Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

புதுமையான உணவு

பின்லாந்தில் உள்ள வி.டி.டி. தொழில் நுட்ப ஆராய்ச்சி மையம், லபீர்னந்தா தொழில் நுட்ப பல்கலைக்கழக விஞ்ஞானிகள், காற்றில் இருந்து கார்பன்டை ஆக்சைடை பிரித்து எடுத்து அதிலிருந்து புரோடீன் பவுடர் தயாரித்துள்ளனர். இதை மனிதர்கள்,  விலங்குகள் உணவு பொருளாக பயன்படுத்த முடியுமாம். இந்த புரோடீன் பவுடரை மின்சாரத்துடன் சேர்த்து எங்கு பயன்படுத்தினாலும் அது உணவுப் பொருளாக கார்பன்டை ஆக்சைடு மற்றும் மின்சாரத்துடன் சேர்ந்து தயாரிக்கப்படும் புரோடீன் பவுடர் 10 மடங்கு அதிக ஒளிச்சேர்க்கையை ஏற்படுத்தி காய்கள் மற்றும் பழங்கள் உள்ளிட்ட உணவு பயிர்களின் மகசூலை அதிகரிக்கும் என விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

உலகை முதன்முதலாக கப்பலில் சுற்றி வந்த பயணி

பெர்டினல் மெக்கலன் என்ற ஸ்பெயின் நாட்டு மாலுமி 1519 இல் 5 கப்பல்களுடன் இந்தியாவை தேடி புறப்பட்டார். அவர் தென் அமெரிக்கா வந்து அங்கிருந்து மேற்கொண்டு செல்லும் வழியை தேடினார். அவர் வந்த கடற்பாதைதான் மெக்கல்லன் நீரிணை என்று அறியப்படுகிறது. பசிபிக் பெருங்கடல் வழியாக 99 நாட்கள் பயணம் செய்து குவாம் என்ற தீவை அடைந்தார். பின்னர் அங்கிருந்து பிலிப்பைன்ஸ் வந்தனர். அங்கு ஏற்பட்ட உள்நாட்டுகாரர்களுடனான சண்டையில் மெக்கல்லன் கொல்லப்பட்டார். மிஞ்சியவர்கள் பயணத்தை தொடர்ந்தனர். 1522 ஆம் ஆண்டு 3 வருட  பயணத்துக்கு பிறகு அவர்கள் மீண்டும் ஸ்பெயின் வந்தடைந்தனர். இந்த பயணம்தான் உலகை சுற்றி வந்த முதல் கப்பல் பயணம் என அறியப்படுகிறது. 

படிப்புக்கு செலவு

உலகம் முழுவதிலும் பெற்றோர் தங்களது பிள்ளைகளின் படிப்புகாக எவ்வளவு செலவிடுகிறார்கள் என்பது குறித்து இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட 15 நாடுகளை சேர்ந்த 8 ஆயிரத்து 481 பெற்றோரிடம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் இந்தியாவுக்கு 13-வது இடமும், இவர்கள் ஒரு குழந்தையின் படிப்புக்காக தொடக்க கல்வி முதல் இளநிலை பட்டப்படிப்பு வரை சுமார் ரூ.12 லட்சத்து 35 செலவிடுகிறார்கள் என்பது தெரியவந்துள்ளது.

சயின்ஸ் பிக்சன் பாணியில் 2 நகரங்களை இணைக்கும் ரியல் டைம் வீடியோ போர்ட்டல்

சயின்ஸ் பிக்சன் எனப்படும் அறிவியல் புனைகதைகள் அல்லது அறிவியல் புனைவு படங்கள் என்பவை அறிவியலின் மாயாஜாலத்தை காட்டுவது போல சித்தரிக்கும். ஓரிடத்தில் நடப்பதை நிகழ்காலத்திலும் எதிர்காலத்திலும் தெரிந்து கொள்வது போன்ற விதவிதமான டிவைஸ்களை காண்பிப்பார்கள்.இது போன்ற கருவிகள் ரியல் வாழ்க்கையில் இருந்தால் எப்படி இருக்கும் என்பது பொது மக்களுக்கு ஒரு கனவாகவே இருந்து வருகிறது. தற்போது அதை நனவாக்கும் வகையில், இதற்கு ஓர் உதாரணமாக போலந்து லிதுவேனியா நாடுகளுக்கு இடையே மக்கள் சம காலத்தில் தொடர்பு கொள்ளும் வகையில் மிகவும் பிரம்மாண்டமான ஒரு ரியல் டைம் வீடியோ போர்ட்டல் நிறுவப்பட்டுள்ளது. லிதுவேனியாவில் உள்ள விலினியஸ் மற்றும் போலந்து நாட்டில் உள்ள லுப்ளின் நகர மக்கள் ரியல் டைம்மில் நேரடியாக சந்தித்துக் கொள்ள வசதி செய்யும் வகையில் இந்த மிகப் பெரிய வீடியோ போர்ட்டல் அமைக்கப்பட்டுள்ளது.இங்கிருந்து ஒருவர் அதன் மூலம் மற்ற நகரத்திலிருக்கும் நபரை ஒரே நேரத்தில் தொடர்பு கொள்ள முடியும். ஏறக்குறைய சயின்ஸ் பிக்சன், மாயாஜால படங்களில் வருவதைப் போல மிகவும் ஆச்சரியப்படத்தக்க வகையில் இந்த அமைப்பு நிறுவப்பட்டு உள்ளது. Benediktas Gylys Foundation என்ற அறக்கட்டளையின் உதவியுடன் இந்த போர்ட்டல் நிறுவப்பட்டுள்ளதாக அதன் தலைவர் Benediktas Gylys தெரிவித்தார்.  மேலும் இந்த போர்ட்டல் மூலம் மக்களிடையே ஒற்றுமை, நல்லுறவு போன்றவை வளர்ந்து கடந்த கால கசப்புகள் மறைய உதவும் என்றார்.அதே போல பெருந்தொற்று காலத்தில் நம்மிடம் அறுந்து போன உறவுகளின் பாலங்களை மீண்டும் இணைக்க இந்த போர்ட்டல் உதவுவதுடன் சர்வதேச அளவிலான நாடுகளுடன் ஒத்துழைப்பு, நல்லுறவு, அண்டை நாடுகளுடன் நட்புறவு போன்றவை மேம்படும் என போலந்து அமைச்சர்Krzysztof Stanowski தெரிவித்தார்.ஹாரி பாட்டர் பாணியிலான இந்த அமைப்பானது  தலா சுமார் 11 டன் எடை கொண்டதாகும். இதன் பராமரிப்பு பகுதியளவில் லிதுவேனியன் மற்றும் போலந்து உள்ளாட்சிகளின் நிதியிலிருந்து மேற்கொள்ளப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் Reykjavik மற்றும் London போன்ற நகரங்களையும் இணைக்க திட்டமிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

வாலிபரின் அசூர வளர்ச்சி

ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தை சேர்ந்த சண்முகராவ் என்ற 24 வயது வாலிபர் சிறுவயது முதலே உயரமாக வளரத் தொடங்கினார். இதனால் அவரது வளர்ச்சி தொடர்பாக பெற்றோருக்கு சந்தேகம் ஏற்பட்டது. நீங்கள் உயரமாக இருப்பதால் மகனும் உயரமாக வளரலாம் என்று அக்கம் பக்கத்தினர் கூறினர். இப்போது 24 வயதான நிலையில் சண்முகராவ் 8 அடி 3 அங்குலம் வளர்ந்து விட்டார். அவர் தொடர்ந்து வளர்ந்து கொண்டே போகிறார். இதனால் அவரது பெற்றோர் கவலை அடைந்துள்ளனர். சண்முகராவ் 10-ம் வகுப்பு மட்டுமே படித்துள்ளார். பள்ளியில் அவரை எல்லோரும் ஏணி என்று கேலி செய்தனர். இதனால் அவர் படிப்பை நிறுத்திக் கொண்டார்.

விவிஐபி மரம்

மத்தியப் பிரதேச மாநிலம் சாஞ்சி புத்தர் காம்ப்ளக்சுக்கு அருகில் அமைந்துள்ள இந்தியாவின் விவிஐபி மரம் என கருதப்படும் அரசமரம் ஒன்று உள்ளது. இந்த புகழ்பெற்ற மரத்தை பேணிக் காக்க ஆண்டுதோறும் 12 லட்சம் ரூபாய் செலவு செய்கிறது  அந்த மாநில அரசு.இந்த மரத்தை சுற்றி பாதுகாப்பு வளையங்களும், 4 காவலர்களும் பாதுகாப்பு பணியி்ல் எப்போதும் ஈடுபட்டுள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago