Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

தூக்கம் வர

தூக்கம் வராமல் தவிப்பவர்களுக்கு இதோ ஒரு டிப்ஸ். உறங்குவதற்கு முன்பு ஒரு வாழைப்பழமும், வெதுவெதுப்பான பாலும் சாப்பிடுவது நல்ல உறக்கத்தை தரும், காரணம் உறக்கதிற்கான ஹார்மோன் மெலடோனின் மூலம் சிறந்து செயல்படுகிறது. மேலும், பாலில் இருக்கும் டிரிப்டோபென் ஆழ்ந்த உறக்கத்தை நமக்கு தருகிறது.

5000, 1000 ரூபாய் நோட்டுகள்

பிரதமர் மோடி அறிவித்த 500, 1000 ரூபாய் தாள்கள் முடக்கப்பட்ட அறிவிப்பிற்கு பிறகு இதை அறிந்துக் கொள்ள வேண்டியது மிக மிக அவசியம். 2,000 ரூபாய்க்கே வியக்கும் நபர்களுக்கு இந்தியா 5,000 , 10,000 தாள்களையும் வெளியிட்டது பற்றி தெரியுமா? 1954 - 1978 ஆண்டுகளுக்கு மத்தியில் இந்திய அரசு 5,000 மற்றும் 10,000 ரூபாய் தாள்களை வெளியிட்டது. பிறகு இது நிறுத்தப்பட்டது.

வேடிக்கை பெண்

அமெரிக்காவின் காலிபோர்னியா மாகாணத்தைச் சேர்ந்தவர் கரோல் சான்டே பி, தனது வீட்டிற்கு அருகில் உள்ள சாண்டா ஃபே ரயில் நிலையத்தின் மீது 2011 முதல் காதல் வயபட்டார். ’கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து 2015-ம் ஆண்டு கிறிஸ்துமஸ் தினத்தன்று அந்த ரயில்வே ஸ்டேஷனை திருமணம் செய்து கொண்டேன்’ என்று  கரோல் தற்போது கூறியுள்ளது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

சிறிய பாடலை ஆட்களின் பெயராக கொண்ட அதிசய கிராமம் தெரியுமா?

மனிதர்களுக்கு பெயரிடுவதுதான் உலகம் முழுவதும் உள்ள மனித இனத்தின் கலாச்சார அடையாளமாக இன்றைக்கும் திகழ்ந்து வருகிறது. ஒருவரது பெயரை வைத்தே நாடு மொழி தேசம் இனம் கலாச்சாரம் பண்பாடு, வரலாறு உள்ளிட்ட பல்வேறு மனித குல அடையாளங்களையும் கண்டறிந்து விட முடியும். ஒவ்வொரு கலாச்சாரத்துக்கும் என தனித்த பெயரிடல் முறைகளும், பெயர்களும் உள்ளன. அவ்வாறு பெயர் சூட்டுவதற்கென தனி சடங்குகளும், பழக்க வழக்கங்களும் உள்ளன. ஒரு சிறிய சுட்டு விளிப்பாக பெயரிடுவதுதான் பொதுவாக உலக வழக்கு. ஆனால் ஒரு சிறிய பாடலை ஹம்மிங் செய்வது போல பெயரிடும் விசித்திர கிராமம் உள்ளது என்பது தெரியுமா.. அதுவும் அந்த கிராமம் உலகில் வேறு எங்கோ அல்ல.. இந்தியாவில் உள்ள மேகாலயாவில் தான் உள்ளது. காங்தோங் என்றழைக்கப்படும் அழகிய மலைக்கிராமத்தில்தான் ஓவ்வொருவர் பெயரும் அழகிய சிறிய பாடலைப் போன்ற ஹம்மிங்கை கொண்டது. நாலைந்து பேர் சேர்ந்து ஒருவர் பெயரை மற்றொருவர் தொடர்ச்சியாக சொல்லக் கேட்டால் நாம் நிஜமாகவே ஒரு பாடலைத் தான் கேட்கிறோமோ என்ற ஆச்சரியம் ஏற்படும். மேலும் உலகிலேயே சுற்றுலா செல்வதற்கு ஏற்ற தூய்மையான மலைக் கிராமம் என்ற ஐநாவின் பட்டியலிலும் இந்த இந்த ஊர் இடம் பெற்றுள்ளது கூடுதல் சிறப்பு. தாளாதா ஆச்சரியம் தானே..

இரட்டையர்கள் பிறப்பது அரிதல்ல

நம்மில் பெரும்பாலோனோர் நினைத்து கொண்டிருப்பது போல இரட்டையர்களாக பிறப்பது அரிதான ஒன்று அல்ல. மாறாக அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் பல்வேறு ருசிகர தகவல்கள் கிடைத்துள்ளன. குறிப்பாக இரட்டையர்கள் குறித்து 1915 முதல் ஆவணப்படுத்தப்பட்ட  ஆவணங்களின் மூலம், 1980 வரையிலான கால கட்டத்தில் பிறக்கும் குழந்தைகளில் 50 பேருக்கு ஒருவர் சாரி இருவர் இரட்டையர்களாக பிறக்கின்றனர்.  அதாவது கிட்டத்தட்ட 2 சதவீதம் பேர் இரட்டை குழந்தைகளாக பிறக்கின்றனர். 95க்கு பிறகு அதன் பிறப்பு விகிதம் 2.5 சதவீதமாக அதிகரித்துள்ளது. 2001 இல் 3 சதவீதம், 2010 இல் 3.3 சதவீதம் அதாவது பிறக்கும் 30 குழந்தைகளில் இருவர் இரட்டையர்கள் என்பதே அந்த ஆய்வு தெரிவிக்கும் சுவாரசிய தகவல்.

பருக்கள் மறைய...

முதலில் ஒரு பௌலில் கடலை மாவை எடுத்து, பின் 2 ஸ்பூன் கிளிசரின் சேர்த்து கலந்து, அதில் 2 ஸ்பூன் கற்பூர எண்ணெய், ரோஸ் வாட்டர் சேர்த்து, நன்கு பேஸ்ட் செய்து கொண்டு ஃபேஸ் மாஸ்க் தயார்  செய்து முகத்தில் தடவி, 15 நிமிடம் கழித்து, குளிர்ந்த நீரில் கழுவி வந்தால் பருக்கள் இருந்த இடம் தெரியாமல் போகும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago