எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னை, ஜூலை. - 5 - தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தொடர்ந்து நடத்தும் தாக்குதல்களை உடனடியாக தடுத்து நிறுத்தவேண்டும் என்றும், இப்பிரச்சனையை விரைந்து முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்றும் முதல்வர் ஜெயலலிதா பிரதமர் மன்மோகன்சிங்கை மீண்டும் வலியுறுத்தி உள்ளார். பிரதமர் மன்மோகன்சிங்கிற்கு முதல்வர் ஜெயலலிதா நேற்று எழுதியுள்ள கடிதம் வருமாறு:- தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் நடத்தும் தாக்குதல்கள் மற்றும் சித்தரவதைகள் போன்ற சம்பவங்களை நிறுத்துவதற்கு நீங்கள் தலையிட வேண்டும் என்று கடந்த ஜூன்.28-ம் தேதி அன்று நான் தங்களுக்கு எழுதிய கடிதத்தை மீண்டும் நீங்கள் கவனத்தில் கொள்ளவேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன். இதேபோன்ற சம்பவம் மீண்டும் கடந்த 2-ம் தேதியன்று நடந்துள்ளது. தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் நடத்திய 2 தாக்குதல் சம்பவங்கள் நடந்துள்ளன. கடந்த ஜூன் 29-ம் தேதியன்று ராமேஸ்வரம் பகுதியில் உள்ள முகுந்தராயர் சத்திரம் ஊரில் இருந்து 3 மீனவர்கள் ஒரு படகில் மீன் பிடிக்கச் சென்றுள்ளனர். ராமேஸ்வரம் கடலில் கல்பிட்டி தீவு அருகே அவர்களின் படகுகளையும், மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் கைது செய்து உள்ளனர். அவர்கள் மீது புகையிலை பொருட்களை கடத்தியதாக குற்றம் சாட்டப்பட்டு மேல் விசாரணைக்காக கொழும்பு அருகே உள்ள பகுதிக்கு அழைத்துச்செல்லப்பட்டதாக கூறப்படுகிறது. இதேபோல மற்றொரு சம்பவம் கச்சத்தீவு பகுதியில் கடலில் மீன் பிடித்த 5 மீனவர்கள் வேறு மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல்களை நடத்தியுள்ளனர். அவர்கள் சென்ற எந்திர படகும் கைப்பற்றப்பட்டுள்ளது. அவர்கள் காணாமல் போனவுடன் 5 மீனவர்கள் ஒரு படகில் சென்று தேடியுள்ளனர். அவர்களையும் சேர்த்து மொத்தம் 10 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்து அவர்களின் படகுகளையும் கைப்பற்றி அழைத்துச்சென்று இலங்கை சிறையில் அடைக்கப்பட்டனர் என்ற செய்தி தெரியவந்துள்ளது. ஏற்கனவே 5 ராமேஸ்வரம் மீனவர்கள் மீது பொய்யான புகார்கள் கூறப்பட்டு கைது செய்து சென்ற ஆண்டு நவம்பர் 29-ம் தேதி முதல் அவர்கள் இலங்கை சிறையில் வாடி வருகின்றனர் என்பதும் தங்களுக்கு தெரியும் என்று நம்புகிறேன். இப்போது 13 மீனவர்களும் அவர்களின் 3 படகுகளும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதானது, இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்கள் மீது எவ்வளவு மோசமான அணுகுமுறையை கடைபிடிக்கின்றனர் என்பதை உறுதி செய்கிறது. இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்துவது என்பது தொடர்ந்து நடைபெறும் நிகழ்வாகிறது. பாக்ஜலசந்தியில் தமிழக மீனவர்களின் மீன் பிடிக்கும் வாழ்வாதார உரிமையை இலங்கை கடற்படையினர் வேண்டும் என்றே பறிக்கின்றனர். எனவே இந்த விஷயத்தில் தாங்கள் விரைந்து தலையிட்டு இந்த பிரச்சனையை இலங்கை அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று, உடனடியாக இலங்கை சிறையில் உள்ள அனைத்து தமிழக மீனவர்களையும் விடுதலை செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இதில் உங்களின் விரைவான நடவடிக்கையை எதிர்பார்க்கிறேன். இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 6 months 1 week ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 6 months 2 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 7 months 3 days ago |
-
அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கேள்விக்கு மவுனத்தை பதிலாக அளித்த செங்கோட்டையன்
01 Apr 2025சென்னை : டெல்லி சென்றது குறித்த அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கேள்விக்கு பதில் அளிக்க செங்கோட்டையன் மறுத்து விட்டார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 01-04-2025.
01 Apr 2025 -
திருச்செந்தூர் கோவிலில் வாரத்தில் 3 நாட்களுக்கு சிறப்பு தரிசனம் ரத்து
01 Apr 2025திருச்செந்தூர், கோடை விடுமுறையை முன்னிட்டு, திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பக்தர்களின் வசதிக்காக, வாரத்தில் 3 நாள்களுக்கு சிறப்பு தரிசனம் ரத்து செய்யப்பட்டு
-
சிங்கம் புலி நடிக்கும் செருப்புகள் ஜாக்கிரதை
01 Apr 2025ஜீ5 ஓடிடி தளத்தின் அடுத்த படைப்பாக ’செருப்புகள் ஜாக்கிரதை’ என்ற தொடரை வெளியிட்டுள்ளது.
-
ஆர்பிஎம் டிரைலர் வெளியீடு
01 Apr 2025நடிகர் டேனியல் பாலாஜியின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை ஒட்டி அவர் நடித்த ஆர்பிஎம் படத்தின் டிரைலர் வெளியிடப்பட்டது.
-
தி டோர் விமர்சனம்
01 Apr 2025அடுக்குமாடி குடியிருப்பு கட்டுவதற்காக தேர்வு செய்யப்பட்டுள்ள ஓர் இடத்தில் உள்ள சிறு கோவில் இடிக்கப்படுகிறது.
-
சர்தார்-2 டீசர் வெளியீடு
01 Apr 2025சர்தார் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, நடிகர் கார்த்தி நடிப்பில், இயக்குநர் PS மித்ரன் இயக்கத்தில், “சர்தார் 2” உருவாகியுள்ளது. பிரின்ஸ் பிக்சர்ஸ், ஐ.வி.
-
ஏப்ரல் 4 ல் வெளியாகும் டெஸ்ட்
01 Apr 2025மாதவன், நயன்தாரா சித்தார்த் ஆகியோர் நடிக்கும் டெஸ்ட் திரைப்படம் ஏப்ரல் 4 அன்று நெட்ஃபிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.
-
தஞ்சையில் மெகா நெல் கொள்முதல் நிலையம்: பேரவையில் அமைச்சர் தகவல்
01 Apr 2025சென்னை : தஞ்சாவூரில் ரூ.1.41 கோடியில் மெகா நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்கப்பட்டு, இப்போது சோதனை அடிப்படையில் செயல்படுகிறது என்று உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி கூற
-
இந்தியா பொருட்களுக்கான புதிய இறக்குமதி வரி இன்று முதல் அமல்: அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு
01 Apr 2025வாஸிங்டன், இந்தியா அமெரிக்க இறக்குமதிக்கு அதிகமாக வரி விதிப்பதாக அதிபர் டொனால்டு டிரம்ப் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறார்.
-
பிரதமர் வருகை எதிரொலி: 3 நாட்கள் மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை
01 Apr 2025ராமேஸ்வரம் : பிரதமர் மோடி வருகையையொட்டி ராமேஸ்வரம், பாம்பன், மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
-
இந்தியர்களுடன் விண்வெளி அனுபவத்தை பகிர்ந்துகொள்ள ஆர்வம்: சுனிதா வில்லியம்ஸ் பேட்டி
01 Apr 2025அமெரிக்கா, சா்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து பூமி திரும்பிய பிறகு முதல்முறையாக செய்தியாளர்களைச் சந்தித்து சுனிதா வில்லியம்ஸ் பேசியுள்ளார்.
-
வாரம் இரு வேலை நாட்கள் என்ற நடைமுறை விரைவில் வரும்: பில் கேட்ஸ் தகவல்
01 Apr 2025அமெரிக்கா, செயற்கை நுண்ணறிவு(ஏஐ) தொழில்நுட்பத்தின் அசுர வளர்ச்சியால் வாரம் இரு வேலை நாள்கள் மட்டுமே என்கிற நடைமுறை இன்னும் பத்தாண்டுகளில் வழக்கத்தில் இருக்கும் என்று பி
-
சமாதி அடைந்தாரா சாமியார் நித்யானந்தா ? - சகோதரி மகன் வீடியோவால் புதிய பரபரப்பு
01 Apr 2025சென்னை : சாமியார் நித்யானந்தா சமாதி அடைந்ததாக அவரது சகோதரி மகன் வெளியிட்ட வீடியோவால் புதிய பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
-
எத்தியோப்பியாவில் வேகமாக பரவும் காலரா நோய் தொற்றினால் 10 லட்சம் பேருக்கு ஆபத்து
01 Apr 2025தெற்கு சூடான், கிழக்கு ஆப்பிரிக்க நாடான எத்தியோப்பியாவில் வேகமாகப் பரவி வரும் காலரா நோயினால் சுமார் 10 லட்சம் பேர் அபாயத்திலுள்ளதாகக் கூறப்படுகின்றது.
-
62 பொருள்களுக்கு புவிசார் குறியீடு: தமிழகத்தில் தஞ்சை சாதனை
01 Apr 2025தஞ்சாவூர் : தமிழகத்தில் இதுவரை 62 பொருள்களுக்கு புவிசார் குறியீடு கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் அதில் தஞ்சை மாவட்டம் சாதனை படைத்திருப்பதாகவும் வழக்குரைஞர் சஞ்சய் காந்தி கூ
-
பிரதமர் மோடியை சந்திக்க தனித்தனியே நேரம் கேட்ட இ.பி.எஸ்., ஓ.பி.எஸ்.?
01 Apr 2025சென்னை : மதுரை விமான நிலையத்தில் வைத்து பிரதமர் மோடியை சந்திப்பதற்கு எடப்பாடி பழனிசாமி நேரம் கேட்டிருப்பதாக கூறப்படுகிறது.
-
பிரதமர் மோடியுடன் சிலி அதிபர் சந்திப்பு
01 Apr 2025புது டில்லி : அரசுமுறை சுற்றுப்பயணமாக இந்தியா வந்துள்ள சிலி நாட்டின் அதிபர் கேப்ரியேல் போரிக் டில்லியில் பிரதமர் மோடியை சந்தித்து பேசினார்.
-
சாட் ஜி.பி.டி.-யில் கிபிலி பாணி ஓவியங்கள் இலவசம் ஓபன் ஏ.ஐ.சி.இ.ஓ. அறிவிப்பு
01 Apr 2025புதுடெல்லி, ஸ்டுடியோ கிப்லி பாணியில் படங்களை உருவாக்க சாட் ஜி.பி.டி.ஐ பயன்படுத்தும் சமீபத்திய போக்கு அதிகரித்துள்ள நிலையில், இனி இலவசமாகப் பயன்படுத்திக் கொள்ளலாம் என அற
-
காவிரி - வைகை - குண்டாறு திட்டம்: அமைச்சர் துரைமுருகன் விளக்கம்
01 Apr 2025சென்னை : காவிரி - வைகை - குண்டாறு இணைப்புத் திட்டத்தின் தற்போதைய நிலை குறித்து சட்டப் பேரவையில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் விளக்கமளித்துள்ளார்.
-
தமிழ்நாட்டில் இரண்டாவது கட்சி யார் என்பதில்தான் போட்டி: திருமாவளவன்
01 Apr 2025சென்னை : பா.ஜ.க., அ.தி.மு.க. மற்றும் த.வெ.க. ஆகிய கட்சிகளுக்கிடையே தமிழகத்தில் இரண்டாவது கட்சி யார் என்பதில் தான் போட்டி நடந்து கொண்டிருக்கிறது.
-
வயநாடு நிலச்சரிவில் 298 பேர் பலி; பார்லி.யில் மத்திய அரசு தகவல்
01 Apr 2025டெல்லி : வயநாடு நிலச்சரிவில் 298 பேர் உயிரிழந்ததாக பாராளுமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
-
புல்டோசர்களால் வீடுகளை இடிப்பது சட்டவிரோதமானது; மனிதாபிமானமற்றது - தலா ரூ.10 லட்சம் வழங்க உ.பி. அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு
01 Apr 2025புதுடெல்லி : புல்டோசர்கள் மூலம் வீடுகளை இடித்து தள்ளும் உத்தரப் பிரதேச மாநில பாஜக அரசின் செயல், மனிதாபிமானமற்றது; சட்டவிரோதமானது என சுப்ரீம் கோர்ட் மீண்டும் கடும் கண்டன
-
கல்லாற்றின் குறுக்கே மேலும் ஒரு தடுப்பணை கட்டப்படுமா? சட்டசபையில் அமைச்சர் துரை முருகன் பதில்
01 Apr 2025சென்னை, பெரம்பலூரில் கல்லாற்றின் குறுக்கே மேலும் ஒரு தடுப்பணை கட்ட ரூ.6.50 கோடி ஆகும் என்று மதிப்பீடு தயார் செய்யப்பட்டுள்ளதாக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித
-
3 லட்சம் பேர் உயிரிழக்கும் அபாயம்: ஜப்பானுக்கு காத்திருக்கும் மிகப்பெரிய நிலநடுக்கம்..?
01 Apr 2025ஜப்பான், தீவு நாடான ஜப்பானில் மிகப்பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டால் கிட்டத்தட்ட 3 லட்சம் பேர் பலியாக வாய்ப்பிருப்பதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.