எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
![Image Unavailable](/sites/all/themes/thinaboomi/images/photos/image-30.jpg)
சென்னை, டிச.- 26 - தமிழக முதல்வர் ஜெயலலிதா கிறிஸ்துமஸ் விழாவில் அறிவித்தபடி, கிறிஸ்துவர்கள் ஜெருசலேம் செல்ல நிதி உதவிக்கு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. முதற்கட்டமாக 500 கிறிஸ்துவர்கள் ஜெருசலேம் செல்ல ரூ.1 கோடி அனுமதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: இஸ்லாமிய மக்களின் ஹஜ் புனிதயாத்திரைக்கு அரசு உதவி செய்வதைப் போன்று, கிறிஸ்துவ மக்கள் மேற்கொள்ளும் ஜெருசலெம் புனித யாத்திரைக்கும் அரசு உதவி செய்யவேண்டும் என்று கிறிஸ்துவ சமுதாயத்தினர் அரசிடம் கோரிக்கை வைத்தனர்.
20.12.2011 அன்று சென்னையில் நடந்த கிறிஸ்துமஸ் விழாவில் பங்கேற்றுப் பேசிய முதலமைச்சர் ஜெயலலிதா இது குறித்து ஏற்கெனவே தான் அளித்த வாக்குறுதியை நினைவு கூர்ந்து கிறிஸ்தவர்களின் புனித ஸ்தலமான ஜெருசலேம் சென்று வருவதற்கு அரசு நிதி உதவி அளிக்கும் என்றும், இத்திட்டம் அனைத்து கிறிஸ்துவப் பிரிவினரையும் உள்ளடக்கியதாக அமையும் என்றும், முதற்கட்டமாக 500 கிறிஸ்தவர்கள் ஜெருசலேம் சென்று வர ஏற்பாடு செய்யப்படும் என்றும் அறிவித்தார். இத்திட்டம் தொடர்பாக சிறுபான்மையினர் நல ஆணையரிடம் கலந்து ஆலோசிக்கப்பட்டதில், இஸ்ரேல் ஏர்லைன் நிறுவனத்தினரால் மும்பையிலிருந்து அம்மான் வழியாக இஸ்ரேலுக்கு சென்று வர இரு வழி விமானக் கட்டணங்களாக ரூ.32,640/ அல்லது ரூ.35,524/ வசூலிக்கப்படுகின்றன என்றும், சென்னையிலிருந்து மும்பை சென்று வர தனியார் விமான நிறுவனங்கள் ரூ.12,000/ வரை கட்டணம் வசூலிக்கின்றன என்றும், எனவே சென்னையிலிருந்து ஜெருசலேம் சென்று வர இரு வழி பயணக் கட்டணம் மட்டும் ரூ.45,000/ முதல் ரூ.47,000/ வரை வசூலிக்கிறார்கள் என்றும் சிறுபான்மையினர் நல ஆணையர் தெரிவித்துள்ளார். மேற்சொன்ன குறிப்புகளின் அடிப்படையில் கிறிஸ்தவர்கள் இஸ்ரேலில் உள்ள ஜெருசலேம் செல்வதற்காக பயணி ஒருவருக்கு விமானக் கட்டண உதவித்தொகையாக ஹஜ் புனிதப் பயணத்திற்காக இஸ்லாமியர்களுக்கு மத்திய அரசு அதனுடைய நிதித் தொகுப்பிலிருந்து வழங்குவது போன்று, தமிழக அரசு தனது நிதியிலிருந்து ரூ.20,000/ முதல் ரூ.24,000/ வரை வழங்கலாம் என்றும், இந்த பயணக் கட்டண உதவித்தொகை ஜெருசலேம் புனிதப் பயணத்தை ஏர் இந்தியா மற்றும் இஸ்ரேல் ஏர் விமான சேவைகளின் மூலம் மேற்கொள்ளப்படும் பயணங்களுக்கு மட்டுமே பொருந்துமாறு செய்யலாம் என்றும், இதற்கென முதற்கட்டமாக 1000 நபர்களுக்கு ரூ.2 கோடி மாநில அரசின் நிதியிலிருந்து ஒதுக்கீடு செய்யலாம் என்றும், சிறுபான்மையினர் நல ஆணையரகத்தின் மூலம் இது குறித்து விளம்பரம் செய்து விண்ணப்பங்களைப் பெற்று பரிசீலித்து குலுக்கல் முறையில் பயணிகளைத் தேர்வு செய்யலாம் என்றும் சிறுபான்மையினர் நல ஆணையர் பரிந்துரை செய்துள்ளார். மேலும், இப்பணிகளை ஒருங்கிணைப்பதற்கு எதிர்காலத்தில் கிறிஸ்தவர்களுக்கான புனிதப் பயணக் குழு ஒன்றினை ஏற்படுத்தலாம் எனவும் பரிந்துரைத்துள்ளார். சிறுபான்மையினர் நல ஆணையரின் கருத்துருவினை அரசு நன்கு ஆய்வு செய்தது. தமிழ்நாட்டிலுள்ள அனைத்து கிறிஸ்தவப் பிரிவினரும் இஸ்ரேலில் உள்ள புனித ஸ்தலமான ஜெருசலேம் சென்று வர அரசு நிதி உதவி அளிக்கும் புதிய திட்டம் ஒன்றினைச் செயல்படுத்த அரசு முடிவு செய்து அவ்வாறே ஆணையிடுகிறது. முதற்கட்டமாக 20112012 ஆம் ஆண்டில் 500 கிறிஸ்தவர்கள் ஜெருசலேம் சென்று வருவதற்கு பயணிகளைத் தேர்ந்தெடுத்து, ஒரு பயணிக்கு ரூ.20,000/ (ரூபாய் இருபதாயிரம் மட்டும்) வீதம் 500 பயணிகளுக்கு நிதியுதவி வழங்க மொத்தம் ரூ.1,00,00,000 (ரூபாய் ஒரு கோடி மட்டும்) அரசு ஒப்பளிப்பு செய்து ஆணையிடுகிறது. ஜெருசலேம் புனிதப் பயணத்திற்கு நிதி உதவி வழங்கும் இத்திட்டம் குறித்து விளம்பரம் செய்து விண்ணப்பங்களைப் பெற்று பரிசீலித்து பயணிகளைத் தேர்வு செய்யும் பணியினை மேற்கொள்ளுமாறு சிறுபான்மையினர் நல ஆணையர் கேட்டுக் கொள்ளப்படுகிறார்.இது ஒரு புதுப்பணி குறித்த செலவினமாகும். நாளடைவில் இதற்கு சட்டமன்றப் பேரவையின் ஒப்புதல் பெறப்படும். சட்டமன்றப் பேரவையின் ஒப்புதல் கிடைக்கும் வரையில் எதிர்பாராச் செலவு நிதியிலிருந்து இச்செலவினம் மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
காலிபிளவர் ரோஸ்ட்![]() 1 day 12 hours ago |
பாஸ்தா ஸ்நாக்ஸ்![]() 4 days 7 hours ago |
ஜூசி சிக்கன்![]() 1 week 1 day ago |
-
நடிகர் விஜய் பேசியதில் உள்நோக்கம் இல்லை : மதுரையில் திருமாவளவன் பேட்டி
30 Jun 2024மதுரை : த.வெ.க.
-
கர்நாடகாவில் பருவமழை தீவிரம்: ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 1500 கன அடியாக அதிகரிப்பு
30 Jun 2024சேலம் : கர்நாடக மாநிலத்தில் பருவமழை தீவிரமடைந்ததை தொடர்ந்து ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 1500 கனஅடியாக அதிகரித்துள்ளது.
