எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னை,பிப்.- 18 - மத்திய அரசு தொடங்க உள்ள பயங்கரவாத தடுப்பு மையம் அமைப்பதற்கு முதல்வர் ஜெயலலிதா கடும் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளார். இவ்விஷயத்தில் முதல்வர் ஜெயலலிதாவுடன் ஒடிசா முதல்வர் நவீன் பட்றாயக், பீகார் முதல்வர் நிதீஷ்குமார், மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஆகியோரும் இணைந்துள்ளனர். உ,பி.முதல்வர் மாயாவதியின் கருத்து இதுவரை வெளிப்படவில்லை. இது குறித்து ஒடிசா முதல்வர் நவீன் பட் நாயக் கூறியுள்ளதாவது:- ஐக்கிய முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பாக தேசிய பயங்கரவாத தடுப்பு மையம் மார்ச் 1ந்தேதி தொடங்குவதாக தகவல் வெளியிட்டிருந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி இந்த திட்டம் மாநில அரசின் உரிமையை மத்திய அரசு பறிப்பது போல் இருக்கிறது. அதனால் இத்திட்டத்தை கைவிடும்படி கடந்த பிப்.14ந்தேதி பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார். இந்த தகவலை ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் கூறியுள்ளார். இந்த அமைப்புக்கு எதிரான மம்தாவின் கருத்தை தான் ஆதரிப்பதாக கூறியுள்ளார். மேலும், இது தொடர்பாக அவர், தமிழக முதல்வர் ஜெயலலிதாவுடனும் ஆலோனையும் நடத்தியுள்ளார். தற்போது இந்த பயங்கரவாத தடுப்பு அமைப்புக்கு எதிர்ப்பு தெரிவிக்க மம்தா பானர்ஜி, ஜெயலலிதா, நிதீஷ்குமார், மற்றும் நவீன் பட்நாயக் ஆகிய 4 மாநில முதல்வர்கள் இணைந்துள்ளனர். இந்நிலையில், இது குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் மாநில அரசின் உரிமையை மத்திய அரசு என்றும் பறிக்காது. மம்தா எழுதியாக கூறும் எதிர்ப்பு கடிதம் இதுவரை உள்துறை அமைச்சகத்துக்கு வந்து சேரவில்லை என்று கூறியுள்ளது. இந்நிலையில் தமிழக அரசு ஒரு செய்தி குறிப்பிப்பை வெளியிட்டுள்ளது. பயங்கர வாதத் தடுப்பு மையம் தொடங்குவது குறித்து முதல்வர் ஜெயலலிதா பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு நேற்று ஒரு கடிதம் எழுதியுள்ளார். என்று செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. முதல்வர் ஜெயலிதா பிரதமர்மன் மோகன் சிங்கிற்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: - இந்திய இறையாண்மையைக் கட்டிக் காப்பாற்றி உயர்த்திப் பிடிப்பதிலும், இந்தியாவின் ஒற்றுமை மற்றும் ஒருமைப் பாட்டை ஆதரிப்பதிலும் எனக்குள்ள அர்ப்பணிப்பு உணர்வை நீங்கள் அறிவீர்கள். எத்தகைய ஒரு சூழலிலும் இந்தியாவின் பாதுகாப்பு எத்தகைய சமரசத்திற்கும் உட்பட்டதல்ல என்ற நிலையில் சில விசயங்கள் குறித்து உங்களின் கவனத்தைச் செலுத்த விழைகிறேன். உள்துறை அமைச்சகம் கடந்த 3ம் தேதி ஒரு கடிதத்தை அனுப்பி உள்ளது. அதில் மத்திய புலனாய்வுத் துறையின் கீழ், தேசிய தீவிரவாத எதிர்ப்பு மையம் என்.சி.டி.சி ஒன்றை மார்ச் 1ம் தேதி தொடங்க உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் மத்திய அரசின் அதிகாரத்தின் கீழ் என்.சி.டி.சி. யாரையும் கைது செய்யவோ, அவர்களின் இடத்தை சோதனை இடவோ முடியும்.மேலும் மாநிலத்திற்குள் தனி புலனாய்வுக் குழுவையும் அமைக்கும் அதிகாரம் அதற்குள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த சட்டப்பிரிவின் கீழ் என்.சி.டி.சி அறிக்கைகள், ஆவணங்கள், சான்றாதாரங்கள், எந்தவிதமானதாலும், அத் தகவல்கள், எந்தஒரு நிறுவனத்திடமிருந்தும், அமைப்பிடமிருந்தும் இதற்குத் தேவையான தகவல்களை பெறும் அதிகாரத்தைப் பெறுகிறது.
