எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, செப். - 15 - பரமக்குடி சம்பவம் குறித்து நீதி விசாரணை அறிக்கை வந்தபிறகு தான் சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் ஜெயலலிதா கூறினார். தமிழக சட்டசபை நடவடிக்கை நேற்று காலை 10 மணிக்கு துவங்கியதும், சபாநாயகர் ஜெயக்குமார் திருக்குறள் வாசித்தார். திருக்குறள் வாசிப்பு நிகழ்ச்சி முடிந்ததும், தி.மு.க.வினர் சபாநாயகருக்கு வணக்கம் தெரிவித்துவிட்டு வெளிநடப்பு செய்தனர். தொடர்ந்து 5வது நாளாக இவர்கள் இப்படி வெளிநடப்பு செய்கின்றனர். அதன்பிறகு அரக்கோணத்தை அடுத்த சித்தேரியில் நடந்த ரயில் விபத்தில் பலியானவர்களின் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்தும், காயம் அடைந்தவர்கள் விரைவில் குணம் அடைய வேண்டும் என்றும் சபாநாயகர் ஜெயக்குமார் தீர்மானம் வாசித்தார். இரங்கல் தீர்மானம் முடிந்ததும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, புதிய தமிழகம், பா.ம.க. ஆகிய கட்சிகள் சார்பில் பரமக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து பேச அனுமதி கேட்டனர். சபாநாயகர் ஜெயக்குமார் இதற்கு அனுமதி வழங்கவில்லை. இதையடுத்து 4 கட்சிகளைச் சேர்ந்தவர்களும் சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, பா.ம.க., புதிய தமிழகம் கட்சிகளின் உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தபின்னர், செ.கு. தமிழரசன் (குடியரசு கட்சி) பேசினார். அவர் பேசும்போது, பரமக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தையடுத்து அங்கு அமைதி ஏற்படுவதற்கான அனைத்து நடவடிக்கையையும் முதல்வர் எடுத்து வருகிறார். இது குறித்து சபையில் விளக்கம் அளித்தால் நன்றாக இருக்கும் என்றார். இதையடுத்து முதல்வர் ஜெயலலிதா பேசியதாவது: பரமக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக டி.ஆர்.ஓ. விசாரணை நடத்த நான் உத்தரவிட்டு இருந்தேன். டி.ஆர்.ஓ. விசாரணை நடத்தியிருந்தால் இதற்குள் அறிக்கை வந்திருக்கும். அதன் அடிப்படையில் உடனே நடவடிக்கை எடுத்திருக்க முடியும். ஆனால் எதிர்க்கட்சிகள் தான் ஓய்வு பெற்ற ஐகோர்ட்டு nullநீதிபதி தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்கவேண்டும் என்று வற்புறுத்தினார்கள். விசாரணை கமிஷனுக்கு உத்தரவிட்ட பிறகு அவர்கள் அறிக்கை வந்த பிறகுதான் அதன் அடிப்படையில் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியும். அவர்கள் அளிக்கும் பரிந்துரைபடிதான் உதவித் தொகையும் அதிகரித்து கொடுக்கமுடியும். nullநீதி விசாரணை அறிவித்திருப்பதால் அதன் அறிக்கை வரும் வரை வேறு எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது. அறிக்கை வந்த பிறகு யார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமோ அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா கூறினார்.
முன்னதாக சட்டசபையில் இருந்து வெளி நடப்பு செய்ததற்க்கான காரணம் குறித்து சட்டசபைக்கு வெளியே சவுந்தரராஜன் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு) கூறியதாவது: பரமக்குடியில் அப்பாவி மக்கள் மீது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தி இருக்கிறார்கள். இதற்கு காரணமான போலீசார் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அவர்களை சஸ்பெண்டு செய்ய வேண்டும். தலித் மக்கள் ஆயிரம் பேரை வீடு வீடாக சென்று கைது செய்து அவர்கள் மீது பொய் வழக்கு போட்டிருக்கிறார்கள். உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு கூடுதல் நஷ்டஈடு வழங்கப்பட வேண்டும். இதையெல்லாம் முதல்வரின் கவனத்துக்கு கொண்டுவருவதற்காக சபையில் பேச அனுமதி கேட்டோம். சபாநாயகர் அனுமதி மறுத்துவிட்டார். எனவே நாங்கள் வெளி நடப்பு செய்துவிட்டோம்.
ஆறுமுகம் (இந்திய கம்யூனிஸ்டு) கூறியதாவது: பரமக்குடியில் 7 தலித்துகள் சுட்டுக்கொல்லப்பட்டு இருக்கிறார்கள். துப்பாக்கி சூடு நடத்திய போலீசாரை தற்காலிக பணி நீnullக்கம் செய்ய வேண்டும். மிருகம் தாக்கி இறந்தவர்கள் குடும்பத்துக்கு ரூ. 3 லட்சம் கொடுக்கிறார்கள். ஆனால் இங்கு மனித உயிர்கள் அநியாயமாக பழி வாங்கப்பட்டு உள்ளது. எனவே நஷ்டஈடு அதிகமாக கொடுக்க வேண்டும். இந்த சம்பவத்துக்கு காரணமான போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். போடப்பட்ட வழக்குகளை வாபஸ் பெற வேண்டும். சமாதான கமிட்டி அமைக்க வேண்டும். தென் மாவட்டங்களில் கலவரம் ஏற்படும் சூழ்நிலையை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த கருத்துக்களை பேச அனுமதிக்காததால் வெளிநடப்பு செய்தோம்.
புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ண சாமி கூறியதாவது: துப்பாக்கி சூட்டில் காயம் அடைந்த 17 பேரையும் மதுரையில் சந்தித்து ஆறுதல் கூறினேன். அவர்கள் நிலைமை பரிதாபமாக உள்ளது. அப்பாவி மக்கள் 1000 பேர் மீது வழக்கு போட்டு கைது செய்து இருக்கிறார்கள். 7 உயிர்கள் பறிக்கப்பட்டு உள்ளன. அவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ. 5 லட்சமாவது கொடுக்க வேண்டும். அமர்வு nullநீதிமன்ற nullநீதிபதி தலைமையில் விசாரணை நடத்த வேண்டும். சம்பந்தப்பட்ட டி.எஸ்.பி., எஸ்.பி. ஆகியோரை தற்காலிக பணி நீnullக்கம் செய்ய வேண்டும். இது தொடர்பாக போராட்டம் நடத்த திட்டமிட்டு உள்ளோம். பா.ம.க. எம்.எல்.ஏ. கலையரசனும் இதே காரணத் துக்காக வெளிநடப்பு செய்ததாக நிருபர்களிடம் கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்4 days 22 hours ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.3 weeks 3 days ago |
மூக்கில் நீர்வடிதலை குணமாக்கும் நிலவேம்பு கஷாயம்3 weeks 6 days ago |
-
ஆன்லைன் டிக்கெட் முன்பதிவுக்கு மேம்படுத்தப்பட்ட இணையதளம், மொபைல் செயலி தொடக்கம்
23 Sep 2024சென்னை : அரசு பேருந்துகளில் ஆன்லைன் டிக்கெட் முன்பதிவிற்காக மேம்படுத்தப்பட்ட இணையதளம் மற்றும் மொபைல் செயலியை அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார்.
-
பும்ராவுக்கு ஸ்மித் புகழாரம்
23 Sep 2024அனைத்து வடிவிலான போட்டிகளிலும் ஜஸ்பிரித் பும்ரா மிகச் சிறந்த பந்துவீச்சாளர் என ஆஸ்திரேலிய அணியின் ஸ்டீவ் தெரிவித்துள்ளார்.
-
குரூப்-2, 2ஏ தேர்வு தற்காலிக விடை குறியீடு வெளியீடு
23 Sep 2024சென்னை : டி.என்.பி.எஸ்.சி குரூப்-2, 2ஏ தேர்வு கடந்த 14-ந்தேதி தமிழகம் முழுவதும் நடைபெற்ற நிலையில் அதற்கான தற்காலிக விடைக்குறியீடு வெளியிடப்பட்டுள்ளது.
-
தமிழக மீனவர்களை விடுவிக்க முதல்வர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் : எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
23 Sep 2024சென்னை : மீனவர் பிரச்சனையை தீர்க்க மத்திய அரசின் உறுதியான நடவடிக்கையை தி.மு.க.
-
அதிகமுறை 5 விக்கெட்டுகள்: வார்னேவின் சாதனையை சமன் செய்தார் அஸ்வின்
23 Sep 2024சென்னை : ஒரு இன்னிங்சில் அதிகமுறை 5 விக்கெட்டுகளை வீழ்த்தி ஷேன் வார்னேவின் சாதனையை சமன் செய்துள்ளார் அஸ்வின்.
-
'நோ பார்க்கிங்' பலகைகளை அனுமதியின்றி வைக்க கூடாது : சென்னை காவல்துறை அறிவுறுத்தல்
23 Sep 2024சென்னை : நோ பார்க்கிங் பலகைகளை முன் அனுமதியின்றி வைக்க கூடாது என்று பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ள சென்னை காவல்துறை, பொதுமக்கள் தங்கள் வாகனங்களை சாலைகளில் சிரமத்தை ஏற்
-
டெஸ்ட் சாம்பியன்ஷிப் புதிய புள்ளிப்பட்டியல்: முதல் மூன்று இடங்களில் இந்தியா, ஆஸ்திரேலியா, இலங்கை
23 Sep 2024சென்னை : நியூசி.க்கு எதிராக இலங்கை வெற்றி பெற்றதன் மூலம் டெஸ்ட் சாம்பியன்ஷிப் புதிய புள்ளிப்பட்டியலில் இந்தியா, ஆஸ்திரேலியா, இலங்கை முதல் 3 இடங்களை பெற்றுள்ளது.
-
லட்டு விவகாரம்: தலைமை அர்ச்சகர் தலைமையில் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாந்தி யாகம்
23 Sep 2024திருப்பதி, திருப்பதி ஏழமலையான் கோவிலில் வழங்கப்படும் லட்டில் விலங்குகள் கொழுப்பு கலப்படம் செய்யப்பட்ட விவகாரத்தை அடுத்து கோவிலில் தலைமை அர்ச்சகர் தலைமையில் நேற்று சாந்த
-
சீதாராம் யெச்சூரி நினைவேந்தல் நிகழ்ச்சி: இந்தியாவின் கருத்தியல் அடையாளமாக விளங்கியவர் என முதல்வர் பெருமிதம்
23 Sep 2024சென்னை : நாட்டின் கருத்தியல் அடையாளமாக விளங்கியவர் சீதாராம் யெச்சூரி என்று மறைன்த சீதாராம் யெச்சூரிக்கு வீர வணக்கம் மற்றும் நினைவேந்தல் நிகழ்ச்சியில் அவருக்கு முதல்வர்
-
செஸ் ஒலிம்பியாட் தொடரில் சாம்பியன்: ரோகித் பாணியில் வெற்றியை கொண்டாடிய இந்திய அணி
23 Sep 2024புடாபெஸ்ட் : செஸ் ஒலிம்பியாட் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணி ரோகித் பாணியில் வெற்றியை கொண்டாடினர்.
-
மகாராஷ்டிராவில் பயங்கரம்: பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்ததில் 4 பேர் பலி
23 Sep 2024மும்பை, மகாராஷ்டிரா மாநிலம் அமராவதி அருகே பள்ளத்தாக்கில் பஸ் கவிழ்ந்த விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர். 40க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
-
அரியானா சட்டப்பேரவை தேர்தல்: மல்லிகார்ஜூன கார்கேவின் தேர்தல் பிரசாரம் திடீர் ரத்து
23 Sep 2024சண்டிகார் : அரியானா மாநிலத்தில் சட்டசபை தேர்தலை முன்னிட்டு பிரசாரம் மேற்கொள்ளவிருந்த காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவின் பிரசாரம் திடீரென ரத்து செய்யப்பட்டது.
-
மசோதாக்களை காரணமின்றி கவர்னர் நிறுத்தி வைக்கிறார் : சபாநாயகர் அப்பாவு குற்றச்சாட்டு
23 Sep 2024புதுடெல்லி : மசோதாக்களை காரணமின்றி கவர்னர் நிறுத்தி வைக்கிறார் என்று தெரிவித்த சபாநாயகர் அப்பாவு, மசோதாக்கள் முடங்குவதால் மக்களின் விருப்பத்தை நிறைவேற்ற முடியவில்
-
வயிற்றுக்குள் மறைத்து 124 போதை மாத்திரைகளை கடத்தி வந்த பிரேசிலை சேர்ந்த பெண் கைது
23 Sep 2024மும்பை : போதை பொருளை கடத்தி வந்த அந்த பெண் பிரேசிலை சேர்ந்தவர் என்று கூறப்படுகிறது.
-
சென்னை உயர் நீதிமன்றத்தில் 3 கூடுதல் நீதிபதிகள் பதவியேற்பு
23 Sep 2024சென்னை : சென்னை ஐகோர்ட்டில் புதிதாக நியமிக்கப்பட்ட 3 கூடுதல் நீதிபதிகள் பதவியேற்றுக் கொண்டனர்.
-
காஷ்மீர் மக்களின் ஜனநாயக உரிமை பறிக்கப்பட்டுள்ளது : பிரசாரத்தில் ராகுல் குற்றச்சாட்டு
23 Sep 2024காஷ்மீர் : ஜம்மு காஷ்மீரில் மக்களின் ஜனநாயக உரிமை பறிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் பிரசாரத்தில் ராகுல் காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார்.
-
குடும்பத் தலைவர்களுக்கு மாதம் ரூ.3,000: காஷ்மீரில் ராகுல் தேர்தல் வாக்குறுதி
23 Sep 2024ஜம்மு காஷ்மீர் : ஜம்மு காஷ்மீரில் காங்கிரஸ் வெற்றிபெற்றால் குடும்பத் தலைவர்களுக்கு மாதம் ரூ.3,000 உதவித் தொகை வழங்கப்படுமென ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.
-
உலக செஸ் சாம்பியன் போட்டி குறித்து நான் யோசிக்கவில்லை : கிராண்ட் மாஸ்டர் குகேஷ் பேட்டி
23 Sep 2024புடாபெஸ்ட் : உலக செஸ் சாம்பியன் போட்டி பற்றி நான் இப்போது யோசிக்கவில்லை என்று தெரிவித்துள்ள கிராண்ட் மாஸ்டர் குகேஷ் செஸ் ஒலிம்பியாட் தொடரில் தங்கம் வென்றது மகிழ்ச
-
8 இடங்களில் வெயில் சதம்
23 Sep 2024சென்னை : தமிழகத்தில் நேற்று 8 இடங்களில் வெயில் சதமடித்த நிலையில் அதிகபட்சமாக மதுரை விமான நிலையத்தில் 105 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலை பதிவானது.
-
அரியானா சட்டப்பேரவை தேர்தல்: மல்லிகார்ஜூன கார்கேவின் தேர்தல் பிரசாரம் திடீர் ரத்து
23 Sep 2024சண்டிகார் : அரியானா மாநிலத்தில் சட்டசபை தேர்தலை முன்னிட்டு பிரசாரம் மேற்கொள்ளவிருந்த காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவின் பிரசாரம் திடீரென ரத்து செய்யப்பட்டது.
-
மதுரை மருத்துவமனையில் மேற்கூரை இடிந்து விபத்து: அறிக்கை தாக்கல் செய்ய ஐகோர்ட் கிளை உத்தரவு
24 Sep 2024மதுரை : மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் மேற்கூரை இடிந்து விழுந்த விபத்து வழக்கு தொடர்பாக சுகாதாரத்துறை செயலர், மருத்துவக் கல்லூரி முதல்வர், பொறியாளர் அறிக்கை தா
-
முன்னாள் அதிபரின் ஹெலிகாப்டர் விபத்துக்கு பேஜர் வெடிப்பு காரணமா? ஈரான் எம்.பி. சந்தேகம்
24 Sep 2024டெக்ரான், ஈரான் முன்னாள் அதிபர் இப்ராகிம் ரெய்சி ஹெலிகாப்டர் விபத்துக்கு பேஜர் வெடிப்பும் காரணமாக இருக்கலாம் என்று ஈரான் எம்.பி.
-
கொளத்தூர் தொகுதியில் மக்கள் நலத்திட்டங்கள் : முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
24 Sep 2024சென்னை : கொளத்தூர் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் ரூ.4.76 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள பள்ளிக் கட்டிடம், புனரமைக்கப்பட்ட உடற்பயிற்சி கூடம் மற்றும் நீத்தார் நினைவு மண்டபம் ஆ
-
போப் ஆண்டவருக்கு உடல்நலக் குறைவு: பொதுமக்களுடனான சந்திப்பு ரத்து
24 Sep 2024வாடிகன் சிட்டி, உடல்நலக்குறைவு காரணமாக போப் ஆண்டவரின் திட்டமிடப்பட்ட பார்வையாளர்கள் சந்திப்பு ரத்து செய்யப்படுவதாக வாடிகன் சிட்டி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவி
-
ஸ்பேஸ் எக்ஸ் மூலம் செவ்வாய் கிரகத்துக்கு ஆளில்லா விண்கலன் அனுப்ப திட்டம்: எலான் மஸ்க் தகவல்
24 Sep 2024நியூயார்க், அடுத்த இரண்டு ஆண்டுகளில் செவ்வாய் கிரகத்துக்கு ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஐந்து ஸ்டார்ஷிப்களை அனுப்பும் திட்டம் இருப்பதாக எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.