-
விடுமுறை நாள்: திருச்செந்தூர் கோவிலில் குவிந்த பக்தர்கள்
30 Jun 2024தூத்துக்குடி : நேற்று விடுமுறை நாள் என்பதால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் குவிந்த
-
தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு கெட்டு விட்டது: அ.தி.மு.க. நிர்வாகி கொலைக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம்
30 Jun 2024சென்னை : கடலூர் அ.தி.மு.க. நிர்வாகி கொலைக்கு கண்டனம் தெரிவித்துள்ள அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தமிழ்நாட்டில் தி.மு.க.
-
ஆப்கன் பெண்களின் உரிமைகள் என்பது உள்நாட்டு பிரச்சினை: தலிபான் அரசு
30 Jun 2024காபூல் : ஆப்கன் பெண்களின் உரிமைகளுக்கான கோரிக்கைகள், தங்களது உள்நாட்டு பிரச்சினை என்று தலிபான் அரசு தெரிவித்துள்ளது.
-
கள்ளக்குறிச்சி விஷ சாராய சம்பவ வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் : மத்திய அமைச்சர் எல்.முருகன் வலியுறுத்தல்
30 Jun 2024சென்னை : கள்ளக்குறிச்சி விஷ சாராய சம்பவ வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் எல். முருகன் வலியுறுத்தி உள்ளார்.
-
நைஜீரியாவில் 3 இடங்களில் பெண் மனித வெடிகுண்டு தாக்குதல்: 18 பேர் உயிரிழப்பு
30 Jun 2024நைஜர் : நைஜீரியாவில் 3 இடங்களில் தற்கொலை படையை சேர்ந்த பெண்கள் நடத்திய மனித வெடிகுண்டு தாக்குதலில் 18 பேர் பலியானார்கள்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 30-06-2024
30 Jun 2024 -
தமிழகம் முழுவதும் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை
30 Jun 2024சென்னை : தமிழகம் முழுவதும் நேற்று 10-க்கும் மேற்பட்ட இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
-
புலம்பெயர் தொழிலாளர்கள் தங்கியிருந்த விடுதியில் தீ விபத்து: 5 பேர் உயிரிழப்பு
30 Jun 2024மாஸ்கோ : ரஷ்யாவில் புலம்பெயர் தொழிலாளர்கள் தங்கியிருந்த விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர்.
-
உலகக்கோப்பையை வென்ற இந்தியா: ஜனாதிபதி முர்மு, பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து
30 Jun 2024புதுடெல்லி : உலகக் கோப்பையை வென்ற இந்திய அணிக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி, ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
-
யாருக்கும் பெரும்பான்மை இல்லை: ஈரான் அதிபர் தேர்தல்: வரும் 5-ம் தேதி 2-ம் கட்ட வாக்குப்பதிவு
30 Jun 2024துபாய் : ஈரான் அதிபர் தேர்தலில் முன்னணி வேட்பாளர்களுக்கு பெரும்பான்மை பலம் இல்லாததால், 2-ம் கட்ட வாக்குப்பதிவு வரும் 5-ம் தேதி நடக்க உள்ளது.
-
புதிய ராணுவ தளபதியாக ஜெனரல் உபேந்திர திவேதி பதவியேற்றார்
30 Jun 2024புதுடெல்லி : ராணுவ தளபதியாக இருந்த மனோஜ் பாண்டேவின் பதவிக் காலம் நேற்றுடன் முடிவடைந்த நிலையில் நாட்டின் புதிய ராணுவ தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் உபேந்திரா திவேதி நேற்று
-
இன்று முதல் 5-ம் தேதி வரை தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்
30 Jun 2024சென்னை : தமிழகத்தில் இன்று முதல் 5-ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
கடலூர் அருகே அ.தி.மு.க. பிரமுகர் வெட்டிக்கொலை : கொலையாளிகளை பிடிக்க 3 தனிப்படைகள் அமைப்பு
30 Jun 2024கடலூர் : கடலூர் வண்டிபாளையம் பகுதியில் அ.தி.மு.க.
-
பழனியில் முத்தமிழ் முருகன் மாநாடு: ஆய்வு கட்டுரைகளை சமர்ப்பிக்க கால அவகாசம் நிறைவு பெற்றது
30 Jun 2024சென்னை : பழனியில் ஆகஸ்ட் 24 மற்றும் 25-ம் தேதிகளில் முத்தமிழ் மாநாடு நடைபெறுவதையொட்டி ஆய்வு கட்டுரைகளை சமர்ப்பிப்பதற்கான கால அவகாசம் நேற்றுடன் நிறைவு பெற்றது.
-
வெம்பக்கோட்டையில் அகழ்வாய்வு: பழங்கால பொருட்கள் கண்டெடுப்பு
30 Jun 2024விருதுநகர் : வெம்பக்கோட்டையில் நடந்த 3-ம் கட்ட அகழ்வாய்வில் 200-க்கும் மேற்பட்ட பழங்கால பொருட்கள் கண்டெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
பொது சேவை செய்ய தர்மம்தான் எனக்கு வழிகாட்டுகிறது: ரிஷி சுனக்
30 Jun 2024லண்டன் : பொது சேவை செய்ய தர்மம் தான் எனக்கு வழிகாட்டுகிறது என்று பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் கூறினார்.
-
தீபாவளி பண்டிகை: ரயில் டிக்கெட் முன்பதிவு துவக்கம்
30 Jun 2024சென்னை : தீபாவளி பண்டிகை வருகிற அக்டோபர் 31-ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதனால் அக்டோபர் 28-ம் தேதிக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு நேற்று தொடங்கியது.
-
பாராளுமன்ற விவாதங்களில் எதிர்க்கட்சிகள் பங்கேற்க வேண்டும்: அனுராக் தாக்கூர்
30 Jun 2024சிம்லா : எதிர்க்கட்சியினர் பார்லிமென்டில் சலசலப்பை ஏற்படுத்துகின்றன. எதிர்க்கட்சிகள் ஓடுவதை விட விவாதத்தில் கலந்து கொள்ள வேண்டும் என பா.ஜ.க. எம்.பி.
-
2025-ம் ஆண்டு முதல் கணினி முறையில் நீட் தேர்வு நடத்த மத்திய அரசு திட்டம்?
30 Jun 2024புதுடெல்லி : 2025-ம் ஆண்டு முதல் கணினி முறையில் நீட் தேர்வை நடத்த தேசிய தேர்வு முகமை திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
-
உலக கோப்பை வென்ற இந்திய அணிக்கு முதல்வர் ஸ்டாலின், எடப்பாடி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து
30 Jun 2024சென்னை : 20 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட்டில் பரபரப்பான இறுதி ஆட்டத்தில் இந்திய அணி தென்ஆப்பிரிக்காவை 7 ரன் வித்தியாசத்தில் தோற்கடித்து வெற்றி பெற்றது. ஏற்கனவே 2007
-
வெங்கையா நாயுடுவின் சுயசரிதை புத்தகங்கள் : பிரதமர் மோடி வெளியிட்டார்
30 Jun 2024புதுடெல்லி : முன்னாள் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவின் 3 சுய சரிதை புத்தகங்களை நேற்று வெளியிட்ட பிரதமர் மோடி, வெங்கையா நாயுடு எனது உண்மையான தோழர் என்றும், எமர்ஜென்சியை
-
இந்திய கிரிக்கெட் அணியினருடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேச்சு
30 Jun 2024புதுடெல்லி : உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வெற்றிவாகை சூடியதை தொடர்ந்து இந்திய கிரிக்கெட் அணியினருடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேசி வாழ்த்து தெரிவித்தார்
-
தமிழ்நாட்டில் ஆவின் பால் விற்பனை மேலும் உயர்வு : அமைச்சர் மனோ தங்கராஜ் தகவல்
30 Jun 2024கோவை : தமிழகத்தில் ஆவின் பால் விற்பனை 25 சதவீதம் அதிகரித்துள்ளது என்று கோவையில் அமைச்சர் மனோ தங்கராஜ் கூறினார்.