இத்தகைய சூழலில், சில விஷயங்களில் உள்ள ரகசிய மாக வைத்திருக்க வேண்டிய தகவல்களை கூட அதற்கு அளிக்க வேண்டியதும் இருக்கும்.
இந்த சட்டப்பிரிவு, எந்தவிதமான பொதுப்புகளையும் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு அதிகாரத்தை அது பெறுகிறது.
யாரையும் கைது செய்வது, சோதனை செய்வது, தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுப்பது, பாதுகாப்புக்குக் குந்தகம் விளைவிப்போர் மீது எடுக்கப்படும் எச்சரிக்கை நடவடிக்கைகள் போன்ற பலவிதமான செயல் முறைகள் இது வரை மாநில அரசின் உள்துறை செயலகத்திடம் இருந்தது. என்.சி.டி.சி.யின் இந்த விசேஷ அதிகாரத்தின் மூலம், மாநில உள்துறை செயலகத்திடம் இருந்த அதிகாரங்கள் இனி மத்திய உள்துறை அமைச்சகத்தின் இணைச் செயலாளர் வசமும் என்.சி.டி.சி.யில் உள்ள மத்திய புலனாய்வு அதிகாரிகள் வசமும் கை மாறுகிறது, சுருக்கமாகச் சொல்லப்போனால் மத்திய மாநில இணைப்புப் புலனாய்வுக் குழுக்களை என்.சி.டி.சி அமைப்பானது, அமைப்பதின் மூலம் மாநில அரசின் உரிமைகளில் அது தலையிடுகிறது.
மேலும் பயங்கரவாதத்தை எதிர்ப்பதிலும், அதை யொட்டி எடுக்கும் நடவடிக் கைகளும் தமிழ்நாடு அரசு சிறப்பான சாதனைப் பட்டியலைக் கொண்டுள்ளது. பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளில் மாநில அரசு எந்தவித மான பின்வாங்குதலும் இல்லாமல் முன்னோக்கி செய்கிறது.
என்னுடைய அனுபவத்தில் மாநில காவல் துறையும் புலனாய்வு அமைப்பும் எப்போதுமே தீவிரவாதிகளையும் அவர்களின் அமைப்புகளையும் ஒடுக்குவதில் சிறந்து விளங்குகிறது. அதற்காக மாநில காவல் துறையானது. நவீனப் படுத்தப்பட்டு செயல் படுகிறது. பல அசம்பாவித சம்பவங்களையும் தடுத்துள்ளது.
வெறும் ஒரு மையத்தை அமைப்பதும், தகவல்களைப் பெறு வது மட்டுமே அதனுடைய நோக்கத்தை அடைய முடியாது. அகையால் என்.சி.டி.சி. அமைப்பது குறித்த மாநிலங்களின் வேறுபாடுகளை நான் இங்கு குறிப்பிட்டுள்ளேன். இவ்விஷயத்தில் பிறமாநில முதல்வர்களின் கருத்துடன் நானும் உடன் படுகிறேன்.
இவ்விஷயத்தில் தாங்கள் உடனடியாக கவனத்தை செலுத்த வேண்டும். மேலும் மாநில அரசுகளுடனும், மாநில போலீஸ் உயரதிகாரிகளுடனும் உடனடியாக கலந்து பேச வேண்டும் பயங்கவாத எதிர்ப்பு நடவடிக்கை என்ற மிகுந்த முக்கியத்துவமுள்ள இவ்விஷயத்தில் மாநிலங்களில் கருத்துக்களை எடுத்துக் கொள்ளாமல், தேசிய பயங்கரவாத தடுப்பு நடைமுறைகள் எப்படி செயல்பட முடியும்.
ஆகையால் பயங்கரவாத தடுப்பு நடவடிக்கை என்ற பெயரில் உள்துறை அமைச்சகத்தின் அந்த அதிகார நடவடிக்கை, குறித்து உரிய நடவடிக்கையை தாங்கள் எடுப்பீர்கள் என்று நம்புகிறேன்.
இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 6 months 1 week ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 6 months 1 week ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 7 months 3 days ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 01-04-2025.
01 Apr 2025 -
அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கேள்விக்கு மவுனத்தை பதிலாக அளித்த செங்கோட்டையன்
01 Apr 2025சென்னை : டெல்லி சென்றது குறித்த அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கேள்விக்கு பதில் அளிக்க செங்கோட்டையன் மறுத்து விட்டார்.
-
சிங்கம் புலி நடிக்கும் செருப்புகள் ஜாக்கிரதை
01 Apr 2025ஜீ5 ஓடிடி தளத்தின் அடுத்த படைப்பாக ’செருப்புகள் ஜாக்கிரதை’ என்ற தொடரை வெளியிட்டுள்ளது.
-
ஆர்பிஎம் டிரைலர் வெளியீடு
01 Apr 2025நடிகர் டேனியல் பாலாஜியின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை ஒட்டி அவர் நடித்த ஆர்பிஎம் படத்தின் டிரைலர் வெளியிடப்பட்டது.
-
தி டோர் விமர்சனம்
01 Apr 2025அடுக்குமாடி குடியிருப்பு கட்டுவதற்காக தேர்வு செய்யப்பட்டுள்ள ஓர் இடத்தில் உள்ள சிறு கோவில் இடிக்கப்படுகிறது.
-
சர்தார்-2 டீசர் வெளியீடு
01 Apr 2025சர்தார் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, நடிகர் கார்த்தி நடிப்பில், இயக்குநர் PS மித்ரன் இயக்கத்தில், “சர்தார் 2” உருவாகியுள்ளது. பிரின்ஸ் பிக்சர்ஸ், ஐ.வி.
-
திருச்செந்தூர் கோவிலில் வாரத்தில் 3 நாட்களுக்கு சிறப்பு தரிசனம் ரத்து
01 Apr 2025திருச்செந்தூர், கோடை விடுமுறையை முன்னிட்டு, திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பக்தர்களின் வசதிக்காக, வாரத்தில் 3 நாள்களுக்கு சிறப்பு தரிசனம் ரத்து செய்யப்பட்டு
-
ஏப்ரல் 4 ல் வெளியாகும் டெஸ்ட்
01 Apr 2025மாதவன், நயன்தாரா சித்தார்த் ஆகியோர் நடிக்கும் டெஸ்ட் திரைப்படம் ஏப்ரல் 4 அன்று நெட்ஃபிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.
-
தஞ்சையில் மெகா நெல் கொள்முதல் நிலையம்: பேரவையில் அமைச்சர் தகவல்
01 Apr 2025சென்னை : தஞ்சாவூரில் ரூ.1.41 கோடியில் மெகா நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்கப்பட்டு, இப்போது சோதனை அடிப்படையில் செயல்படுகிறது என்று உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி கூற
-
இந்தியா பொருட்களுக்கான புதிய இறக்குமதி வரி இன்று முதல் அமல்: அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு
01 Apr 2025வாஸிங்டன், இந்தியா அமெரிக்க இறக்குமதிக்கு அதிகமாக வரி விதிப்பதாக அதிபர் டொனால்டு டிரம்ப் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறார்.
-
வாரம் இரு வேலை நாட்கள் என்ற நடைமுறை விரைவில் வரும்: பில் கேட்ஸ் தகவல்
01 Apr 2025அமெரிக்கா, செயற்கை நுண்ணறிவு(ஏஐ) தொழில்நுட்பத்தின் அசுர வளர்ச்சியால் வாரம் இரு வேலை நாள்கள் மட்டுமே என்கிற நடைமுறை இன்னும் பத்தாண்டுகளில் வழக்கத்தில் இருக்கும் என்று பி
-
பிரதமர் வருகை எதிரொலி: 3 நாட்கள் மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை
01 Apr 2025ராமேஸ்வரம் : பிரதமர் மோடி வருகையையொட்டி ராமேஸ்வரம், பாம்பன், மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
-
பிரதமர் மோடியுடன் சிலி அதிபர் சந்திப்பு
01 Apr 2025புது டில்லி : அரசுமுறை சுற்றுப்பயணமாக இந்தியா வந்துள்ள சிலி நாட்டின் அதிபர் கேப்ரியேல் போரிக் டில்லியில் பிரதமர் மோடியை சந்தித்து பேசினார்.
-
சமாதி அடைந்தாரா சாமியார் நித்யானந்தா ? - சகோதரி மகன் வீடியோவால் புதிய பரபரப்பு
01 Apr 2025சென்னை : சாமியார் நித்யானந்தா சமாதி அடைந்ததாக அவரது சகோதரி மகன் வெளியிட்ட வீடியோவால் புதிய பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
-
காவிரி - வைகை - குண்டாறு திட்டம்: அமைச்சர் துரைமுருகன் விளக்கம்
01 Apr 2025சென்னை : காவிரி - வைகை - குண்டாறு இணைப்புத் திட்டத்தின் தற்போதைய நிலை குறித்து சட்டப் பேரவையில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் விளக்கமளித்துள்ளார்.
-
தமிழ்நாட்டில் இரண்டாவது கட்சி யார் என்பதில்தான் போட்டி: திருமாவளவன்
01 Apr 2025சென்னை : பா.ஜ.க., அ.தி.மு.க. மற்றும் த.வெ.க. ஆகிய கட்சிகளுக்கிடையே தமிழகத்தில் இரண்டாவது கட்சி யார் என்பதில் தான் போட்டி நடந்து கொண்டிருக்கிறது.
-
எத்தியோப்பியாவில் வேகமாக பரவும் காலரா நோய் தொற்றினால் 10 லட்சம் பேருக்கு ஆபத்து
01 Apr 2025தெற்கு சூடான், கிழக்கு ஆப்பிரிக்க நாடான எத்தியோப்பியாவில் வேகமாகப் பரவி வரும் காலரா நோயினால் சுமார் 10 லட்சம் பேர் அபாயத்திலுள்ளதாகக் கூறப்படுகின்றது.
-
62 பொருள்களுக்கு புவிசார் குறியீடு: தமிழகத்தில் தஞ்சை சாதனை
01 Apr 2025தஞ்சாவூர் : தமிழகத்தில் இதுவரை 62 பொருள்களுக்கு புவிசார் குறியீடு கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் அதில் தஞ்சை மாவட்டம் சாதனை படைத்திருப்பதாகவும் வழக்குரைஞர் சஞ்சய் காந்தி கூ
-
நடந்தாய் வாழி காவிரி திட்ட நிதியைப் பெற நடவடிக்கை : அமைச்சர் துரைமுருகன் தகவல்
01 Apr 2025சென்னை : “காவிரி மற்றும் அதன் துணை ஆறுகளை சுத்தப்படுத்தும் ‘நடந்தாய் வாழி காவிரி’ திட்டத்துக்கான நிதியைப் பெறுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது என்று தம
-
சாட் ஜி.பி.டி.-யில் கிபிலி பாணி ஓவியங்கள் இலவசம் ஓபன் ஏ.ஐ.சி.இ.ஓ. அறிவிப்பு
01 Apr 2025புதுடெல்லி, ஸ்டுடியோ கிப்லி பாணியில் படங்களை உருவாக்க சாட் ஜி.பி.டி.ஐ பயன்படுத்தும் சமீபத்திய போக்கு அதிகரித்துள்ள நிலையில், இனி இலவசமாகப் பயன்படுத்திக் கொள்ளலாம் என அற
-
இந்தியர்களுடன் விண்வெளி அனுபவத்தை பகிர்ந்துகொள்ள ஆர்வம்: சுனிதா வில்லியம்ஸ் பேட்டி
01 Apr 2025அமெரிக்கா, சா்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து பூமி திரும்பிய பிறகு முதல்முறையாக செய்தியாளர்களைச் சந்தித்து சுனிதா வில்லியம்ஸ் பேசியுள்ளார்.
-
வயநாடு நிலச்சரிவில் 298 பேர் பலி; பார்லி.யில் மத்திய அரசு தகவல்
01 Apr 2025டெல்லி : வயநாடு நிலச்சரிவில் 298 பேர் உயிரிழந்ததாக பாராளுமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
-
பிரதமர் மோடியை சந்திக்க தனித்தனியே நேரம் கேட்ட இ.பி.எஸ்., ஓ.பி.எஸ்.?
01 Apr 2025சென்னை : மதுரை விமான நிலையத்தில் வைத்து பிரதமர் மோடியை சந்திப்பதற்கு எடப்பாடி பழனிசாமி நேரம் கேட்டிருப்பதாக கூறப்படுகிறது.
-
புல்டோசர்களால் வீடுகளை இடிப்பது சட்டவிரோதமானது; மனிதாபிமானமற்றது - தலா ரூ.10 லட்சம் வழங்க உ.பி. அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு
01 Apr 2025புதுடெல்லி : புல்டோசர்கள் மூலம் வீடுகளை இடித்து தள்ளும் உத்தரப் பிரதேச மாநில பாஜக அரசின் செயல், மனிதாபிமானமற்றது; சட்டவிரோதமானது என சுப்ரீம் கோர்ட் மீண்டும் கடும் கண்டன
-
3 லட்சம் பேர் உயிரிழக்கும் அபாயம்: ஜப்பானுக்கு காத்திருக்கும் மிகப்பெரிய நிலநடுக்கம்..?
01 Apr 2025ஜப்பான், தீவு நாடான ஜப்பானில் மிகப்பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டால் கிட்டத்தட்ட 3 லட்சம் பேர் பலியாக வாய்ப்பிருப்பதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.