எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை : நல்லடக்கத்திற்கான காரியங்கள் நடைபெறுவதில், நடைமுறை இடர்ப்பாடுகள் வந்து விடக்கூடாது என்பதால், அண்ணா பல்கலைக் கழகத்திற்கு எதிரே ராஜாஜி, காமராஜர், முன்னாள் முதலமைச்சர் பக்தவச்சலம், இரட்டைமலை சீனிவாசன் ஆகியோரது நினைவிடங்களுக்கு அருகே கருணாநிதிக்கு 2 ஏக்கர் நிலம் ஒதுக்க அரசு முன்வந்தது. இதில் காழ்ப்புணர்ச்சி ஏதுமில்லை என்று அமைச்சர் ஜெயகுமார் விளக்கம் அளித்துள்ளார்.
உள்ளம் பதைபதைக்கிறது...
இது குறித்து மீன்வளத்துறை அமைச்சர் ஜெயகுமார் வெளியிட்ட அறிக்கை வருமாறு:-
எம்.ஜி.ஆரோடு நெருங்கிய நட்பும், எம்.ஜிஆரின் அன்பான முயற்சியால் அண்ணாவுக்கு பிறகு தமிழகத்தின் முதலமைச்சராகப் பொறுப்பேற்றவர் என்ற புகழும் பெற்றிருந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி 95 வயதில், முதுமையாலும், உடல்நலக் குறைவாலும் காலமானார் என்ற துயரமான நிகழ்வு நடைபெற்ற சில மணி நேரங்களுக்குள்ளாகவே, முரசொலி நாளிதழில் வெளிவந்துள்ள தி.மு.க. செயல் தலைவர் மு.க. ஸ்டாலினின் கடிதத்தில் காணப்படும் அபாண்டமான குற்றச்சாட்டும், நஞ்சை விதைக்கும் பழிச் சொல்லும் கண்டு உள்ளம் பதைபதைக்கிறது.
அண்ணாவின் இதயத்தை கடனாக வாங்கி இருப்பதால் அதை திருப்பித் தருவதற்காக அண்ணா சமாதி அருகே கருணாநிதியை நல்லடக்கம் செய்ய வேண்டியது இன்றியமையாதது என்று அண்ணா சதுக்கத்தில் இடம் கேட்டதாகவும், அந்த வேண்டுகோளை காழ்ப்புணர்ச்சியாலும், ஆட்டுவிப்போரின் சூழ்ச்சியாலும் அண்ணா சதுக்கத்தில் இடம் ஒதுக்க மறுத்தார் என்று மு.க. ஸ்டாலின் தனது கடிதத்தில் நச்சுக்கருத்து ஒன்றினை வெளிப்படுத்தி இருக்கிறார்.
பட்டியலிடுகிறோம்...
மறைந்த ஒரு முதுபெரும் தமிழக அரசியல் தலைவருக்கு உள்ளார்ந்த மரியாதையுடனும், அக்கறையுடனும், அ.தி.மு.க. அரசு செய்திருக்கும் சிறப்புகளை பட்டியலிட்டுக் கூறும் நிலைக்கு மு.க. ஸ்டாலினின் கடிதம் நம்மை தள்ளியிருக்கிறது. சொல்லிக் காட்ட வேண்டும் என்ற எண்ணம் எங்களுக்கு சிறிதும் இல்லை. ஆனால், பதிவு செய்வது வரலாற்றுக் கட்டாயம் என்பதால், மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் புகழைப் போற்ற, தமிழக அரசின் சார்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை இங்கே பட்டியலிடுகிறோம். இறுதிச் சடங்கு நாளான 8-ம் தேதி மாநில அரசு அலுவலகங்கள், மாநில அரசு நிறுவனங்கள் மற்றும் பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்தது. கருணாநிதியின் பூத உடல் மக்களின் பார்வைக்கு ராஜாஜி ஹாலில் வைப்பதற்கு அனுமதி வழங்கியது. அன்னாரது உடலை நல்லடக்கம் செய்வதற்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்து தருமாறு அரசு அதிகாரிகளுக்கு உத்தரவு வழங்கியது. அவரது உடல் மருத்துவமனையில் இருந்து அவரது இல்லம் செல்வதற்கும், மீண்டும் அங்கிருந்து ராஜாஜி ஹாலுக்கு கொண்டு செல்லப்பட்டு மக்கள் பார்வைக்கு வைத்தும், பின்னர் அங்கிருந்து கொண்டு சென்று நல்லடக்கம் செய்யும் வரையிலும் காவல் துறையினர் முழு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டது.
7 நாட்களுக்கு....
மத்திய அரசின் உள்துறை மற்றும் பாதுகாப்புத் துறை அனுமதி பெற்று, அரைக் கம்பத்தில் தேசியக் கொடி பறந்தது, சவப் பெட்டி மீது தேசியக் கொடி போர்த்தியது, ராணுவ மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது, இறுதிச் சடங்கின் போது குண்டுகள் முழங்கியது, முதலான அரசு மரியாதை செலுத்தப்பட்டது. துக்கம் அனுசரிக்கும் வகையில் 7 நாட்களுக்கு அரைக் கம்பத்தில் தேசியக் கொடி பறப்பது மற்றும் அரசு சார்ந்த விழாக்கள் 7 நாட்களுக்கு ரத்து செய்யப்பட்டது. இரங்கல் செய்தி அரசிதழில் வெளியிடப்பட்டது.
அண்ணாசதுக்கத்தில்...
மெரினா கடற்கரையில் புதிய கல்லறைகள், நினைவிடங்கள் அமைப்பது தொடர்பாக ஐந்து மனுதாரர்கள் தாக்கல் செய்த மனுக்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குகளாக நிலுவையில் இருந்தன. கோடான கோடி மக்களால் அம்மா என்று வாஞ்சையுடன் அழைக்கப்பட்ட மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்தை மெரினா கடற்கரையில் இருந்து அப்புறப்படுத்தி விடத் துடித்தவர்கள் தொடுத்த வழக்குகள் தான் அவை ஐந்தும். இப்படி ஒன்றல்ல, இரண்டல்ல, ஐந்து வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால் சட்டச் சிக்கல்கள் உருவாகி, கடைசி நேரத்தில் பெரும் குழப்பம் ஏதும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதால் தான் அண்ணாசதுக்கத்தில் இடம் தருவது இயலாமல் போய், நல்லடக்கத்திற்கான காரியங்கள் நடைபெறுவதில், நடைமுறை இடர்ப்பாடுகள் வந்து விடக்கூடாது என்பதால், அண்ணா பல்கலைக்கழகத்திற்கு எதிரே இராஜாஜி, காமராஜர், முன்னாள் முதலமைச்சர் பக்தவச்சலம், இரட்டைமலை சீனிவாசன் ஆகியோரது நினைவிடங்களுக்கு அருகே கருணாநிதிக்கு 2 ஏக்கர் நிலம் ஒதுக்க அரசு முன்வந்தது. இதில் ஏது காழ்ப்புணர்ச்சி ?
மனசாட்சி இருக்கிறதா ?
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உருவப்படத்தை தமிழ் நாடு சட்டமன்றப் பேரவைக்குள் திறந்து வைக்க எதிர்ப்பு தெரிவித்து ஏகடியம் பேசிய தி.மு.க.-வினருக்கு, மெரினா கடற்கரையில் இருந்து அவரது நினைவிடத்தை அப்புறப்படுத்துவோம் என்று மேடை போட்டு பேசிய தி.மு.க.-வினருக்கு மனசாட்சி இருக்கிறதா ? என்ற கேள்வியே எழுகிறது. குத்திக்காட்ட வேண்டும் என்பதற்காக அல்ல. மாறாக, சரித்திர நிகழ்வு என்பதற்காகவும், பழமையை மறந்தோர்க்கு எதிர்காலம் மட்டுமல்ல, நிகழ்காலமுமே கூட வழிகாட்ட ஒளியின்றி தடுமாற்றம் ஏற்படுத்தி விடும் என்பதற்காக ஒன்றை நினைவுபடுத்த விரும்புகிறேன்.
நினைவூட்டுகிறேன்...
காமராஜர் மறைந்த போதும், தமிழ் நாடு முதலமைச்சராகப் பணியாற்றிய ஜானகி அம்மையார் மறைந்த போதும், அவருக்கு மெரினா கடற்கரையில் நினைவிடம் அமைக்க அப்போது முதல்வராக இருந்த கருணாநிதியிடம் வேண்டுகோள் வைக்கப்பட்டது. முதலமைச்சராகவே இருந்து மரணமடைவோருக்கு மட்டும் தான் மெரினாவில் நினைவிடம் அமைக்க அனுமதி அளிக்கப்படும் என்று வழக்குகள் ஏதும் இல்லாத நிலையிலும் கூட மறுத்தவர் தான் மறைந்த கருணாநிதி என்று அந்த நிகழ்வுகளின் போது அவரிடம் நேரில் சென்று கோரிக்கை வைத்து ஏமாற்றத்துடன் திரும்பியவர்கள் இன்றும் நம்முடன் வாழ்கிறார்கள் அவர்கள் கூறிய தகவல்கள் தான் இவை என்பதை
நினைவூட்டுகிறேன்.
புரியவே புரியாது...
தாங்கள் ஏதோ போதி மரத்தின் கீழ் ஞானம் பெற்ற புத்தபெருமான் போலவும், அப்பழுக்கில்லாமல் ஆட்சி நடத்திய சித்தர்களைப் போலவும், தாங்கள் அள்ளிக் குவித்து வைத்திருக்கும் ஆயிரம் தலைமுறைக்கான செல்வம் தங்கள் அயராத உழைப்பாலும், அறிவுத்திறத்தாலும் வந்தது போலவும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீது எண்ணற்ற வழக்குகளைப் போட்டு, சிறையில் தள்ளி, சித்ரவதை செய்து அவருக்கு மனவேதனையையும், அவமானத்தையும் பரிசளித்த தி.மு.க.-வினருக்கு, அ.தி.மு.க. அரசின் களங்கமில்லா வெள்ளை உள்ளம் புரியாது. புரியவே புரியாது. ஆனால், அனைத்தையும் பார்த்துக் கொண்டிருக்கும் தமிழ்ச் சமூகம் நன்கு புரிந்து கொள்ளும் காட்சிக்கு எளியவர்களாய், கடுஞ்சொல் அற்றவர்களாய், எல்லோர்க்கும் எல்லாமும் ஆகி தமிழகத்தை வலிமை மிக்க எதிர்காலம் நோக்கி வழிநடத்திக் கொண்டிருக்கும் முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும், நாங்களும், தி.மு.க. தலைமை பழைய பாதையில் பயணித்து பழிச் சொல் வீசுவது கண்டு கலங்கப் போவதுமில்லை. கடமை தவறப்போவதுமில்லை. இவ்வாறு அந்த அறிக்கையில் அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்துள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 month 4 weeks ago | வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 month 4 weeks ago | ஆவாரம்பூவின் மருத்துவ பலன்கள் 1 month 4 weeks ago |
தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 3 weeks ago | குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 8 months 1 week ago | பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 1 week ago |
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு ப்ரை1 day 18 hours ago |
க்ரிஸ்பி கார்ன் ஸ்நாக்ஸ்4 days 17 hours ago |
ஆப்பிள் ரோஸ்ட்1 week 1 day ago |
-
சமாளிக்க தயாராக இருங்கள்: இஸ்ரேல் படைக்கு எச்சரிக்கை விடுத்த ஹிஸ்புல்லா அமைப்பு
26 May 2024லெபனான் : எங்கள் தரப்பில் இருந்து உங்களுக்கு ஆச்சரியங்கள் காத்திருக்கின்றன.
-
தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் நாளை மாபெரும் சமபந்தி விருந்து : விஜய் கட்சி ஏற்பாடு
26 May 2024சென்னை : உலக பட்டினி தினத்தை முன்னிட்டு நாளை தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் மாபெரும் சமபந்தி விருந்து நிகழ்ச்சி நடைபெறுகிறது.
-
டெல்லி மருத்துவமனையில் நிகழ்ந்த தீ விபத்தில் 6 குழந்தைகள் உயிரிழப்பு : பிரதமர் மோடி, கெஜ்ரிவால் இரங்கல்
26 May 2024புதுடெல்லி : டெல்லி மருத்துவமனையில் ஏற்பட்ட திடீர் தீவிபத்தில் 6 குழந்தைகள் உயிரிழந்தன.
-
இலவச லேப்டாப்: இந்த ஆண்டாவது அரசு வழங்க வேண்டும்: எடப்பாடி
26 May 2024சென்னை : இலவச மடிக்கணினியை இந்த ஆண்டாவது மாணவர்களுக்கு அரசு வழங்க வேண்டும் என்று அ.தி.மு.க. பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.
-
முல்லைப்பெரியாறு விவகாரம்: கேரள அரசுக்கு ஓ.பி.எஸ். கண்டனம்
26 May 2024சென்னை : இது குறித்து முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
-
தி.மலை கோவிலில் ஐகோர்ட் தலைமை நீதிபதி தரிசனம்
26 May 2024தி.மலை : சென்னை ஐகோர்ட்டின் பொறுப்பு தலைமை நீதிபதி மகாதேவன் நேற்று காலை திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார்.
-
ஏற்காட்டில் கோடை விழா நிறைவு: சுற்றுலா பயணிகள் குவிந்தனர்
26 May 2024சேலம் : ஏற்காட்டில் கோடை விழா நேற்றுடன் நிறைவு பெற்ற நிலையில், விடுமுறை நாள் என்பதால் நேற்று ஏராளமான சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் குவிந்தனர்.
-
100 யூனிட் விலையில்லா மின்சாரம், எளியோருக்கு தொடர்ந்து கிடைக்க எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
26 May 2024சென்னை : 100 யூனிட் விலையில்லா மின்சாரம் ஏழை, எளியோருக்கு தொடர்ந்து கிடைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசுக்கு எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.
-
வட கொரியாவுக்கு செல்ல ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் முடிவு
26 May 2024மாஸ்கோ : ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், அரசு முறைப்பயணமாக வடகொரியா செல்ல முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
சொத்து வரி நிலுவை: முதல் 100 பேர் பட்டியலை இணையத்தில் வெளியிட சென்னை மாநகராட்சி திட்டம்
26 May 2024சென்னை : மாநகராட்சியில் சொத்து வரி நிலுவை வைத்துள்ள முதல் 100 பேர் பட்டியலை இணையத்தில் வெளியிட சென்னை மாநகராட்சி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.
-
கே.ஆர்.பி. அணை நீர்மட்டம் 10 நாளில் 6 அடி உயர்ந்தது : விவசாயிகள் மகிழ்ச்சி
26 May 2024கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக, கே.ஆர்.பி அணையின் நீர்மட்டம் 10 நாளில் 6 அடி உயர்ந்துள்ளது.
-
இமாச்சலில் பருவமழை பேரழிவுக்கு நிவாரணம் கொடுக்கவில்லை : பிரதமர் மோடி மீது ராகுல் குற்றச்சாட்டு
26 May 2024சிம்லா : 22 பேரின் கடனை பிரதமர் மோடி தள்ளுபடி செய்தார். ஆனால் இமாச்சல பிரதேசத்தில் பருவமழை பேரழிவுக்கு ரூ.9,000 கோடி கொடுக்கவில்லை என காங்கிரஸ் எம்.பி.
-
மக்களவை தேர்தல்: ஜூன் 4-ல் வெற்றிக் கொடியேற்றி கருணாநிதி நினைவிடத்தில் சமர்ப்பிப்போம் : தொண்டர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
26 May 2024சென்னை : ஜூன்-4 மக்களவைத் தேர்தல் வெற்றிக் கொடி ஏற்றி தன்னிகரில்லா தமிழின தலைவரின் நினைவிடத்தில் சமர்ப்பிப்போம் என்று தி.மு.க.
-
சென்னையில் பா.ஜ.க. நிர்வாகிகளுடன் அண்ணாமலை இன்று ஆலோசனை
26 May 2024சென்னை : சென்னை அமிஞ்சிகரை அய்யாவு மகாலில் இன்று நிர்வாகிகளுடன் தமிழக பா.ஜ.க.தலைவர் அண்ணாமலை ஆலோசனை கூட்டம் நடத்துகிறார்.
