எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னை, ஜூலை.- 18 - தமிழக மீனவர்கள் நமது கடலில் இலங்கைக் கடற்படையினரால் கொல்லப்படும் துன்பம் தொடர்கையில், பிழைப்பதற்காக வேறு நாடுகளுக்குச் சென்று, சட்டப்படியான ஒப்பந்தப்படி கடலில் மீன்பிடிக்கும்போதும் சுட்டுக் கொல்லப்படும் கொடுமை, தமிழனுக்கு இதுதான் தலைவிதியா என்று வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது, பஹ்ரைனில் உள்ள அமெரிக்கக் கடற்படையின் ஐந்தாவது படைப்பிரிவுக்குப் பொருள்களைக் கொண்டு சென்ற கப்பலின் பாதுகாப்புப் படையினர், துபாய் கடல்பரப்பில் சிறிய படகில் இருந்து மீன்பிடித்துக் கொண்டு இருந்த தமிழக மீனவர்கள் மீது இயந்திரத் துப்பாக்கிகளால் சரமாரியாகச் சுட்டதில், இராமநாதபுரம் மாவட்டம் பெரியபட்டினத்தைச் சேர்ந்த மீனவர் சேகர் கொல்லப்பட்டார்; அவருடன் இருந்த இராமேஸ்வரம் கரையூரைச் சேர்ந்த முத்து முனிராஜ், தொண்டி முள்ளுமுனையைச் சேர்ந்த கண்ணன் என்ற பண்புவன், முருகன் ஆகிய மூவரும் படுகாயமுற்றனர். பன்னாட்டு கடல்பரப்பில் அமெரிக்க கடற்படையினர் அத்துமீறி நடத்திய இக்கொலை வெறித் தாக்குதலை ம.தி.மு.க. சார்பில் வன்மையாக கண்டிக்கிறேன். இந்த சம்பவத்துக்கு அமெரிக்க கடற்படை வருத்தம் தெரிவித்து, மன்னிப்பு கேட்கவில்லை. மாறாக, இந்தக் கொலை வெறித்தாக்குதலை நியாயப்படுத்துவதற்காக, அந்த மீன் பிடிப்படகு தங்கள் கப்பலுக்கு அருகில் நெருங்கி வந்ததாகவும், வாய்மொழியாக எச்சரித்தும், வான்வெளியில் சுட்டபின்னரும், படகு கப்பலை நெருங்கி வந்ததாகவும், அதனால் எந்திர துப்பாக்கியால் சுட்டதாகவும், அமெரிக்க கடற்படையினர் கூறுவது திமிர்வாதம் ஆகும். வேடிக்கைக்காகவும், கேளிக்கைப் பொழுது போக்குக்காகவும், அவர்கள் தமிழக மீனவர்கள் உயிரை மிக அற்பமாக கருதி சரமாரியாக சுட்டு உள்ளனர். பெரும் தாக்குதல் நடத்தக் கூடிய நவீன போர் கருவிகள் பொருத்தப்பட்டு உள்ள கப்பலில் இருந்து கொண்டு சின்னஞ்சிறிய மீன்படி படகு மீது எந்திர துப்பாக்கிகளால் சுட்டது மன்னிக்க முடியாத கொடுஞ்செயல் ஆகும். தமிழக மீனவர்கள் நமது கடலில் இலங்கை கடற்படையினரால் கொல்லப்படும் துன்பம் தொடர்கையில் பிழைப்பதற்காக வேறு நாடுகளுக்கு சென்று சட்டப்படியான ஒப்பந்தப்படி கடலில் மீன்பிடிக்கும்போதும் சுட்டு கொல்லப்படும் கொடுமை, தமிழனுக்கு இதுதான் தலைவிதியா? என்ற கேள்வியை எழுப்புகிறது. கேரள கடல் எல்லையில் 2 கேரளத்தினரை சுட்டுக் கொன்ற இத்தாலிய வணிக கப்பலின் காவலர்களை, சட்டப்படி கைது செய்து கூண்டில் நிறுத்தியதற்கே இத்தாலி அரசு, கண்டனமும், எதிர்ப்பு தெரிவித்தது. ஆனால் தமிழக மீனவர் அமெரிக்க கடற்படையால் கொல்லப்பட்டதற்கு இந்திய அரசு இதுவரையிலும் எந்த கண்டனமும் தெரிவிக்கவில்லை. தமிழர்கள் உயிர் என்றால், மத்திய அரசுக்கு கிள்ளுக்கீரைதான் போலும். தமிழக மீனவர் உயிரை பறித்த அமெரிக்க கப்பல் காவலர்களை, அமெரிக்க அரசு கைது செய்து நட வடிக்கை எடுக்கவும், பாதிக் கப்பட்ட மீனவர்கள் குடும்பத் துக்கு தக்க நிவாரணம் வழங்க வும் மத்திய அரசு உடனடி நட வடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு வைகோ அதில் கூறியுள்ளார். உடனடி நிவாரணம் கிடைக்க தேமுதிக வலியுறுத்தல்
தமிழக மீனவர் அமெரிக்க கடற்படையால் கொல்லப்பட்டதற்கு இந்திய அரசு விரைந்து நடவடிக்கை எடுத்து குற்றவாளிகள் தண்டிக்கப்படவும், பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு நிவாரணம் கிடைக்க செய்யவும் உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று தேமுதிக கட்சித் தலைவர் விஜயகாந்த் இந்திய அரசை வலியுறுத்தியுள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 6 months 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 6 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 7 months 1 week ago |
-
ரிங்கு சிங் போராட்டம் வீண்: 4 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ திரில் வெற்றி
08 Apr 2025கொல்கத்தா : ஐ.பி.எல். தொடரில் நேற்று நடைபெற்ற முதல் ஆட்டத்தில் 4 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தாவை வீழ்த்தி லக்னோ திரில் வெற்றி பெற்றது.
