்தை செலுத்தும் கவுன்டர்களை திறந்துவைத்து முதல் 5 பேருக்கான ரசீதை முதல்வர் பழனிசாமி வழங்கினார்.
மின்னணு ஆளுமை
அப்போது முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், நீதித்துறையில் மின்னணு ஆளுமை முறைகளை புகுத்துவதன் அவசியத்தையும், அதனால் மக்களுக்கு ஏற்படும் நன்மைகளை கருத்தில் கொண்டும், இத்துறையில் முழுமையாக மின்னணு ஆளுமை முறைகளைக் கொண்டு வர ஏதுவாக, நீதிமன்றங்களில் நீதிசார்ந்த மின்னணு முத்திரைத்தாள் முறையினை புகுத்திட உயர்நீதிமன்றத்தின் கோரிக்கையை ஏற்று, தமிழக அரசால் நேற்று முதல் இம்முறை அறிமுகப்படுத்தப்பட்டது.
பெருமகிழ்ச்சி...
போலி முத்திரைத்தாள்களை ஒழிக்கவும், முத்திரைத்தாள்கள் பயன்பாட்டில் பாதுகாப்பினை அதிகரிக்கவும் தமிழக அரசு தீவிர முயற்சி எடுத்து வருகிறது. பதிவுத்துறையில் சென்னை மண்டலத்தில் பயன்பாட்டில் உள்ள மின்னணு நீதிசாரா முத்திரைத்தாள் முறையை, அம்மாவின் அரசு, தமிழகம் முழுவதும் விரிவாக்கம் செய்ய நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. மேலும் நீதித்துறையில் பயன்படுத்தப்படும் நீதிசார்ந்த முத்திரைத்தாள்கள் பயன்பாட்டிலும் பாதுகாப்பான இம்முறையை கொண்டுவருவதில் நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.
இணையம் மூலம்...
இத்திட்டத்தை செயல்படுத்த, திருவாளர்கள் ஸ்டாக் ஹோல்டிங் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா லிமிடெட் என்ற மத்திய அரசு நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இந்நிறுவனம் ஏற்கனவே உச்சநீதிமன்றத்திலும், டெல்லி, சத்தீஸ்கர், பஞ்சாப், ராஜஸ்தான், உத்தர பிரதேசம் மற்றும் இமாச்சல பிரதேசம் மாநில உயர்நீதிமன்றங்களிலும் இம்முறையை அறிமுகப்படுத்தி, செயல்படுத்தி வருகிறது. இந்த நீதிசார்ந்த மின்னணு முத்திரையை பொதுமக்கள் தாங்களாகவே இணையம் மூலம் உருவாக்கி பயன்படுத்தலாம். கணினி மற்றும் இணைய இணைப்பு இல்லாதவர்கள் மேற்கண்ட நிறுவனத்தால் அமைக்கப்பட்ட மையங்களில் அல்லது நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்ட வங்கிகளில் உரிய விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து தொகையினை செலுத்தி, நீதிசார்ந்த மின்னணு முத்திரைகளை பெற்றுக் கொள்ளலாம்.
விரைவில் அனைத்து....
இம்முறை, முதற்கட்டமாக சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையிலும், அடுத்த கட்டமாக அனைத்து முதன்மை மாவட்ட நீதிமன்றங்களிலும் செயல்படுத்தப்பட உள்ளது. தமிழ்நாடு அரசால் இயக்கப்படும் இ-சேவை மையங்கள் மூலமாகவும் இம்முறையை விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.
நீதிசார்ந்த மின்னணு முத்திரைத்தாள்களில் தனிப்பட்ட இரசீது எண் அச்சிடப்பட்டிருக்கும். நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யும் பிரிவில் இந்த முத்திரைத்தாளை ஒப்படைத்தால், அதன் உண்மைத் தன்மையை சரிபார்ப்பது மட்டுமின்றி, அதனை மீளவும் தவறான முறையில் பயன்படுத்தா வண்ணம் பாதுகாப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளது. மேற்கண்டவாறு நீதிமன்றங்களில் புதிய தொழில் நுட்பத்தை புகுத்தி அவற்றின் செயல்பாட்டை விரைவுபடுத்தவும், அதன் மூலம் பொதுமக்களுக்கு உரிய பயன்கள் விரைவாக சென்றடையவும் தமிழ்நாடு அரசு ஆவன செய்துள்ளது. இதுமட்டுமன்றி, எண்ணில்லா நலத்திட்டங்கள் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகளை இந்த அரசு நீதித்துறைக்கு வழங்கியுள்ளது.
பணியிடங்கள்...
வழக்குரைஞர்களின் நலனைக் கருத்தில் கொண்டு பணியில் இருக்கும்போதே இறக்கும் வழக்குரைஞர்களின் வாரிசுதாரர்களுக்கு தற்போது வழங்கப்பட்டு வந்த நிதியுதவி 5 லட்சத்து 25 ஆயிரம் ரூபாயிலிருந்து, 7 லட்சம் ரூபாயாக உயர்த்தியும், தமிழ்நாடு வழக்குரைஞர்கள் நல நிதிக்கு ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வந்த நிதியுதவி 4 கோடி ரூபாயிலிருந்து 8 கோடி ரூபாயாக உயர்த்தியும் அரசால் ஆணைகள் வெளியிடப்பட்டுள்ளன. மாநிலத்தின் பல்வேறு நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைவில் முடிவுக்கு கொண்டுவர ஏதுவாக கடந்த ஓராண்டில் பல்வேறு பதவிகளுக்கு 1,188 பணியிடங்கள் தமிழக அரசால் உருவாக்கப்பட்டுள்ளன.
ரூ.1 கோடியே 45 லட்சம்...
நீதித்துறையில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்திடும் வண்ணம், மாநிலத்தின் பல்வேறு இடங்களில், கடந்த ஆண்டில் மட்டும் புதிதாக 149 நீதிமன்றங்களை உருவாக்க அரசாணைகள் வெளியிடப்பட்டுள்ளன. மேலும், நீதிபதிகளுக்கான குடியிருப்புகள் கட்டுதல், நீதிமன்றக் கட்டடங்களை பழுது பார்த்தல், இதர உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துதல் போன்ற பணிகளுக்காக 92 கோடி ரூபாய் நிதி ஒப்பளிப்பு செய்யப்பட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தில் சூரிய மின்சக்திக்கான உபகரணங்களை நிறுவுவதற்கு 1 கோடியே 42 லட்சம் ரூபாய் நிதி ஒப்பளிப்பு செய்யப்பட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்ற பாரம்பரிய கட்டிடத்தின் 125ஆம் ஆண்டு விழாவினை கொண்டாடுவதற்கு தமிழ்நாடு அரசால் ஒரு கோடியே 45 லட்சம் ரூபாய் நிதி வழங்கப்பட்டது. நிலுவை வழக்குகளை முடிவுக்கு கொண்டுவர 149 நீதிமன்றம் அமைக்க அரசாணை பிறப்பிக்கப் பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். நீதித்துறைக்கு தமிழக அரசு முழு ஒத்துழைப்பை வழங்கி வருவதாக முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்.
8-வது மாநிலம்
இ-ஸ்டாம்பிங் திட்டத்தை அறிமுகப்படுத்தும் 8-வது மாநிலம், தமிழகம் ஆகும். இதன் மூலம் வழக்குக்கான கட்டணத்தை மின்னணு முறையில் பொதுமக்கள் செலுத்த வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதுவரை வழக்கு தொடர்வதற்கான கட்டணம், ஸ்டாம்ப், பத்திரம் மூலமாகவே பெறப்பட்டு வந்தது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஆனியன் ரிங்ஸ்16 hours 18 min ago |
உருளைக்கிழங்கு ப்ரை4 days 16 hours ago |
க்ரிஸ்பி கார்ன் ஸ்நாக்ஸ்1 week 16 hours ago |
-
தபால் வாக்குகளின் முடிவுகள் கடைசியாக அறிவிக்கப்படும் : சென்னை தேர்தல் அதிகாரி தகவல்
29 May 2024சென்னை : தபால் வாக்குகள் முதலில் எண்ணப்படும்.
-
தமிழகத்தில் ஜூன் 1,2 தேதிகளில் 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்
29 May 2024சென்னை : தமிழகத்தில் வரும் 1 மற்றும் 2-ம் தேதிகளில் 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
ஜூன் 1-ல் இருந்து ஆம்னி பஸ்கள் கிளாம்பாக்கத்தில் இருந்து புறப்படும் : போக்குவரத்து துறை தகவல்
29 May 2024சென்னை : ஜூன் 1-ம் தேதி முதல் ஆம்னி பேருந்துகள் கிளாம்பாக்கத்தில் இருந்து தான் இயக்கப்படவேண்டும் என்று சி.எம்.டி.ஏ.
-
ஜூன் 3, 4-ம் தேதிகளில் வானில் 6 கோள்களின் அணிவகுப்பு : வெறும் கண்ணால் பார்க்கலாம்
29 May 2024சென்னை : ஒரு கோளுக்கு அடுத்து இன்னொரு கோள் என்று அடுக்கி வைக்கப்பட்டது போல நம் கண்களுக்கு தெரியும் நிகழ்வு கோள்களின் தொடர்வரிசை நிகழ்வு என்று அழைக்கப்படுகிறது. இந
-
மே.வங்கத்தில் ஊடுருவல்காரர்களை குடியமர்த்த திரிணாமுல் முயற்சி: பிரதமர் மோடி குற்றச்சாட்டு
29 May 2024கொல்கத்தா, மேற்கு வங்காளத்தில் ஊடுருவல்காரர்களை குடியமர்த்த திரிணாமுல் காங்கிரஸ் முயற்சித்து வருகிறது என்று பிரதமர் மோடி குற்றஞ்சாட்டினார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 29-05-2024.
29 May 2024 -
கார்கில் தாக்குதல் எங்கள் தவறுதான்: பாக். முன்னாள் பிரதமர் ஒப்புதல்
29 May 2024லாகூர், இந்திய முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உடன் மேற்கொண்ட லாகூர் ஒப்பந்தத்தை மீறினோம்.
-
ஒடிசா மாநிலத்தின் மைந்தனே முதல்வராக பொறுப்பேற்பார் : வி.கே.பாண்டியன் உறுதி
29 May 2024புவனேஸ்வர் : ஒடிசா மண்ணின் மைந்தன் ஜூன் 9ம் தேதி காலை 11:30 மணி முதல் மதியம் 1 மணிக்குள் முதல்வராக பொறுப்பேற்பார்,'' என 5டி திட்ட தலைவரும், பிஜூ ஜனதா தளம் கட்சியின் மூத
-
புழல் சிறையில் கைதிகளுக்கான கேன்டீன் மூடப்படவில்லை : ஐகோர்ட்டில் சிறை நிர்வாகம் தகவல்
29 May 2024சென்னை : சென்னை புழல் மத்திய சிறையில் செயல்பட்டு வந்த கைதிகளுக்கான கேன்டீன் மூடப்படவில்லை என சிறை நிர்வாகம் சென்னை ஐகோர்ட்டில் நேற்று தெரிவித்துள்ளது.
-
பா.ஜ.க. நாட்டுக்கு ஆபத்தானது: அண்ணாமலைக்கு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பதிலடி
29 May 2024சென்னை : மதவெறி கொண்ட யானையை விட மதவெறி பிடித்துள்ள பா.ஜ.க.
-
இந்திய ராணுவ அதிகாரிக்கு ஐ.நா.வின் மதிப்புமிக்க விருது
29 May 2024நியூயார்க், ஐக்கிய நாடுகள் அமைதி காக்கும் வீரர்களின் சர்வதேச தினம் இன்று 30-ம் தேதி அன்று கடைப்பிடிக்கப்படுகிறது. இந்நிலையில், காங்கோவில் ஐ.நா.
-
காலாவதியான பொருட்கள் ஆவினில் விற்பனை: ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்
29 May 2024சென்னை : தனியார் நிறுவனங்களுக்கு வழிகாட்டியாக இருக்க வேண்டிய அரசு நிறுவனமான ஆவின், காலாவதியான பொருட்களை விற்பனை செய்வது என்பது கடும் கண்டனத்திற்குரியது என்று முன்னாள் ம
-
குடியேற்ற திருத்த விதிகளுக்கு எதிர்ப்பு: கனடாவில் இந்திய மாணவர்கள் உண்ணாவிரத போராட்டம்
29 May 2024ஒட்டாவா, கனடாவின் பிரின்ஸ் எட்வர்ட் தீவு மாகாணத்தில் வசிக்கும் இந்திய மாணவர்கள் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
-
நீலகிரி அருகே 26 அடி கிணற்றில் விழுந்த யானை குட்டி 8 மணி நேர போராட்டத்திற்கு பின் மீட்பு
29 May 2024ஊட்டி, : நீலகிரி மாவட்டம் கொளப்பள்ளி குறிஞ்சி நகர் பகுதியில் 26 அடி கிணற்றில் விழுந்த யானை குட்டி 8 மணி நேர போராட்டத்திற்கு பிறகு மீட்கப்பட்டது.
-
நெல்லை ஜெயக்குமார் மரண வழக்கு: முக்கிய பிரமுகர்களிடம் விரைவில் விசாரணை நடத்த சி.பி.சி.ஐ.டி. முடிவு
29 May 2024திருநெல்வேலி : திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் தனசிங் மர்ம மரண வழக்கு தொடர்பாக சிபிசிஐடி போலீஸார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்
-
அரசியலில் நடிகர் விஜய்: எஸ்.ஏ.சந்திரசேகர் பேட்டி
29 May 2024காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் தமிழக வெற்றிக் கழகத் தலைவரும், நடிகருமான விஜய்யின் பெற்றோர் எஸ்.ஏ.சந்திரசேகர் - ஷோபா தம்பதியர் சாமி தரிசனம் செய்தனர்.
-
பிரதமர் மோடி குறித்த கேள்விக்கு பதிலளிக்க நடிகர் ரஜினி மறுப்பு
29 May 2024சென்னை : இமயமலை செல்லும் நடிகர் ரஜினிகாந்த், செய்தியாளர்கள் எழுப்பிய பிரதமர் மோடி குறித்த கேள்விக்கு பதிலளிக்க மறுத்து விட்டார்.
-
சர்வதேச, தேசிய போட்டிகளை நடத்தி விளையாட்டு தலைநகராக தமிழ்நாடு மாறி வருகிறது : தமிழக அரசு பெருமிதம்
29 May 2024சென்னை : சர்வதேச, தேசிய போட்டிகளை நடத்தியதன் மூலம் நாட்டின் விளையாட்டுத் தலைநகராக தமிழகம் மாறி வருவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
-
தென் இந்தியாவில் பா.ஜ.க. மிகப்பெரிய வெற்றி பெறும் : மத்திய அமைச்சர் அமித்ஷா நம்பிக்கை
29 May 2024புதுடெல்லி : தென் இந்தியாவில் கர்நாடகா, தெலங்கானா, ஆந்திரா, கேரளா மற்றும் தமிழ்நாடு ஆகிய அனைத்து மாநிலங்களிலும் பா.ஜ.க.
-
டெல்லியில் கடும் பஞ்சம் எதிரொலி: குடிநீரில் காரை கழுவினால் 2 ஆயிரம் ரூபாய் அபராதம்
29 May 2024புதுடெல்லி : தலைநகர் டெல்லியில் கடுமையான பஞ்சம் காரணமாக மாநில அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
-
பாகிஸ்தானில் பள்ளத்தாக்கில் பஸ் கவிழ்ந்த விபத்தில் 28 பேர் உயிரிழப்பு
29 May 2024கராச்சி, பாகிஸ்தானில் கராச்சி நகரில் பயணிகளுடன் சென்று கொண்டிருந்த பஸ் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் இருந்த பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில்
-
கெஜ்ரிவாலின் இடைக்கால ஜாமீன் மனு: விசாரணைக்கு ஏற்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு
29 May 2024புதுடெல்லி : டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் இடைக்கால ஜாமீன் மனுவை விசாரணைக்கு ஏற்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு தெரிவித்துள்ளது.
-
பழனி கோவிலில் ரோப்கார் சேவை இன்று நிறுத்தம்
29 May 2024திண்டுக்கல் : பழனி முருகன் கோவிலில் பராமரிப்பு பணிக்காக இன்று ஒரு நாள் மட்டும் ரோப்கார் சேவை நிறுத்தப்படுவதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
-
அணியுடன் இணைந்த பாண்ட்யா
29 May 202420 அணிகள் கலந்து கொள்ள உள்ள டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் 1ம் தேதி (இந்திய நேரப்படி 2ம் தேதி) தொடங்குகிறது.
-
இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் தேர்வில் நீடிக்கும் தாமதம்
29 May 2024மும்பை : தலைமை பயிற்சியாளர் குறித்து இதுவரை கவுதம் கம்பீர் எந்த கருத்தும் தெரிவிக்காத நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் அடுத்த தலைமைப் பயிற்சியாளர் யார் என பி.சி