எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

புதுடெல்லி, பிப். 23 - இரண்டு இந்திய மீனவர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரம் தொடர்பாக எழுந்துள்ள நிலைமை குறித்து ஆலோசிப்பதற்காக இத்தாலிய துணைவெளியுறவு மந்திரி மிஸ்துரா நேற்று டெல்லி வந்து மத்திய வெளியுறவு விவகாரத்துறை இணை அமைச்சரை அவசரமாக சந்தித்துப் பேசினார். இந்த வழக்கு தொடர்பான விசாரணையை இத்தாலியில் நடத்த வேண்டும் என்று அந்நாடு கோரிவரும் நிலையில் இத்தாலிய அமைச்சரின் வருகை முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. மீனவர்கள் எங்கு சென்றாலும் அவர்கள் தாக்கப்படுவதும் கொல்லப்படுவதும் வழக்கமான ஒன்றாகவே ஆகிவிட்டது. அவர்கள் ராமேஸ்வரத்திலிருந்து சென்றாலும் இலங்கை கடற்படையால் தாக்கப்படுகிறார்கள். எல்லை தாண்டி வந்ததாக குற்றம் சாட்டி இவர்களை இலங்கை கடற்படை தாக்கி கொன்று வருகிறது. சரி, ராமேஸ்வரம் மீனவர்களுக்குத்தான் எல்லை பற்றி தெரியவில்லை என்பதை ஒருவாதத்திற்காக ஏற்றுக்கொண்டாலும்கூட, கோடியக்கரை மீனவர்களை இலங்கை கடற்படை சுட்டுக்கொல்வதை எந்த வகையில் ஏற்றுக்கொள்ளமுடியும்? நேற்றுகூட நாகப்பட்டினம் மாவட்டம் கோடியக்கரையில் இருந்து சென்ற தமிழக மீனவர்களை இலங்கை கடற் படையினர் தாக்கி அவர்களது வலைகளை அறுத்தெறிந்து மீன்களை கொள்ளையடித்ததோடு, பெட்ரோல் குண்டுகளையும் வீசிவிட்டு போய் இருக்கிறார்கள். இதில் பல மீனவர்கள் காயத்தோடு தப்பிவிட்டார்கள். இந்திய கடலோர காவல்படை என்னதான் செய்கிறது என்று தெரியவுமில்லை, புரியவுமில்லை. மீனவர்களுக்கு எதிராக மனுத்தாக்கல் செய்ய மட்டும்தான் இந்த படைக்கு தெரியும்போலும்.
இந்த நிலையில் தமிழக மீனவர்கள்தான் தாக்கப்படுகிறார்கள் என்றால் கேரள பகுதியில் மீன்பிடித்துக்கொண்டிருந்த இருவருக்கும் சமீபத்தில் ஒரு துயர நிலை ஏற்பட்டது. கடந்த 15 ம் தேதி கேரள கடற்பகுதியில் மீன்பிடித்துக்கொண்டிருந்த 2 மீனவர்களை கடற்கொள்ளையர்கள் என்று தப்புக்கணக்கு போட்டு சுட்டுத்தள்ளி இருக்கிறார்கள் இத்தாலியைச் சேர்ந்த ஒரு சரக்கு கப்பலின் பாதுகாவலர்கள். இச்சம்பவத்தில் 2 மீனவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இது பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் வெளிநாட்டவராக இருந்தாலும் அவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்று மத்திய பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே.அந்தோணி சமீபத்தில் கூறியிருந்தார்.
மீனவர்களை சுட்டுக்கொன்ற இரண்டு இத்தாலிய கடற்படையினரும் கேரள போலீசாரால் கைது செய்யப்பட்டு தற்போது கம்பி எண்ணிக்கொண்டு இருக்கிறார்கள். ஆனால் இவர்களை எப்படியாவது மீட்டுவிட வேண்டும் என்று துடிக்கிறது இத்தாலி. காரணம் சம்பவம் நடந்த இடம் சர்வதேச கடற்பகுதியாம். அதனால் இந்த வழக்கு விசாரணையையும் இத்தாலியில் தான் நடத்த வேண்டுமாம். இப்படிச் சொல்லி தப்பிக்கப்பார்க்கிறது இத்தாலி. ஆனால் இந்தியா விடுவதாக இல்லை. இந்த விஷயத்தில் சற்று தீவிரமாகவே உள்ளது. இந்தியாவில்தான் விசாரணை நடத்தப்பட வேண்டும். குற்றவாளிகளை விசாரணைக்காக இத்தாலியிடம் ஒப்படைக்க முடியாது என்பதில் இந்தியா உறுதியாக உள்ளது. அதுமட்டுமல்ல, விசாரணை பூர்த்தியடையும்வரை இத்தாலி காத்திருக்கத்தான் வேண்டும் என்பதில் இந்தியா உறுதியாக உள்ளது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் இத்தாலிய துணை வெளியுறவு அமைச்சர் மிஸ்த்ரா டெல்லி வந்து மத்திய வெளியுறவு இணை அமைச்சர் பிரினித் கவுரை நேற்று சந்தித்து பேசினார். அப்போது இந்த விவகாரம் குறித்து பேசப்பட்டதாக தெரிகிறது. முன்னதாக இத்தாலியில் இருந்து உயர்மட்ட குழு ஒன்றும் டெல்லி வந்ததோடு, கேரளாவுக்கும் விரைந்துள்ளதாம். எது எப்படி இருந்தாலும் சரி, இந்த விவகாரத்தில் ஒரு கை பார்த்துவிடுவது என்பதில் உறுதியாக உள்ளது கேரள அரசு.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 6 months 1 week ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 6 months 2 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 7 months 3 days ago |
-
அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கேள்விக்கு மவுனத்தை பதிலாக அளித்த செங்கோட்டையன்
01 Apr 2025சென்னை : டெல்லி சென்றது குறித்த அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கேள்விக்கு பதில் அளிக்க செங்கோட்டையன் மறுத்து விட்டார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 01-04-2025.
01 Apr 2025 -
திருச்செந்தூர் கோவிலில் வாரத்தில் 3 நாட்களுக்கு சிறப்பு தரிசனம் ரத்து
01 Apr 2025திருச்செந்தூர், கோடை விடுமுறையை முன்னிட்டு, திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பக்தர்களின் வசதிக்காக, வாரத்தில் 3 நாள்களுக்கு சிறப்பு தரிசனம் ரத்து செய்யப்பட்டு
-
பிரதமர் வருகை எதிரொலி: 3 நாட்கள் மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை
01 Apr 2025ராமேஸ்வரம் : பிரதமர் மோடி வருகையையொட்டி ராமேஸ்வரம், பாம்பன், மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
-
பிரதமர் மோடியுடன் சிலி அதிபர் சந்திப்பு
01 Apr 2025புது டில்லி : அரசுமுறை சுற்றுப்பயணமாக இந்தியா வந்துள்ள சிலி நாட்டின் அதிபர் கேப்ரியேல் போரிக் டில்லியில் பிரதமர் மோடியை சந்தித்து பேசினார்.
-
சிங்கம் புலி நடிக்கும் செருப்புகள் ஜாக்கிரதை
01 Apr 2025ஜீ5 ஓடிடி தளத்தின் அடுத்த படைப்பாக ’செருப்புகள் ஜாக்கிரதை’ என்ற தொடரை வெளியிட்டுள்ளது.
-
ஆர்பிஎம் டிரைலர் வெளியீடு
01 Apr 2025நடிகர் டேனியல் பாலாஜியின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை ஒட்டி அவர் நடித்த ஆர்பிஎம் படத்தின் டிரைலர் வெளியிடப்பட்டது.
-
சமாதி அடைந்தாரா சாமியார் நித்யானந்தா ? - சகோதரி மகன் வீடியோவால் புதிய பரபரப்பு
01 Apr 2025சென்னை : சாமியார் நித்யானந்தா சமாதி அடைந்ததாக அவரது சகோதரி மகன் வெளியிட்ட வீடியோவால் புதிய பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
-
ஏப்ரல் 4 ல் வெளியாகும் டெஸ்ட்
01 Apr 2025மாதவன், நயன்தாரா சித்தார்த் ஆகியோர் நடிக்கும் டெஸ்ட் திரைப்படம் ஏப்ரல் 4 அன்று நெட்ஃபிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.
-
தஞ்சையில் மெகா நெல் கொள்முதல் நிலையம்: பேரவையில் அமைச்சர் தகவல்
01 Apr 2025சென்னை : தஞ்சாவூரில் ரூ.1.41 கோடியில் மெகா நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்கப்பட்டு, இப்போது சோதனை அடிப்படையில் செயல்படுகிறது என்று உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி கூற
-
290 கோடி ரூபாய் செலவில் திருச்சியில் கட்டப்பட்டு வரும் நூலகத்துக்கு ‘காமராஜர்’ பெயர் : சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
01 Apr 2025சென்னை : 290 கோடி ரூபாய் செலவில் திருச்சியில் கட்டப்பட்டு வரும் நூலகத்துக்கு காமராஜரின் பெயர் சூட்டுவதற்கான அரசாணையை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் வெளியிட வேண்டுமென்று
-
சர்தார்-2 டீசர் வெளியீடு
01 Apr 2025சர்தார் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, நடிகர் கார்த்தி நடிப்பில், இயக்குநர் PS மித்ரன் இயக்கத்தில், “சர்தார் 2” உருவாகியுள்ளது. பிரின்ஸ் பிக்சர்ஸ், ஐ.வி.
-
இந்தியர்களுடன் விண்வெளி அனுபவத்தை பகிர்ந்துகொள்ள ஆர்வம்: சுனிதா வில்லியம்ஸ் பேட்டி
01 Apr 2025அமெரிக்கா, சா்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து பூமி திரும்பிய பிறகு முதல்முறையாக செய்தியாளர்களைச் சந்தித்து சுனிதா வில்லியம்ஸ் பேசியுள்ளார்.
-
இந்தியா பொருட்களுக்கான புதிய இறக்குமதி வரி இன்று முதல் அமல்: அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு
01 Apr 2025வாஸிங்டன், இந்தியா அமெரிக்க இறக்குமதிக்கு அதிகமாக வரி விதிப்பதாக அதிபர் டொனால்டு டிரம்ப் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறார்.
-
தி டோர் விமர்சனம்
01 Apr 2025அடுக்குமாடி குடியிருப்பு கட்டுவதற்காக தேர்வு செய்யப்பட்டுள்ள ஓர் இடத்தில் உள்ள சிறு கோவில் இடிக்கப்படுகிறது.
-
சாட் ஜி.பி.டி.-யில் கிபிலி பாணி ஓவியங்கள் இலவசம் ஓபன் ஏ.ஐ.சி.இ.ஓ. அறிவிப்பு
01 Apr 2025புதுடெல்லி, ஸ்டுடியோ கிப்லி பாணியில் படங்களை உருவாக்க சாட் ஜி.பி.டி.ஐ பயன்படுத்தும் சமீபத்திய போக்கு அதிகரித்துள்ள நிலையில், இனி இலவசமாகப் பயன்படுத்திக் கொள்ளலாம் என அற
-
புல்டோசர்களால் வீடுகளை இடிப்பது சட்டவிரோதமானது; மனிதாபிமானமற்றது - தலா ரூ.10 லட்சம் வழங்க உ.பி. அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு
01 Apr 2025புதுடெல்லி : புல்டோசர்கள் மூலம் வீடுகளை இடித்து தள்ளும் உத்தரப் பிரதேச மாநில பாஜக அரசின் செயல், மனிதாபிமானமற்றது; சட்டவிரோதமானது என சுப்ரீம் கோர்ட் மீண்டும் கடும் கண்டன
-
பிரதமர் மோடியை சந்திக்க தனித்தனியே நேரம் கேட்ட இ.பி.எஸ்., ஓ.பி.எஸ்.?
01 Apr 2025சென்னை : மதுரை விமான நிலையத்தில் வைத்து பிரதமர் மோடியை சந்திப்பதற்கு எடப்பாடி பழனிசாமி நேரம் கேட்டிருப்பதாக கூறப்படுகிறது.
-
டி.என்.பி.எஸ்.சி. குரூப்-1 தேர்வு அறிவிப்பாணை வெளியீடு
01 Apr 2025சென்னை : டி.என்.பி.எஸ்.சி.
-
சாத்தியமான திட்டங்களை நிச்சயம் நிறைவேற்றுவோம் : இ.பி.எஸ். கேள்விக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதில்
01 Apr 2025சென்னை : கட்சி பாகுபாடின்றி கோரிக்கைகள் நிறைவேற்றப்படுவதாக சட்டசபையில் தெரிவித்த முதல்வர் மு.க.ஸ்டாலினஅ சாத்தியமான திட்டங்களை நிச்சயமாக நிறைவேற்றுவோம் என்றும் அவர் இ.பி
-
3 லட்சம் பேர் உயிரிழக்கும் அபாயம்: ஜப்பானுக்கு காத்திருக்கும் மிகப்பெரிய நிலநடுக்கம்..?
01 Apr 2025ஜப்பான், தீவு நாடான ஜப்பானில் மிகப்பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டால் கிட்டத்தட்ட 3 லட்சம் பேர் பலியாக வாய்ப்பிருப்பதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
-
இன்று காங். எம்.பி.க்கள் கூட்டம்
01 Apr 2025டெல்லி, ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் எம்.பி.க்கள் கூட்டம் இன்று காலை 9.30 மணிக்கு நடைபெறுகிறது.
-
கட்சி பாகுபாடின்றி அனைத்து திட்டங்களும் நிறைவேற்றம்: சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு
01 Apr 2025சென்னை, வார விடுமுறை மற்றும் ரம்ஜான் பண்டிகை விடுமுறை என மூன்று நாட்கள் இடைவெளிக்குப் பிறகு சட்டப்பேரவை நேற்று மீண்டும் கூடியது.
-
பிம்ஸ்டெக் மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி நாளை தாய்லாந்து செல்கிறார்
01 Apr 2025புதுடெல்லி : பிம்ஸ்டெக் மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி நாளை தாய்லாந்து செல்கிறார். அங்கு வங்கதேசம், இலங்கை நாட்டு தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார்.
-
எத்தியோப்பியாவில் வேகமாக பரவும் காலரா நோய் தொற்றினால் 10 லட்சம் பேருக்கு ஆபத்து
01 Apr 2025தெற்கு சூடான், கிழக்கு ஆப்பிரிக்க நாடான எத்தியோப்பியாவில் வேகமாகப் பரவி வரும் காலரா நோயினால் சுமார் 10 லட்சம் பேர் அபாயத்திலுள்ளதாகக் கூறப்படுகின்றது.