-
அமெரிக்காவில் கருக்கலைப்பு மாத்திரைகளுக்கு கட்டுப்பாடு
26 May 2024வாஷிங்டன் : அமெரிக்காவில் கருக்கலைப்பு மாத்திரைகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
-
பணிபுரிய வெளிநாடு செல்லும் தமிழர்கள் போலி வேலை வாய்ப்பை நம்பி ஏமாற வேண்டாம் : அயலகத் தமிழர் நலத்துறை எச்சரிக்கை
26 May 2024சென்னை : பணிபுரிய வெளிநாடு செல்லும் தமிழர்கள் போலி வேலை வாய்ப்பை நம்பி ஏமாற வேண்டாம் என்றும், ஆள்சேர்ப்பு முகவர், பணி வழங்கும் நிறுவனம் குறித்து நன்றாக விசாரித்து பணிக்
-
விளையாட்டு அரங்கு தீ விபத்து: தாமாக முன்வந்து வழக்கை விசாரிக்கிறது குஜராத் உயர் நீதிமன்றம் : பலி எண்ணிக்கை 33 ஆனதை அடுத்து நடவடிக்கை
26 May 2024அகமதாபாத் : குஜராத், ராஜ்கோட்டில் நடந்த விளையாட்டு அரங்கு தீ விபத்தில் பலி எண்ணிக்கை 33 ஆக உயர்ந்ததை அடுத்து தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்த குஜராத் உயர் நீதிமன்றம்
-
அடுத்த 4 நாட்களுக்கு தமிழகத்தில் வெப்பநிலை படிப்படியாக உயரக்கூடும் : சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
26 May 2024சென்னை : தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு வெப்பநிலை படிப்படியாக உயரக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
கன்னியாகுமரியில் தொடர் மழை: தாமிரபரணியில் வெள்ளப்பெருக்கு
26 May 2024கன்னியாகுமரி : கன்னியாகுமரியில் பெய்து வரும் தொடர் மழையால், தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
-
நான் ஒரு ஏலியன்தான்: நிகழ்ச்சி தொகுப்பாளரின் கேள்விக்கு பதிலளித்த எலான் மஸ்க்
26 May 2024பாரீஸ் : நிகழ்ச்சி தொகுப்பாளரின் கேள்விக்கு சிரித்துக்கொண்டே பதிலளித்த எலான் மஸ்க், நான் ஒரு ஏலியன்தான், ஆனால் யாரும் என்னை நம்பவில்லை என கூறினார்.
-
பறவைகள் மோதியதால் லடாக் சென்ற விமானம் டெல்லியில் அவசரமாக தரையிறக்கம்
26 May 2024புதுடெல்லி : பறவைகள் மோதியதால் டெல்லியில் இருந்து லடாக் புறப்பட்டு சென்ற விமானம் அவசர அவசரமாக டெல்லி விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது.
-
கேன்ஸ் விழாவில் உயரிய விருதை வென்ற முதல் இந்திய இயக்குனர்
26 May 2024பாரீஸ் : கேன்ஸ் திரைப்பட விழாவில் இரண்டாவது உயரிய விருதான கிரண்ட் பிரிக்ஸை இந்திய திரைப்படமான ஆல் வி இமேஜின் அஸ் லைட் படம் வென்றுள்ளது.
-
சூடானில் கலவரம்: 17 வீரர்கள் உட்பட 47 பேர் படுகொலை
26 May 2024கார்டூம் : சூடான் நாட்டில் ஏற்பட்ட திடீர் கலவரத்தில் 17 வீரர்கள் உட்பட 47 பேர் கொல்லப்பட்டனர்.
-
அரசு கலை கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கை: தரவரிசை பட்டியல் இன்று வெளியீடு : முதல்கட்ட கலந்தாய்வு நாளை தொடக்கம்
26 May 2024சென்னை : அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான தரவரிசை பட்டியல் இன்று வெளியாகிறது. முதல்கட்ட கலந்தாய்வு நாளை முதல் தொடங்குகிறது.
-
வாரணாசியில் அதிக பிரச்சாரம் செய்ய வேண்டிய அவசியமில்லை : மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் கருத்து
26 May 2024லக்னோ : வாரணாசி தொகுதியை பொறுத்தவரை அதிக பிரச்சாரம் மேற்கொள்ள வேண்டிய அவசியமில்லை என்று மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்தார்.