நாம் மிக ஆழமாக மூச்சை இழுக்கும்போது ஆக்சிஜன், உடலில் உள்ள அனைத்து திசுக்களுக்கும் அதிக அளவில் கிடைக்கிறது. இது திசுக்களின் செயல்பாட்டை விரைவுபடுத்தி நச்சுக்களை அப்புறப்படுத்துகிறது. வயிறு உள்ளே போவதால், வயிற்றுப் பகுதி தசைகள் சுருங்கும். இந்தத் தசைப் பயிற்சியை, தினமும் தொடர்ந்து செய்யும்போது, இவை இரண்டும் சேர்ந்து உடலின் எடையைக் குறைத்துவிடும்,
சில சுவாரிஸ்யமான தகவல்கள்
இந்தியாவின் ஏழு அதிசயங்களுள் ஒன்றாகக் கருதப்படும் செட்டிநாடு அரண்மனை காரைக்குடியில் அமைந்துள்ளது. அண்ணாமலைச் செட்டியார் இந்த அரண்மனையை வடிவமைத்து, 1912-ம் ஆண்டில் கட்டி முடிக்கச் செய்தார். கிழக்காசிய நாடுகள் மற்றும் ஐரோப்பா ஆகிய நாடுகளிலிருந்து அலங்கார விளக்குகள், தேக்கு மர சாமான்கள், பளிங்குக் கல், கண்ணாடிகள், கம்பளங்கள், மற்றும் ஸ்படிகங்களும் இறக்குமதி செய்யப்பட்டு செட்டிநாடு அரண்மனை கட்டப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் உள்ள பல்வேறு இனக்குழுக்களிடமும் விதவிதமான சடங்கு சம்பிரதாயங்கள் காணப்படுகின்றன. அதில் மடகாஸ்கரில் உள்ள மலகாசி பழங்குடியினர் ஃபமதிஹானா என்ற ஒரு வித்தியாசமான இறுதிச்சடங்கு பழக்கவழக்கத்தை வைத்திருக்கிறார்கள். இவர்கள் அடக்கம் செய்யப்பட்ட தங்களுடைய மூதாதையர்களை 7 ஆண்டுகளுக்கு ஒருமுறை கல்லறையிலிருந்து வெளியே எடுப்பார்கள். அவர்கள் உடலில் இருக்கக்கூடிய பழைய துணிகளை அகற்றிவிட்டு மீண்டும் புதிய துணியை போர்த்தி தலைக்கு மேலே வைத்து கல்லறையை சுற்றி நடனம் ஆடுகிறார்கள். இறந்தவர்களை போர்த்திய புதிய துணியில் அவர்களுடைய பெயரை எழுதுகிறார்கள். இதற்கு காரணம் அந்த பெயர் எப்பொழுதும் அவர்களுடைய நினைவில் இருக்க வேண்டும் என்பதற்காகவாம். இறந்தவர்களுடைய ஆவியானது மூதாதையர்களின் உலகில் இணைகிறது என்ற நம்பிக்கையின் அடிப்படையில் இந்த வழக்கத்தை அவர்கள் வைத்துள்ளார்கள். இது ஒவ்வொரு ஐந்து முதல் ஏழு வருடங்களுக்கு ஒருமுறை நடைபெறுகிறதாம். கேட்கவே வித்தியாசமாக இருக்கிறது அல்லவா..
பேஸ்புக் போலவே ஒரு பிரபலமான சமூக ஊடகம் ட்விட்டர். இது 2006 ஆம் ஆண்டு மார்ச் 21-ம் தேதி நிறுவப்பட்டது. ட்விட்டர் அமெரிக்காவின் கலிபோர்னியாவை தலைமை இடமாக கொண்டு உள்ளது. கடந்த மார்ச் மாதம் கணக்குப்படி 310 மில்லியன் பயனாளர்களை ட்விட்டர் கொண்டுள்ளது.ட்விட்டர் லோகோவில் இருக்கும் பறவை லாரி (Larry) எனும் பறவையாகும். ட்விட்டர் பயன்படுத்தும் நபர்களில் 1.2 லட்சம் பேர் 123456 என்பதை தான் பாஸ்வேர்டாக வைத்துள்ளனர். ஒரு நாள் ட்விட்டரில் பதிவு செய்யப்படும் பதிவுகளை புத்தகமாக வெளியிட்டால் 10 மில்லியன் பக்கங்கள் கொண்ட புத்தகத்தை வெளியிட வேண்டியிருக்குமாம். ட்விட்டரில் அக்கவுன்ட் வைத்திருக்கும் 44% பேர் இதுவரை ஒரு ட்வீட் கூட செய்ததில்லை. இன்டர்நெட் பயன்படுத்தும் 90 சதவிகிதம் பேர் ட்விட்டரை பயன்படுத்துவது இல்லை
வேற்று கிரகங்களில் மக்கள் வாழ்கின்றனரா என்பதை அறிய ’நாசா’ மையம் ஆய்வு மேற்கொண்டுள்ளது. கெப்லர் விண்வெளி தொலைநோக்கி மூலம் சூரிய மண்டலத்திற்கு வெளியே வாழக்கூடிய உயிரினங்கள் கூறித்து அது ஆய்வு நடத்தி வருகிறது. இதுவரை வேற்றுகிரகவாசிகள் பூமியை ஏன் தொடர்பு கொள்ளவில்லை என்பதை தற்போது விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இதற்கு மனித இனம் இன்னும் முன்னேறாமல் இருப்பதே காரணமாம். அதாவது, இந்த பிரபஞ்சத்தில் பூமியில் உள்ள மனித இனம் மிக இளமையானதாக இருக்கிறதாம். ஒரு நாகரிகத்தின் தொடக்கம் குறைந்த பட்சம் 10 லட்சம் ஆண்டுகளாக இருக்க வேண்டும். அதாவது நாம் இன்னமும் ஒப்பிட்டளவில் சிம்பன்சிகளை போலவே தெரியலாம் என் ஆய்வாளர்கள் கருதிகின்றனர்.
எந்த உயிரினமாக இருந்தாலும் அதன் உடல் இயங்குவதற்கு மூளையும் இதயமும் மிகவும் அடிப்படையானவையாகும். இவற்றில் எது பாதிக்கப்பட்டாலும் உடல் இயங்க இயலாது. ஆனால் ஒரே ஒரு உயிரினம் மட்டும் தலை இல்லாமல் சுமார் 1 வாரம் காலம் வரை உயிர் வாழும் என்பது ஆச்சரியம் தானே. அது வேறெதுவும் இல்லை. நாம் நம் சமையலறைகளில் பார்க்கும் கரப்பான்கள் தான் அவை. இதற்கு காரணம், அவை சுவாசிப்பதற்கு வாயையோ, மூளையையோ சார்ந்திருக்கவில்லை. அதன் உடல் முழுவதும் உள்ள துளைகள் வாயிலாகவே சுவாசிக்கிறது. அதே நேரத்தில் வாய் இல்லாவிட்டால் கரப்பான் இறந்து விடும். ஏனெனில் உணவு, தண்ணீர் இல்லாமல் எந்த ஜீவனாலும் உயிர் வாழ முடியாது தானே.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 4 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 4 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 5 months ago |