-
சுனில் கவாஸ்கர் கண்டனம்
08 Apr 2025இங்கிலாந்து மண்ணில் இந்தியா விளையாடும் டெஸ்ட் தொடர் 2007-ம் ஆண்டு முதல் பட்டோடி கோப்பை என்று அழைக்கப்பட்டு வருகிறது.
-
10 ஆண்டுகளுக்கு பிறகு வான்கடேவில் மும்பையை வீழ்த்திய பெங்களூரு அணி
08 Apr 2025மும்பை : 10 ஆண்டுகளுக்கு பிறகு வான்கடே ஸ்டேடியத்தில் மும்பையை பெங்களூரு அணி வீழ்த்தியது.
பந்துவீச்சு தேர்வு...
-
கூட்டாட்சி அமைப்பை உறுதிப்படுத்தும்: சுப்ரீம் கோர்ட் தீர்ப்புக்கு கேரள முதல்வர் வரவேற்பு
08 Apr 2025திருவனந்தபுரம் : மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்காமல் கவர்னர் நிறுத்தி வைத்ததை எதிர்த்து தமிழக அரசு தொடர்ந்த வழக்கில் சுப்ரீம் கோர்ட் அளித்துள்ள தீர்ப்பு கூட்டாட்சி அமைப்ப
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 09-04-2025.
09 Apr 2025 -
சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பயிற்சியின் போது அழுதேன்: ஸ்ரேயாஸ் ஐயர் உருக்கம்
08 Apr 2025முல்லன்பூர் : சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பயிற்சியின் போது அழுததாக பஞ்சாப் கிங்ஸ் அணி கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் தெரிவித்துள்ளார்.
-
ஆர்.சி.பி. கேப்டனுக்கு ரூ.12 லட்சம் அபராதம்
08 Apr 2025மும்பை : ஆர்.சி.பி. கேப்டன் ரஜத் படிதாருக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
வான்கடே திடலில்...
-
மறைந்த குமரி அனந்தன் உடல் அரசு மரியாதையுடன் அடக்கம் : முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி
09 Apr 2025சென்னை : மறைந்த காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன் உடலுக்கு அரசு மரியாதை செலுத்தப்படும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்த நிலைியல் அவரது உடல் முழு அரச
-
இளம் வயதில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்த ஆஸ்திரேலிய வீரர்
08 Apr 2025மெல்போர்ன் : 27 வயதில் ஆஸ்திரேலிய வீரர் புகோவ்ஸ்கி சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து தனது ஓய்வை அறிவித்தார்.
-
முத்தரப்பு தொடருக்கான இந்திய மகளிரணி அறிவிப்பு
08 Apr 2025மும்பை : இலங்கையில் நடைபெறவுள்ள முத்தரப்பு ஒருநாள் தொடருக்கான மகளிரணியை பி.சி.சி.ஐ. நேற்று (ஏப்ரல் 8) அறிவித்துள்ளது.
-
மகாவீர் ஜெயந்தி, தமிழ் புத்தாண்டு: தமிழக சட்டசபைக்கு 5 நாட்கள் விடுமுறை
09 Apr 2025சென்னை : தமிழக சட்டசபைக்கு 5 நாள் விடுமுறை அடுத்து 15-ம் தேதி தமிழக சட்டசபை மீண்டும் கூட இருக்கிறது.
-
இன்று மகாவீரர் ஜெயந்தி: எடப்பாடி பழனிசாமி வாழ்த்து
09 Apr 2025சென்னை : மகாவீரர் ஜெயந்தி இன்று கொண்டாடப்படுவதை ஒட்டி, “சமண சமய மக்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த மகாவீரர் ஜெயந்தி நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறே
-
கோவை வந்தார் ராஜ்நாத் சிங்
09 Apr 2025கோவை : மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இரண்டு நாள்கள் பயணமாக தமிழகம் வந்துள்ளார்.
-
ரூ.1,000 கோடி மதிப்பிலான பிணைய பத்திரங்கள் ஏலம் : தமிழக அரசு அறிவிப்பு
09 Apr 2025சென்னை : 10 ஆண்டுகால பிணையப் பத்திரங்களை ஏலம் மூலம் விற்பனை செய்ய உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
-
ரெப்போ வட்டி விகிதம் 6 சதவீதமாக குறைப்பு: வீடு, வாகன கடன்களுக்கான வட்டி விகிதம் குறைய வாய்ப்பு
09 Apr 2025மும்பை : வங்கிகளின் குறுகிய கால கடனுக்கான ரெப்போ வட்டி விகிதம் 6 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.
-
ஒழுக்கத்துக்கு அடையாளமாக வாழ்ந்தவர்: மறைந்த குமரி அனந்தனுக்கு தே.மு.தி.க. சார்பில் புகழஞ்சலி
09 Apr 2025சென்னை : தமிழக அரசியலிலும், தமிழ் இலக்கியத்தின் மீதும் தீராத பற்று கொண்டவர்.
-
மத்திய அமைச்சர் அமித்ஷா இன்று தமிழகம் வருகிறார்
09 Apr 2025சென்னை : மத்திய அமைச்சர் அமித்ஷா இன்று தமிழகத்திற்கு வர உள்ளார்.
-
கோவை, நீலகிரி உள்பட 4 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு
09 Apr 2025சென்னை : கோவை மாவட்ட மலைப்பகுதிகள், நீலகிரி, தேனி மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று (ஏப்.10) கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெர
-
சிங்கப்பூர்: தீ விபத்தில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்றுவரும் மகனை நேரில் சந்தித்த பவன் கல்யாண்
09 Apr 2025சிங்கப்பூர் சிட்டி : சிங்கப்பூரில் பள்ளி ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்றுவரும் மகனை ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் சந்தித்தார்.
-
சமூக வலைதளங்களில் மோசடி செய்பவர்களிடம் உஷாராக இருங்கள் : ஐ.ஆர்.சி.டி.சி எச்சரிக்கை
09 Apr 2025புதுடெல்லி : சமூக வலைதளங்களில் மோசடி செய்பவர்களிடம் உஷாராக இருங்கள் என்று ஐ.ஆர்.சி.டி.சி எச்சரிக்கை விடுத்துள்ளது.
-
5 நாட்களுக்கு பிறகு மீண்டும் உயர்ந்த தங்கம் விலை
09 Apr 2025சென்னை : தொடர்ந்து குறைந்து நகை வாங்குவோர் மத்தியில் மகிழ்ச்சியையும், எதிர்பார்ப்பையும் ஏற்படுத்திவந்த தங்கம் விலை 5 நாட்களுக்குப் பின்னர் நேற்று (ஏப்.9) மீண்டும் உயர்ந
-
மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் தேரோட்டம் : ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்
09 Apr 2025சென்னை : மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட ஏராளமான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
-
மாரியம்மன் கோவில் தேரோட்டம்: திருச்சிக்கு ஏப.15-ல் உள்ளூர் விடுமுறை
09 Apr 2025திருச்சி : சமயபுரம் மாரியம்மன் கோவில் சித்திரை தேரோட்டத்தையொட்டி திருச்சி மாவட்டத்திற்கு 15-ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
-
தமிழ் மொழியை பிரபலப்படுத்த முயற்சி செய்தவர் குமரி அனந்தன் : பிரதமர் மோடி புகழஞ்சலி
09 Apr 2025புதுடெல்லி : தமிழ் மொழி மற்றும் தமிழ் கலாச்சரத்தை பிரபலப்படுத்தவும் அவர் பல முயற்சிகளை மேற்கொண்டுள்ளார் என்றும் தமிழக முன்னேற்றத்துக்கு உழைத்தமைக்காகவும், இந்த சமூகத்
-
பணியின்போது உயிரிழந்த எஸ்.ஐ. குடும்பத்திற்கு ரூ. 30 லட்சம் நிதி : முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
09 Apr 2025சென்னை : திருவாரூர் அருகே பணியின்போது உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்த காவல்துறை உதவி ஆய்வாளர் ராஜேந்திரனின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்துள்ள தமிழக முதல்வர் மு.க