முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

சந்திரனிலும் நிலநடுக்கம் ஏற்படும் என்பது உங்களுக்கு தெரியுமா?

சந்திரனிலும் நிலநடுக்கம் ஏற்படுகிறது என்பது உங்களுக்கு தெரியுமா? நம்முடைய பூமியில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படும் நமக்கு தெரியும். இதனால் அடிக்கடி ஏராளமான உயிரிழப்புகள் ஏற்படும். நம்முடைய பூமியைப் போலவே சந்திரனிலும் நிலநடுக்கங்கள் ஏற்படுகிறது. 1969 மற்றும் 1972 ஆம் ஆண்டுகளுக்கு இடையில் சந்திரனில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் அப்பல்லோ விண்வெளி வீரர்கள் அவர்கள் ஆய்வு செய்யும் இடங்களை சுற்றி நில அதிர்வு அளவீடுகளை நிறுவினார்கள். இந்த ஆய்வில் சந்திரனில் நிலநடுக்கம் இருபதிலிருந்து முப்பது கிலோ மீட்டர் தூரத்திற்குள் ரிக்டர் அளவில் 5.5 வரை பதிவானது. சந்திரனில் 700 கிலோ மீட்டர் வரைக்கும் ஆழத்தில் நிலநடுக்கங்கள் ஏற்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கற்கால ஓவியங்கள் கண்டெடுப்பு

விழுப்புரம் - திருவண்ணாமலை மாவட்ட எல்லையை ஒட்டியுள்ள பாக்கம் மலைத்தொடர் ஒட்டிய பகுதிகளில் கள ஆய்வு மேற்கொண்ட பொழுது செத்தவரை மலையில் ஆவணம் செய்யப்படாத புதிய பாறை ஓவியங்களைக் கண்டறிந்துள்ளனர்.செத்தவரை ஊரின் தெற்கு மூலையில் செத்தவரை மலைகள் தொடங்கும் இடத்தில் கும்பசுனை என்ற இடத்தில் உள்ள பெரிய பாறையில் இரண்டு இடங்களில் செஞ்சாந்து ஓவியங்கள் மற்றும் இதனருகே உள்ள பாறையில் வெண்சாந்து ஓவியமும் இருப்பது கண்டறியப்பட்டது. ஓவியத்தில் மான் ஒன்றும் அதன் அருகே யானை போன்ற ஒரு உருவம் காணப்படுகிறது. மற்றொரு முனையில் உள்ள செஞ்சாந்து ஓவியத்தில் இரு மனிதர்கள் மட்டும் உள்ளனர். மேலும் அருகில் உள்ள மற்றொரு குன்றிலும் ஓவியங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இவையாவும் புதிய கற்காலத்தைச் சேர்ந்த ஓவியங்களாகக் கருதலாம். இதன் காலம் சுமார் 5000 வருடங்களுக்கு மேல் பழமையானதாக இருக்கலாம் என்ற கருத்தும் நிலவி வருகிறது.

‘ஃபேஸ் ஆப்’

தற்போது ஃபேஸ்புக்கில் வைரலாக பரவி வரும் விஷயம் ‘ஃபேஸ் ஆப்’. இந்த ’ஃபேஸ் ஆப்’ என்னும் அப்ளிகேஷனின் மூலம் ஆண் முகத்தைப் பெண் முகமாகவும் பெண் முகத்தை ஆண் முகமாகவும் மாற்றலாம். நீங்கள் வயதானால் எப்படி இருப்பீர்கள் என்றும் மாற்றிப்பார்க்கலாம். இளைஞராக இருக்கும் உங்கள் முகத்தைக் குழந்தை முகமாகவும் மாற்றிப் பார்க்கலாம்.

3Dபிரிண்டர் மூலம் எருது இறைச்சி ஜப்பானிய விஞ்ஞானிகள் அசத்தல்

இன்றைக்கு வெகு வேகமாக வளர்ந்து வரும் துறைகளில் 3D பிரிண்டர் துறையும் ஒன்று. ஒரு பொருளை தொழில் நுட்பத்தின் உதவியுடன் அப்படியே ஒட்டு மொத்தமாக உருவாக்க உதவும் கருவியை 3டி பிரிண்டர் என்று சுருக்கமாக சொல்லலாம். இந்த 3டி பிரிண்டர் மூலம் பல்வேறு வளர்ச்சிகள் ஏற்பட்டு வரும் வேளையில் முக்கியமாக ஜப்பானைச் சோ்ந்த ஒசாகா பல்கலைக் கழக விஞ்ஞானிகள் செயற்கையாக எருது இறைச்சியை உருவாக்கி அசத்தியுள்ளனர். செயற்கை ரத்தம், தசை, திசு, போன்ற சிக்கலான அமைப்புடன் கூடிய இந்த இறைச்சி உருவாக்கம் ஒரு முன்னோடி கண்டுபிடிப்பாக நிகழ்ந்துள்ளது. Wagyu cows என்று அழைக்கப்படும் பசுமாடுகளின் ஸ்டெம் செல்லிலிருந்து இது போன்ற செயற்கை இறைச்சியை அவர்கள் உருவாக்கியுள்ளனர். இந்த செயற்கை இறைச்சி 5 மீமி அகலம் 10 மிமீ நீளம் கொண்டதாக உள்ளது. இதில் 72 பைபர்களை இணைத்து 42 திசுக்களாக உருமாற்றி, மேலும் 28 கொழுப்பு கொண்ட திசுக்களையும், 2 ரத்த தமனிகளையும் உருவாக்கியுள்ளனர். இவை அப்படியே இயற்கை இறைச்சியை போலவே காட்சியளிக்கின்றன. இது குறித்து இக்குழுவின் தலைவர் டாங் ஹீ கங் கூறுகையில், வாக்யூ மாட்டிறைச்சியின் திசுக்களின் கூட்டமைப்பை வரைபடமாகக் கொண்டு தசைநார்கள், கொழுப்பு மற்றும் ரத்த நாளங்கள் கொண்ட சிக்கலான வடிவமைப்பை 3டி பிரிண்டரை கொண்டு உருவாக்கியுள்ளோம் என்றார். இவ்வகை மாட்டிறைச்சிக்கு உலக சந்தையில் உணவு பிரியர்களிடம் ஏக கிராக்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தூக்கம் கெடும்

தீவிரமான எடை பயிற்சியை மேற்கொள்ளும் போது, உடல் மிகவும் விறுவிறுப்பாக இருக்கும். ஆனால் அதே சமயம் உடல் மற்றும் மனம் அதிகப்படியான எடையைத் தூக்கியதால், இரவில் தூங்குவதில் பிரச்சனையை சந்திக்க நேரிடும். மேலும் மனநிலையில் ஏற்றஇறக்கங்கள் ஏற்படும். மொத்தத்தில் ஒட்டுமொத்த உடலின் செயல்பாடும் பாதிக்கப்படும்.

களிமண் அணை

கரிகாலன் காவிரியை வென்றவன், இமயத்தில் கொடி நட்டுவந்தவன் என்னும் பெருமைக்குரியவன். சோழ வம்சத்தின் ஆட்சிப் பகுதிகளை விரிவுபடுத்தியவன் இப்படி பல்வேறு சிறப்புக்களை கொண்டவன் கரிகாலன். அடிக்கடி வெள்ளத்தால் மக்கள் அவதிப்படுவதால் அதற்கு ஒரு வழி கண்டுபிடித்தனர் சோழர்கள். காவிரி ஆற்றின் மீது பெரிய பாறைகளைக் கொண்டுவந்து போட்டனர். அந்தப் பாறைகளும் நீர் அரிப்பின் காரணமாக கொஞ்சம் கொஞ்சமாக மண்ணுக்குள் சென்றன. பாறைகளுக்கு மேல் வேறொரு பாறையை வைத்து நடுவே தண்ணீரில் கரையாத ஒருவித ஒட்டும் களி மண்ணைப் புதிய பாறைகளில் பூசி இரண்டயும் ஒட்டிக்கொள்ளும் விதமாகச் செய்தனர். இதுவே இவ்வணையினைக் கட்டப் பயன்படுத்தப்பட்ட தொழில்நுட்பமாகும். பல வல்லுநர்கள் வந்து சோதித்து பார்த்தும் இன்னும் இதற்கு விடை கண்டுபிடிக்க முடியவில்லை.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago