முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

புதிய தொழில்நுட்பம்

மனித மூளையுடன் கம்ப்யூட்டர்களை இணைத்து செயற்கை நுண்ணறிவு வழிமுறைகளை மேம்படுத்த நியூராலின்க் எனும் புதிய நிறுவனத்தை ஸ்பேஸ் எக்ஸ், டெஸ்லா நிறுவனங்களின் சி.ஈ.ஒ எலான் மஸ்க் தொடங்கவுள்ளார். இதன்மூலம் மனிதர்களின் நினைவாற்றலை அதிகரித்து, கம்ப்யூட்டர் சாதனங்களுடன் நேரடியாக தொடர்பு கொள்ள செய்ய முடியுமாம்.

உலகில் மனிதன் பயன்படுத்துவது வெறும் 1 சதவீதம் நீரை மட்டுமே

உலகம் நீராலானது என்பதை நாம் அறிவோம். பூமியில் சுமார் 71 சதவீதம் நீர்பரப்பே உள்ளது. அவற்றில் 96.5 சதவீத பரப்பை கடல்கள் பகிர்ந்து கொள்கின்றன. பனிப்பாறைகள் 2 சதவீதத்தை பகிர்ந்து கொள்கின்றன. மீதமுள்ள ஆறு, குளம், குட்டை, அருவி, ஏரி ஆகியவற்றில் உள்ள நீரை மட்டுமே மனிதன் பயன்படுத்துகிறான். பூமியில் உள்ள பாதுகாப்பான நீரில் 1 சதவீதம் மனிதன் பயன்படுத்துகிறான்.

ஒரு ரூபாய் நோட்டில் இவ்வளவு விஷயங்கள் இருக்கா?

முதல் ஒரு ரூபாய் நோட்டு இங்கிலாந்தில் அச்சிடப்பட்டது. இந்த நோட்டு  நவம்பர் 30, 1917 அன்று இந்தியாவில் வெளியிடப்பட்டது. அப்போதைய பிரிட்டிஷ் மன்னரான ஐந்தாம் ஜார்ஜின் படம் அந்த ஒரு ரூபாய் நோட்டின் இடது மூலையில் அச்சிடப்பட்டிருந்தது. அதற்கு முன்னதாக 1861-ம் ஆண்டு முதலே இந்தியாவில் நாணயங்கள் வெளியிடப்பட்டன. இருந்த போதிலும், ஒரு ரூபாய் நோட்டு 1917-ம் ஆண்டில்தான் புழக்கத்தில் வந்தது. காரணம் ஒரு ரூபாய் நாணயத்தை தயாரிக்க பயன்படுத்திய வெள்ளி,  2 ஆம் உலகப் போரில் ஆயுதத் தயாரிப்பிற்காக உருக்கப்பட்டுவிட்டது. 1917-ம் ஆண்டில் வெளியிடப்பட்டபோது, ஒரு ரூபாயின் மதிப்பு 10.7 கிராம் வெள்ளிக்கு சமமாக இருந்தது. 10 கிராம் வெள்ளியின் தற்போதைய சந்தை மதிப்பு சுமார் ரூ.670. இந்த 100 ஆண்டுகளில் ஒரு ரூபாயின் மதிப்பு 600 மடங்கு குறைந்துள்ளது. பணத்தை சீராக அல்லது பரிசாக வழங்கும்போது, ஒரு ரூபாய் நோட்டு ஒன்றினைச் சேர்த்து 101/- ரூபாயாக மொய் எழுதும் பழக்கம் காலம் காலமாக நம்மிடையே இருந்துவருகிறது. எனவே ஒரு ரூபாயின் மதிப்பு இது போன்ற சந்தர்ப்பங்களில் மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது.

முதல் தலைமுறை கண்ணாடிகள் எதனால் செய்யப்பட்டவை தெரியுமா?

முதல் தலைமுறை கண்ணாடிகள் எதனால் செய்யப்பட்டவை தெரியுமா... முதலில் கலனில் நிரப்பிய நீரால் முகம் பார்த்த மனிதன் பின்னர் கிமு 6 ஆயிரம் வாக்கில் நன்றாக பளபளப்பூட்டப்பட்ட எரிமலை குழம்பு உறைந்த கற்களையே முகம் பார்க்கும் கண்ணாடியாக பயன்படுத்தி வந்தான். இது பயன்பாட்டுக்கு வந்ததும் நீர் கண்ணாடி விடை பெற்றது. கல் கண்ணாடி ஆட்சி புரிந்தது. அதன் பின்னர் மெசபடோமியா பகுதிகளில் பாலீஸ் செய்யப்பட்ட செப்பு தகடுகள் கண்ணாடிகளாக பயன்படுத்திய ஆதாரங்கள் கிடைத்துள்ளன.

கூகுள் எர்த்தில் நெட்டிசனிடம் சிக்கிய சுமார் 425 அடி நீளமுள்ள பாம்பு எலும்பு கூடு

நமது புராணங்களில் ஆதிசேஷன், காளிங்கன், வாசுகி என ஏராளமான பாம்புகளை பற்றிய குறிப்புகள் உள்ளன. இவை உருவத்திலும், அளவிலும் மிகவும் பிரமாண்டமானவை. அதே போல அறிவியலிலும் அழிந்து போன உயிரினங்கள் பட்டியலில் சுமார் 40 அடிக்கும் மேலான நீளமுள்ள டைட்டானோவா வகை பாம்புகள் பற்றி குறிப்பிடப்படுகின்றன. இந்நிலையில் அண்மையில் நெட்டிசன் ஒருவர் கூகுள் எர்த் வழியாக பார்த்த போது பிரான்ஸ் நாட்டின் கடற்கரை ஒன்றில் சுமார் 400 அடி நீளமுள்ள பாம்பு எலும்புக்கூடு கிடப்பதாக பதிவிட்டிருந்தார். இது டைட்டானோவாவா என நெட்டிசன்கள் அதிகமாக  பகிர்ந்து விவாதித்தனர். இறுதியில் பிரான்சில் கடந்த 2012 ஆம் ஆண்டு நடைபெற்ற Estuaire ஓவிய கண்காட்சிக்காக சீனாவை சேர்ந்த ஓவியர் ஹூவாங் யோங் பிங் என்பவர் 425 அடி நீளத்தில் உருவாக்கி கடற்கரையில் அமைத்திருந்த பாம்பு எலும்புக்கூடு சிலைதான் என்பது உறுதி செய்யப்பட்டது.

காஸ்ட்ரோ அறியாதது

பிடல் காஸ்ட்ரோ ஹவானா பல்கலைக்கழகத்தில் சட்டம் படித்து கொண்டிருக்கும் போது தான் அரசியல் ஆர்வலராக மாறினார். இவருக்கு, சுருட்டு பிடிப்பது மிகவும் பிடித்தமான விஷயமாக இருந்தது. ஆனால், ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டு 1985-ல்இருந்து சுருட்டு பிடிப்பதை நிறுத்தினார் . இவர் கியூபாவை, 49 ஆண்டுகள் ஆட்சி செய்துள்ளார். இது பத்து அமெரிக்க அதிபரின் ஆட்சி கால வருடங்கள் ஆகும். ஈட்டி கொண்டு மீன் பிடிப்பது, சமையல் செய்வது மற்றும் புத்தகம் வாசிப்பது போன்றவை பாலிய வயது பிடல் காஸ்ட்ரோவுக்கு பிடித்த விஷயங்களாக இருந்தன. கியூபாவின் பிரதமராக 1959 - 1976 வரையும்., 1976 முதல் 2008 வரை ஜனாதிபதியாகவும் பொறுப்பு வகித்தார் பிடல் காஸ்ட்ரோ.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago